திங்கள், 29 டிசம்பர், 2008

வன்புணர்! கொலை செய்!! அழித்தொழி!!!

இறந்த பெண் போராளிகளின் உடல் மீதான வன்முறையை காணொளியாக கண்டப்பொழுது எழுகிற கோபம்... கட்டுபாடற்றதாக... கனன்று... கடைசியில் இதுவும் ஒரு செய்தியாக மூளைக்குள் பதிந்துவிடுகிற மோசமான வாழ்வியலே எனக்கானதாக இருக்கின்றபடியால்...

அங்கே பெண் போராளியின் இறந்த உடல் மீதான பாலியல் வன்முறையை நடத்தவும்... வெறிக்கொண்ட மிருகங்களாக நடந்துக்கொள்ளவுமான சிங்கள இராணுவத்தின் உளவியல் எத்தகையது?

இத்தேடல் 1950களில் தொடங்கி 1983ல் பெரும் வெடிப்பாக நடந்த இன படுகொலைக்கான பின்னணியில் தொக்கி நிற்கிறது!

சிங்கள பேரினவாத அரசியல் என்பது இன வெறியூட்டிய மனிதர்களின் மீதான அரசியலை முன்னெடுக்கிறது. அது சிங்கள வெறியாக மாறி... தமிழர்களை கொலை செய்! வன்புணர்!! அழித்தொழி!!! என்பதாக நீட்சியடைகிறது!

சிங்கள பேரினவாத அரசியல் இன்றைக்கு களத்தில் இறந்து போகிற இராணுவத்தினருக்கு பதிலாக இன்னும் வெறியூட்டிய சிங்கள காடையர்களை உற்பத்தி செய்துக்கொண்டே இருக்கும்!

இதன் இன்னொரு முகத்தை இந்திய துணைகண்டத்திலும்... பார்ப்பானிய(இந்துத்துவ) வெறியாக ஊட்டப்பட்டு குஜராத்தில் இசுலாமியர்களின் மீதும், ஒரிசாவில் கிருத்துவர்கள் மீதும் கொலை செய்! வன்புனர்!! அழித்தொழி!!! என்பதாக நீட்சியடைவதையும்... கண்டுக்கொள்ளலாம்!

இந்த பேரினவாத வெறியை அம்பலப்படுத்தி... மக்களை விழிப்படைய செய்வது ஒரு வழி...
எம்மீது வன்முறையை கைக்கொள்கிற சிங்கள குறியை அறுத்தெறிவோம் என்பது இன்னொரு வழி... (இது சிங்களத்தின் கடைசி குறியை நோக்கிய தேடலாக இருக்கும்!)
Related Posts with Thumbnails