வெள்ளி, 27 ஜூன், 2008

தசாவதாரம் - தமிழரசி - எரியிற நெருப்பில் கொஞ்சம் எண்ணெய்....!

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

.
.
.
.
.
.
.
.
.
.

விரைவில்....

புதன், 25 ஜூன், 2008

பார்ப்பானியம் என்றால் என்ன?

உணவு, உடை, உறைவிடம், பிறப்பு, இறப்பு, பண்பு, குணம், தொழில், பொருளாதாரம், பழக்கவழக்கங்கள், வாழ்க்கைமுறை, பண்பாடு, கல்வி, அறிவு, சிந்தனை, பாராம்பரியம், பரம்பரை, குலம், இனம், மொழி, மதம், நிறம்... இன்னபிற இப்படி எந்தவொரு காரணிக்கொண்டும் ஒரு மனிதனை உயர்ந்தவன் என்றும் இன்னொருவனை தாழ்ந்தவன்(இழிந்தவன்) என்றும் சித்தரிப்பது, பேசுவது, எழுதுவது, நடைமுறையில் கடைபிடிப்பது, பிரச்சாரம் செய்வது, கலையின் ஊடாக பதிவு செய்வது, இன்னபிற செயல்களின் வழியாக சமூகத்தில் ஏற்ற, தாழ்வுகளை உண்டு பண்ணுவதும் அதன் மூலம் சமூக உளவியலை சிதைத்து மனிதர்களிடையே உயர்ந்தோர், தாழ்ந்தோர்(இழிந்தோர்) என்கிற பாகுபாட்டை உண்டாக்குவதுமான செயலே பார்ப்பானியம்!

எ.கா:

1. சைவ உணவை உண்ணுபவர்கள் உயர்ந்த மனிதர்கள், அசைவ உணவை உண்ணுபவர்கள் தாழ்ந்தவர்கள்(இழிந்தவர்கள்) என்று கூறுவது.

2. கற்பூரத்தை கொளுத்தி, தீயில் நெய்யை ஊற்றி வழிபாடு செய்கிற செயலை உயர்ந்ததென்றும், அதை செய்பவரை உயர்ந்தோர் என்பதும்... கோயிலுக்கு ஆடு,கோழி வெட்டி வழிபாடு செய்வதை இழிந்த செயலாகவும் அதை செய்வோரை தாழ்ந்தவர் (இழிந்தவர்) என்பதுமான செயல்.

3. ஒரு மொழியை(சமஸ்கிருதம்)யும், அதிலுள்ள சில நூல்களை கற்றோரை மட்டுமே கடவுளுக்கு நெருக்கமான உயர்ந்தோராக கொள்வதும், இன்னொரு மொழி (தமிழ்) பேசுவோரை தாழ்ந்தவராகவும் கொள்வதுமான செயல்.

(நா.கண்ணன் என்கிற பதிவர் வடமொழியை இறைதன்மையுள்ள மொழி என்கிறார்... இறைதன்மையுள்ள மொழி ஏன் இறந்துபோனது?)

குறிப்பு :
இங்கே குறிப்பிட்ட செயல்கள் மட்டுமல்ல... எதுவொன்று ஒருவனை உயர்ந்தவனாகவும், இன்னொருவனை தாழ்ந்தவனாகவும் சித்தரிக்கிறதோ அதெல்லாம் பார்ப்பானியமே! அதை செய்வோர் பார்ப்பானியவாதிகளே!

திங்கள், 23 ஜூன், 2008

தசாவதாரம் - அமெரிக்காவின் கோவணத்தை உருவிய கமல்...!

படத்தின் பார்ப்பானீய அரசியலை ஏற்கனவே நண்பர் பைத்தியகாரன் தசாவதாரம்: பாசிச, பார்ப்பனிய மலம் நார், நாராக கிழித்துவிட்டார்... தசாவதார விமர்சனம் எழுதாவிட்டால் தமிழ் வலையுலகின் பொது நீரோட்டத்தில் விலகிவிட்டதாக வரும் பழியிலிருந்து எப்படி தப்பிப்பது :)

குறுக்காலும், நெடுக்காலும் நடந்து... குப்புறப்படுத்து, மல்லாக்க விட்டத்தை பார்த்து யோசித்து, கழிப்பறையில் கக்கா போகும்போது கன்னம் தேய்த்து... கடைசியாக இந்த பதிவை எழுதுகிறேன்....

அன்றைய சோவியத் ரஷ்யாவையும், கொரியாவையும், கியூபாவையும், தற்பொழுது இஸ்லாமிய நாடுகளையும் மனித இனத்தின் எதிரிகளாக சித்தரித்தும்... அங்கே உயிரி ஆயுதங்கள் (Bio Weapons) தயாரிக்கப்படுவதாகவும், வேதி ஆயுதங்கள் தயாரிக்கப்படுவதாகவும் இடையறாது தனது ஊடகங்களின் வழியாகவும், ஹாலிவுட் படங்கள் வழியாகவும், நாவல்களின் வழியாகவும், இன்னும் பல்வேறு முறையிலும் பிரச்சாரம் செய்கிற அமெரிக்கா மற்றம் அதன் ஆதரவு ஏகாதிபத்தியங்கள். அதை அப்படியே உண்டு செரிக்காமல் வாந்தி எடுக்கிற முதலாளித்துவ கைக்கூலிகள் என்கிற நிலையிலிருந்து...

அமெரிக்காவின் அயோக்கிய தனங்களை அம்பலப்படுத்துவதில் படம் முக்கிய திசையில் பயணம் செய்கிறது. எய்ட்ஸ் கிருமி உருவாக்கத்திலிருந்து, இன்றைக்கு உயிரி ஆயுத தயாரிப்பில் ஈடுப்பட்டிருக்கும் அமெரிக்கா, அதற்கு புஷ் அரசாங்கம் நிதி ஓதுக்கீடு செய்வது வரைக்கும்... அமெரிக்க அரசாங்கத்தின் மனித இன அழிப்பு வேலைகளை... மிக நுட்பமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் கமல்!

பலராம நாயுடு என்கிற கதாபாத்திரத்தின் வழியாக விசாரணை என்று இரண்டு முறை இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளை பட்டியலிட்டு நம்முடைய பொதுப்புத்தி சார்ந்த தீவிரவாதம் என்பது இஸ்லாமியர்களின் செயல் என்பதை எள்ளி நகையாடி இருக்கிறது படம்.

தனது சொந்தங்கள் சாகும் போது கோபப்படுகிற சராசரி மனிதர்களை தீவிரவாதிகள் என்று முத்திரைக்குத்தி சித்தரவதை செய்கிற அரசு... மனித இனத்தை அழிக்க கூடிய உயிரி ஆயுதத்தை தயாரிக்கிற அமெரிக்காவையும், அது இந்தியாவிற்கு வந்து சேர்ந்து விட்டது என்கிற பொழுதிலும் அமெரிக்க அதிகாரிகளுக்கு மாலைப்போட்டு, இளநீர் கொடுத்து வரவேற்கிற நமது அரசு அதிகார அமைப்பையும் இதைவிட சிறப்பாக எப்படி காட்சிப்படுத்த முடியும்!

புஷ்-ஐ இதைவிட மோசமான கோமாளியாக சித்தரிக்க முடியுமா?

அமெரிக்கா மனித இனத்திற்கு எதிரான ஆய்வுகளில் ஈடுப்பட்டிருக்கிறது என்கிற கதையை திரைப்படமாக எடுத்து அதை அமெரிக்காவின் 50 திரையரங்களில் வெற்றிகரமாக வெளியிட்டிருக்கிற கமலுக்கு நிச்சயமாக பாராட்டுகள் தெரிவிக்க வேண்டும்!

படம் ஆரிய கதையாடல்களின் வழியாக சொல்லப்பட்டிருக்கிறது என்கிற காரணத்திற்காக... கமலை விமர்சிக்கலாம்!

கடைசியாக நந்தாவுக்காக... அவருடைய பதிவில் கமல் கடவுள் எதிர்ப்பு கொள்கையை கடைப்பிடிக்கிறார்... அதனால் பார்ப்பானீயவாதி அல்ல என்று குறிப்பிட்டிருந்தார்....

நாத்திகம் என்கிற ஆயுதம் பார்ப்பானீயத்தை எதிர்க்க பெரியாரால் பயன்படுத்தப்பட்டது. அதனால் ஊரில் இருக்கிற அத்தனை நாத்திகவாதிகளும் பார்ப்பானீய எதிர்ப்பாளர்கள் அல்ல!

நிறைய நாத்திகர்கள் பார்ப்பானீயவாதியாக இன்றைக்கும் உலவிக்கொண்டிருக்கிறார்கள்! (மிகச்சிறப்பான எ.கா. பூணூல் மார்க்கிஸ்டுகள்)

நன்றி!

வெள்ளி, 20 ஜூன், 2008

இராமாணயம் - செந்தழல் ரவி - முகவை மைந்தன்

இராமாயணம் - ஒரு வெண்பா முயற்சி - அறிமுகம்

செந்தழல் ரவி said...

இராமாயணம் முதலில் தமிழனின் புராணமா ?

தமிழர்களை குரங்குகளாக சித்தரித்த ராமாயணத்தை எப்படி உயர்த்திச்சொல்ல முடிகிறது ?

அதனை வெறுத்து ஒதுக்குவதே சாலச்சிறந்தது....

முகவை மைந்தன் said...

வாங்க ரவி. இராமாயணம் தமிழரால் எழுதப் பட்ட கதை இல்லை. அவர்களுக்கு தென் பகுதி காட்டில் வாழ்ந்த குரங்குகளைத் தாண்டிச் சிந்திக்க முடியலையோ என்னவோ. ஜாம்பவான் ஒரு கரடி!

முன்பு அரசுத் துறை வண்டிகளின் ஊர்வலம் மாவட்டங்களின் அகர வரிசைப்படி நடந்தது. இராமநாதபுரம் மாவட்டம் முதலில் வந்தது. நிருபர்கள், அமைச்சர் தமிழ்குடிமகனிடம் 'உங்கள் மாவட்டம் முதலில் வரணும்னுங்கிறது தானே உங்கள் நோக்கம்?'னு கேட்டாங்க. அமைச்சர் 'எனக்கு தமிழ் முதலில் வரணும், அய்யா' என்றார். இந்த மறுமொழி உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?

நான் ஆயத்தமாத் தான் இருக்கேன். வேணும்னா, இராவண காவியத்தை வலையில் பிரிச்சு வேயலாம், வாங்க.

இங்கே ரவி சொன்ன கருத்தை நீங்கள் சரியாக உள்வாங்கவில்லை என்று எண்ணுகிறேன்...

மற்றவர்களின் மீது அதிகாரம் செலுத்த முற்படுகிற ஓர் இனமோ, நாடோ அல்லது அரசியல் அதிகாரமோ நேரிடையாக போர் மட்டும் புரிவது கிடையாது.... தனது சமூகத்திடம் எதிரி சமூகத்தை பற்றிய தவறான கருத்துகளை உருவாக்கும், இழிவுபடுத்தலை செய்யும். அப்பதான் இந்த சமூகம் இன்னொரு சமூகத்தின் மீது கோவம் கொள்வார்கள்...

தன்னுடைய மக்களிடம் எப்படி பிரச்சாரம் செய்வது... கலை, படைப்புகள், ஊடகம் அனைத்தின் வாயிலாகவும் எதிரியை பற்றிய பிம்பத்தை கட்டமைப்பார்கள்... இந்த அரசியல் பிரச்சாரம் சில சமயங்களில் எதிரி மக்களிடமே அவர்களுடைய அரசியல் அதிகாரத்தை பற்றிய தவறான பிரச்சாரம் செய்யப்படும்!

சில எடுத்துக்காட்டுகளை பார்க்கலாம்...

இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா குதிக்க வேண்டும் என்றால் அமெரிக்க மக்கள் ஆதரவு வேண்டும்... என்ன செய்வது யோசித்த அமெரிக்கா அரசாங்கம் அமெரிக்க மக்கள் பயணம் செய்த ஒரு பயணிகப்பலை மூழ்கடிக்கிறது! பல நூறு மக்கள் இறக்கிறார்கள்... அதை ஹிட்லர் செய்தார் என்று பிரச்சாரம் செய்து அமெரிக்க மக்களிடம் ஜெர்மனுக்கு எதிரான மனநிலையை உளவியல் ரீதியாக உருவாக்கினார்கள்.

ரஷ்யாவுக்கு எதிரான பனிபோரில் அமெரிக்கா ஈடுப்பட்டிருக்கும் போது ரஷ்யா வை பற்றிய தவறான பிரச்சாரம் மேற்கொள்கிறது எப்படி?

அமெரிக்க படங்கள் ரஷ்யா உலக மக்களுக்கு எதிரான செயலில் ஈடுப்பட்டிருப்பது போல படமெடுக்கப்பட்டது!

அந்த காலக்கட்ட புதினங்கள் பல ரஷ்யாவை எதிரியாக சித்தரித்து எழுதப்பட்டுள்ளன.

பின்னர் அது கொரியாவுக்கு எதிரானதாகவும், தற்பொழுது இஸ்லாமிய நாடுகளுக்கு எதிரானதாகவும் அந்த பிரச்சாரம் இருக்கிறது.

மிக எளிமையாக நம்மூர் ஊடகங்களும், சினிமாக்காரர்களும் பாகிஸ்தானில் இருப்பவன் எல்லாம் தீவிரவாதி என்று சித்தரிப்பது போன்ற பிரச்சாரம்!

இங்கே ஊடகமும், படைப்புகளும் ஒரு அரசியல் அதிகாரத்தை சார்ந்து இயங்குகின்றன! அவர்களிடம் சொன்று எப்படி சார்ந்தியங்கலாம் என்று கேள்வியெழுப்ப இயலாது!

நாம் நம்முடைய படைப்புகளை மக்களுக்காக என்ற தளத்தில் நகரலாமே!

ஆரிய இனம் 'த்ராவிட' இனத்தின் மீது ஆளுமை செலுத்த முற்பட்ட நேரத்தில் எழுதப்பட்டவைகளே இந்த புராணங்களும், ஆரிய கதைகளும்...
அவற்றில் மற்ற இனங்களை பற்றிய மதிப்பீடு உயர்வாக இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்பது மடமை!

ஆனால் அதே நேரத்தில் தமிழ் மொழியில் வந்த படைப்புகள் திருக்குறள், சிலப்பதிகாரம்... போன்றவை அரசியல் அதிகார சார்பின்மையை பேணியிருக்கின்றன.

கடைசியாக முகவை மைந்தன் உங்களுடைய வெண்பா எழுத வேண்டும் என்கிற முயற்சியை பாராட்டுகிற நேரத்தில்...
ஒர் இனத்தின் மீதான இழிவுப்படுத்தலை மையமாக கொண்ட புராணத்தை எடுத்துக்கொண்டு அதை செய்ய வேண்டாமே!

ஞாயிறு, 8 ஜூன், 2008

யார் பிச்சையெடுக்கிறார்கள்...?

கோவியின் அன்றாடம் காய்ச்சும் அர்சகர்களுக்கு சென்னை அண்ணா நகரில் 50 லட்சம் மதிப்புள்ள வீடு... !

பழைய நிகழ்வு ஒன்றை நினைவுக்கொண்டு வர வேண்டும்... ஆந்திர முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு, முதல்வராக இல்லாதபொழுது சிங்கை வருகை தந்தபொழுது... முன்னாள் முதல்வர் என்கிற அடிப்படையில் சிங்கை அரசாங்கம் அவருக்கு ஒரு உயர்ரக மகிழ்வுந்து வழங்கியிருந்தார்கள் சிங்கையை சுற்றிப்பார்க்க மற்றும் அலுவல் பணிகளுக்காக... அந்தபயணம் முடிந்து கிளம்புகிற தருணத்தில் அதுவரை தனக்கு வாகன ஓட்டியாக இருந்தவருக்கு சந்திரபாபு அவர்கள் சிங்கை டாலர் நோட்டை வெகுமதிப்பாக அளித்துள்ளார்... அப்போது அந்த வாகன ஓட்டி வாங்க மறுத்து சொன்னது " நான் என்னுடைய வேலையை செய்கிறேன்... அதற்க்கு உரிய ஊதியத்தை அரசாங்கம் எனக்களிக்கிறது... சிறப்பான வாழ்வியலுக்கு என்னுடைய நாடு எனக்கு எல்லா வசதிகளையும் வழங்கியிருக்கிறது, அதனால் உங்களிடம் இருந்து எந்தவிதமான வெகுமதியும் எனக்கு தேவையில்லை!" என்று சொன்னதாக சந்திரபாபு அவர்கள் ஆந்திராவில் வந்து குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு தொழிலாளியும் அல்லது உழைப்பை மூலதனமாக கொண்ட மனிதனும் தன்னுடைய உழைப்புக்கு தகுந்த ஊதியமும், அங்கீகாரமும் கிடைக்கிறபொழுது எந்தவொரு வெகுமதியையும் இரந்து பெறுவதை விரும்புவதில்லை என்பதை இந்த நிகழ்வு நமக்கு பாடமாக தருகிறது.

தமிழகத்தில் ஏழை புரோகிதர்களை தட்டேந்த வைப்பது அரசு தான் என்கிறவர்களுக்கு...

ஆனால்! முறையான அனுமதி (வொர்க் பர்மிட்) பெற்று... நல்ல தங்குமிட வசதிகள், மற்றும் சிறப்பான இலவச உணவு வசதிகளுடன் சிங்கையில் கோயில்களில் புரோகிதம் செய்கிற பார்ப்பனர்கள் ஏன் தட்டேந்தி தட்சணை என்கிற பெயரில் பிச்சை வாங்குகிறார்கள்....

வொர்க் பர்மிட்-ல் வருகிறவர்கள் அந்த வேலையை தவிர வேறு வேலை செய்யக்கூடாது என்பது சிங்கையில் சட்டம்! ஆனால் இந்த கோயில் புரோகிதர்கள் வெளியில் வீடுகளுக்கு சென்று பூஜைகள் செய்து வேறு சம்பாதிக்கிறார்கள்!

சிங்கை, மலேசியா மற்றும் புலம் பெயர் தமிழர்கள் வாழ்கிற இடங்களில் புரோகித பார்ப்பனர்களுக்கு நல்ல ஊதியம் வழங்கப்படவில்லை என்று குறிப்பிட முடியுமா?

ஏற்கனவே மலேசிய போராட்டத்தை மலேசியா மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழர்களே...! -5 பற்றிய பதிவில் ஏன்? ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க போன்றவை மலேசிய கோயில் இடிப்புக்கு மிகப்பெரிய எதிர்ப்பை காண்பிக்கின்ற என்று சொல்லியிருந்தேன்... அங்கே வேலைப்பார்க்கிற பார்ப்பனர்களின் வேலைவாய்ப்பு பறிபோகிறது என்கிற காரணமேயன்றி மலேசிய தமிழர்களின் மீதான அக்கறையல்ல!

உழைக்காமல் கடவுளின் பெயரைச்செல்லி ஏமாற்றி பிழைக்கிற புரோகிதர்களுக்கு வக்காலத்து வாங்குவதைவிட அயோக்கியதனம் வேறெதாவது உண்டா? வக்காலத்து வாங்குபவர்களின் சாதி பாசமா?

வீட்டு நிகழ்வுகளுக்கு புரோகிதர்களை அழைக்கும்பொழுது எவ்வளவு ரேட் என்று பேசி அழைத்து வந்தால் அந்த காசுக்கு மேலே வாங்குவதில்லை புரோகிதர்கள் என்று புளுகி தள்ளுகிறார்கள்...

சாமிக்கு தட்சணை வைத்தல் என்று கடைசியாக ஒரு நிகழ்வு வைத்திருப்பார்கள்... அதில் தனியாக பணம் வைக்க வேண்டும்...

இவர்களை சொல்லி எதுவும் நடக்கபோவதில்லை...

நாடு, நாடாக கூலியாய், அடிமையாய், அகதியாய் ஓடி, ஓடி உழைத்து... கோயில் கட்டி சாமிக்கு மணியடிக்க பார்ப்பானை அழைத்து, அவனை தேரில் உட்கார வைத்து தோளில் சூத்திரனாய் தூக்கி நடக்க கூமுட்டை தமிழன் இருக்கும்வரை... இவர்களுக்கு பிழைப்பு நடக்கும்! :(

புதன், 4 ஜூன், 2008

புள்ளியல் ஒரு அரசியல் வகையினம் - (ஜமாலனுக்கு மட்டுமல்ல...)

நண்பர் ஜமாலன் எண்ணப்பட்ட உடல்களும் எழுதப்பட்ட கதைகளும் - இறுதி பகுதி. எழுதிய பதிவில் எது விளங்கியதோ இல்லையோ ஒன்று எனக்கு விளங்கியது! புள்ளியல் விவரங்கள் ஒரு பொய் அது அரசியல் வயப்பட்டது என்கிறார்!

இளங்கலை படிக்கும்பொழுது நமக்கு தண்ணிக்காட்டியது இந்த புள்ளியல் பாடம் தான்... ரொம்ப படுத்திவிட்டது... என்னோட தேர்வு படையெடுப்பை தடுத்து நிறுத்த பல்கலைகழகமே ஒரு கட்டத்தில் நீ தேர்ச்சி அடைந்துவிட்டாய் என்று 40மதிப்பெண்கள் கொடுத்தனுப்பிய பாடம் இது! அதுல போயி விவகாரம நாம பேசக்கூடாதில்லையா :)

புள்ளியலில் எண்ணுதல் அடிப்படை... எண்ணுதல் தோன்றிய வரலாறு பேசணும்! முதலில் மனிதன் எண்ணுதல் என்பதை அறிந்ததே குழுவாக வாழும்பொழுது தான் என்கிறது எண்ணியல்! தன்னோட குழுவில் எத்தனைபேர் என்பதை அடையாளப்படுத்திக்கொள்ள முயற்சியே எண்களின் வளர்ச்சி...

எண்ணுதல் இல்லாவிடின் வாழ்க்கையே இல்லை அந்தளவுக்கு எண்களுடனாக தொடர்பு சமூக வாழ்க்கையின் நெருக்கம் அதிகம்!

இப்ப நண்பரோட கருத்துக்கு போவோம்... ஒட்டுமொத்தமாக புள்ளியலே அரசியல் வகையினமா? இல்லை மனித உடல்களை எண்ணுதல் அரசியல் வகையினமா? தெரியவில்லை...

ஜமாலனோட பதிவிலிருந்து நான் புரிந்துக்கொண்டது... எண்ணுதல் பணியை செய்கிறவரின் அரசியல், அதை செய்ய உத்தரவிட்ட அதிகாரத்தின் அரசியல் இதெல்லாம் தாண்டி எண்ணப்பட்ட உடலின் அரசியல் இத்தனையும் புள்ளியல் விவரத்தில் உள்ளடங்கி வருகிறது... அதை பகுப்பாய்வு செய்வனின் அரசியலும், அதை ஆதாரமாக பயன்படுத்துவரின் அரசியலும் தனிக்கதை...

இப்படியே எல்லாவற்றின் அரசியல் பின்னணி பார்க்கபோனால் இந்திய துணைக்கண்டத்தை பற்றிய ஐரோப்பிய ஆய்வுகள் அனைத்தும் பொய்யானவை என்று இன்றைக்கு அரை டவுசர் ஆர்.எஸ்.எஸ் வெறியர்கள் சொல்வது உண்மையா?

இன்றைக்கு மேற்கோள் (உசாத்துணை) நூற்களாகவும், ஆய்வு ஆதாரங்களாவும் காட்டுபடுவை மிக பெரும்பான்மையானவை ஐரோப்பியர்களின் வழி வந்தவை! அப்படியானால் இவையெல்லாம் ஐரோப்பிய அரசியல் வகையினமா?

புள்ளியல் இல்லையேல் வணிகம் என்பதே சாத்தியமற்றது என்கிறது இன்றைய கார்ப்பரேட் உலகம்! வணிக புள்ளியல் எந்த வகை அரசியல்?

அப்புறம் இந்த மனித உடல்களை எண்ணுதல் பணியை இந்தியாவில் என்னுடைய அறிவுக்கு எட்டியவரை உள்ளாட்சி மன்றங்கள் பிறப்பு, இறப்பு அடிப்படையிலும்..., குடிமை வழங்கல் பிரிவு குடும்ப அட்டை வழியாகவும், இந்திய புள்ளியியல் துறை மக்கள் தொகை கணக்கெடுப்பு வழியாகவும், இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் வழியாகவும், இந்திய குடிமை மற்றும் இமிக்ரேசன் துறை கடவுச்சீட்டு வழியாகவும்... எண்ணிக்கிட்டேயிருக்காங்க... ஆனா யாருக்கிட்டேயாவது முழுமையான தரவுகள் இருக்கா என்று யாருக்கும் தெரியாது!

அய்யகோ! ஒரே மண்டையிடியாக இருக்கிறதே!

பார்ப்பான் என்ன செய்தான்? பார்ப்பான் என்று பேச வேண்டியதன் அவசியமென்ன? (மனிதர்களை கூறுக்கட்டுதல்)

பார்ப்பான் என்ன செய்தான்? பார்ப்பான் என்று பேச வேண்டியதன் அவசியமென்ன? (முகமிலிக்கு மட்டுமல்ல...)
மனிதர்களை கூறுக்கட்டுதல் அல்லது வகைப்படுத்துதல் என்பது ஆரிய இனத்தின் அடிநாதமாக இருக்கிறது! அதுவே அவர்களின் தத்துவமாக இருக்கிறது! ஆரம்பத்தில் ஆரிய இனத்தின் தத்துவமாக... பின்னர் வைணவ தத்துவமாக.... விடுதலை போராட்ட காலத்திற்க்கு பிறகு இந்துத்துவ தத்துவமாக மாறி நிற்கிற மனித வகைப்படுத்துதல் தத்துவம்!

அப்படியென்ன வகைப்படுத்துதல் தத்துவம் என்கிறீர்களா? இன்றைய பிறப்பினடிப்படையிலான சாதி முறையின் அடிதளமாகயிருக்கிற நான்கு வகையான மனிதர்கள்! அதாங்க வர்ணம்! அதாங்க மனுதர்மம்! இன்னும் ஏகப்பட்ட வார்த்தைகளில் விளிக்கப்படுகிற இந்த கூறுக்கட்டுதலை எதிர்ப்பதே நமது பார்ப்பானீய எதிர்ப்பின் முக்கிய நோக்கமாக இருக்கிறது!

பார்ப்பனர்கள் தலையில் தூக்கி வைத்துக்கொண்டாடும் வேதங்கள் தொடங்கி, மனு நூல்,கீதை ஈறாக... உள்ளூர் குச்சுப்புடி பார்ப்பான் எழுதும் நூல் வரை இந்த நான்கு வர்ணத்தை பற்றி பேசுகிறது!

மனு முதலாக... ஆதி சங்கரர் தொடங்கி, இராமகிருஷ்ணர், விவேகானந்தர் உட்பட... இன்றைய கொலைகார கேடி சங்கராச்சாரியார் வரையும்...
அதிகார அத்வானி, குருதி குடிக்கும் மோ(கே)டி, இணையத்தில் சில்லறை தேத்தும் மாமாக்கள் உள்ளாக கடைக்கோடி சவண்டி பார்ப்பான் வரைக்கும் இந்த நான்கு வர்ணத்தை பற்றிய விளக்கங்கள் கொடுத்திருக்கிறார்கள்!

பிறப்பினடிப்படையில், தொழிலின் அடிப்படையில், குணத்தின் அடிப்படையில், செயலின் அடிப்படையில் என்று இந்த கூறுக்கட்டலை எவ்வளவு தூரம் சப்பைக்கட்டு கட்ட முடியுமோ அவ்வளவு தூரம் விளக்கிக்கொண்டிருக்கிறார்கள்!

இதில் இவர்களின் கேடி துறவி விவேகானந்தர் வர்ணத்துக்கு ஒன்று என்று தனி,தனியாக நூல் வேறு எழுதியிருக்கிறார்:( இவர் தனியாக புதுவிளக்கம் கொடுக்கிறார் யோகம் என்று!

ஆரிய பூமியில் பிறந்ததாக சொல்லும் பாரதி என்ன செய்கிறார் என்றால்... வர்ணத்தை நீக்க அவர் பூணூலை கழட்டவில்லை.. மற்றவர்களுக்கு பூணூல் மாட்டுகிறார்!

ஆனால் யாரும் மனிதர்கள் அனைவரும் சமம் என்று சொல்வதே கிடையாது!. இதை ஏன் பார்ப்பனர்கள் செய்கிறார்கள் என்றால்... இந்த வகைப்பாட்டில் அவர்கள் மேலே இருக்கிறார்கள்... ஆகையால் அவர்களுக்கு எது சாதகமாக இருக்கிறதோ... அதையே வலிந்து செய்கிறார்கள்.. அதையே பிரச்சாரம் செய்கிறார்கள்...

நான் உயர்ந்தவன் என்று பூணூலை மாட்டிக்கொண்டு திரிகிறவர்களை சராசரி மனிதனாக பூணூலை கழற்றி எறிய சொன்னால் செய்ய தயராக இல்லை! ஆனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சூத்திரன் என்று சொல்லி ஒடுக்கப்பட்டவன் தன்னுடைய சாதியை சொல்லி உரிமை கோருவதால்... இவர்களுக்கு எங்கோ மிளகாய் சொருகியது போல் எரிகிறது!

மனிதர்களில் நான்கு வர்ணம் என்று கூறுக்கட்டுகிற பார்ப்பானீய தத்துவத்தை தூக்கி எறிய சொன்னால்... அய்யோ! சாதி சான்றிதழ் கொடுத்து உரிமை கேட்கிறார்கள் என்று கூப்பாடு போடுகிறார்கள்!

அன்றைய சீக்கிய போராளி ! "மேல் சட்டையின் உள்ளே அணிந்த பூணூல் என்கிற ஆயுதத்துடன் இந்திய மக்களை அடக்கி ஆள நாடாளுமன்றம் வர அனுமதியிருக்கும்போது! எங்களின் மத சின்னமான குறுவாளுடன் நாடாளுமன்றம் நுழைய தடையா?" என்று முழங்கினான் அல்வா!

இந்தநாட்டில் பூணூல் அணிந்துக்கொண்டு நாங்கள் உயர்ந்தவர்கள் என்றும் மற்றவர்களை தாழ்ந்தவர்கள் என்று சொல்கிற வரைக்கும்... சாதி சான்றிதழ்கள் தேவைப்படும் உரிமைகளை காப்பாற்றிக்கொள்ள!

செவ்வாய், 3 ஜூன், 2008

யாழ் கள அறிவுக்கொழுந்துகள்...!

இவர் தான் பெரியார்! என்ற தலைப்பில் பெரியாரை பற்றிய கருத்துகளை விவாதிக்கொண்டிருந்தார்கள்... நீண்ட நாட்களாக யாழ் களத்தை செய்திகளுக்காகவும், விவாதங்களுக்காகவும் படித்து வந்தாலும்... அதில் நான் அனுப்புகிற உறுப்பினர் விண்ணப்பம் மறுக்கப்பட்டு வருகிறதாலும்... இங்கே எழுதவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளேன்!

தூயவன், நெடுக்காலபோகிறவன் போன்றவர்கள் அடிக்கிற கூத்திற்க்கு அளவேயில்லாமல் இருக்கிறது!

தூயவன் போகிற போக்கில் தமிழகத்தில் சாதிபிரிவுக்கு காரணம் பெரியார் தான் அப்படின்னு சொல்கிறார்...

லக்கிலுக் பெரியார் போராட ஆரம்பித்த புள்ளியே சாதி மறுப்பு என்பதை சுட்டியவுடன்... பெரியாருக்கு முன்பே தமிழகத்தில் சாதி இருந்ததாக அறிந்தராம்! வேடிக்கையாகயில்லை... பெரியாரை பற்றிய வாசித்து அறிந்துக்கொள்ளுங்கள் என்கிற கோரிக்கைக்கும், நான் ஏன் வாசிக்கணும் என்கிறார்... தெரியாத வரலாற்றை பற்றி தன்போக்கில் இழித்தும்,பழித்தும் எழுதுகிறார்!

அவர் தமிழகம் வந்தபொழுது பள்ளியில் சேர்க்க சாதி என்னவென்று கேட்டார்களாம்... அதற்க்கு முன்பு அவருக்கு சாதி என்றால் என்னவென்றே தெரியாதாம்!

கேக்கிறவன் கேனையனாக இருந்தால்... வாயில் அசிங்கமாக வருகிறது! சாதி தெரியாமல் தான் ஈழத்தமிழர்களின் திருமணத்தளங்கள் அனைத்திலும் ஈழத்தமிழர் என்கிற ஒரே ஒரு அடையாளத்துடன் வருகிறதா? ஜப்னா வெள்ளாளர், ஜப்னா ப்யூர் வெள்ளாளர்... இதெல்லாம் என்ன? சாதி பார்க்காமல் தான் ஈழத்தமிழர் திருமணங்கள் நடைபெறுகிறதா? எங்கே இணையத்தில் வெளியாகியுள்ள ஈழத்தமிழர் திருமண விண்ணப்பங்களில் எத்தனை சாதி இல்லாமல் வந்திருக்கிறது என்று காட்டுங்கள் பார்ப்போம் தூயவன்:(

சிங்கள, தமிழ் இன முரணை ஒழிக்க நாளையிலிருந்து யாரிடமும் நீ என்ன இனம் என்று கேட்காமல் இருந்தால் மட்டும் போதும் :) இன முரண் பிரச்சினை தீர்ந்து விடுமா?

சாதியால் ஒடுக்கப்பட்டவர்கள் அந்த சாதியை சொல்லாமல் விட்டுவிட்டால் சாதி பிரச்சினை ஒழிந்துவிடுமா? பள்ளிக்கூடத்தில் சாதிக்கேட்டதால் தமிழ்நாட்டில் சாதி இருப்பதாக அறிந்தீர்களா? அய்யகோ!

தமிழ்நாட்டில் வந்து தான் உங்கள் சாதியை நீங்கள் தெரிந்துக்கொண்டீர்களா? யார் காதில் பூ சுற்ற பார்க்கிறீர்கள்? இன முரண் தீவிரமடைவதற்க்கு முன்பு ஈழத்தில் வழிபாடு என்பது தமிழில் இருந்ததா தூயவன்?, நாளை ஈழம் என்கிற நாட்டில் வழிபாடு தமிழில் இருக்குமா? இல்லை சமஸ்கிருததில் இருக்குமா தூயவன்?

அடுத்தாக சாதி பார்ப்பதால் தமிழர் என்கிற ஒற்றுமை குலைந்து போயிவிட்டதாகவும்... எதிர்கால இலக்கற்றதாகவும் இருக்கிறதாகவும் சொல்கிறார்!

சிங்களன் அடிக்க ஆரம்பித்தபொழுது தானே தமிழன், தமிழ் தேசியம் எல்லாம் ஈழத்தில் தோன்றியது! தூப்பாக்கியை தொண்டைக்குழியில் வைத்து தமிழனா என்று கேட்கிற வரைக்கும் தமிழர் என்கிற அடையாளத்தை பற்றிய விழித்தல் எத்தனை பேருக்கு இருந்தது! இல்லை அதற்க்கு முன்பு தமிழர் தேசியம் பேசிய ஈழத்தவர்களை அடையாளம் காட்டுங்கள் பார்ப்போம்!

நம்மை அடிக்கிறவன் எந்த அடையாளத்தைக்கொண்டு அடிக்கிறான் என்பது தான் அவனை திருப்பி அடிக்க பயன்படும் ஆயுதமாகவும் இருக்கிறது!

அன்றைய சென்னை மகாணத்தில் முதல் நிலை ஒடுக்கம் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதோர் என்பதாகவும், இரண்டாம் நிலை ஒடுக்கம் அதிகாரத்திலிருப்போர், இல்லாதோராகவும். மூன்றாம் நிலை ஒடுக்கம் பொருளாதாரமற்றோர் என்பதாகவும் இருந்தது.

ஆக இங்கே பார்ப்பனரல்லாதோர் என்கிற அடையாளம் ஒடுக்கப்பயன்பட்ட ஆயுதம், அதையே கையிலெடுத்தார் பெரியார்!

பாதிக்கப்படுகிறவன் தான் எதனால் பாதிக்கப்படுகிறானோ அதை வைத்து தானே போராட முடியும்!

தமிழர், தமிழர் தேசியம் என்று பம்மாத்து பேசுகிறவர்கள்... மும்பையில் வசிக்கிற தமிழர்களை துன்புறுத்திய, துன்புறுத்துகிற பால்தாக்கரேயின் ஈழப்போராட்ட ஆதரவை ஏன் வரவேற்றனர்?

மும்பையில் இருக்கிற தமிழ் பேசுகிறவர்கள் இவர்களின் தமிழ் தேசியத்தில் அடக்கமாயில்லையா?

உலகம் முழுவதும் இருக்கிற தமிழர்களுக்கு வருகிற பிரச்சினைகளையெல்லாம் தட்டையாக தமிழர் என்கிற அடையாளத்துடன் மட்டுமே அணுக முடியுமா?

ஆயிரகணக்கான ஆண்டுகள் நடைப்பெற்ற வர்ணசிரம ஒடுக்குமுறையை எதிர்க்கும் போராட்டத்தை... தட்டையாக இனக்குழு என்கிற அடையாளத்துடன் சிதைத்துவிட முடியுமா?

உலகில் எல்லாயிடங்களிலும் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களையெல்லாம் தேசிய இனக்குழு போராட்டமாக பார்க்கிற தட்டையான பார்வை எவ்வளவு மோசமானது?

அன்றைய சென்னை மகாணம் அல்லது ஆங்கிலேய ஏகாதிபத்திய இந்தியாவின் நிலைமை என்னவாகயிருந்தது? மக்கள் எதனால் ஒடுக்கப்பட்டார்கள்? அவர்களின் உரிமைகள் எதனால் பறிக்கப்பட்டன? அவர்கள் எதை எதிர்த்து போராட வேண்டியிருந்தது?

வரலாற்றை தெரிந்துக்கொள்ளுங்கள் அல்லது குறைந்தபட்சம் ஒரு பெரியார் என்கிற போராளியின் வாழ்க்கை எப்படி துவங்கியது எதற்க்காக போராடினார் என்பதையாவது புரிந்துக்கொள்ளுங்கள்? இல்லையென்றால் ஈழத்தமிழ் தேசியம் அல்லது சைவ வெள்ளாள தேசியம் இப்படி எதையாவது பேசிக்கொண்டேயிருக்கலாம்...
Related Posts with Thumbnails