செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

பார்ப்பானியம் - பார்ப்பனர் தொடர்பென்ன?

.
.
சமூகத்தில் நிலவும் அடுக்குமுறை ஏற்றதாழ்வுக்கு பார்ப்பன சாதியில் பிறந்தவர்களை சுட்டிக்காட்டுவது போல பார்ப்பானியம் என்ற பெயரில் அழைப்பதை கண்டு, சிலர் வெம்பி மனம்குமறுகிறார்கள்.

முன்னோட்டமாக இந்த இரண்டு பதிவுகளை படித்துவிட்டு வாருங்கள்...

பார்ப்பானியம் என்றால் என்ன?

பார்ப்பனீயம் For Dummies !!!!



பார்ப்பானியம் பார்ப்பனர் என்கிற சாதியுடன் இணைத்து நோக்கபடுவதன் பின்னணி!

பார்ப்பானியம் பெயர் காரணத்தை புரிந்துக்கொள்ள சில வரலாற்று தொடர்ச்சிகளை பார்க்க வேண்டியுள்ளது.

அதிகாரத்துக்கு நெருக்கமானவர்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களை முதலில் எதிர்த்தவர்கள் சித்தர்களே!

மக்கள் திரள் போராட்டமாக முதன் முதலில் நடத்தியவன் புத்தன்!

பெரியாருக்கு முன்பே மக்கள் பார்ப்பனர் என்போர் யார் என்பதை உணர்ந்திருந்திருதனர்.

பார்ப்பனர், பார்ப்பனரல்லாதோர் என்கிற பிரிவு வரலாற்றில் தொடர்ச்சியாக இருந்துக்கொண்டே இருக்கிறது.

சமூகத்தில் நிலவும் ஏற்றதாழ்வுகளை கண்டு வருத்தமடைந்த சமூக போராளிகள், சமூகத்தை உற்று நோக்கி பகுப்பாய்வு செய்து உணர்ந்துக்கொண்டது.

நிலவுடமையாளர்கள், பண்ணையார்கள், ஜமீன்கள், குறு நில மன்னர்கள், மன்னர்கள் பின்னர் ஏற்ப்பட்ட ஆங்கிலேய மற்றும் பிற ஐரோப்பிய அதிகாரங்களுக்கு நெருக்கமான நிலையில் ஒரு குறிப்பிட்ட கூட்டம் தொடர்ந்து இருப்பதையும், அவர்கள் தங்களுடைய அன்றாட வாழ்வியலுக்கு மற்றும் பிழைப்புக்கும் தேவையானதையெல்லாம் உயர்ந்து என்றும் மற்றவற்றை இழிந்தது என்றும் சமூகத்தில் கட்டமைத்திருப்பதை உணர்ந்தனர்.

எ.கா: பரத நாட்டியம், வீணை போன்றவை உயர்ந்தாகவும், பறை, முரசு, மேளம், கூத்து போன்றவை தாழ்ந்தாகவும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறு அதிகாரத்துக்கு நெருக்கமாக தங்களுடைய பிழைப்பை முன்னிறுத்தி சமூகத்தில் ஏற்றதாழ்வுகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் கூட்டத்தின் அடையாளத்தை உற்று நோக்கியபொழுது அவர்கள் பூணூல் அணிந்த பார்ப்பனர் என்கிற அடையாளத்துடன் இருப்பதை, சமூகத்தில் நிலவும் ஏற்றதாழ்வுகளை போக்க வேண்டும் என்று போராடுகிற போராளிகள் உணர்ந்தனர்.

பார்ப்பனர்கள் எவ்வாறு அதிகாரத்தை ஒட்டி வாழ்கின்றனர், என்பதற்கு சில எ.கா:

1. இந்தியாவின் குடியரசு மாளிகையில் உள்ள தொழிலாளி முதல் உயர் பதவி வரையிலான ஆயிரத்துக்கு அதிகமான பதவிகளில் 1990- ல் 20லிருந்து 30 பேர் வரை மட்டுமே பார்ப்பனரல்லாதோராக இருந்தனர்.

2. தேர்தல் ஆணையத்தின் முக்கிய பதவிகளில் 90சதவிகிதம் பார்ப்பனர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

3. உச்சநீதிமன்றத்தின் முக்கிய பதவிகளும் பார்ப்பனர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

4. ரிசர்வ் வங்கியின் 95 சதவிகித முடிவெடுக்கும் பதவிகள் பார்ப்பனர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.


எவ்வாறு ஐரோப்பியர்களின் நிறவெறி என்பது வெள்ளை நிறவெறி என்று அடையாளப்படுத்த படுகிறதோ! அதேபோல் இந்திய துணைக்கண்ட நிலப்பரப்பில் நிலவும் அடுக்குமுறை சமூக ஏற்றதாழ்வு பார்ப்பனர்களுடன் தொடர்படுத்தி பார்ப்பானியம் என்று அழைக்கபடுகிறது.

பெரியார் அவர்கள் நேரிடையாக பார்ப்பான் என்றழைத்தே இந்த ஏற்றதாழ்வுகளுக்கு எதிராக போராடினார்.

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

சந்தனமுல்லை - சிவப்பு தோல், வெள்ளை மேலாதிக்கம், பார்ப்பானியம்

.
.
.
கையேடு அவர்களின் வலைப்பக்கத்தை மேய்ந்துக்கொண்டிருந்தபொழுது பகிர்வுகள் பகுதியிலிருந்து உனக்குப் பிடித்த சாக்லேட் கூட.... இடுகைக்கு வந்தேன். சந்தனமுல்லை அவர்களின் பதிவுகளை சில மாதங்களாக வாசித்துக்கொண்டிருக்கிறேன். இந்த இடுகை 2007-ல் எழுதியிருக்கிறார்கள் அதனால் வாசிக்கவில்லை. இப்பொழுது வாசித்தபொழுது எழுந்த மனக்குமறல் அதிகம்.

உலகளவில் நிலவும் வெள்ளை மேலாதிக்கம்... கிழக்காசிய நாடுகளில் நிலவும் மஞ்சள் தோல் மேலாதிக்கம்... இந்திய துணைக்கண்ட நிலப்பரப்பில் நிலவும் சிவப்பு தோல் மேலாதிக்கம்... பற்றிய எந்த சமூக, அரசியல் காரணிகளையும் தொடாமல் வெறும் தன்னம்பிக்கை பயிற்சி என்கிற நிலையில் எவ்வாறு எழுத முடிகிறது.

குறிப்பாக இந்திய துணைக்கண்ட நிலப்பரப்பில் கட்டியெழுப்பப்பட்டுள்ள சிவப்பு தோல் உயர்ந்தது என்கிற பார்ப்பானிய சிந்தனையும்...

சிவப்பு தோல் மனிதர்கள் உயர்ந்தவர்கள் என்கிற சமூக உளவியல் கருத்துருவாக்கமும் எவ்வளவு மோசமான சமூக, அரசியல் விளைவுகளை உருவாக்கி இருக்கின்றன.

என் துணைவிக்கு சிகிச்சையாக சென்றபொழுது மருத்துவர் சொன்ன ஒரு நிகழ்வால் அதிர்ந்து போனேன்...

"கருப்பாக இருந்த ஒரு பெண் தன்னுடைய குழந்தை சிவப்பாக பிறக்க வேண்டும் என்று மிக அதிகமாக நாள்தோறும் குங்குமப்பூவை பாலில் கலந்து அருந்தியதால், தண்ணீர் அளவு குறைந்துக்கொண்டே வந்து குழந்தை இறந்து விட்டது."

இந்த நிகழ்வு எதை நமக்கு படம் பிடித்துக்காட்டுகிறது. இதனுடைய சமூக, அரசியலை பேச வேண்டாமா!?

கருப்பு தாழ்வல்ல என்று நம்பிக்கை லேகியம் ஊட்ட முயலாதீர்கள்!
உங்கள் குழந்தைகளுக்கு போராட கற்றுக்கொடுங்கள்!
சிவப்பு என்பது உயர்வல்ல என்பதை கற்றுக்கொடுங்கள்!
நிறத்தால் கட்டியெழுப்பப்பட்டுள்ள பார்ப்பானியத்திற்கு எதிரான அறிவை ஊட்டுங்கள்!

அன்புடன்
அரசு

தொடர்புடைய இடுகை

வெள்ளை/மஞ்சள்/சிவப்பு/கருப்பு/அரக்கு (நன்றி : இராம.கி) தோலின் நிறத்தின் மீது கட்டமைக்கப்பட்ட பிம்பங்கள்...!

Related Posts with Thumbnails