புதன், 29 ஏப்ரல், 2009

யாருக்கு ஓட்டு போடுவது...?

யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை.... இப்பொழுது யாருக்கு வாக்களிக்க கூடாது என்பதில் தெள்ள தெளிவாக இருக்க வேண்டும்.

காங்கிரஸ், தி.மு.க, பா.ம.க ஆகிய மூன்று கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களுக்கு வாக்களிக்க கூடாது.

இனி வருகிறவர்கள் என்ன செய்வார்கள் என்று ஆருடம் கூறுவதை விட... கடந்த 5 ஆண்டு காலம் அதிகாரத்தில் இருந்தவர்கள்... தமிழின அழிப்புக்கு துணை போனதற்கான தண்டனையாக இந்த வாக்களிப்பு இருந்தாக வேண்டும்.

இதில் மிக, மிக முக்கியமாக கடந்த 5 ஆண்டு காலமாக காங்கிரஸ் செய்த அத்துனை தமிழின அழிப்புக்கும் உறுதுணையாக இருந்த பா.ம.க... இப்பொழுது நானில்லை... அவன்! என்கிறது.

கடைசியாக நேரு வீட்டு வாசலில் எச்சில் இலையை நக்கி தின்னும் காங்கிரஸ் பொறுக்கிகளும், கருணாநிதி குடும்பம் தான் தமிழினம் என்று அலைகிற உடன்பிறப்புகளும், வன்னிய ஆதிக்க சாதி பாமககாரனும்... வீழ்த்தபட்டாக வேண்டும்.

மனித பேரவலத்தை தமிழினத்திற்கு தந்தவர்களுக்கான தண்டனை தருவதற்கான களம் தான் இந்ததேர்தல்...!
அவர் வந்தால் கிழிப்பாரா என்கிற கேள்விகளுக்கு இங்கே இடமில்லை...
முதலில் இந்த மூன்று (காங்கிரஸ்,திமுக,பாமக) கட்சிகளை ஓட்டு என்னும் செருப்பால் அடிக்கும் பணிதான் முக்கியமானது.

திங்கள், 6 ஏப்ரல், 2009

வன்முறை - காவல்துறை உங்கள் நண்பன்...!

"சுளீர்!"
தண்ணீர் குவளை தெறித்து சிதறியது...

முதுகு தண்டில் வலி, கண்களில் பயம்,மிரட்சி, அழுகை... திரும்பி பார்த்தேன், கையில் பிரம்புடன் தலைமையாசிரியர்.
நான் செய்த குற்றமென்ன?
ஆசிரியரிடம் அனுமதி வாங்கி தண்ணீர் பருக வந்ததா? பருகியதா?

என் உடல் மீது வன்முறை நிகழ்த்தப்பட்டு... 16 ஆண்டுகள் கடந்துவிட்டது; ஆனால் எனக்குள் நான் அடைந்த உளவியல் பாதிப்புகளின் தடம் இன்னும் மறையவில்லை.

********************************************************************************************************************************************

திடீரென்று ஒரு குழந்தை அழுகிறது...
அய்! ஏதோ ஒரு குழந்தை அழுகிறது... என்று துணைவி மகிழ்கிறாள்.

புதிதாக ஒரு தமிழ்குடும்பம் 5வது மாடியில் குடி வந்திருக்கிறார்கள்... அதான்! குழந்தை அழுகிறது என்றேன்.

சிங்கை வந்ததிலிருந்து குழந்தையின் அழுகுரலை என் துணைவியார் கேட்கவில்லை... ஏனென்றால் இங்கே யாரும் குழந்தைகளை அடிப்பதில்லை.

என் துணைவி... மீண்டும், மீண்டும் கேட்கிறாள்... இங்கே குழந்தைகள் ஏன் அழுவதில்லை?

நினைவுகளை அசைப்போடுகிறேன்....

"அடியாத மாடு படியாது!"
"அடித்து வளர்க்காத பிள்ளையும், ஒடித்த வளர்க்காத முருங்கையும்..."

இந்த உடல் மீது வன்முறையை கட்டவிழ்த்து நடத்துவதற்கு இந்த சமூகம் எத்தனைவிதமான வழக்குமொழிகள்... கைக்கொண்டுள்ளது!

*************************************************************************************************************************************************

வன்முறை உடல் மீது மட்டும் தான் நடத்தப்படுகிறதா?
உயிர் மீது, உள்இயங்கியலின் மீது வன்முறை நடத்தப்படுவதில்லையா?
நம்முடைய நினைவுகள், சிந்தனைகள், செயல்கள், எண்ணங்கள் மீதான வன்முறையை கண்டு இங்கே... குழலி குமறுகிறார்...

சட்டக்கல்லூரி - இட்லிவடை வன்முறை என்பது வெறும் இரத்தத்தின் தெறிப்பா?!

*********************************************************************************************
வீடு, கல்விக்கூடங்கள் தொடங்கி, காவல்கூடங்கள் உள்ளடங்கி உடல் மீது நடத்தப்படும் வன்முறையானது... நம்மை அச்சமூட்டி, அதிகாரத்திற்கு அடிபணிந்து செல்ல கட்டாயப்படுத்துகின்றன!

வருவேன்...

ஞாயிறு, 5 ஏப்ரல், 2009

கற்பிக்கப்பட்ட உணர்ச்சிகளின் ஊடாக கட்டமைக்கப்படும் அதிகாரம்...2

கற்பிக்கப்பட்ட உணர்ச்சிகளின் ஊடாக கட்டமைக்கப்படும் அதிகாரம்...!


கற்பிக்கப்பட்ட உணர்ச்சிகளையும், அதிகாரத்தையும் எழுதத்தொடங்கி... இணைய உரையாடலில்...
(அழுவது - எதிர்மறை(துன்பம்) என்றும்... புன்னகைப்பது - நேர்மறை(இன்பம்) என்றும்... கற்பிக்கப்பட்டவையே) - பற்றி
விரிந்தவை...

n - எண்ணிக்கையை குறிக்கும் குறியீடு.

ஒரு இயக்கம் அல்லது மோதல் அல்லது தாக்கம் ஆனது ஒன்று அல்லது n-புள்ளிகளில் நிகழும் பொழுது... ஒன்று அல்லது n-காரணிகளை சார்ந்திருக்கும் என்கிறது இயக்கவியல்.

உடல், உயிர், உள்இயங்கியல்(நினைவு, சிந்தனை, மனம், எண்ணவோட்டங்கள், தர்க்கம், பின்னக்கம், குறுக்கோட்டுதல், இன்ன பிற) ஏற்படும் தாக்கங்களே உணர்ச்சிகளின் ஊற்றுகண்.

இந்த தாக்கங்களையும், இயக்கவியலையும்... தொடர்புபடுத்தி பார்க்கிறேன்... ஒன்று (அ) n-வகையான (அ) n-எண்ணிகையிலான தாக்கங்களை ஏற்படுத்தும்... ஒன்று (அ) n-காரணிகளை சார்ந்த இயக்கமானது உணர்ச்சியின் உருவாக்கத்தில் இருப்பதை உணர முடிகிறது.

பொதுவாக கற்பிக்கப்பட்ட உணர்ச்சிகள் கானல்(virtual)-ஆக இருப்பதால்... தாக்கங்களை நேர்மறை, எதிர்மறை, எதுவுமற்ற புள்ளிகளில் வைத்து உரையாடுவது மிகவும் சிக்கலானதாகவும்...குழப்பமானதாகவும் இருக்ககூடும்.

உயிரியல் உணர்ச்சியாக உணரப்படும் வலி என்பதை எடுத்துக்கொண்டு... நேர்மறை, எதிர்மறை, எதுமற்ற புள்ளிகளில் எப்படி மையம்கொள்கிறது என்பதை பேசுவோம்...

வலி என்பதில் n-தாக்கங்களை விலக்கி தசைநார்களில் ஏற்படுகிற தாக்கத்தை மட்டும் எடுத்துக்கொள்வோம்.
அதேபோல் n-காரணிகளை விலக்கி சராசரியான உடல் என்பதை மட்டும் எடுத்துக்கொள்வோம்.

வலி என்கிற சொல்லை கேட்டவுடனே... வலிக்கிறது... எப்பொழுதும் உடலின் மீதான எதிர்மறை தாக்கத்தை கொண்டதாக உணரப்பட்டுள்ளது.

இதே வலி என்பது சில இடங்களில் நேர்மறை தாக்கமாக உணரப்படுகிறது.
எ.கா: கலவியில் ஈடுபடுகின்ற உடலானது... தசைநார்களில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும்... அந்த கணத்தில் நேர்மறையாக உணரப்படுகிறது.

இதே வலி என்பது எதுவுமற்ற உணர்வாக... உணரப்படும்.
எ.கா: பளு தூக்கம் பயிற்சியில் ஈடுப்படுகின்ற ஒருவர்... தொடர்ந்த பயிற்சியில் தசைநார்களில் ஏற்படுகின்ற தாக்கத்தை வலியாக உணர்வதை நீக்கம் செய்கிறார்.


குறிப்பு : வெறும் பார்வைகளை முன் வைத்து எழுதப்படும் இந்த தொடரை... மேற்கோளாக எடுத்தாளுமை செய்வதை தவிர்க்க வேண்டுகிறேன்.


தொடரும்...
Related Posts with Thumbnails