திங்கள், 17 நவம்பர், 2014

பா.ம.க - திராவிட சாதி அரசியலும்... 1



20 ஆண்டுகள் வலுவான அரசியல் பேரம் பேசும் சக்தியாக வடமாநிலங்களில் இருந்த பா.., 30 ஆண்டுகள் (ஒரு தலைமுறை) பின்னோக்கி வன்னிய சாதி அரசியலை கையில் எடுத்திருக்கிறது.

வன்னிய சாதி சங்கத்திலிருந்து பாட்டாளி மக்கள் கட்சியாக வளர்ந்து... கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக... மீண்டும் வன்னிய சாதி சங்கமாக சிறுத்து போனதன் பின்னணி பேச விழைவோம்... அதிலிருந்து தான் இன்றைய திராவிட சாதி கூச்சல்களின் பின்னால் இருக்கும் அரசியல் சதி வலையை விளங்கி கொள்ள முடியும்.

கூட்டணி அரசியலுக்கு எப்போதாவது பச்சோந்தி தனம் தேவைப்படும் என்பார்கள், ஆனால் பச்சோந்தி தனமே! அரசியல் என்று ஆன மருத்துவர் இராமதாஸ் அதனுடைய விளைவுகளை சந்திக்க ஆரம்பித்த ஆண்டு 2009.

ஜனவரி'2009 கிளிநொச்சி வீழ்ச்சிக்கு பின் ஒரு அதிகாலையில் தி. தலைவர் வீரமணியுடன் இணைந்து இராமதாஸ் அன்றை முதல்வர் மு.கருணாநிதியை சந்திக்கிறார்கள். அடுத்தடுத்த நாட்களில் அரசியல் அரங்கத்தின் காட்சிகள் மாறுகின்றன வி.சி. திருமாவளவன் சாகும் வரை உண்ணாவிரம் அறிவிக்கிறார். இவற்றின் பின்னணி பற்றி விளக்கி கொண்டிருக்க போவதில்லை.

இந்த உண்ணாவிரத போராட்டம் காங்கிரஸ், அதிமுக தவிர்த்து அனைத்து சமூக, அரசியல் இயக்கங்களை ஒன்று திரள வைக்கிறது.

மத்திய அரசு நெருக்கடிக்குள்ளாகிறது… சிலநாட்களில் திருமாவளவன் உண்ணாவிரத்தை இராமதாஸ் முடித்து வைக்கிறார். இந்த சிக்கலான சூழலில் நடந்த ஈழத்தை பற்றிய விவரங்களை தவிர்த்து விடுகிறேன்.

இந்த உண்ணாவிரத்தில் தான் பா.ம.க மற்றும் திமுக இடையான உறவு சிக்கலுக்கு உள்ளாகிறது.  போராட்டம் தீவிரமாகி காங்கிரஸ் ஆதரவை விலக்கி கொள்ளும் பட்சத்தில் திமுக ஆட்சி இழந்திருக்கும்.  அப்படியான சூழலில் பாமக திரைமறைவில் காங்கிரஸ், அதிமுக உடன் இணைந்து அதிகாரத்தை கைப்பற்ற திட்டமிட்டதாக ஊகச்செய்திகள் வரத்தொடங்கின.

இப்படியான சூழலில் 2009 நாடாளுமன்ற தேர்தலில்  பாமக அதிமுக கூட்டணிக்கு தாவுகிறது. திமுக முதுகில் குத்த சந்தர்ப்பம் பார்த்து காத்திருந்த...  பாமக போட்டியிடும் ஒவ்வொரு தொகுதிக்கும் 3 அமைச்சர்களை நியமித்து தேர்தலில் பாமக தோல்வியை உறுதி செய்கிறது. போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் பாமக தோல்வியடைகிறது. 


பாமக – வின் அரசியல் வீழ்ச்சி தொடங்கியது….

செவ்வாய், 1 ஜூன், 2010

வினவு தோழர்கள்

வினவு தோழர்கள்

ஆணாதிக்க, பார்ப்பானிய, பாலியல் வன்மத்தையும், வக்கிரத்தை கண்டிக்கவும் அதை எதிர்த்து குரல் கொடுக்கவும் மறுக்கிறவர்கள் மனித சமூகத்தின் விரோதிகள்.

செந்தழல் ரவியை பற்றி மதிப்பு பன்மடங்கு என்னளவில் உயர்ந்துள்ளது. வணக்கங்கள் ரவி!
பின்னூட்ட உரையாடல்களை வைத்து பார்க்கும்பொழுது நர்சிம்,கார்க்கி இருவரும் மிகவும் தெரிந்தவர்களாகவும், நண்பர்களாகவும் ரவிக்கு உள்ளனர். ஆனால் அவர்கள் இருவரும் வன் கொடுமையை நிகழ்த்தும்பொழுது சப்பைகட்டு கட்டாமல் துணிந்து தவறு என்று உரத்து ஒலித்தற்கு வாழ்த்துகள்.

குழந்தையை கொலை செய்ய வேண்டும் என்று சொல்கிற கார்க்கியின் தோழர்களும், தோழிகளும் அவருடைய மனநிலையை அறிந்து நடந்துக்கொள்வது எதிர்காலத்திற்கு நல்லது.

வினவு தோழர்களை பற்றிய பல்வேறு அவதூறுகளை ஒரு சில பார்ப்பன பாசிஸ்ட்டுகள் பதிவுலகில் பதிவு செய்துக்கொண்டிருப்பதால்...

சில தகவல்கள்...

பார்ப்பானிய பாசிஸ்ட்டுகள், இந்துத்துவ பாசிஸ்ட்டுகள், சமூக விரோதிகள் மட்டுமே மூகமூடி அணிந்துக்கொண்டு பதிவுலகில் மற்றவர்களை மிரட்டிக்கொண்டும், மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

வினவு தோழர்கள் எந்த முகமூடியும் அணிந்து பதிவுலகில் உலவ வில்லை.
வினவின் கைபேசி தொடர்பு எண் அவர்களுடைய vinavu.com தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
வினவில் எழுதுகிற தனி மனிதர்களை பற்றிய குறிப்பும் அவர்களுடைய இணையத்தில் உள்ளது.

தோழர்களின் அரசியல் நிலைபாட்டில் மாற்றுகருத்து இருப்பவர்கள் கூட... தமிழகத்தை பொறுத்தவரை... மக்களின் சமூக, அரசியல் பிரச்சினைகளில் தோழர்களின் பங்களிப்பை மறுக்க இயலாது. மக்களோடு வாழ்பவர்கள். மக்களின் பிரச்சினைகளில் முன் நிற்பவர்கள்.

தோழர்கள் மிகப்பெரும்பாலோர் அன்றாட உழைப்பாளிகள், ஒரு சிலர் முழு நேர பணியாளர்கள்.

சிந்தனை, செயல், உழைப்பு அனைத்தையும் சமூக மாற்றத்திற்காக அர்ப்பணித்தவர்கள்.

தோழர்கள் உரையாட எளிமையானவர்கள்... அவர்களுடைய அலுவலகங்கள் சென்னையில் தான் இருக்கின்றன.

பதிவு எழுதுகிற பலர்...
பொழுதுபோக்கு
சுய அரிப்பை சொரிந்துக்கொள்ளுதல்
எதிர் பாலினரை ஈர்ப்பதற்காக எழுதுவது
கருத்து கந்தசாமிகளாக இருப்பது
காசு தேறுமா என்று எழுதுவது
சுய விளம்பரத்திற்காக எழுதுவது
பதிவில் எழுதி, வெகு மக்கள் ஊடாகத்திற்கு நகர்வது...

இப்படி பல்வேறு நிலைகளில் இருக்கிறார்கள்... விரல் விட்டு எண்ணக்கூடிய சமூக மாற்றதிற்கான எழுத்துகளில் வினவு குழுவினர் முக்கியமானவர்கள்.

வினவின் பணியினை ஆதரிப்போம்.
பார்ப்பானிய ஆணாதிக்கத்தை எதிர்ப்போம்.

வியாழன், 22 ஏப்ரல், 2010

பார்வதி அம்மையார் - உள்ளே வருவதில் நிகழ்ந்ததென்ன?

உயர்திரு பார்வதி அம்மையாரை விமானத்தை விட்டு இறங்க கூட அனுமதிக்காமல், திருப்பி அனுப்பிய மனித தன்மையற்ற காட்டுமிராண்டி தனமும், பாசிச வன்மமும் நிறைந்த நடவடிக்கையை கண்டு மனம் மிகவும் வேதனையடைகிறது.

80 வயதான அம்மையார் கிட்டதட்ட 4 மணிநேரம் விமான பயணம் செய்து வந்தவரை... உடல்நிலை சரியில்லாமல் இருந்த வயதான பெண்மணி கனிவோடு வரவேற்க வேண்டிய அதிகாரிகள்... இறங்காதே திரும்பி போ! என்கிற வன்மத்துடன் நடந்துக்கொண்டதை நினைத்து, நினைத்து வேதனையும், வெறுப்பும் எழுகிறது.

இந்த நிகழ்வையொட்டி யாரிடம் நம்முடைய எதிர்ப்பை காட்ட வேண்டும்... யார் மீது நம்முடைய கோபம் எழ வேண்டும் என்று புரிந்துக்கொள்ள வேண்டுமென்றால் நடந்த நிகழ்வை ழுமுமையாக அறிந்துக்கொள்வதின் வாயிலாக முடியும்.

பொருளற்ற சுயநல அரசியல் கூச்சல்களை ஓரம்கட்டி விட்டு... நடந்த நிகழ்வை புரிந்துக்கொள்ள முயற்சிப்போம்.

நான்கு நாட்கள் சில சென்னையில் ஊடகங்களில் வேலை பார்க்கும் நண்பர்கள் வாயிலாக சேகரித்த தகவல்களின் அடிப்படையில் இந்த நிகழ்வை எழுதுகிறேன். (நம்பக தன்மை என்பது வாசிப்பவரின் மனநிலையையும், பார்வையும் ஒட்டியது. என்னிடம் வந்து ஆதாரத்திற்கு தொங்க கூடாது)

1. உயர்திரு. வேலுபிள்ளை அய்யா அவர்கள் மரணத்திற்கு பிறகு இலங்கை அரசாங்கம் உயர்திரு பார்வதி அம்மையார் அவர்களை நாட்டை விட்டு வெளியேற அனுமதியளித்தது.

2. உயர்திரு பார்வதி அம்மையார் அவர்கள் தமிழகம் வருவதற்காக கொழுப்பில் உள்ள இந்திய தூதரகத்தில் விண்ணப்பம் அளித்துள்ளார். ஆனால் அங்கே அவருக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது.

3. அதன்பிறகு உயர்திரு பார்வதி அம்மையார் மலேசியா சென்று அங்கிருந்து கனடா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு செல்ல விசா விண்ணப்பித்துள்ளார்.

4. மலேசியாவில் சுற்றுலா விசாவில் வருபவார்கள் 30 நாட்கள் மட்டுமே தங்க இயலுமென்பதால்... மறுபடி மலேசியாவிலிருந்து தமிழகம் வருவதற்கு விண்ணப்பம் அளித்துள்ளார்கள்.

இந்த இடத்தில் சிலவற்றை நன்கு புரிந்துக்கொள்ள வேண்டும்...

2007க்கு பிறகு மலேசியா மற்றும் சிங்கப்பூர் இந்திய தூதரங்கள் இந்தியாவுக்கான விசா விண்ணப்பங்களை நேரிடையாக வாங்குவதில்லை. மூன்றாம் தரப்பு ஏஜெண்டுகள் வழியாகவே விண்ணப்பங்கள் வாங்கப்படும்.



இந்த ஏஜென்சிகள் கடவுசீட்டு(passport) உண்மையானதா? என்பதை சோதிக்கும் கருவி மட்டுமே வைத்திருப்பர். அவர்களிடம் யார், யார் எந்த, எந்த நாட்டில் உள் நுழைய தடை என்பதை பற்றிய பட்டியல் இருக்காது!.

இந்த ஏஜென்சிகள் அளிக்கும் விண்ணப்பத்தை வாங்கி 24 நான்கு மணி நேரத்துக்குள் விசா வழங்க வேண்டிய நிலையில் தூதரங்களில் வேலை பார்க்கும் அதிகாரிகள் உள்ள நிலையில், அதோடு மற்ற சான்றிதழ்கள் வழங்கும் பணி, வேறு பணிகள் என்று வேலை பளு சிங்கப்பூர் மற்றும் மலேசிய இந்திய தூதரங்களில் அதிகம். அதனால் Random Checking முறையில் மட்டுமே விண்ணப்பங்களை சோதிப்பார்கள்.

இவ்வாறு கொழுப்பில் நிராகரிக்கப்பட்ட விசா விண்ணப்பம், மலேசியாவில் விசா வழங்கப்பட்டுள்ளது.

திரு. நெடுமாறன் மற்றும் திரு.வைகோ இருவருக்கும் மிக நன்றாக தெரியும்... ஈழத்தமிழர்கள் பலர் மீது இந்தியாவில் உள் நுழைய தடை இருப்பது. அதில் குறிப்பாக புலிகளின் அமைப்பினர் சிலர் மீதும், பிரபாகரனின் பெற்றோர் மீதும் 2003ல் உள் நுழைய தடை வாங்கப்பட்டதை அறிவர். (திரு. நெடுமாறன் பழைய அறிக்கையென்றில் இதை எழுதியிருந்தார்... )

எப்பொழுதும் இந்திய மற்றும் இலங்கை உளவு துறையினர் கண்காணிப்பில் இருக்கிற உயர்திரு. பார்வதி அம்மையார். மலேசியாவில் விமானம் ஏறும்பொழுது தான் உளவு துறையினர் டெல்லிக்கு தகவல் அனுப்பியுள்ளனர்.

டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சு மற்றும் குடி நுழைவு (Immigration) அதிகாரிகள்... LTTE related person... don't deport, send back என்கிற உத்திரவை சென்னைக்கு அனுப்பியிருக்கிறார்கள்.

யார் வருகிறார்கள்? என்ன நடக்கிறது என்று தெரியாமலேயே... சென்னை விமான நிலைய அதிகாரிகள் பாதுகாப்பு வேண்டும் என்று காவல் துறைக்கு தெரிவிக்க... சென்னை புறநகர் போலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

குடிநுழைவு அதிகாரிகள் தங்களுக்கு வந்த ஆணையை நிறைவேற்ற... வழக்கம்போல உணர்ச்சியும், சுயநலமும் மட்டுமே எஞ்சியுள்ள திரு.வைகோ தனியாக கதறிவிட்டு வந்திருக்கிறார்.

ஈழ ஆதரவாளர்களுக்கு தகவலை பரப்பியிருந்தால்... குறைந்தபட்சம் விமான நிலைய முற்றுகை போராட்டம் நடத்தி... அம்மையாரை உள் நுழைய அனுமதி வாங்கியிருக்க முடியும்.

தான் மற்றும் தான் மட்டுமே செய்தாக பேர் வாங்க வேண்டும் என்கிற வைகோவின் சுயநலம்.. ஆதரவாளர்கள் அற்ற தனியாளாக நின்றிருக்கிறார்.

இப்பொழுது...

தங்களுடைய வேலையை மட்டுமே பார்த்த உளவு துறையினர் தொடங்கி... குடி நுழைவு அதிகாரிகள் வரை... வயதான, உடல்நலம் குன்றிய அம்மையாரை பற்றிய எந்தவிதமான கருணையும் காட்டவில்லை என்பதற்காக நோவதா?

உள் நுழைய தடையிருக்கிறது என்பது தெரிந்தும்... அதை நீக்க முயற்சியெடுக்காமல்... ரகசியமான மற்றும் தவறான முறையில் திருமதி பார்வதி அம்மையாரை அனுப்ப முயற்சித்த (அ) அலைகழித்த அவருடைய பயணத்தை ஏற்பாடு செய்தவர்களின் மீது எரிச்சலடைவதா?

முறையான அணுகுமுறையின்றி, சுயநலத்துடன் நடந்துக்கொண்ட திரு.நெடுமாறன், திரு.வைகோ போன்றவர்கள் மீது பாய்வதா?

சிக்கலான சூழ்நிலையில் போர்கால அடிப்படையில் செயல்பட்டு.. உடனடியாக நடவடிக்கை எடுக்காமல்... எனக்கு காலையில் செய்திதாள் பார்த்து தான் தெரியும் என்று சொல்கிற... ஒரு முதல்வர் மீது பாய்வதா?

மனித நேயமற்ற நடவடிக்கை என்பதை கண்டு... தமிழ்நாட்டில் பிறந்ததற்காக வெட்கி தலைகுனிய வேண்டிய தருணத்தில்... இதை வைத்தும் அறிக்கை அரசியல் நடத்திக்கொண்டிருப்பவர்களை என்ன செய்வது?

நன்றி
அரசு

திங்கள், 19 ஏப்ரல், 2010

பார்ப்பானியத்தின் பண்பியல்புகள்...!

தான், தனது, தான் சார்ந்தது என்கிற சுயநலமே பார்ப்பானியத்தின் பண்பியல்பாக உணரப்பட்டிருக்கிறது.

வரலாற்றையும், உண்மையையும் திரித்து... தனக்கு சாதகமாக மாற்றுவது.

ஆதிக்கத்திற்காக பொய், புரளிகளை சமூகத்தில் உலவ விடுவது.

அதிகாரத்திற்காக குறுக்கு வழிகளை ராஜதந்திரம்(குள்ளநரிதனம்) என்கிற பெயரில் செய்வது.

முட்டாள்தனத்தையும், மூட பழக்க,வழக்கங்களை சமூகத்தில் வளர்ப்பதன் மூலம்... சமூகத்தை அடிமையாக வைத்திருப்பது.

உழைக்காமல், அடுத்தவர் உழைப்பை சுரண்டி வாழ்வது.

அடுத்தவர் உழைப்பை தனதென்று கூசாமல் உரிமை கொண்டாடுவது.

பெண்ணடிமைதனத்தை போற்றுவது.

மனித இனம் சமூகமாக வாழ்வதற்கு தடையாகவும், தீமை விளைவிக்க கூடியதாகவும் இருக்கிற பண்பியல்புகளை பட்டியலிட்டால் அவையெல்லாம் பார்ப்பானியத்தின் பண்பியல்புகளாகவே இருப்பதை உணரலாம்!.

தொடர்புடைய இடுகைகள்

பார்ப்பானியம் என்றால் என்ன?
பார்ப்பானியம் - பார்ப்பனர் தொடர்பென்ன?
பார்ப்பனர் என்றோர் சாதியுமுண்டோ?

புதன், 7 ஏப்ரல், 2010

பார்ப்பனர் என்றோர் சாதியுமுண்டோ?

பார்ப்பனர் என்றோர் சாதியுமுண்டோ?
உண்டெனில்...
யார் அவர்?
நாம் பேசும் மொழியை "நீசபாஷை" என்று இழித்தாரே...
அவரே பார்ப்பனர்.
நாம் உண்ணும் இறைச்சி உணவை பழித்தாரே...
அவரே பார்ப்பனர்.
நம்முடைய இசையை ஒதுக்கி வைத்தாரே...
அவரே பார்ப்பனர்.
நம்மை கல்வி கற்க தடை செய்தாரே...
அவரே பார்ப்பனர்.
நம்முடைய தோலின் நிறத்தை இகழ்ந்தாரே...
அவரே பார்ப்பனர்.
நம்மை நால் வர்ணமாக பிரித்து வைத்தாரே...
அவரே பார்ப்பனர்.
வேதமென்றும், மனு தர்மமென்றும் நம்மை ஒடுக்கினாரே...
அவரே பார்ப்பனர்.

தொடர்புடைய இடுகைகள் :
பார்ப்பானியம் என்றால் என்ன?
பார்ப்பானியம் - பார்ப்பனர் தொடர்பென்ன?
Related Posts with Thumbnails