வெள்ளி, 20 பிப்ரவரி, 2009

தமிழ் இன அழிப்புக்கு துணைப்போகும் இந்திய தரகு முதலாளிகளை அடித்து விரட்டுவோம்...!

அன்பிற்கினிய தமிழ் உறவுகளே!

ஈழத்தில் நம் உறவுகள் படும் துயரைக்கண்டு மனம் வெதும்பி வீதியில் நின்று போராடிக்கொண்டிருக்கிறீர்!

உம்மோடு கரம் கோர்க்க இயலாத சூழலில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன்...!

நாளொரு பொழுதும் கொத்துக்கொத்தாய் கொத்துக்குண்டுகளாலும், பீரங்கிகளாலும் படுகொலை செய்யபடுகின்ற ஈழத்தமிழனுக்காய் குரல் கொடுக்க எந்த நாடும் இல்லை!

மனிதம் பேசியோர், எழுதியோர் எல்லாம் எங்கேயிருக்கிறார் தெரியவில்லை...!
அய்யகோ...! தமிழன் சாகிறான்...! என்று நீலிக்கண்ணீர் வடிக்கும் ஈனத்தலைமைகளால் எதுவும் நடக்க போவதுமில்லை...!

இச்சூழ்நிலையில்....

இலங்கை அரசு தமிழ் இன அழிப்பு போரை முன்னெடுக்க உறுதுணையாக... இலங்கையில் முதலீடுகள் செய்கிற, செய்துள்ள இந்திய தரகு முதலாளிகளை அடையாளம் கண்டு... தமிழ்நாட்டிலிருந்து அடித்து விரட்டுவோம்!



அடிமடியில் கை வைத்தால் இந்திய அரசு பணிந்தாக வேண்டும்...!



இலங்கையில் முதலீடு செய்துள்ள... எனக்கு தெரிந்த சில நிறுவனங்கள்...



1. ராதிகாவின் ராடான் நிறுவனம்


2. ஏர்டெல்



தொழில் துறை சேர்ந்த தோழமைகள் பட்டியல் தயாரித்து இப்போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்...!

தீயிட்டு கொளுத்த வேண்டியவை...

தினமலர்
இந்து
துக்ளக்

5 comments:

குழலி / Kuzhali சொன்னது…

//இலங்கை அரசு தமிழ் இன அழிப்பு போரை முன்னெடுக்க உறுதுணையாக... இலங்கையில் முதலீடுகள் செய்கிற, செய்துள்ள இந்திய தரகு முதலாளிகளை அடையாளம் கண்டு... தமிழ்நாட்டிலிருந்து அடித்து விரட்டுவோம்!
//
இந்திய தரகு முதலாளிகள் மட்டுமல்ல அடித்து விரட்டப்பட வேண்டியவர்கள், தமிழக தரகு அரசியல்வாதிகளும் தான், உங்கள் ஓட்டையும் என் ஓட்டையும் மக்கள் ஓட்டையும் வாங்கி கொண்டு மகனுக்கும், பேரனுக்கும் மந்திரிபதவி வாங்கி தமிழின வாக்குகளை வைத்து தரகு வேலை பார்க்கும் அரசியல் வாதிகளையும் விரட்ட வ்வேண்டும், குறைந்த பட்சம் இந்த தேர்தலிலாவது தோற்க வேண்டும்

//1. ராதிகாவின் ராடான் நிறுவனம்


2. ஏர்டெல்



தொழில் துறை சேர்ந்த தோழமைகள் பட்டியல் தயாரித்து இப்போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்...!

தீயிட்டு கொழுத்த வேண்டியவை...

தினமலர்
இந்து
துக்ளக்//

இவைகள் மட்டுமின்ற தமிழ்நாட்டில் எழும் எழுச்சியை மட்டுப்படுத்த முயல்வதும் முத்துகுமார் செய்திகளையும் வெளியிடாத சன், கலைஞர் தொலைகாட்சிகள், தினகரன் இவைகளையெல்லாம் என்ன செய்ய போகிறோம்?

கோவி.கண்ணன் சொன்னது…

//தீயிட்டு கொழுத்த வேண்டியவை...

தினமலர்
இந்து
துக்ளக்//

தினகரன் அலுவலகத்தை எரித்து 3 உயிர்களைப் போக்கிவிட்டு, மூவர் மதுரையில் தேர்தல் பிரச்சாரத்திற்கு கூட்டாக வந்தது தான் நினைவு வருகிறது.

பிரச்சனை வீட்டுக்குள்ளேயும் இருக்கு. செய்ய முடிந்தவர்களே செய்யாத போது செய்ய விரும்பாதவர்களைப் போய் என்ன கேட்பது.

ஆனால் அவர்களின் ஈழ எதிர்ப்பு அரசியல் சகித்துக் கொள்ள முடியாத ஒன்று. அதை பொதுமக்கள் உட்பட யாரும் கண்டுக் கொள்ளவில்லை என்பதும் உண்மை

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

ராடான் போன்ற தமிழ் சார்ந்த நிறுவனங்களுக்கு சிங்களனே மூட்டை கட்டி அனுப்புவான். ஆனால் இந்திய நிறுவனங்களுக்கு சிறிலங்க சந்தை தேவைப்படுகிறது. அதனால் அங்கு செல்கிறார்கள். இந்திய எண்ணெய் நிறுவனம், தகவல் தொடர்பு நிறுவனங்கள், கார் நிறுவனங்கள் போன்றவைகள் சிறிலங்க சந்தையை நம்புகின்றன. தமிழர்களை அழிக்க இந்தியா உதவி செய்வதற்கு அதுவும் ஒரு முதன்மையான காரணம். தமிழகத்தில் முதலீடு செய்துள்ள இந்திய நிறுவனங்களை மூட்டை கட்டச் சொல்வதற்குப் பதிலாக(யார் மூட்டை கட்ட சொல்லுவார்? இங்குள்ள வேலை வாய்ப்புகள் பாதிக்கப் படும் என்று அலறுவார் எதிர் போராட்டம் நடத்துவார், இதுவும் தமிழர்களை பிரித்தாளும் ஒரு சதியாக அமைந்துவிடக் கூடும்) அதற்குப் பதில் மத்திய அரசு நிறுவனங்களை தமிழகத்தில் இருந்து மூட்டை கட்டச் சொல்லலாம். எடுத்துக் காட்டாக விமானங்கள், இரயில் போன்றவற்றை ஓட விடாமல் செய்யலாம். மத்திய அரசு நிறுவனகள்,அலுவலகங்களை மூட வைக்கலாம்.

தமிழர்களைப் புறக்கணிக்கும் இதழ்களை வாங்க மறுப்பதோடு செய்திகளையும் புறக்கணிக்கலாம். தமிழர்கள் அதில் படைப்புகளை அனுப்பாமல் விலகிக் கொள்ளலாம். அதைக் கொளுத்தி அதற்கு விளம்பரம் செய்ய வேண்டியதில்லை.

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

எனக்குத் தெரிந்து மாருதி, அஷோக் லேலண்ட், டாடா டீ, ஹீரோ ஹோண்டா, ஏர்டெல் நிறுவனக்கள் அங்கு இயங்குகின்றன. நாம் அவற்றைப் புறக்கணிக்கலாம். இதை ஒரு இயக்கமாக எடுத்துச் செய்தால் இன்னும் பலனிருக்கும். என்னளவில் இந்த நிறுவனங்களின் பொருட்களை ஒதுக்க முடிவுசெய்திருக்கிறேன்.

பெயரில்லா சொன்னது…

ஹீரோ ஹோண்டா இந்திய நிறுவனமா இல்லை இந்திய-ஜப்பான்
கூட்டு நிறுவனமா.அதே போல் அசோக்
லேலண்ட் ஹிந்துஜாக் குழுமத்தைச்
சேர்ந்தது.ஹிந்துஜா பிரிட்டனை தலைமையகமாகக் கொண்ட குழுமம்.
இலங்கையில், இந்தியாவில் எத்தனையோ பன்னாட்டு,வெளிநாட்டு
நிறுவனங்கள்,முதலீடு செய்யும் நிதி நிறுவனங்கள் உள்ளன.இதில் யாரை
புறக்கணிப்பீர்கள், யாரை ஏற்பீர்கள்.

முதலீடு செய்பவர்கள் ஒரு நாட்டின்
கொள்கையை முடிவு செய்வதில்லை.
தமிழ் நாட்டிற்கும்,கேரளாவிற்கும்
முல்லைப் பெரியாறு பிரச்சினை
இருக்கிறது.டாடா குழுமம் இரு
மாநிலங்களிலும் முதலீடு செய்துள்ளது.அரசுகள் செய்வதற்கும்,
டாடாவிற்கும் என்ன தொடர்பு.டாடா போன்ற முதலீட்டாளர்களுக்கு ஈழத்தமிழர் மீது பாசமும் கிடையாது,
வெறுப்பும் கிடையாது.


‘விமானங்கள், இரயில் போன்றவற்றை ஓட விடாமல் செய்யலாம். மத்திய அரசு நிறுவனகள்,அலுவலகங்களை மூட வைக்கலாம்.'
ரயில் ஒடாவிட்டால் யாருக்கு
பாதிப்பு.குப்பனுக்கும்,சுப்பாயிக்கும்
பாதிப்பு.தமிழ்தேசிய மூடர்கள்தான்
இப்படியெல்லாம் யோசிப்பார்கள்.

Related Posts with Thumbnails