வியாழன், 10 ஜூலை, 2008

ஜ்யோவ்ராம் சுந்தர் நீக்கம் - வலைப்பதிவு வாசிப்பாளர்கள்=மிடில் கிளாஸ் மாதவன்கள்...!

ஜ்யோவ்ராம் சுந்தர் நீக்கம் எனக்கும் வருத்ததை தருகிறது... அதே நேரத்தில்...

ஜ்யோவ்ராம் சுந்தர் நீக்கத்திற்கு இன்னும் தமிழ்மணம் விளக்கம் தராத நிலையில்... அறிவுஜீவி வளர்மதி அவர்கள்... பொதுஜன வாசிப்பாளர்களை மிடில்கிளாஸ் மாதவன் என்று விமர்சித்திருக்கிறார்... :(

முதலில் வாசிப்பாளன் முட்டாளாக கூட இருக்கட்டும்... குறைந்தபட்சம் அவனை நோக்கி இயங்க கற்றுக்கொள்ளுங்கள்...!

உனக்கு தெரியாது நீ! முட்டாள் என்பதும் ஒரு வகையில் பார்ப்பானியம்...


தமிழ்மணம் வெறும் அறிவுஜீவிகளுக்கு எழுதும் அறிவுஜீவிகளுக்கு மட்டுமான தளமல்ல... அது மிடில்கிளாஸ் மாதவன்களை வாசிப்பாளர்களாக உள்ளடக்கியதே... :)

நன்றி

செவ்வாய், 1 ஜூலை, 2008

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்! - ஒரு வரலாற்று தவறா?

இந்த விடயம் தொடர்பான வரலாற்று தொடர்ச்சி மற்றும் இதன் பின்னணி பகிர்ந்துக்கொள்ள இயலுமா?

இதன் மூலம் அடைய நினைக்கும் இலக்கு என்ன?

சிந்தனையாளர்களும், சமூக அக்கறையுள்ளவர்களும் இதை எப்படி நோக்குகிறார்கள்?

இன்னும் ஏகப்பட்ட கேள்விகள் இருக்கு...

உங்களுடைய கருத்துகளை வரவேற்கிறேன்...

வெள்ளி, 27 ஜூன், 2008

தசாவதாரம் - தமிழரசி - எரியிற நெருப்பில் கொஞ்சம் எண்ணெய்....!

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

.
.
.
.
.
.
.
.
.
.

விரைவில்....

புதன், 25 ஜூன், 2008

பார்ப்பானியம் என்றால் என்ன?

உணவு, உடை, உறைவிடம், பிறப்பு, இறப்பு, பண்பு, குணம், தொழில், பொருளாதாரம், பழக்கவழக்கங்கள், வாழ்க்கைமுறை, பண்பாடு, கல்வி, அறிவு, சிந்தனை, பாராம்பரியம், பரம்பரை, குலம், இனம், மொழி, மதம், நிறம்... இன்னபிற இப்படி எந்தவொரு காரணிக்கொண்டும் ஒரு மனிதனை உயர்ந்தவன் என்றும் இன்னொருவனை தாழ்ந்தவன்(இழிந்தவன்) என்றும் சித்தரிப்பது, பேசுவது, எழுதுவது, நடைமுறையில் கடைபிடிப்பது, பிரச்சாரம் செய்வது, கலையின் ஊடாக பதிவு செய்வது, இன்னபிற செயல்களின் வழியாக சமூகத்தில் ஏற்ற, தாழ்வுகளை உண்டு பண்ணுவதும் அதன் மூலம் சமூக உளவியலை சிதைத்து மனிதர்களிடையே உயர்ந்தோர், தாழ்ந்தோர்(இழிந்தோர்) என்கிற பாகுபாட்டை உண்டாக்குவதுமான செயலே பார்ப்பானியம்!

எ.கா:

1. சைவ உணவை உண்ணுபவர்கள் உயர்ந்த மனிதர்கள், அசைவ உணவை உண்ணுபவர்கள் தாழ்ந்தவர்கள்(இழிந்தவர்கள்) என்று கூறுவது.

2. கற்பூரத்தை கொளுத்தி, தீயில் நெய்யை ஊற்றி வழிபாடு செய்கிற செயலை உயர்ந்ததென்றும், அதை செய்பவரை உயர்ந்தோர் என்பதும்... கோயிலுக்கு ஆடு,கோழி வெட்டி வழிபாடு செய்வதை இழிந்த செயலாகவும் அதை செய்வோரை தாழ்ந்தவர் (இழிந்தவர்) என்பதுமான செயல்.

3. ஒரு மொழியை(சமஸ்கிருதம்)யும், அதிலுள்ள சில நூல்களை கற்றோரை மட்டுமே கடவுளுக்கு நெருக்கமான உயர்ந்தோராக கொள்வதும், இன்னொரு மொழி (தமிழ்) பேசுவோரை தாழ்ந்தவராகவும் கொள்வதுமான செயல்.

(நா.கண்ணன் என்கிற பதிவர் வடமொழியை இறைதன்மையுள்ள மொழி என்கிறார்... இறைதன்மையுள்ள மொழி ஏன் இறந்துபோனது?)

குறிப்பு :
இங்கே குறிப்பிட்ட செயல்கள் மட்டுமல்ல... எதுவொன்று ஒருவனை உயர்ந்தவனாகவும், இன்னொருவனை தாழ்ந்தவனாகவும் சித்தரிக்கிறதோ அதெல்லாம் பார்ப்பானியமே! அதை செய்வோர் பார்ப்பானியவாதிகளே!

திங்கள், 23 ஜூன், 2008

தசாவதாரம் - அமெரிக்காவின் கோவணத்தை உருவிய கமல்...!

படத்தின் பார்ப்பானீய அரசியலை ஏற்கனவே நண்பர் பைத்தியகாரன் தசாவதாரம்: பாசிச, பார்ப்பனிய மலம் நார், நாராக கிழித்துவிட்டார்... தசாவதார விமர்சனம் எழுதாவிட்டால் தமிழ் வலையுலகின் பொது நீரோட்டத்தில் விலகிவிட்டதாக வரும் பழியிலிருந்து எப்படி தப்பிப்பது :)

குறுக்காலும், நெடுக்காலும் நடந்து... குப்புறப்படுத்து, மல்லாக்க விட்டத்தை பார்த்து யோசித்து, கழிப்பறையில் கக்கா போகும்போது கன்னம் தேய்த்து... கடைசியாக இந்த பதிவை எழுதுகிறேன்....

அன்றைய சோவியத் ரஷ்யாவையும், கொரியாவையும், கியூபாவையும், தற்பொழுது இஸ்லாமிய நாடுகளையும் மனித இனத்தின் எதிரிகளாக சித்தரித்தும்... அங்கே உயிரி ஆயுதங்கள் (Bio Weapons) தயாரிக்கப்படுவதாகவும், வேதி ஆயுதங்கள் தயாரிக்கப்படுவதாகவும் இடையறாது தனது ஊடகங்களின் வழியாகவும், ஹாலிவுட் படங்கள் வழியாகவும், நாவல்களின் வழியாகவும், இன்னும் பல்வேறு முறையிலும் பிரச்சாரம் செய்கிற அமெரிக்கா மற்றம் அதன் ஆதரவு ஏகாதிபத்தியங்கள். அதை அப்படியே உண்டு செரிக்காமல் வாந்தி எடுக்கிற முதலாளித்துவ கைக்கூலிகள் என்கிற நிலையிலிருந்து...

அமெரிக்காவின் அயோக்கிய தனங்களை அம்பலப்படுத்துவதில் படம் முக்கிய திசையில் பயணம் செய்கிறது. எய்ட்ஸ் கிருமி உருவாக்கத்திலிருந்து, இன்றைக்கு உயிரி ஆயுத தயாரிப்பில் ஈடுப்பட்டிருக்கும் அமெரிக்கா, அதற்கு புஷ் அரசாங்கம் நிதி ஓதுக்கீடு செய்வது வரைக்கும்... அமெரிக்க அரசாங்கத்தின் மனித இன அழிப்பு வேலைகளை... மிக நுட்பமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் கமல்!

பலராம நாயுடு என்கிற கதாபாத்திரத்தின் வழியாக விசாரணை என்று இரண்டு முறை இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளை பட்டியலிட்டு நம்முடைய பொதுப்புத்தி சார்ந்த தீவிரவாதம் என்பது இஸ்லாமியர்களின் செயல் என்பதை எள்ளி நகையாடி இருக்கிறது படம்.

தனது சொந்தங்கள் சாகும் போது கோபப்படுகிற சராசரி மனிதர்களை தீவிரவாதிகள் என்று முத்திரைக்குத்தி சித்தரவதை செய்கிற அரசு... மனித இனத்தை அழிக்க கூடிய உயிரி ஆயுதத்தை தயாரிக்கிற அமெரிக்காவையும், அது இந்தியாவிற்கு வந்து சேர்ந்து விட்டது என்கிற பொழுதிலும் அமெரிக்க அதிகாரிகளுக்கு மாலைப்போட்டு, இளநீர் கொடுத்து வரவேற்கிற நமது அரசு அதிகார அமைப்பையும் இதைவிட சிறப்பாக எப்படி காட்சிப்படுத்த முடியும்!

புஷ்-ஐ இதைவிட மோசமான கோமாளியாக சித்தரிக்க முடியுமா?

அமெரிக்கா மனித இனத்திற்கு எதிரான ஆய்வுகளில் ஈடுப்பட்டிருக்கிறது என்கிற கதையை திரைப்படமாக எடுத்து அதை அமெரிக்காவின் 50 திரையரங்களில் வெற்றிகரமாக வெளியிட்டிருக்கிற கமலுக்கு நிச்சயமாக பாராட்டுகள் தெரிவிக்க வேண்டும்!

படம் ஆரிய கதையாடல்களின் வழியாக சொல்லப்பட்டிருக்கிறது என்கிற காரணத்திற்காக... கமலை விமர்சிக்கலாம்!

கடைசியாக நந்தாவுக்காக... அவருடைய பதிவில் கமல் கடவுள் எதிர்ப்பு கொள்கையை கடைப்பிடிக்கிறார்... அதனால் பார்ப்பானீயவாதி அல்ல என்று குறிப்பிட்டிருந்தார்....

நாத்திகம் என்கிற ஆயுதம் பார்ப்பானீயத்தை எதிர்க்க பெரியாரால் பயன்படுத்தப்பட்டது. அதனால் ஊரில் இருக்கிற அத்தனை நாத்திகவாதிகளும் பார்ப்பானீய எதிர்ப்பாளர்கள் அல்ல!

நிறைய நாத்திகர்கள் பார்ப்பானீயவாதியாக இன்றைக்கும் உலவிக்கொண்டிருக்கிறார்கள்! (மிகச்சிறப்பான எ.கா. பூணூல் மார்க்கிஸ்டுகள்)

நன்றி!
Related Posts with Thumbnails