வியாழன், 22 ஏப்ரல், 2010

பார்வதி அம்மையார் - உள்ளே வருவதில் நிகழ்ந்ததென்ன?

உயர்திரு பார்வதி அம்மையாரை விமானத்தை விட்டு இறங்க கூட அனுமதிக்காமல், திருப்பி அனுப்பிய மனித தன்மையற்ற காட்டுமிராண்டி தனமும், பாசிச வன்மமும் நிறைந்த நடவடிக்கையை கண்டு மனம் மிகவும் வேதனையடைகிறது.

80 வயதான அம்மையார் கிட்டதட்ட 4 மணிநேரம் விமான பயணம் செய்து வந்தவரை... உடல்நிலை சரியில்லாமல் இருந்த வயதான பெண்மணி கனிவோடு வரவேற்க வேண்டிய அதிகாரிகள்... இறங்காதே திரும்பி போ! என்கிற வன்மத்துடன் நடந்துக்கொண்டதை நினைத்து, நினைத்து வேதனையும், வெறுப்பும் எழுகிறது.

இந்த நிகழ்வையொட்டி யாரிடம் நம்முடைய எதிர்ப்பை காட்ட வேண்டும்... யார் மீது நம்முடைய கோபம் எழ வேண்டும் என்று புரிந்துக்கொள்ள வேண்டுமென்றால் நடந்த நிகழ்வை ழுமுமையாக அறிந்துக்கொள்வதின் வாயிலாக முடியும்.

பொருளற்ற சுயநல அரசியல் கூச்சல்களை ஓரம்கட்டி விட்டு... நடந்த நிகழ்வை புரிந்துக்கொள்ள முயற்சிப்போம்.

நான்கு நாட்கள் சில சென்னையில் ஊடகங்களில் வேலை பார்க்கும் நண்பர்கள் வாயிலாக சேகரித்த தகவல்களின் அடிப்படையில் இந்த நிகழ்வை எழுதுகிறேன். (நம்பக தன்மை என்பது வாசிப்பவரின் மனநிலையையும், பார்வையும் ஒட்டியது. என்னிடம் வந்து ஆதாரத்திற்கு தொங்க கூடாது)

1. உயர்திரு. வேலுபிள்ளை அய்யா அவர்கள் மரணத்திற்கு பிறகு இலங்கை அரசாங்கம் உயர்திரு பார்வதி அம்மையார் அவர்களை நாட்டை விட்டு வெளியேற அனுமதியளித்தது.

2. உயர்திரு பார்வதி அம்மையார் அவர்கள் தமிழகம் வருவதற்காக கொழுப்பில் உள்ள இந்திய தூதரகத்தில் விண்ணப்பம் அளித்துள்ளார். ஆனால் அங்கே அவருக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது.

3. அதன்பிறகு உயர்திரு பார்வதி அம்மையார் மலேசியா சென்று அங்கிருந்து கனடா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு செல்ல விசா விண்ணப்பித்துள்ளார்.

4. மலேசியாவில் சுற்றுலா விசாவில் வருபவார்கள் 30 நாட்கள் மட்டுமே தங்க இயலுமென்பதால்... மறுபடி மலேசியாவிலிருந்து தமிழகம் வருவதற்கு விண்ணப்பம் அளித்துள்ளார்கள்.

இந்த இடத்தில் சிலவற்றை நன்கு புரிந்துக்கொள்ள வேண்டும்...

2007க்கு பிறகு மலேசியா மற்றும் சிங்கப்பூர் இந்திய தூதரங்கள் இந்தியாவுக்கான விசா விண்ணப்பங்களை நேரிடையாக வாங்குவதில்லை. மூன்றாம் தரப்பு ஏஜெண்டுகள் வழியாகவே விண்ணப்பங்கள் வாங்கப்படும்.



இந்த ஏஜென்சிகள் கடவுசீட்டு(passport) உண்மையானதா? என்பதை சோதிக்கும் கருவி மட்டுமே வைத்திருப்பர். அவர்களிடம் யார், யார் எந்த, எந்த நாட்டில் உள் நுழைய தடை என்பதை பற்றிய பட்டியல் இருக்காது!.

இந்த ஏஜென்சிகள் அளிக்கும் விண்ணப்பத்தை வாங்கி 24 நான்கு மணி நேரத்துக்குள் விசா வழங்க வேண்டிய நிலையில் தூதரங்களில் வேலை பார்க்கும் அதிகாரிகள் உள்ள நிலையில், அதோடு மற்ற சான்றிதழ்கள் வழங்கும் பணி, வேறு பணிகள் என்று வேலை பளு சிங்கப்பூர் மற்றும் மலேசிய இந்திய தூதரங்களில் அதிகம். அதனால் Random Checking முறையில் மட்டுமே விண்ணப்பங்களை சோதிப்பார்கள்.

இவ்வாறு கொழுப்பில் நிராகரிக்கப்பட்ட விசா விண்ணப்பம், மலேசியாவில் விசா வழங்கப்பட்டுள்ளது.

திரு. நெடுமாறன் மற்றும் திரு.வைகோ இருவருக்கும் மிக நன்றாக தெரியும்... ஈழத்தமிழர்கள் பலர் மீது இந்தியாவில் உள் நுழைய தடை இருப்பது. அதில் குறிப்பாக புலிகளின் அமைப்பினர் சிலர் மீதும், பிரபாகரனின் பெற்றோர் மீதும் 2003ல் உள் நுழைய தடை வாங்கப்பட்டதை அறிவர். (திரு. நெடுமாறன் பழைய அறிக்கையென்றில் இதை எழுதியிருந்தார்... )

எப்பொழுதும் இந்திய மற்றும் இலங்கை உளவு துறையினர் கண்காணிப்பில் இருக்கிற உயர்திரு. பார்வதி அம்மையார். மலேசியாவில் விமானம் ஏறும்பொழுது தான் உளவு துறையினர் டெல்லிக்கு தகவல் அனுப்பியுள்ளனர்.

டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சு மற்றும் குடி நுழைவு (Immigration) அதிகாரிகள்... LTTE related person... don't deport, send back என்கிற உத்திரவை சென்னைக்கு அனுப்பியிருக்கிறார்கள்.

யார் வருகிறார்கள்? என்ன நடக்கிறது என்று தெரியாமலேயே... சென்னை விமான நிலைய அதிகாரிகள் பாதுகாப்பு வேண்டும் என்று காவல் துறைக்கு தெரிவிக்க... சென்னை புறநகர் போலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

குடிநுழைவு அதிகாரிகள் தங்களுக்கு வந்த ஆணையை நிறைவேற்ற... வழக்கம்போல உணர்ச்சியும், சுயநலமும் மட்டுமே எஞ்சியுள்ள திரு.வைகோ தனியாக கதறிவிட்டு வந்திருக்கிறார்.

ஈழ ஆதரவாளர்களுக்கு தகவலை பரப்பியிருந்தால்... குறைந்தபட்சம் விமான நிலைய முற்றுகை போராட்டம் நடத்தி... அம்மையாரை உள் நுழைய அனுமதி வாங்கியிருக்க முடியும்.

தான் மற்றும் தான் மட்டுமே செய்தாக பேர் வாங்க வேண்டும் என்கிற வைகோவின் சுயநலம்.. ஆதரவாளர்கள் அற்ற தனியாளாக நின்றிருக்கிறார்.

இப்பொழுது...

தங்களுடைய வேலையை மட்டுமே பார்த்த உளவு துறையினர் தொடங்கி... குடி நுழைவு அதிகாரிகள் வரை... வயதான, உடல்நலம் குன்றிய அம்மையாரை பற்றிய எந்தவிதமான கருணையும் காட்டவில்லை என்பதற்காக நோவதா?

உள் நுழைய தடையிருக்கிறது என்பது தெரிந்தும்... அதை நீக்க முயற்சியெடுக்காமல்... ரகசியமான மற்றும் தவறான முறையில் திருமதி பார்வதி அம்மையாரை அனுப்ப முயற்சித்த (அ) அலைகழித்த அவருடைய பயணத்தை ஏற்பாடு செய்தவர்களின் மீது எரிச்சலடைவதா?

முறையான அணுகுமுறையின்றி, சுயநலத்துடன் நடந்துக்கொண்ட திரு.நெடுமாறன், திரு.வைகோ போன்றவர்கள் மீது பாய்வதா?

சிக்கலான சூழ்நிலையில் போர்கால அடிப்படையில் செயல்பட்டு.. உடனடியாக நடவடிக்கை எடுக்காமல்... எனக்கு காலையில் செய்திதாள் பார்த்து தான் தெரியும் என்று சொல்கிற... ஒரு முதல்வர் மீது பாய்வதா?

மனித நேயமற்ற நடவடிக்கை என்பதை கண்டு... தமிழ்நாட்டில் பிறந்ததற்காக வெட்கி தலைகுனிய வேண்டிய தருணத்தில்... இதை வைத்தும் அறிக்கை அரசியல் நடத்திக்கொண்டிருப்பவர்களை என்ன செய்வது?

நன்றி
அரசு

திங்கள், 19 ஏப்ரல், 2010

பார்ப்பானியத்தின் பண்பியல்புகள்...!

தான், தனது, தான் சார்ந்தது என்கிற சுயநலமே பார்ப்பானியத்தின் பண்பியல்பாக உணரப்பட்டிருக்கிறது.

வரலாற்றையும், உண்மையையும் திரித்து... தனக்கு சாதகமாக மாற்றுவது.

ஆதிக்கத்திற்காக பொய், புரளிகளை சமூகத்தில் உலவ விடுவது.

அதிகாரத்திற்காக குறுக்கு வழிகளை ராஜதந்திரம்(குள்ளநரிதனம்) என்கிற பெயரில் செய்வது.

முட்டாள்தனத்தையும், மூட பழக்க,வழக்கங்களை சமூகத்தில் வளர்ப்பதன் மூலம்... சமூகத்தை அடிமையாக வைத்திருப்பது.

உழைக்காமல், அடுத்தவர் உழைப்பை சுரண்டி வாழ்வது.

அடுத்தவர் உழைப்பை தனதென்று கூசாமல் உரிமை கொண்டாடுவது.

பெண்ணடிமைதனத்தை போற்றுவது.

மனித இனம் சமூகமாக வாழ்வதற்கு தடையாகவும், தீமை விளைவிக்க கூடியதாகவும் இருக்கிற பண்பியல்புகளை பட்டியலிட்டால் அவையெல்லாம் பார்ப்பானியத்தின் பண்பியல்புகளாகவே இருப்பதை உணரலாம்!.

தொடர்புடைய இடுகைகள்

பார்ப்பானியம் என்றால் என்ன?
பார்ப்பானியம் - பார்ப்பனர் தொடர்பென்ன?
பார்ப்பனர் என்றோர் சாதியுமுண்டோ?

புதன், 7 ஏப்ரல், 2010

பார்ப்பனர் என்றோர் சாதியுமுண்டோ?

பார்ப்பனர் என்றோர் சாதியுமுண்டோ?
உண்டெனில்...
யார் அவர்?
நாம் பேசும் மொழியை "நீசபாஷை" என்று இழித்தாரே...
அவரே பார்ப்பனர்.
நாம் உண்ணும் இறைச்சி உணவை பழித்தாரே...
அவரே பார்ப்பனர்.
நம்முடைய இசையை ஒதுக்கி வைத்தாரே...
அவரே பார்ப்பனர்.
நம்மை கல்வி கற்க தடை செய்தாரே...
அவரே பார்ப்பனர்.
நம்முடைய தோலின் நிறத்தை இகழ்ந்தாரே...
அவரே பார்ப்பனர்.
நம்மை நால் வர்ணமாக பிரித்து வைத்தாரே...
அவரே பார்ப்பனர்.
வேதமென்றும், மனு தர்மமென்றும் நம்மை ஒடுக்கினாரே...
அவரே பார்ப்பனர்.

தொடர்புடைய இடுகைகள் :
பார்ப்பானியம் என்றால் என்ன?
பார்ப்பானியம் - பார்ப்பனர் தொடர்பென்ன?

ஞாயிறு, 4 ஏப்ரல், 2010

ஜமாலனின் ஐந்தில் ஒன்று...

நச்சுனு நாலு கேள்விகள் என்று ஒரு சங்கிலி தொடரழைப்பு வலைப்பதிவுகளில் 2008-ல் ஆரம்பிக்கப்பட்டது, பலரிடம் சென்று ஜமாலனிடம் வந்த பந்தை என்னிடம் தட்டிவிட்டு விட்டு சென்றார்.

சில குறிப்புகளை எழுதி ஜமாலனுக்கு மின்னஞ்சல் செய்து விட்டு, நான் என்னுடைய வாழ்க்கைதுணை நலன் ஏற்பு விழா துணைவியார் அப்புறம் எங்களுடைய மகவு இளவேனில் என்று காலம் பறந்தோடி விட்டது. திரும்பி பார்த்தால் இரண்டு ஆண்டுகள்.

ஜமாலனுக்கு அனுப்பிய குறிப்புகளை விரித்து ஒவ்வொரு வினாவுக்கும் தனி, தனி பதிவாக போட முயற்சிக்கிறேன். இந்த சங்கிலி தொடர் என்னிடம் அறுந்து போனதற்கு அதன் தொடர்ச்சியாளர்களிடம் மன்னிப்பு கேட்டபடி...

பழைய சங்கிலி... வாசிக்க...

சுகுணாவின் உடனடி கேள்விகளும் எனது தாமதமான பதில்களும். - ஜமாலன்
பதில்கள் + ?கள் - சுகுணா திவாகர்
பைத்தியகாரனி்ன் அரிவாளும் சுகுணாவின் கழுத்தும் - ஆடுமாடு
வளர்மதியின் கொலை வெறியும்... பலிபீடத்தில் தலையை வைக்கப்போகும் ஆடுமாடும் - பைத்தியக்காரன்
நறுக் கேள்விகளுக்கு சுருக்(கமான) பதில்கள் ...வளர்மதி (வலைப்பூ இப்பொழுது அழைக்கப்பட்ட வாசிப்பாளர்களுக்கு மட்டும்)
நாலு கேள்விகள், நாலு பதில்கள் - கென்
கேள்விக்கென்ன பதில் - ஜ்யோவ்ராம் சுந்தர்
ராமின் கேள்விகளும் சுந்தருக்கான கேள்விகளும் - அய்யனார்

நான்(அகம்)
ஆழமான வாசிப்போ, புரிதலோ அற்ற... அரை,குறை ஆர்ப்பரிப்பும், அகங்காரமும் கொண்ட, எல்லாவற்றையும் ஐயப்படுகிற, எதையும் ஏற்க மறுக்கிற நான்.

வலைச்சூழல்(புறம்)

வினா - விடை என்றே உருப்போட்டே பழகிப்போன கல்விமுறையில் வந்ததால் என்னவோ! எல்லா வினாக்களுக்கும் விடைகளை மட்டுமே வேண்டி நிற்கிற இடத்தில்...
ஐயங்கள், ஊகங்கள், கற்பனைகள் வழியாக குறுக்குவிசாரணை செய்யவோ, வினாக்களுக்கான வினாக்களை (நன்றி : வளர்மதி) நோக்கி பயணப்பட ஏன் முயற்சிக்கவில்லை?

தகவல்கள் தரவுகளாக்கப்பட்டு, தரவுகளும், மேற்கோள்கள் மட்டுமே விடைகளாக பரிணாமிக்கிற சூழலில்...

தகவல்களை தின்று தகவல்களாக வாந்தி,பேதி எடுக்கும் தகவல்களின் கிணற்றில் வாழும் தவளைகளாக சமூகம் பரிணாமித்துக்கொண்டிருக்கிறது!

ஒவ்வொரு வினாவும் உள்இயங்கியலை(நினைவு, சிந்தனை, மனம், எண்ணவோட்டங்கள், தர்க்கம், பின்னக்கம், குறுக்கோட்டுதல், இன்ன பிற) தூண்டுகிறது, அதில் பெறப்படும் பல பார்வைகளில் நான் முதன்மைப்படுத்த(priority) விழைகிற பார்வை... விடையாக...

5. சமீபத்தில் நீங்கள் படித்த நூல் பற்றி சொல்லமுடியுமா?

"புயலிலே ஒரு தோணி" - பா. சிங்காரம்.
இந்த தொடர் ஆட்டத்தில் வளர்மதி கேட்டு பைத்தியகாரன் பதிவில் சொன்ன பிறகு இந்த நூலை வாசிக்க ஆரம்பித்தேன்.

அறிதல், தெரிதல்,தேர்தல், கற்றல், பயிற்சி(அ)பட்டறிதல், ஆழ்தல், அகல்தல், ஆய்தல்,விடுபடல்...

கரி பல நூறாண்டுகள் சுழற்சிக்கு உட்பட்டு வைரமாக மாறுவது போல... படைப்பாளி என்பவன் மேற்கண்ட சுழற்சிக்கு (எந்தவரிசையில் வேண்டுமானாலும்) பலமுறை உள்ளாகி ஒரு படைப்பை வெளிகொணர வேண்டும்.

http://abcxyz.blogspot.com என்று பதிந்தவுடன் நானும்,நானும் படைப்பாளி என்று வண்டியேறுகிற...
யாராவது செத்தா உடனே அவர் இன்னார் பெத்த புள்ள என்று காகிதங்களை அச்சடித்து பொஸ்தகம் விற்கிற பதிப்பகங்களும் இருக்கிற சூழலில்...

நூலாசிரியர் மிகச்சிறந்த படைப்பாளியாக இருக்கிறார். படைப்பை பற்றிய விமர்சனங்களும், புகழுரைகளும் நிறைய வந்துவிட்டன.

என்னுடைய பார்வை... படைப்பு மக்களின் இலக்கியமாக இருக்கிறதா?

ஆங்கிலேயர் மலாய் தீவுகளை கைப்பற்றிய காலம் முதலே தமிழகம், வட இலங்கை பகுதிகளிலிருந்து தோட்ட தொழிலாளர்களாகவும், தொழிலாளர்களாகவும் கப்பலில் அழைத்து வரப்பட்டவர்கள் வாழ்ந்துள்ளனர்.

ஆசிரியர் ஒத்த வரி கூட அந்த தொழிலாளர்களை பற்றி தன்னுடைய படைப்பில் குறிப்பிடவில்லை.

ஆண்டைகளின்(செட்டியார்கள், பிள்ளைகள்) வாழ்க்கை, குடி, கூத்து, கும்மாளம், போராட்டம் எல்லாவற்றையும் வர்ணணை செய்ய முடிந்த படைப்பாளியால்...
அடிமைகளின் (தொழிலாளிகளின்) மூச்சுக்காற்றை கூட பதிவு செய்ய முடியாமல் போனதேன்?


பிரமிடுகளை தோண்டி...
அரசர்கள் அருங்காட்சியகத்தில்...
புதையுண்ட மக்களோ...
புழுதியாய்!

வியாழன், 1 ஏப்ரல், 2010

பலிகடா ஆக்கப்படும் உண்மைதமிழன்...

''எப்படியிருப்பினும் அமைப்போ, அல்லது சங்கமோ, அல்லது அஸோஸியேஷனோ எதுவோ ஒன்று அரசு அங்கீகாரத்துடன் அமைப்பதாக முடிவாகிவிட்டது. இந்த அளவுக்கு பதிவர்கள் கொடுத்த ஒத்துழைப்புக்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றிகள்..

Read more: http://truetamilans.blogspot.com/#ixzz0jpuKECk1
''
என்கிற வரிகளை படித்தவுடன் வந்த எரிச்சலில் ஒரு பதிவை எழுதியிருந்தேன்.

யார் இவர்கள் ? தமிழ் வலைப்பதிவர்களுக்கு அத்தாரிட்ட...

தனக்கு பின்னால் பம்மும் பார்ப்பானியத்தை பற்றிய விழிப்பற்ற உண்மைத்தமிழன்
முண்டாகட்டிக்கொண்டு எழுதிய பதிவை வைத்து பலர் தங்களுடைய அதிகார அரசியலை பூசி மொழுக முயற்சி செய்துக்கொண்டிருக்கிறார்கள்.

உண்மைத்தமிழன் மாதிரியான அப்பாவிகளை பலிகடாவாக்கி தங்களுடைய அதிகார அரசியலை முன்னெடுக்கும் நபர்களை தொடர்ந்து அடையாளம் கண்டுக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.
Related Posts with Thumbnails