உடை கலாச்சாரம் (டிபிசிடி யின் உவ்வ்வே...) -3
உடை கலாச்சாரம் (டிபிசிடி யின் உவ்வ்வே...) -2
உடை கலாச்சாரம் (டிபிசிடி யின் உவ்வ்வே...)
ஆடை அணிவதில் மிகப்பெரிய சிக்கல் எது பண்பாடானது (cultured)? எது நாகரிகமானது(civilized)? என்கிற கேள்வி தொக்கி நிற்கிறது?
மனிதன் தொடர்ந்து எல்லாவற்றையும் பற்றிய தேடல் உள்ளவனாக இருக்கிறான்... எல்லாவற்றிலும் பரிணாமம் அடைகிறான்... தொடர்ந்து வளர்ச்சியை நோக்கிய பயணத்தை தொடர்கிறான்.
தைக்காத ஆடைகளை நூற்பாலைகளில் தயாரித்த மனிதன். அவற்றுக்கு வண்ணம் கொடுக்க கற்றுக்கொண்டான். வண்ண,வண்ண ஆடைகள் போதவில்லை... அவற்றை தன் உடலின் அமைப்புக்கு தைத்து அணிவதை கண்டறிந்தான்.
தைக்காத கோவணம் தைத்த பிறகு ஜட்டி. தைக்காத வேட்டி... தைத்த பிறகு அரைக்கால்,முக்கால்,முழுகால் டவுசர்களாக! மேல் துண்டு தானய்யா மேல்சட்டையானது. தைக்காத சேலை... தைத்த பிறகு சுடி, மிடி யாக வருகின்றன.
உலகத்தின் எல்லாப்பாகங்களிலும் மனிதன் ஏதாவது ஒரு காலக்கட்டத்தில் தைக்காத உடையை பயன்படுத்திவிட்டு அதன் பிறகு தான் தைத்த உடைகளை பயன்படுத்த ஆரம்பித்திருப்பான்.
விலங்குகளிலிருந்து உரிக்கப்பட்ட தோல்கள் கூட ஆரம்பத்தில் தைக்கப்படாமலேயே தான் பயன்படுத்தியதாக வரலாறு கூறுகிறது. இன்றைக்கு தைத்த தோலாடைகள் பயன்படுகின்றன.
இந்த வளர்ச்சியை புரிந்துக்கொள்வதில் என்ன சிக்கல் இருக்கிறது என்று எனக்கு விளங்கவேயில்லை?
வேட்டியும், சேலையும் தான் எமது பண்பாட்டு உடைகள் என்றால்... மனிதனின் தேடலில் விளைந்த வளர்ச்சியை ஏற்றுக்கொள்ளாத முட்டாள்தனம் தானே தவிர வேறென்ன சொல்ல முடியும்!
பண்பாட்டு உடைகள் பற்றி பேசுகிற போது எல்லாம் எனக்கு தோன்றுவதெல்லாம் ஒன்றேயொன்று வரலாற்றின் எந்த பக்கத்திலாவது மக்கள் (உழைக்கும்வர்க்கம்) என்ன மாதிரியான உடைகள் உடுத்தியிருந்தார்கள் என்று பேசியிருக்கிறதா? அதிகாரவர்க்த்தின் அடையாளங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருக்கிறது!.
இந்த அதிகாரவர்க்கங்கள் எல்லாம் ஒரே மாதிரியான ஆடை உடுத்தியிருந்தார்களா? பார்ப்பனர்கள் வேட்டி, சேலை கட்டுவது ஒரு மாதிரியும்... செட்டியார்கள் வெறொரு மாதிரியும், முதலியார்கள், நாயக்கர்கள்... இன்னும் ஒவ்வொரு சாதியும் ஒவ்வொரு மாதிரியும் வேட்டி, சேலை கட்டியிருந்தார்கள் இல்லையா?
அதிகாரவர்க்கங்கள் அணிகிற உடையமைப்பே பண்பாடானது அல்லது நாகரிகமானது என்று அடித்தட்டு மக்களிடம் உருவாக்கி வைத்திருக்கிறோம். பெரும்பான்மை மக்கள் என்ன விதமான ஆடை உடுத்தினார்கள் என்று நாம் பண்பாடு பேசுவதில்லை! ஏனென்றால் நாம் பேசுகிற பண்பாடு என்பதே மேட்டுக்குடி தனமானதல்லவா?
ஆடைகளின் தேடலில் மனிதன் தொடர்ந்து பயணப்பட்டுக்கொண்டேயிருக்கிறான்... தைத்தல் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் என்பதாகயிருந்தது... மாறியது காலம் ஆயத்தஆடைகள் (ReadyMades) வந்தன.
பயணம் நிற்கவேயில்லை... தொடர்கிறது ஆடை வடிவமைப்பு என்று புதிய பாதையில் பயணிக்கிறான். தனித்த ஆடைவடிவமைப்பு (unique designed dress) வருகிறது.
நிற்க, இந்த தேடல்கள்... எதனோடும் தொடர்ப்பற்று நிற்கவில்லை... ஒரு காலத்தில் இந்த தேடல்கள் மேட்டிமை தேடல்களாக இருந்திருக்கலாம். இன்றைய தேடல்கள் வணிக தேடல்களாக இருக்கிறது.
வணிக தேடலாக வருகிற போது உற்பத்தி-நுகர்வு என்கிற நிலை வந்து விடுகிறது. உடனே சந்தைப்படுத்துதல் முன்னணியில் வந்து நிற்கிறது. வணிக உலகம் தைத்த ஆடைகளையும், ஆயத்த ஆடைகளையும், வடிவமைக்கப்பட்ட ஆடைகளையும் தயாரித்து சந்தைப்படுத்துகிறது.
முதலாளித்துவமும், வணிகமும் கைக்கோர்க்கின்றன... சந்தைப்படுத்துதலில் எளிய வழி பாலுணர்ச்சியை மையப்படுத்தி சந்தைப்படுத்துதல்... பாலின்ப உடைகள் (sexy fit dresses)... வளைய வருகின்றன.
ஆடையை பற்றிய தேடலும், அதனுடைய வளர்ச்சியும் மனிதனை பாதிக்கவில்லை... ஆடைகளில் எந்த சிக்கலுமில்லை.... முதலாளித்துவமும், வணிகமும் தவறான திசைகளில் நம்மை வழிநடத்திக்கொண்டிருக்கின்றன!
பண்பாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பண்பாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாழன், 8 மே, 2008
உடை கலாச்சாரம் (டிபிசிடி யின் உவ்வ்வே...) -3
உடை கலாச்சாரம் (டிபிசிடி யின் உவ்வ்வே...) -2
உடை கலாச்சாரம் (டிபிசிடி யின் உவ்வ்வே...)
ஆடை தேர்வுகளை பற்றி ஏற்கனவே பேசியிருந்தாலும்... சூழலின் பங்களிப்பை இன்னும் கொஞ்சம் விரிவாக பேச வேண்டியதிருக்கிறது. ஜீன்ஸ் என்கிற ஆடையின் கண்டுபிடிப்பு என்பது குளிர் பிரதேசங்களில் தோலாடைக்கு மாற்றாக, தோலாடைகளின் பற்றாக்குறையாலும், தோலாடைகளின் வேறுசில சிக்கல்களாலும் கண்டடைந்த மாற்று தீர்வாக தான் பார்க்க இயலுகிறது.
இந்த ஜீன்ஸ் ஆடையை வெப்பமண்டல நாடுகளிலும் பயன்படுத்துவது என்பது அறியாமை என்று சொல்லிவிடலாம்... ஆனால் எதையும் செய்து பார்க்க துடிக்கிற இளையர்கள் (youths) ஜீன்ஸ் பயன்படுத்துவதில் குறையொன்றும் இல்லை... சிறிது காலத்தில் பருத்தியிலான உடைகளுக்கு மாறிய நிறைய நண்பர்களை பார்க்க முடிகிறது. உள்ளே வெந்து புழுங்கினால் பவுடர் அடித்து மேலே ஜீன்ஸ் மாட்டுகிற கனவான்களை பற்றிய கவலை நமக்கெதற்கு :)
காற்றுக்கு காசு கேட்கும் சென்னையின் அறைகளில் தங்கியிருந்த போது.. உள்ளாடைகளுடன் உறங்கிய இரவுகள்... இன்னும் சில நண்பர்கள் கட்டிய ஈரிழை துண்டு அக்கடா என்று கிடக்க காற்றோட்டமாக உறங்குவார்கள்!
பல நேரங்களில் நண்பர்களின் வாயிலாக அறிந்திருக்கிறேன் விடுதிகளில் நிர்வாணமாக அலைவதை விரும்பியிருக்கிறார்கள் பலர்! (ஆண்கள், பெண்கள் என்கிற பாகுபாடு இதில் இல்லை!)
பல ஐரோப்பிய நாடுகளில் கோடை காலங்களில் டூ பீஸ் அல்லது சிங்கிள் பீஸ் உடைகளுடன் மக்கள் கடற்கரைகளில் கூடுவதை காணலாமே!
ஆடை மட்டுமல்ல பல்வேறு பயன்பாடுகள் சூழலின் அடிப்படையில் தான் அமையும். வறட்டு பண்பாட்டு கூச்சல்களை மக்கள் தானாகவே உடைந்தெரிந்து பயணப்படுவார்கள்!
இங்கே ஒரு குடும்பத்துடன் பகிர்வு அடிப்படையில் தங்கியிருந்த போது அந்த வீட்டிலுள்ள பெண் எப்போதும் காலணி(sleeper) அணிந்து தான் நடமாடுவார்! ஏன் மேற்கத்திய நாடுகளில் வீட்டில் காலணி அணிகிறார்கள் என்பதை பற்றிய புரிதலில்லாமல் இப்படி வாழ்வது மேம்ப்பட்ட வாழ்க்கை என்று நினைத்துக்கொள்வதால் ஏற்ப்படுகிற சிக்கல் இது!
கடுமையான குளிர் நாடுகளான ஐரோப்பிய நாடுகளில் வெற்று காலுடன் வீட்டுக்குள் நடமாட இயலாது. அதனாலயே காலணி தேவைப்படுகிறது. இரண்டாவது பல ஐரோப்பியர்கள் அடிக்கடி பயணங்கள் மேற்க்கொண்டு கண்ட இடத்திலும் தங்குவார்கள். அதனால் கால்கள் வழியாக பரவும் நோய்களிலிருந்து தற்காத்துக்கொள்ளவும் காலணி பயன்படுத்துகிறார்கள்!
ரஷ்யாவில் குளிர்காலங்களில் கையுறை, காலறை அணிந்து தான் நாள் முழுவதும் வாழ்கிறார்கள். உறைகளை கழற்றினால் குருதி உறைகிற குளிர்!
வெப்ப மண்டல நாடுகளில் வாழ்கிற நாம் நமது வீட்டை தூய்மையாக வைத்துக்கொள்வதற்கு பதிலாக வீட்டுக்குள் காலணி அணிய வேண்டிய அவசியமென்ன? புரிதலில் ஏற்ப்படுகிற சிக்கல்! அறியாமை! இப்படி வாழ்வதை மேம்ப்பட்ட வாழ்க்கை! தான் உயரத்தில் இருப்பதாக எண்ணவோட்டம் போன்றவையே காரணங்கள்!
உடை கலாச்சாரம் (டிபிசிடி யின் உவ்வ்வே...)
ஆடை தேர்வுகளை பற்றி ஏற்கனவே பேசியிருந்தாலும்... சூழலின் பங்களிப்பை இன்னும் கொஞ்சம் விரிவாக பேச வேண்டியதிருக்கிறது. ஜீன்ஸ் என்கிற ஆடையின் கண்டுபிடிப்பு என்பது குளிர் பிரதேசங்களில் தோலாடைக்கு மாற்றாக, தோலாடைகளின் பற்றாக்குறையாலும், தோலாடைகளின் வேறுசில சிக்கல்களாலும் கண்டடைந்த மாற்று தீர்வாக தான் பார்க்க இயலுகிறது.
இந்த ஜீன்ஸ் ஆடையை வெப்பமண்டல நாடுகளிலும் பயன்படுத்துவது என்பது அறியாமை என்று சொல்லிவிடலாம்... ஆனால் எதையும் செய்து பார்க்க துடிக்கிற இளையர்கள் (youths) ஜீன்ஸ் பயன்படுத்துவதில் குறையொன்றும் இல்லை... சிறிது காலத்தில் பருத்தியிலான உடைகளுக்கு மாறிய நிறைய நண்பர்களை பார்க்க முடிகிறது. உள்ளே வெந்து புழுங்கினால் பவுடர் அடித்து மேலே ஜீன்ஸ் மாட்டுகிற கனவான்களை பற்றிய கவலை நமக்கெதற்கு :)
காற்றுக்கு காசு கேட்கும் சென்னையின் அறைகளில் தங்கியிருந்த போது.. உள்ளாடைகளுடன் உறங்கிய இரவுகள்... இன்னும் சில நண்பர்கள் கட்டிய ஈரிழை துண்டு அக்கடா என்று கிடக்க காற்றோட்டமாக உறங்குவார்கள்!
பல நேரங்களில் நண்பர்களின் வாயிலாக அறிந்திருக்கிறேன் விடுதிகளில் நிர்வாணமாக அலைவதை விரும்பியிருக்கிறார்கள் பலர்! (ஆண்கள், பெண்கள் என்கிற பாகுபாடு இதில் இல்லை!)
பல ஐரோப்பிய நாடுகளில் கோடை காலங்களில் டூ பீஸ் அல்லது சிங்கிள் பீஸ் உடைகளுடன் மக்கள் கடற்கரைகளில் கூடுவதை காணலாமே!
ஆடை மட்டுமல்ல பல்வேறு பயன்பாடுகள் சூழலின் அடிப்படையில் தான் அமையும். வறட்டு பண்பாட்டு கூச்சல்களை மக்கள் தானாகவே உடைந்தெரிந்து பயணப்படுவார்கள்!
இங்கே ஒரு குடும்பத்துடன் பகிர்வு அடிப்படையில் தங்கியிருந்த போது அந்த வீட்டிலுள்ள பெண் எப்போதும் காலணி(sleeper) அணிந்து தான் நடமாடுவார்! ஏன் மேற்கத்திய நாடுகளில் வீட்டில் காலணி அணிகிறார்கள் என்பதை பற்றிய புரிதலில்லாமல் இப்படி வாழ்வது மேம்ப்பட்ட வாழ்க்கை என்று நினைத்துக்கொள்வதால் ஏற்ப்படுகிற சிக்கல் இது!
கடுமையான குளிர் நாடுகளான ஐரோப்பிய நாடுகளில் வெற்று காலுடன் வீட்டுக்குள் நடமாட இயலாது. அதனாலயே காலணி தேவைப்படுகிறது. இரண்டாவது பல ஐரோப்பியர்கள் அடிக்கடி பயணங்கள் மேற்க்கொண்டு கண்ட இடத்திலும் தங்குவார்கள். அதனால் கால்கள் வழியாக பரவும் நோய்களிலிருந்து தற்காத்துக்கொள்ளவும் காலணி பயன்படுத்துகிறார்கள்!
ரஷ்யாவில் குளிர்காலங்களில் கையுறை, காலறை அணிந்து தான் நாள் முழுவதும் வாழ்கிறார்கள். உறைகளை கழற்றினால் குருதி உறைகிற குளிர்!
வெப்ப மண்டல நாடுகளில் வாழ்கிற நாம் நமது வீட்டை தூய்மையாக வைத்துக்கொள்வதற்கு பதிலாக வீட்டுக்குள் காலணி அணிய வேண்டிய அவசியமென்ன? புரிதலில் ஏற்ப்படுகிற சிக்கல்! அறியாமை! இப்படி வாழ்வதை மேம்ப்பட்ட வாழ்க்கை! தான் உயரத்தில் இருப்பதாக எண்ணவோட்டம் போன்றவையே காரணங்கள்!
செவ்வாய், 29 ஏப்ரல், 2008
உடை கலாச்சாரம் (டிபிசிடி யின் உவ்வ்வே...) -2
குறிப்பு : கலாச்சாரம் (பண்பாடு) என்பதைப்பற்றிய விளக்கம் கொடுப்பதோ! பெண்ணியத்திற்கு போராடுவதாக ஜல்லியடிப்பதோ இப்பதிவின் நோக்கமல்ல! எனக்குள் எழுந்த, எழுகிற முரண்களின் குழப்பங்கள் மட்டுமே... இனி!
கலாச்சாரம் (பண்பாடு) என அறியப்பட்டயெல்லாம் சமூகத்தின் (இனக்குழு, ஓரிடத்தில் வாழ்ந்த மனிதக்குழுவினர், ஒரு குறிப்பிட்ட நாகரிகத்தை சேர்ந்ததாக அறிப்படுகின்ற குழு) வளர்ச்சியில் (process) இருக்கின்ற போது இதுதான் கலாச்சாரம் (பண்பாடு) என்று வரையறுத்துக்கொண்டு வாழ்ந்ததாக அறியப்படவில்லை. இன்னொரு சமூகத்தால் அவதானிக்கப்பட்டு இதுதான் இன்னொரு சமூகத்தின் கலாச்சாரம்(பண்பாடு) என அறியப்பட்டிருக்கிறது.
அதாவது ஒரு சமூகம் வாழ்ந்துக்கொண்டிருக்கும் போது எந்த கலாச்சார சட்டக வரையறைக்குள்ளும் அடங்கிடாமல் வளர்ந்துக்கொண்டேயிருக்கிறது. பின்னாளில் வரலாற்றில் அது வரையறைச்செய்யப்பட்டிருக்கிறது.
அப்படியாக நம்முடைய கலாச்சாரம் என்று கட்டியழுகிற எல்லாவற்றையும் வளர்ச்சியின் போக்கில் விட்டுவிட்டு நாம் மாறிக்கொண்டேதான்யிருக்கிறோம். இந்த மாற்றங்களின் காரணிகளாக (சூழல், அரசியல் அதிகாரங்கள், தேவைகள், இன்ன பிற) இருக்கின்றன!
ஆனால் இன்றைக்கு கலாச்சாரம் என்று கத்திதீட்டப்படுகின்ற நிகழ்வு ஒன்றேயொன்றாக தான் இருக்கிறது!. அது பெண்ணின் பாலுணர்வு வெளிப்பாடு.
கையால் சாப்பிடுவது கரண்டியால், குச்சியால் சாப்பிடுவதாக மாறினால் ஏற்றுக்கொள்கிறோம். தைக்காத ஆடைகள், தைத்த ஆடைகளாக (அரைக்கால், முழுக்கால் உடை) மாறுவதையோ, கைலியாக மாறுவதையோ மறுக்கவில்லை. தென்னைவோலை!, பனவோலை குடிசைகள் நவீன கன்கிரீட் கட்டிடங்களாக மாறுவதை மறுக்கவில்லை!
ஆக வாழ்வியலின் எந்ததெந்த கூறுகள் மாறினாலும் நாம் கலாச்சாரம் சீரழிவதாக கூச்சல் போடவில்லை!
நம்முடைய கூச்சல் எல்லாம் பெண்ணின் பாலுணர்வு வெளிப்பாட்டின் மீது மட்டுமே! இதை வெளிப்படையாக நாம் பெண் திருமணமான தனது கணவருடன் மட்டுமே பாலுறவு வைத்துக்கொள்ள வேண்டும்... அதற்க்காக காத்திருக்க வேண்டும். அவளுடைய காதல் என்பது நான்கறைக்குள் மட்டுமே இருக்க வேண்டும். இன்னும் வலிந்து தனக்கு காதல் என்கிற உணர்வு இருக்கிறது என்பதை வெளிப்படுத்தக்கூடாது! இப்படிச்சொல்ல வெட்கப்பட்டு கலாச்சாரம் சீரழிவதாக கூச்சல் போடுகிறோம் :(
இப்படிப்பட்ட உடைகள் தான் நமது சமூகத்தின் கலாச்சாரத்திற்கானது என்று எந்த வரையறையும் கிடையாது. உடையின் தெரிவுகளை பற்றிய உடை கலாச்சாரம் (டிபிசிடி யின் உவ்வ்வே...) பதிவை வாசிக்கவும்.
டிபிசிடி-ன் பதிவில் கல்வெட்டு சொன்னது "
1.ஆடை எப்படி உடுத்த வேண்டும் என்பது தனி ஒருவரின் உரிமை.
2. உடுத்தப்பட்ட ஆடை மறைக்காத பாகங்களை அவர்களே விரும்பி பார்வைக்கு வைக்கிறார்கள் என்பதுதான் எனது புரிதல். உதாரணம். ஜாக்கெட்டின் முது பாகம்/ஜன்னல் மினி ஸ்கர்ட் காட்டும் கால், தாவணி மறைக்காத இடுப்பு.... etc.. .
3.ஆடைகளால் மறைக்கப்பட்ட பாகங்களை ஆடையை விலக்கி பார்க்க முனைவதும், நேர் பார்வையில் படாத பாகங்களை கோணல் பார்வையில் பார்க்க முற்படுவதும் கேவலம் என்பதறிக.
"
உடலின் பாகங்கள் மற்றவரின் பார்வைக்கு வருவதை மறைப்பது நம்முடைய சொந்த அளவுகோலாக இருக்கிறது! சில சமயங்களில் இடம்,பொருளை பொருத்தாக அமைகிறது.
தொழிலாளி தோட்டத்தில் வேலை செய்யும்போது மேலாடை அணிவதில்லை! அதே சமயம் வீட்டிற்கு வெளியாட்கள் வருகின்ற போது குறைந்தபட்சம் துண்டை எடுத்து தோளில் போட்டுக்கொள்கிறோம்! நமது சொந்தங்களுடன் வீட்டிற்குள் இருக்கும் போது உடைகள் எப்படியிருந்தாலும் நாம் கவலைப்படுவதில்லை!
இடுப்பில் அள்ளிச்சொருகப்பட்ட சேலையுடன் வேலைப்பார்க்கும் பெண்ணும்... பாலியியல் தொழிலாளி பெண்ணும் உடலின் பாகங்களை மற்றவர்களின் பார்வைக்கு வைக்கிறார்கள்... ஆனால் இரண்டின் நோக்கம் வெவ்வேறானவை!
ஆனால் பொது இடத்தில் வருகின்ற பொழுது எப்படிப்பட்ட உடையணிய வேண்டும் என்பது சொந்த விருப்பம் மற்றும சமூக ஒழுங்கு இரண்டையும் உள்ளடக்கியதாக இருக்கிறது.
குற்றாலத்தில் ஜட்டியுடன் குளிப்பதை நாம் தடை செய்கிறோம். ஜட்டியுடனோ அல்லது தொடை தெரிய ஏற்றிக்கட்டிய கைலியுடனோ ஒரு ஆண் பொதுவளாகத்தில் உலவுவதை நாம் கண்டிக்கிறோம்.
இங்கே இயல்பான கேள்வி எழுகிறது நமது சட்டங்கள் எந்த மாதிரியான உடையமைப்புடன் பொது இடங்களில் உலவுவதை தடைச்செய்கின்றன.
பாலுணர்வை தூண்டாத உடைகள் என்றால்... எந்தந்த உடைகள் பாலுணர்வை தூண்டாது என்பதற்கான வரையறை என்ன?
எ.காட்டிற்கு: இடுப்பில் இருந்து எத்தனை அடி உடை பாலுணர்வை தூண்டும் (தூண்டாது) :(
இதில் இன்னொரு இடியாப்ப சிக்கல் இருக்கிறது பாலுணர்வின் இருக்கூறுகளாக இருக்கின்றன... அழகுணர்ச்சியும், ஆபாசமும்....
எதை அழகுணர்ச்சி என்பது? எதை ஆபாசம் என்பது?
பி.கு: நீங்க ஜனரஞ்சகமாக எழுத(குழப்ப)மாட்டீர்கள் என்று சொன்ன டிபிசிடிக்கு இப்பதிவு அர்ப்பணிப்பு!
கலாச்சாரம் (பண்பாடு) என அறியப்பட்டயெல்லாம் சமூகத்தின் (இனக்குழு, ஓரிடத்தில் வாழ்ந்த மனிதக்குழுவினர், ஒரு குறிப்பிட்ட நாகரிகத்தை சேர்ந்ததாக அறிப்படுகின்ற குழு) வளர்ச்சியில் (process) இருக்கின்ற போது இதுதான் கலாச்சாரம் (பண்பாடு) என்று வரையறுத்துக்கொண்டு வாழ்ந்ததாக அறியப்படவில்லை. இன்னொரு சமூகத்தால் அவதானிக்கப்பட்டு இதுதான் இன்னொரு சமூகத்தின் கலாச்சாரம்(பண்பாடு) என அறியப்பட்டிருக்கிறது.
அதாவது ஒரு சமூகம் வாழ்ந்துக்கொண்டிருக்கும் போது எந்த கலாச்சார சட்டக வரையறைக்குள்ளும் அடங்கிடாமல் வளர்ந்துக்கொண்டேயிருக்கிறது. பின்னாளில் வரலாற்றில் அது வரையறைச்செய்யப்பட்டிருக்கிறது.
அப்படியாக நம்முடைய கலாச்சாரம் என்று கட்டியழுகிற எல்லாவற்றையும் வளர்ச்சியின் போக்கில் விட்டுவிட்டு நாம் மாறிக்கொண்டேதான்யிருக்கிறோம். இந்த மாற்றங்களின் காரணிகளாக (சூழல், அரசியல் அதிகாரங்கள், தேவைகள், இன்ன பிற) இருக்கின்றன!
ஆனால் இன்றைக்கு கலாச்சாரம் என்று கத்திதீட்டப்படுகின்ற நிகழ்வு ஒன்றேயொன்றாக தான் இருக்கிறது!. அது பெண்ணின் பாலுணர்வு வெளிப்பாடு.
கையால் சாப்பிடுவது கரண்டியால், குச்சியால் சாப்பிடுவதாக மாறினால் ஏற்றுக்கொள்கிறோம். தைக்காத ஆடைகள், தைத்த ஆடைகளாக (அரைக்கால், முழுக்கால் உடை) மாறுவதையோ, கைலியாக மாறுவதையோ மறுக்கவில்லை. தென்னைவோலை!, பனவோலை குடிசைகள் நவீன கன்கிரீட் கட்டிடங்களாக மாறுவதை மறுக்கவில்லை!
ஆக வாழ்வியலின் எந்ததெந்த கூறுகள் மாறினாலும் நாம் கலாச்சாரம் சீரழிவதாக கூச்சல் போடவில்லை!
நம்முடைய கூச்சல் எல்லாம் பெண்ணின் பாலுணர்வு வெளிப்பாட்டின் மீது மட்டுமே! இதை வெளிப்படையாக நாம் பெண் திருமணமான தனது கணவருடன் மட்டுமே பாலுறவு வைத்துக்கொள்ள வேண்டும்... அதற்க்காக காத்திருக்க வேண்டும். அவளுடைய காதல் என்பது நான்கறைக்குள் மட்டுமே இருக்க வேண்டும். இன்னும் வலிந்து தனக்கு காதல் என்கிற உணர்வு இருக்கிறது என்பதை வெளிப்படுத்தக்கூடாது! இப்படிச்சொல்ல வெட்கப்பட்டு கலாச்சாரம் சீரழிவதாக கூச்சல் போடுகிறோம் :(
இப்படிப்பட்ட உடைகள் தான் நமது சமூகத்தின் கலாச்சாரத்திற்கானது என்று எந்த வரையறையும் கிடையாது. உடையின் தெரிவுகளை பற்றிய உடை கலாச்சாரம் (டிபிசிடி யின் உவ்வ்வே...) பதிவை வாசிக்கவும்.
டிபிசிடி-ன் பதிவில் கல்வெட்டு சொன்னது "
1.ஆடை எப்படி உடுத்த வேண்டும் என்பது தனி ஒருவரின் உரிமை.
2. உடுத்தப்பட்ட ஆடை மறைக்காத பாகங்களை அவர்களே விரும்பி பார்வைக்கு வைக்கிறார்கள் என்பதுதான் எனது புரிதல். உதாரணம். ஜாக்கெட்டின் முது பாகம்/ஜன்னல் மினி ஸ்கர்ட் காட்டும் கால், தாவணி மறைக்காத இடுப்பு.... etc.. .
3.ஆடைகளால் மறைக்கப்பட்ட பாகங்களை ஆடையை விலக்கி பார்க்க முனைவதும், நேர் பார்வையில் படாத பாகங்களை கோணல் பார்வையில் பார்க்க முற்படுவதும் கேவலம் என்பதறிக.
"
உடலின் பாகங்கள் மற்றவரின் பார்வைக்கு வருவதை மறைப்பது நம்முடைய சொந்த அளவுகோலாக இருக்கிறது! சில சமயங்களில் இடம்,பொருளை பொருத்தாக அமைகிறது.
தொழிலாளி தோட்டத்தில் வேலை செய்யும்போது மேலாடை அணிவதில்லை! அதே சமயம் வீட்டிற்கு வெளியாட்கள் வருகின்ற போது குறைந்தபட்சம் துண்டை எடுத்து தோளில் போட்டுக்கொள்கிறோம்! நமது சொந்தங்களுடன் வீட்டிற்குள் இருக்கும் போது உடைகள் எப்படியிருந்தாலும் நாம் கவலைப்படுவதில்லை!
இடுப்பில் அள்ளிச்சொருகப்பட்ட சேலையுடன் வேலைப்பார்க்கும் பெண்ணும்... பாலியியல் தொழிலாளி பெண்ணும் உடலின் பாகங்களை மற்றவர்களின் பார்வைக்கு வைக்கிறார்கள்... ஆனால் இரண்டின் நோக்கம் வெவ்வேறானவை!
ஆனால் பொது இடத்தில் வருகின்ற பொழுது எப்படிப்பட்ட உடையணிய வேண்டும் என்பது சொந்த விருப்பம் மற்றும சமூக ஒழுங்கு இரண்டையும் உள்ளடக்கியதாக இருக்கிறது.
குற்றாலத்தில் ஜட்டியுடன் குளிப்பதை நாம் தடை செய்கிறோம். ஜட்டியுடனோ அல்லது தொடை தெரிய ஏற்றிக்கட்டிய கைலியுடனோ ஒரு ஆண் பொதுவளாகத்தில் உலவுவதை நாம் கண்டிக்கிறோம்.
இங்கே இயல்பான கேள்வி எழுகிறது நமது சட்டங்கள் எந்த மாதிரியான உடையமைப்புடன் பொது இடங்களில் உலவுவதை தடைச்செய்கின்றன.
பாலுணர்வை தூண்டாத உடைகள் என்றால்... எந்தந்த உடைகள் பாலுணர்வை தூண்டாது என்பதற்கான வரையறை என்ன?
எ.காட்டிற்கு: இடுப்பில் இருந்து எத்தனை அடி உடை பாலுணர்வை தூண்டும் (தூண்டாது) :(
இதில் இன்னொரு இடியாப்ப சிக்கல் இருக்கிறது பாலுணர்வின் இருக்கூறுகளாக இருக்கின்றன... அழகுணர்ச்சியும், ஆபாசமும்....
எதை அழகுணர்ச்சி என்பது? எதை ஆபாசம் என்பது?
பி.கு: நீங்க ஜனரஞ்சகமாக எழுத(குழப்ப)மாட்டீர்கள் என்று சொன்ன டிபிசிடிக்கு இப்பதிவு அர்ப்பணிப்பு!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)