வியாழன், 29 மே, 2008

பார்ப்பான் என்ன செய்தான்? பார்ப்பான் என்று பேச வேண்டியதன் அவசியமென்ன? (முகமிலிக்கு மட்டுமல்ல...)

பார்ப்பானீய, பனியா சொல்லாடல்களும்... சில முட்டாள்களும்...!

என்கிற பதிவிலும் அப்புறம் சுந்தர் பதிவிலும் பெங்களூரிலிருந்து ஒருவர் முகமிலியாக வந்து எல்லாயிடங்களிலும் ஒரே கருத்தை பின்னூட்டமாக இட்டு சென்றிருக்கிறார்!


முதலில் நம்மைச்சுற்றி என்ன நடக்கிறது... என்ன நடந்தது? ஆளுமை, அதிகாரம இதெல்லாம் யாரிடமிருந்தது? யாரிடமிருக்கிறது? யாரிடம் போய் சேரணும்? இப்படி ஏகப்பட்ட கேள்விகள் இருக்கிறது!

இந்த பார்ப்பானீயம்... அதற்கும் பார்ப்பான் என்கிற ஒரு சாதியினருக்கும் உள்ள தொடர்பை புரிந்துக்கொள்ளுதல்... மிகவும் அவசியம்! சிலவற்றை நிகழ்வுகளுடன் சொல்லும்போது தான் அதனால் ஏற்ப்பட்ட பாதிப்புகள்... எதிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ள நாம் போராடிக்கொண்டிருக்கிறோம் என்பதே நமக்கு விளங்கும்!

பட்டுக்கோட்டை என்கிற நகரை எடுத்துக்கொண்டு... அதிலிருந்து நிகழ்வுகளை விளக்க முயற்சிக்கிறேன். ஆங்கிலேய ஆட்சியின் இறுதிகாலமும் திராவிட இயக்கங்களின் எழுச்சியும் கிட்டதட்ட சம காலத்தில் நடந்த நிகழ்வுகள்... அந்த காலக்கட்டத்தில் பட்டுக்கோட்டை நகரமும், அதனை சுற்றிய பகுதிகளும் எப்படியிருந்தன... யார் ஆளுமை மற்றும் அதிகாரத்திலிருந்தது என்பதை தெரிந்துக்கொள்வோம்.

வி. நாடிமுத்து பிள்ளை என்பவர் தான் ஆங்கிலேய அதிகாரத்தின் பிரதிநிதியாக பட்டுக்கோட்டையிலிருந்தார்! அப்புறம் நகரை சுற்றி சில ஜமீன்கள்! அதிகாரத்திலும், ஆங்கிலேயரிடமும் செல்வாக்கோடு இருந்தவர்கள் பழனியப்பன், மன்னாங்காடு ஐயர், ராஜாமடம் ஐயர், வெங்கடரமைய ஐயர், இன்னும் ஏகப்பட்ட ஐயர்கள்! மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் அத்தனை பேரும் ஐயர்கள்!

கிராமபுறங்களில்ஆங்காங்கே சில பண்ணையார்கள் இருந்தார்கள் அவர்கள் இந்த ஆங்கிலேய அதிகாரத்தை எதிர்த்து காங்கிரஸில் இணைந்தார்கள்!

நகரத்தில் செட்டியார்கள், தெலுங்கு செட்டியார்கள், முதலியார்கள் அப்புறம் எஞ்சிய மராட்டிய வம்சாவழியினர் பொருளாதார செல்வாக்கோடு வாழ்ந்து வந்தனர்! இதில் சிலர் ஆங்கிலேய அதிகாரத்தை ஆதரித்தனர்! சிலர் சுதந்திர போராட்டத்தில் கலந்துக்கொண்டனர்!

இவ்வளவுதான் அன்றைய நகரமும், நகரைச்சுற்றிய கிராமங்களின் நிலை! மிக பெரும்பான்மை மக்கள் விவசாயத்தை நம்பிய கூலியாக, அடிமைகளாக வாழ்ந்து வந்தனர்! அவர்களுக்கும் கீழாக நசுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு தலித் மக்கள் வாழ்ந்து வந்தார்கள்!

இதே நிலை தான் அன்றைய சென்னை மகாணத்தில் எல்லாயிடங்களிலும் நிலவியிருந்தது! இங்கே தான் மக்களின் உண்மையான நிலையை பெரியார் தெளிவாக உணர்ந்து! மக்களை சமூக இழிவிலிருந்து விடுவிக்கும் போராட்டத்தை தொடங்கினார் என்பதை முதலில் உணருங்கள்!

வாடியக்காடு (மதுக்கூர்) ஜமீனை எதிர்த்த போராட்டம் தான் வாட்டாக்குடி இரணியன் வாழ்க்கை! இப்படி பட்டுக்கோட்டை நகரில் சுயமரியாதை இயக்கத்தில் தன்னை பிணைத்துக்கொண்டு பார்ப்பனர் என்கிற ஒரு சாதியினர் மட்டும் அதிகாரத்தில் உட்கார்ந்துக்கொண்டு மக்களை சுரண்டுவதை, இழிவு செய்வதை எதிர்த்த எத்தனையோ போராளிகளில் ஒருவர் தான் பட்டுக்கோட்டை அழகிரி!

திராவிட இயக்க போராட்டங்களால் என்ன நடந்தது? என்ன சாதித்தோம்?

ஒடுக்கப்பட்ட மக்கள் படிக்க, வேலைவாய்ப்புக்கு இடஒதுக்கீடு கிடைத்தது! அடுத்த தலைமுறையில் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் நிறையபேர் படித்து மருத்துவர்களாக, பொறியாளர்களாக உருவாகியிருக்கின்றனர்!

அதை ஒரு நண்பரின் கூற்றாக தருகிறேன் " என்னுடை சிற்றப்பா மட்டும் இடஒதுக்கீட்டில் காவல்துறையில் இன்ஸ்பெக்டராக வரவில்லை என்றால் எங்கள் குடும்பத்தில் இத்தனை பேர் படித்து முன்னேறி இன்றைக்கு என் சகோதிரி ஒரு மருத்துவராகவும், நான் ஒரு மென்பொருள் வல்லுநராகவும் உயர்ந்திருக்க முடியாது!" என்கிறார்.

இதுதான் சாதனை...

நீங்கள் நினைக்கலாம் யாராவது ஒருவர் ஒரு வேலையை செய்வதால் நமக்கென்ன வந்தது! அது பார்ப்பானாக இருந்தால் என்ன? பறையனாக இருந்தால் என்ன? அந்த வேலைக்கான தகுதியும், திறமையும் தானே முக்கியம் என்று?

பார்ப்பனர்கள் என்ன செய்தார்கள்? என்ன செய்வார்கள்? என்பதற்கு ஒரேயொரு எடுத்துக்காட்டை சொல்லி... சமூகநீதி போராட்டத்தின் அவசியத்தை புரிந்துக்கொள்ளுங்கள்... என்று கோரிக்கை வைக்கிறேன்!

சென்னையில் பத்ம சேஷாத்திரி என்று ஒரு பள்ளி ஓய்.ஜி.மகேந்திரன் என்கிற பார்ப்பானால் ரஜினி என்கிற சொறி நாயால் தமிழர்களின் தலையை தடவி சுரண்டப்பட்ட பணத்தில் நடத்தப்படுகிற பள்ளியில்...

60 லிருந்து 80 சதவிகித மாணவர்கள் பார்ப்பனர் வீட்டுக்குழந்தைகள்... அதையும் மீறி போராடிச்சேர்க்கப்படுகிற குழந்தைகள் யார் தெரியுமா பணக்கார, பார்ப்பன அடிவருடிகளின் குழந்தைகள்! தலித் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் குழந்தைகளின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணலாம்!

90 சதவிகித ஆசிரியர்கள் பார்ப்பனர்கள்!

இதை தான் செய்தார்கள் கடந்தகாலத்தில் பார்ப்பனர்கள் மட்டுமே படிக்க முடியும் என்று தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி நிறுவி வைத்திருந்தார்கள்! அவர்களுக்கு மட்டுமே பதவி, அதிகாரம் என்கிற நிலையை வைத்திருந்தார்கள்! அதை எதிர்த்து பெரியாரின் இயக்கம் வெற்றி கண்டது! அதுவே சமூக நீதியாக (இடஒதுக்கீடாக) நானும், நீங்களும் இன்றைக்கு கணினி பயன்படுத்துகிற நிலைக்கு வந்திருக்கிறோம்!

அன்றைக்கும், இன்றைக்கும் பட்டுக்கோட்டையில் எந்த ஐயரும் கடினமாக உழைக்கவில்லையா?
அதிகாரத்தில் இருந்த நாடிமுத்துபிள்ளை மாதிரியானவர்கள் என்ன ஆனார்கள்?
பொருளாதார செல்வாக்கோடு இருந்த மற்ற சாதிகாரர்கள் என்ன ஆனார்கள்?
பண்ணையார்கள் என்ன ஆனார்கள்? பொரியார் இயக்கத்தால் அதிகாரம் இழக்கிற பார்ப்பனர்கள் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள சமூகத்தில் செய்கிற குள்ளநரிதனம் என்ன?

அடுத்து...

திங்கள், 26 மே, 2008

திட்டமிடா பயணம்...!

கடந்த வாரம் ஒரு நாள் அரசு விடுமுறை கிடைத்தது! சனி,ஞாயிறு, திங்கள் என்று மூன்று நாட்கள் தொடர்ந்து விடுமுறை கிடைக்கிறதே என்ன செய்யலாம் என்று மோட்டுவளையை உத்து, உத்து பார்த்து யோசித்துக்கொண்டிருந்த வேளையில்...

நண்பரின் மனைவி வெளியில் எங்கும் அழைத்து போவதேயில்லை என்று பிறாண்டியதால், நண்பர் எங்காவது அருகாமையில் இருக்கிற இடத்துக்கு அழைத்து போயிட்டு வந்தால் கொஞ்சம் புடுங்கல் குறையும் என்று "கல்யாணமான ஆண்களின்" கடினமான வாழ்க்கை சவால்களை பகிர்ந்துக்கொண்டதன் பேரில்...

கானா பிரபா -வின் இந்த பதிவை படித்துவிட்டு கம்போடியா போகலாம் என்று முடிவெடுத்து விமானச்சீட்டு கிடைக்காமையால் (விடுமுறை என்றால் சிங்கப்பூரர்கள் மூட்டை, முடிச்சுகளுடன் ஊர்ச்சுற்ற கிளம்புவதால்! என்னை மாதிரி கடைசிநேர பயணிக்களுக்கு இருக்கை கேள்விக்குறியாகவே இருக்கிறது?) லங்காவி போகலாம் என்று டிபிசிடி-யிடம் அனுபவங்களையும், அறிவுரைகளை வாங்கிக்கட்டிக்கொண்டு.... விடுதி கிடைக்காமையால் கடைசியாக கெண்டிங் ஹைலாண்ட்ஸ் (Genting Highlands) பயணப்பட்டோம்.

புறப்பட்ட நாளில் நம்ம ஜெகதீசன் இணைய அரட்டையில் வந்து என்ன முன்னேற்ப்பாடு ஏதுமில்லாமல் போகிறீர்கள்... விடுமுறை நாட்கள் விடுதிகள் கிடைக்காது என்று வாய்மொழிய (அந்த வாயில் அரைகிலோ சர்க்கரைய போட்டு குச்சிய வைத்துக்கிடிக்க வேண்டும்!...)

மாலை கிளம்புகிற நேரத்தில் நம்ம டேமேஜர் வந்து பயணத்தை டேமேஜ் பண்ணுகிற மாதிரி பேசிக்கொண்டிருக்க... விழுந்தடித்துக்கொண்டு புறப்பட்டதில் ஜெர்கின் எடுக்க மறந்து அலுவலக நாற்காலியில் விட்டுட்டு பயணப்பட்டுவிட்டேன்!

ஜோகூர் பாரு சென்று அங்கிருந்து பேருந்தில் கெண்டிங் புறப்பட்டோம்!

விடியற்காலை 5.30 மணிக்கு கொஞ்சமாய் எலும்புகள் குளிரை உணரத்தொடங்கிய நேரத்தில் கெண்டிங் மலையில் பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. நம்ம நண்பர் கொஞ்சம் தராள மனதுக்காரர் அவருடைய மேல்கோட்டை எனக்கு தந்துவிட்டு குளிரில் நடுங்கிக்கொண்டிருந்தார்.

இறங்கி விடுதிக்கு வரிசையில் நின்றால்... எல்லா அறைகளும்,எல்லா விடுதிகளும் "Full House" என்று பலகை தொங்குகிறது!

அப்படியே வெளியில் எதிர்ப்பக்கத்தில் ஏதோ ரிசார்ட் என்று பலகை தெரிந்தது! அங்கே அறைக்கிடைகிறதா என்று பார்க்கலாம் என்று அங்கேயிருந்தவரிடம் வழிக்கேட்க! அவர் ரிசார்ட்-லும் அறைகள் இல்லை என்றார்! அவரே வேண்டுமானால் 18வது மாடியில் அறையிருக்கிறது 120ரிங்கட் எடுத்துக்கொள்கிறீர்களா என்று அரைகுறை ஆங்கிலத்தில் பேச! நாங்களும் ஒத்துக்கொண்டோம்! அவர் 'லீ' என்றொரு பயணவழிகாட்டியின் கையட்டை கொடுத்து அறைக்கு அனுப்பி வைத்தார்.

எப்படியோ குளிப்பதற்கு அறை கிடைத்தால் போதும் என்கிற எண்ணத்தில் 18 வது மாடியில் அறைக்கு சென்றோம்! அங்கே 'லீ' 12மணிக்கு செக்-அவுட் செய்ய சொல்லி சாவி யை கொடுத்து 120ரிங்கிட் வாங்கிக்கொண்டார்!

எந்த 12மணி என்று விசாரிக்கவும் இல்லை! அதைப்பற்றி கவலைப்படவும் இல்லை!

நண்பரின் மனைவி மட்டும் செக்-அவுட் இன்றைய தேதி போட்டிருக்கிறது. எதற்க்கும் வரவேற்ப்பு மேசையில் பேசிவிட்டு செல்வோம் என்றார்! நம்முடைய வறட்டு துணிச்சல் அதெல்லாம் ஹோட்டல் நிர்வாகம் அறையில் இருக்கிற பொருட்களை எடுத்து வெளியில் வீசி விடாது! வந்து பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லி!

சுற்றிப்பார்க்க கிளம்பி விட்டோம்! தீம் பார்க் சுற்றிக்கொண்டிருந்த நேரத்தில் நண்பரும், அவருடைய மனைவியும் விடுதியறை ஏதேனும் கிடைக்கிறதா என்று அவர்களின் மலேசிய உறவினர்கள் வழியாக முயற்சித்துக்கொண்டிருந்தார்கள்!

ஒருவழியாக 3 மணிக்கு அறை எதுவும் கிடைக்காது என்று தெரிந்தவுடன்... நாங்கள் வைத்திருந்தது முதுகில் சுமக்கும் பை என்பதால்! அதை எடுத்துக்கொண்டே சுற்றலாம் என்று அறைக்கு திரும்பினோம்!

அறைக்கு வந்தால் அறை தானியங்கி பூட்டு திறக்க மறுக்கிறது! அது கணினி வழியாக கட்டுப்படுத்தப்பட்டு வரவேற்ப்பு மேசையில் பூட்டப்பட்டிருந்தது!

வரவேற்ப்பு மேசைக்கு சென்றால்! விடுமுறை என்பதால் செக்-இன் செய்ய வந்தவர்களின் வரிசை மிக நீளமாக...! சுமார் அரை மணி நேரம் வரிசையில் நின்று மேசைக்கு சென்றால் வரவேற்ப்பாளர் அறையை பதிவு செய்தவர் வந்தால் மட்டுமே பொருட்களை எடுக்க அனுமதிக்க முடியும்! இல்லையென்றால் நிர்வாக விதிகளின் படி பொருட்களை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்படும் என்றார் :(

தொடரும்...

விளையாட்டு விளையாட்டாய் இருக்கிறதா? (நந்தாவுக்கு மட்டுமல்ல...!)

உடை கலாச்சாரம் (டிபிசிடி யின் உவ்வ்வே...) -2
///
விளம்பரங்களில் சந்தைப்படுத்துதலை மட்டுமே முன்னிறுத்துவதன் இன்னொரு வடிவமாய்த்தான் இதை என்னால் பார்க்க முடிகிறது. இதேபோல விளையாட்டுக்களிலும் சந்தைப்படுத்துதலை மட்டுமே முக்கியமானதாய் நாம் கருத ஆரம்பித்தால், நாளை விளையாட்டை நாம் மறந்து விட வேண்டியதுதான்.
///

ஒரு சிறிய அளவிலான பொருளாதார பார்வை... விளையாட்டுப்போட்டிகள் எவ்வாறு மிகப்பெரிய உற்பத்தி சந்தையாக மாறியிருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.

பீஜிங் 2008 ஒலிம்பிக் போட்டிகளுக்காக செலவிடப்படுகின்ற தொகை 16 பில்லியன் அமெரிக்க டாலர்கள்...

280 billion yuan சீனாவில் ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு முதலீடு செய்யப்பட்டிப்பதாக அந்நாடு அறிவித்துள்ளது.

கால்பந்தாட்டங்களை ஒட்டி உலகளவில் நடைப்பெறுகிற சூதாட்டங்கள், அவற்றில் புழங்கிற பண மதிப்பு தலையை சுற்ற வைக்கிறது.

சமீபத்தில் அடுத்த இளையர் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த சிங்கப்பூருக்கு அனுமதி கிடைத்தது... அதன் தொடர்பில் சிங்கையில் நடைபெற்ற விழா... சிங்கப்பூர் இளையர் ஒலிம்பிக் போட்டியை நடத்த திட்டமிடுகிற செலவினங்கள் இதையெல்லாம் கவனித்து பார்த்தால்... எல்லாம் வணிக மயமாகிவிட்டதை உணரமுடியும்.

எதையும் பொருளாதார முதலீடாக கருதுகிற நாடுகள்... விளையாட்டு போட்டிகளுக்கு செலவிடுகிற தொகையை மீண்டும் வருவாயாக மாற்றுவதற்கு தயாராகி விடுகின்றன.

கால்பந்தாட்ட பிரீமியர் லீக் ஆட்டங்கள், டென்னிஸ், கூடைபந்தாட்டங்கள் போன்றவை குழு முறையில் விளையாட்டுப்போட்டிகள் நடைபெற ஆரம்பித்தபொழுது, நான் மிகப்பெரிய மகிழ்ச்சியை அடைந்தேன். காரணம் விளையாட்டுப்பேட்டிகளில் நிரம்பி வழிந்த தேசிய வெறி என்பது மிக மோசமானதாக இருந்தது. விளையாட்டு என்பது பொழுதுபோக்கு என்ற நிலைமாறி தேசிய வெறியின் அடையாளமாக இருந்தது. ரஷ்யா வெல்கிற ஒலிம்பிக் பதக்கங்களை விட அதிகமாக வாங்க வேண்டும் என்று அமெரிக்காவை ஆப்பிரிக்க காடுகளில் வலுவுள்ள மனிதர்களை தேடியலைய வைத்தது!

கிரிகெட் போட்டிகளில் இந்தியாவை வென்றாக வேண்டும் இல்லையென்றால் நாட்டுக்குள் நுழைய முடியாது என்கிற நிலைக்கு பாகிஸ்தான் வீரர்களும்! பாகிஸ்தானை வெல்லாவிட்டால் இந்திய வீரர்களும் மிரட்டப்படுகிற நிலைக்கு விளையாட்டும், தேசிய வெறியும் பின்னிபிணைந்திருக்கின்றன!

குழு ஆட்டங்கள் வந்தபிறகு எந்தநாட்டு விளையாட்டு வீரரும் எங்கே வேண்டுமானாலும் விளையாடினார்கள் அதனால் தேசிய எல்லைகள் உடையும் என்று மகிழ்ந்தேன்! ஆனால் நடந்துக்கொண்டிருப்பதோ மிக மோசமான விளைவுகள்...

இன்றைக்கு விளையாட்டு என்பது உலகளவில் முதலாளிகள் முதலீடு செய்யும் தளமாகி விட்டது. விளையாட்டு வீரர்கள் உற்பத்தியாளர்களாக மாற்றப்பட்டுவிட்டார்கள். ரசிகர்கள் நுகர்வாளர்களாக மாற்றப்பட்டுவிட்டார்கள்.

வீரர்கள் விலைக்கு வாங்கப்படுகிறார்கள், விற்கப்படுகிறார்கள்... அவர்களின் மீது முதலீடு செய்த முதலாளிகள் லாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்டவர்கள்... அவர்களுக்கு உற்பத்தியான (வருவாயை) ஈட்டுவதற்க்காக எதையும் செய்ய தயராகிவிட்டார்கள்.

முதலாளித்துவம் எப்பொழுதுமே அதனுடைய இலக்காக வருவாயை மட்டுமே கொண்டது! வருவாயை அதிகரிக்க அது என்ன வேண்டுமானாலும் செய்யும்! கால் பந்தாட்ட சூதாட்டங்களும், ஆட்டங்களை ஒட்டி நடக்கிற விபச்சாரம் மற்றும் மது விற்பனை பற்றிய விவரங்களை இணையத்தில் தேடிப்படித்துக்கொள்ளுங்கள்!

கிரிக்கெட் பிரீமியர் லீக் ஆட்டங்கள் மட்டுமல்ல! முதலாளித்துவத்தின் இலக்கு வருவாய்! அது தனது லாபம் என்கிற நோக்கில் பயணக்கிற பொழுது குடி, விபச்சாரம், சூதாட்டம் இவற்றை பயன்படுத்த தவறுவதில்லை!

கலாமின் கோமாளி கனவுகள் போல இந்தியா 2020ல் வல்லரசு ஆகிறதோ இல்லையோ! இதே வேகத்தில் முதலாளித்துவம் இந்தியாவில் அதிகரித்தால் இன்னும் பத்தாண்டுகளில் இந்தியாவில் 6 பெரு நகரங்கள் லாஸ்வேகாஸ் போல சூதாட்ட மற்றும் பாலியல் தொழில் விடுதிகளால் நிரம்பி வழிய போகிறது என்பது மட்டும் உண்மை :(

வெள்ளி, 9 மே, 2008

எமது அறியாமையை பயன்படுத்தி... உமது அதிகார கட்டமைப்பை... நிறுவ முயலுகிறாய்...!

பார்ப்பானீயத்தின் கோரப்பற்கள் குருதியின் ருசியறிய ஆவென்று வாய்பிளக்கிறது! தலித்களே கிளர்ந்தெழுங்கள் என்றழைக்கிறது! ஆகா! தலித் சகோதரர்கள் மீது என்னவொரு அக்கறை!

மலம் அள்ளுவது பிறவிக்கடன் என்றவனுக்கு முதலமைச்சர் நற்காலி! நான்கு வர்ணம் என்பவனுக்கு அதிகாரம்!

உத்தபுரமல்ல இன்னும் பல இடங்களில் அறியாமையில் இருக்கிற மக்களுக்கும், சாதி எனும் நோய் பிடித்த மக்களுக்கு தேவையானது எல்லாம் அறிவு புகட்டல் மட்டுமே! சாதி பிணிக்கு மருத்துவம் மட்டுமே!

ஆண்டாண்டு காலமாய் சாதி பிணி பரப்பும் கிருமிகளாய்... வலம் வரும் மோடி வகையறாக்களுக்கும், பார்ப்பானீய அதிகார வர்க்கங்களுக்கும் தேவையானது கருவறுத்தல்(அழித்தொழித்தல்)!

வியாழன், 8 மே, 2008

உடை கலாச்சாரம் (டிபிசிடி யின் உவ்வ்வே...) -4

உடை கலாச்சாரம் (டிபிசிடி யின் உவ்வ்வே...) -3
உடை கலாச்சாரம் (டிபிசிடி யின் உவ்வ்வே...) -2
உடை கலாச்சாரம் (டிபிசிடி யின் உவ்வ்வே...)

ஆடை அணிவதில் மிகப்பெரிய சிக்கல் எது பண்பாடானது (cultured)? எது நாகரிகமானது(civilized)? என்கிற கேள்வி தொக்கி நிற்கிறது?

மனிதன் தொடர்ந்து எல்லாவற்றையும் பற்றிய தேடல் உள்ளவனாக இருக்கிறான்... எல்லாவற்றிலும் பரிணாமம் அடைகிறான்... தொடர்ந்து வளர்ச்சியை நோக்கிய பயணத்தை தொடர்கிறான்.

தைக்காத ஆடைகளை நூற்பாலைகளில் தயாரித்த மனிதன். அவற்றுக்கு வண்ணம் கொடுக்க கற்றுக்கொண்டான். வண்ண,வண்ண ஆடைகள் போதவில்லை... அவற்றை தன் உடலின் அமைப்புக்கு தைத்து அணிவதை கண்டறிந்தான்.

தைக்காத கோவணம் தைத்த பிறகு ஜட்டி. தைக்காத வேட்டி... தைத்த பிறகு அரைக்கால்,முக்கால்,முழுகால் டவுசர்களாக! மேல் துண்டு தானய்யா மேல்சட்டையானது. தைக்காத சேலை... தைத்த பிறகு சுடி, மிடி யாக வருகின்றன.

உலகத்தின் எல்லாப்பாகங்களிலும் மனிதன் ஏதாவது ஒரு காலக்கட்டத்தில் தைக்காத உடையை பயன்படுத்திவிட்டு அதன் பிறகு தான் தைத்த உடைகளை பயன்படுத்த ஆரம்பித்திருப்பான்.

விலங்குகளிலிருந்து உரிக்கப்பட்ட தோல்கள் கூட ஆரம்பத்தில் தைக்கப்படாமலேயே தான் பயன்படுத்தியதாக வரலாறு கூறுகிறது. இன்றைக்கு தைத்த தோலாடைகள் பயன்படுகின்றன.

இந்த வளர்ச்சியை புரிந்துக்கொள்வதில் என்ன சிக்கல் இருக்கிறது என்று எனக்கு விளங்கவேயில்லை?

வேட்டியும், சேலையும் தான் எமது பண்பாட்டு உடைகள் என்றால்... மனிதனின் தேடலில் விளைந்த வளர்ச்சியை ஏற்றுக்கொள்ளாத முட்டாள்தனம் தானே தவிர வேறென்ன சொல்ல முடியும்!

பண்பாட்டு உடைகள் பற்றி பேசுகிற போது எல்லாம் எனக்கு தோன்றுவதெல்லாம் ஒன்றேயொன்று வரலாற்றின் எந்த பக்கத்திலாவது மக்கள் (உழைக்கும்வர்க்கம்) என்ன மாதிரியான உடைகள் உடுத்தியிருந்தார்கள் என்று பேசியிருக்கிறதா? அதிகாரவர்க்த்தின் அடையாளங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருக்கிறது!.

இந்த அதிகாரவர்க்கங்கள் எல்லாம் ஒரே மாதிரியான ஆடை உடுத்தியிருந்தார்களா? பார்ப்பனர்கள் வேட்டி, சேலை கட்டுவது ஒரு மாதிரியும்... செட்டியார்கள் வெறொரு மாதிரியும், முதலியார்கள், நாயக்கர்கள்... இன்னும் ஒவ்வொரு சாதியும் ஒவ்வொரு மாதிரியும் வேட்டி, சேலை கட்டியிருந்தார்கள் இல்லையா?

அதிகாரவர்க்கங்கள் அணிகிற உடையமைப்பே பண்பாடானது அல்லது நாகரிகமானது என்று அடித்தட்டு மக்களிடம் உருவாக்கி வைத்திருக்கிறோம். பெரும்பான்மை மக்கள் என்ன விதமான ஆடை உடுத்தினார்கள் என்று நாம் பண்பாடு பேசுவதில்லை! ஏனென்றால் நாம் பேசுகிற பண்பாடு என்பதே மேட்டுக்குடி தனமானதல்லவா?

ஆடைகளின் தேடலில் மனிதன் தொடர்ந்து பயணப்பட்டுக்கொண்டேயிருக்கிறான்... தைத்தல் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் என்பதாகயிருந்தது... மாறியது காலம் ஆயத்தஆடைகள் (ReadyMades) வந்தன.

பயணம் நிற்கவேயில்லை... தொடர்கிறது ஆடை வடிவமைப்பு என்று புதிய பாதையில் பயணிக்கிறான். தனித்த ஆடைவடிவமைப்பு (unique designed dress) வருகிறது.

நிற்க, இந்த தேடல்கள்... எதனோடும் தொடர்ப்பற்று நிற்கவில்லை... ஒரு காலத்தில் இந்த தேடல்கள் மேட்டிமை தேடல்களாக இருந்திருக்கலாம். இன்றைய தேடல்கள் வணிக தேடல்களாக இருக்கிறது.

வணிக தேடலாக வருகிற போது உற்பத்தி-நுகர்வு என்கிற நிலை வந்து விடுகிறது. உடனே சந்தைப்படுத்துதல் முன்னணியில் வந்து நிற்கிறது. வணிக உலகம் தைத்த ஆடைகளையும், ஆயத்த ஆடைகளையும், வடிவமைக்கப்பட்ட ஆடைகளையும் தயாரித்து சந்தைப்படுத்துகிறது.

முதலாளித்துவமும், வணிகமும் கைக்கோர்க்கின்றன... சந்தைப்படுத்துதலில் எளிய வழி பாலுணர்ச்சியை மையப்படுத்தி சந்தைப்படுத்துதல்... பாலின்ப உடைகள் (sexy fit dresses)... வளைய வருகின்றன.

ஆடையை பற்றிய தேடலும், அதனுடைய வளர்ச்சியும் மனிதனை பாதிக்கவில்லை... ஆடைகளில் எந்த சிக்கலுமில்லை.... முதலாளித்துவமும், வணிகமும் தவறான திசைகளில் நம்மை வழிநடத்திக்கொண்டிருக்கின்றன!

பயனாளர் கையேடும், தமிழும்....!

குறிப்பு : கொஞ்சம் பழைய பதிவு, மீள்பதிவு செய்யப்படுகிறது! இதன் தேவை இன்னுமிருப்பதால்!

ஆசை, ஆசையாய் நாம் நம் வீட்டுக்கோ, உறவினருக்கோ அல்லது நண்பருக்கோ ஒரு மி்ன்னணுவியல் கருவி (electronics equipment) வாங்கி கொடுக்கிறோம். இப்பொழுது வருகிற நவீன கருவிகள் ஏகப்பட்ட பயன்பாடுகளுடன் வருகிறது ஆனால் அவற்றுக்கான பயனாளர் கையேடுகள் (user manual) பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே இருக்கின்றன.

நாம் வாங்கி தருகிற பொருட்களை நம் பெற்றோரோ அல்லது உறவினரோ பயன்படுத்தும் போது ஏற்படும் சிக்கலை தீர்க்க முடியாமல் அருகில் இருக்கும் யாரவது ஒருவரை உதவிக்கு அழைக்கும் போது அவர்கள் தங்களுடைய அறிவு திறமைகளையெல்லாம் அதில் காண்பித்து கடைசியில் பேரீச்சை பழத்திற்க்கு விற்க்கும் நிலைக்கு பொருள் வந்துவிடுகிறது.

எளிய தமிழிலில் பயனாளர் கையேடு மிக அவசியமாகிறது.

அதற்க்காக நாம் என்ன செய்யலாம்? சீனா மாதிரி நமக்கு ஒரு நாடோ அல்லது அரசியல் அதிகாரமோ இருந்தால் நாம் கட்டாயம் சந்தைக்கு வருகிற பொருட்களின் நிறுவனங்களை மறைமுகமாக நம்முடைய தமிழ் மொழியில் கையேடு வேண்டுமென்பதை அறிவுறுத்தலாம்.

நதிநீர் வேண்டுமென்று கேட்டாலே நாய்களை விட கேவலமாக அடித்துக்கொல்லபடும் அளவுக்கு அரசியல் அனாதைகளாக இருக்கிற நிலையில்...

தமிழிலில் கையேடா!
முடியும்! இதற்க்காக நீங்கள் வீதியில் கொடிபிடிக்க வேண்டாம்! போராட்டங்கள்! தீக்குளிப்புகள் தேவையில்லை!

ஒரு எளிய வழி இருக்கிறது!

இன்றைய நிலையில் மின்னணு கருவிகள் பயனாளர் சந்தையில் உலகளாவிய அளவில் மிகப்பெரிய நுகர்வோர் எண்ணிக்கையில் தமிழர்கள் இருக்கிறார்கள்.

ஓவ்வொரு மின்னணு கருவி நீங்கள் வாங்கும்போதும், உங்களுக்கு அப்பொருளின் உத்திரவாதத்தை பதிவு (warranty card) செய்ய ஒரு விண்ணப்பமும், ஒரு கருத்து கணிப்பு படிவம் (feed back form) -ம் தரப்படுகிறது.

நீங்கள் பதிவு செய்யும் போது உங்களுக்கு ஒரு கேள்வியாக மேலதிக சேவையாக அந்நிறுவனத்தில் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? என்று கேட்கிறார்கள், அப்பொழுது நீங்கள் தவறாமல் எங்களுக்கு தமிழிலில் பயனாளர் கையேடு இருந்தால் நலம் என்றும், அப்படி இல்லாததால் அவர்களின் கருவிகளை பயன்படுத்துவது சிரமமாக உள்ளது எனவும், விரைவில் தமிழிலில் பயனாளர் கையேடு தருகிற நிறுவனப்பொருட்களையே வாங்க விருப்பபடுவதாக குறிப்பிடுங்கள்.

கருத்து கணிப்பு படிவம் இல்லாத நிலையில் நீங்கள் அந்நிறுவனத்திற்க்கு ஒரு தொலைபேசி அழைப்பு செய்து உங்களுடைய பதிவு எண்ணை குறிப்பிட்டு நீங்கள் விரும்புகிற மேலதிக சேவைகளை குறிப்பிடலாம்.

என்னுடைய நண்பர் 'சாம்சங்' நிறுவனத்தில் நிர்வாக பிரிவில் இருக்கிறார், அவருடைய கூற்றுப்படி இவ்வாறு வருகிற பயனாளர் கோரிக்கைகள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருக்கும்பட்சத்தில் அந்நிறுவனம் உடனடியாக அதற்க்கான நடவடிக்கைகள் எடுக்கும் என்கிறார்.மிக அதிக எண்ணிக்கையில் இருக்கும்பட்சத்தில் மிக அவசரமாக நடவடிக்கை எடுக்கப்படுமென்கிறார்.

இதனால் நமக்கு என்ன பயன் கிடைக்கும்?

1. தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் வேலைவாய்ப்புகள் உருவாகும்.
2. நமக்கு எளிய தமிழிலில் பயனாளர் கையேடுகள் கிடைக்கும்.

உடை கலாச்சாரம் (டிபிசிடி யின் உவ்வ்வே...) -3

உடை கலாச்சாரம் (டிபிசிடி யின் உவ்வ்வே...) -2
உடை கலாச்சாரம் (டிபிசிடி யின் உவ்வ்வே...)

ஆடை தேர்வுகளை பற்றி ஏற்கனவே பேசியிருந்தாலும்... சூழலின் பங்களிப்பை இன்னும் கொஞ்சம் விரிவாக பேச வேண்டியதிருக்கிறது. ஜீன்ஸ் என்கிற ஆடையின் கண்டுபிடிப்பு என்பது குளிர் பிரதேசங்களில் தோலாடைக்கு மாற்றாக, தோலாடைகளின் பற்றாக்குறையாலும், தோலாடைகளின் வேறுசில சிக்கல்களாலும் கண்டடைந்த மாற்று தீர்வாக தான் பார்க்க இயலுகிறது.

இந்த ஜீன்ஸ் ஆடையை வெப்பமண்டல நாடுகளிலும் பயன்படுத்துவது என்பது அறியாமை என்று சொல்லிவிடலாம்... ஆனால் எதையும் செய்து பார்க்க துடிக்கிற இளையர்கள் (youths) ஜீன்ஸ் பயன்படுத்துவதில் குறையொன்றும் இல்லை... சிறிது காலத்தில் பருத்தியிலான உடைகளுக்கு மாறிய நிறைய நண்பர்களை பார்க்க முடிகிறது. உள்ளே வெந்து புழுங்கினால் பவுடர் அடித்து மேலே ஜீன்ஸ் மாட்டுகிற கனவான்களை பற்றிய கவலை நமக்கெதற்கு :)

காற்றுக்கு காசு கேட்கும் சென்னையின் அறைகளில் தங்கியிருந்த போது.. உள்ளாடைகளுடன் உறங்கிய இரவுகள்... இன்னும் சில நண்பர்கள் கட்டிய ஈரிழை துண்டு அக்கடா என்று கிடக்க காற்றோட்டமாக உறங்குவார்கள்!

பல நேரங்களில் நண்பர்களின் வாயிலாக அறிந்திருக்கிறேன் விடுதிகளில் நிர்வாணமாக அலைவதை விரும்பியிருக்கிறார்கள் பலர்! (ஆண்கள், பெண்கள் என்கிற பாகுபாடு இதில் இல்லை!)

பல ஐரோப்பிய நாடுகளில் கோடை காலங்களில் டூ பீஸ் அல்லது சிங்கிள் பீஸ் உடைகளுடன் மக்கள் கடற்கரைகளில் கூடுவதை காணலாமே!

ஆடை மட்டுமல்ல பல்வேறு பயன்பாடுகள் சூழலின் அடிப்படையில் தான் அமையும். வறட்டு பண்பாட்டு கூச்சல்களை மக்கள் தானாகவே உடைந்தெரிந்து பயணப்படுவார்கள்!

இங்கே ஒரு குடும்பத்துடன் பகிர்வு அடிப்படையில் தங்கியிருந்த போது அந்த வீட்டிலுள்ள பெண் எப்போதும் காலணி(sleeper) அணிந்து தான் நடமாடுவார்! ஏன் மேற்கத்திய நாடுகளில் வீட்டில் காலணி அணிகிறார்கள் என்பதை பற்றிய புரிதலில்லாமல் இப்படி வாழ்வது மேம்ப்பட்ட வாழ்க்கை என்று நினைத்துக்கொள்வதால் ஏற்ப்படுகிற சிக்கல் இது!

கடுமையான குளிர் நாடுகளான ஐரோப்பிய நாடுகளில் வெற்று காலுடன் வீட்டுக்குள் நடமாட இயலாது. அதனாலயே காலணி தேவைப்படுகிறது. இரண்டாவது பல ஐரோப்பியர்கள் அடிக்கடி பயணங்கள் மேற்க்கொண்டு கண்ட இடத்திலும் தங்குவார்கள். அதனால் கால்கள் வழியாக பரவும் நோய்களிலிருந்து தற்காத்துக்கொள்ளவும் காலணி பயன்படுத்துகிறார்கள்!

ரஷ்யாவில் குளிர்காலங்களில் கையுறை, காலறை அணிந்து தான் நாள் முழுவதும் வாழ்கிறார்கள். உறைகளை கழற்றினால் குருதி உறைகிற குளிர்!

வெப்ப மண்டல நாடுகளில் வாழ்கிற நாம் நமது வீட்டை தூய்மையாக வைத்துக்கொள்வதற்கு பதிலாக வீட்டுக்குள் காலணி அணிய வேண்டிய அவசியமென்ன? புரிதலில் ஏற்ப்படுகிற சிக்கல்! அறியாமை! இப்படி வாழ்வதை மேம்ப்பட்ட வாழ்க்கை! தான் உயரத்தில் இருப்பதாக எண்ணவோட்டம் போன்றவையே காரணங்கள்!
Related Posts with Thumbnails