புதன், 30 ஜூலை, 2008

நமது சமூகம் , வலைப்பதிவு சமூகம்...!

நமது சமூகத்தையும், வலைப்பதிவுலக சமூகத்தையும் பொருத்திப்பார்க்கும் எனது முயற்சி... இதில் அவரவர் பாத்திரங்களை அவரவர் கற்பனைக்கே விட்டுச்செல்கிறேன்!

முச்சந்தியில் அடித்த 50மிலி சாராயத்தின் போதையில் எவனவன் குடும்பத்தை சந்திக்கிழுக்க முடியும் என வாய்நிறைய வசவு வார்த்தைகளாக சவுண்ட் விடும்... ஏதோவொரு போதை தலைக்கேறிய முச்சந்தி முனியப்பன்கள் அங்கேயும், இங்கேயும் உண்டு!

ஆட்டைகடிச்சி, மாட்டைகடிச்சி கடைசியில் என் குடும்பத்தையே பேசுறான்டா என தடியெடுத்து தொடை தட்டி முனியப்பன்களை மென்னி முறிக்க புறப்படும் கிராமத்து சண்டியர்கள் அங்கேயும், இங்கேயும் உண்டு!

அதிகாரத்துக்கும், ஆண்டைகளுக்கும் வாழ்த்து பா பாடுவது, கொல்லைப்புற கதவு திறப்பது என மாமா வேலைப்பார்க்கும் அதே கிராமத்து சகுனி மாமாக்கள் அங்கேயும், இங்கேயும் உண்டு!

எல்லாம் அவன் செயல், விதி என்றெல்லாம் பிதற்றி தான், தனது காரியங்கள் என கண்ணாய் வாழும் முருகனடிமைகள் அங்கேயும், இங்கேயும் உண்டு!

ஆண்டிகள் கூடி மடம் கட்டிய கதையாய் அவ்வப்போது கூடி சமூகத்தை புரட்டிப்போட புறப்படும் சமூக புரட்சியாளர்கள் அங்கேயும், இங்கேயும் உண்டு!

முட்டாள்கள், தேடலற்றவர்கள் என சமூகத்தை காறி உமிழ்ந்து உலக தத்துவங்களை கரைத்துக்குடித்து வாழ்வின் தத்துவங்களை தேடிக்கொண்டிருக்கும் தத்துவ பித்தர்கள் அங்கேயும், இங்கேயும் உண்டு!

தனது அறிவின் வீச்சின் புலம்பல்களை சாராயக்கடையில் ஆரம்பித்து... சந்து மூலையில் உருண்டுக்கிடப்போர் அங்கேயும், இங்கேயும் உண்டு!

சிற்றின்பமோ, பேரின்பமோ காமமத்தை கொண்டாடுவோம் என கிடப்போர் அங்கேயும், இங்கேயும் உண்டு!

எதையாவது செய்ய வேண்டும் என சிறு, சிறு கலகங்கள் செய்யவோர் அங்கேயும், இங்கேயும் உண்டு!

தனது வாழ்வு பாதுகாப்பாக இருக்கிறது என திருப்தியுற்றால் ஊருக்கு கருத்து சொல்லும் கந்தசாமிகள் அங்கேயும், இங்கேயும் உண்டு!

எவன் எக்கேடு கெட்டுப்போனால் எனக்கென்ன... இவனிடம் அதிகாரமிருந்தால் எனக்கு பயன்.... என சிலருக்கு அதிகார பீடமேற்ற நினைக்கும் சுயநல நாய்பிழைப்புகாரர்கள் அங்கேயும், இங்கேயும் உண்டு!

குஜராத்தில் இசுலாமியரின் குடிசைகளும், குடும்பங்களும் எரிக்கப்பட்டும், வல்லுறவுக்கும், வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டப்போது கூட மோடிக்கு வாழ்த்துபா பாடுகிற மனித மிருங்கள்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்துக்கும் சிறு ஊறு எனும்பொழுது அலறிதுடிக்கும் அவலம் அங்கேயும், இங்கேயும் உண்டு!

ஈழத்து உறவுகளின் குடும்பங்களை கொலைச்செய்யப்பட்டப்பொழுதும், வல்லுறவுக்கும், வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டப்பொழுதும் விருது வாங்க நாயாய் அலையும் இழிபிறவிகள்... அதிகாரங்களுக்கு கொல்லைபுற கதவு திறந்து மாமா வேலைப்பார்ப்போர் அங்கேயும், இங்கேயும் உண்டு!

இன்னும் சொல்லாமல் விடுப்பட்ட பல... அங்கேயும், இங்கேயும் உண்டு!

சமூகமும், வலைப்பதிவும் ஒன்று மற்றொன்றின் பிம்பம்!

திங்கள், 21 ஜூலை, 2008

உறக்கத்தின் கதறல்...!

எப்பொழுதாவது சொல்லலாம் என்று சேகரித்து வைத்த உண்மைகள்! என்னைப்பற்றி முழுமையாக தெரிந்தவர்கள் யாரேனும் உண்டா? சுயவிசாரணை எந்தளவுக்கு சாத்தியமானது? நான் நெகிழ்ந்து, தளர்ந்து உணர்வுகளையும்... நினைவுகளிலும், மனத்திலும் சிறைப்பட்டுக்கிடக்கும் உண்மைகளை ஊருக்கு உரைப்பது எப்பொழுது?!

குற்றங்கள், குறைகள் இவை ஏதுமற்ற மனிதனாக அடையாளப்படுத்தப்படுகிற போலி பிம்பங்களை கண்டு எனக்கு எரிச்சலாக இருக்கிறது!

செயலற்ற மனிதன் இருக்க முடியுமா! செயல் என்று ஒன்று இருக்கும்பொழுது குற்றங்களும், குறைகளும் இயல்பல்லவா?!

இப்பொழுதெல்லாம் எதன்மீதும் எனக்கு பிடிப்பு வருவதேயில்லை! ஏனென்றால் பிடிப்பு என்பதே தொடர்ச்சியின் விளைவு! தொடர்ச்சியற்ற சிந்தனையும், செயலும் கொண்டவனுக்கு பிடிப்பு என்பது சாத்தியமற்றது!

எனக்கு மட்டும்தானா! இல்லை!! இல்லை!!! எல்லோருக்கும் இப்படிதான் நிகழ்கிறதா?

ஏதோவொன்று மண்டையோட்டுக்குள் குறு,குறுவென்று ஊர்ந்துக்கொண்டேயிருக்கிறது, எதிலோ தொடங்கி எந்தவிதமான இலக்குமற்ற சிந்தனைவோட்டங்கள்...

ஒவ்வொரு உறக்கத்தின் பொழுதும் நான் அனுபவிக்கிற வலி!

வியாழன், 10 ஜூலை, 2008

ஜ்யோவ்ராம் சுந்தர் நீக்கம் - வலைப்பதிவு வாசிப்பாளர்கள்=மிடில் கிளாஸ் மாதவன்கள்...!

ஜ்யோவ்ராம் சுந்தர் நீக்கம் எனக்கும் வருத்ததை தருகிறது... அதே நேரத்தில்...

ஜ்யோவ்ராம் சுந்தர் நீக்கத்திற்கு இன்னும் தமிழ்மணம் விளக்கம் தராத நிலையில்... அறிவுஜீவி வளர்மதி அவர்கள்... பொதுஜன வாசிப்பாளர்களை மிடில்கிளாஸ் மாதவன் என்று விமர்சித்திருக்கிறார்... :(

முதலில் வாசிப்பாளன் முட்டாளாக கூட இருக்கட்டும்... குறைந்தபட்சம் அவனை நோக்கி இயங்க கற்றுக்கொள்ளுங்கள்...!

உனக்கு தெரியாது நீ! முட்டாள் என்பதும் ஒரு வகையில் பார்ப்பானியம்...


தமிழ்மணம் வெறும் அறிவுஜீவிகளுக்கு எழுதும் அறிவுஜீவிகளுக்கு மட்டுமான தளமல்ல... அது மிடில்கிளாஸ் மாதவன்களை வாசிப்பாளர்களாக உள்ளடக்கியதே... :)

நன்றி

செவ்வாய், 1 ஜூலை, 2008

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்! - ஒரு வரலாற்று தவறா?

இந்த விடயம் தொடர்பான வரலாற்று தொடர்ச்சி மற்றும் இதன் பின்னணி பகிர்ந்துக்கொள்ள இயலுமா?

இதன் மூலம் அடைய நினைக்கும் இலக்கு என்ன?

சிந்தனையாளர்களும், சமூக அக்கறையுள்ளவர்களும் இதை எப்படி நோக்குகிறார்கள்?

இன்னும் ஏகப்பட்ட கேள்விகள் இருக்கு...

உங்களுடைய கருத்துகளை வரவேற்கிறேன்...
Related Posts with Thumbnails