செவ்வாய், 23 அக்டோபர், 2007

பெண்ணுரிமை எனும் புடலங்காய் கடைத்தெருவில் கிடைக்கவில்லை! வாங்கி வந்து கறிச்சமைக்க...

(இலக்கிய குட்டிச்சுவர்கள்)


பதிவுலகம் ஏகப்பட்ட அனுபவங்களை வழங்கிக்கொண்டிருக்கிறது, நாம் வாசிக்கிற பதிவுகள் நமக்குள் சில எண்ணவோட்டங்களை ஏற்படுத்தி விட்டு போயிருக்கும். அப்போதைக்கப்போது விவாதிப்பது என்பது ஓரு நிலை, அவற்றை தொகுத்து பார்க்கும் பொழுது நமக்கு எழுகிற நிலை வேறு... அப்படியான அதிர்வுகள் சிலவற்றை இங்கே பகிர்ந்துக்கொள்கிறேன்.

அடிக்கடி இங்கே கடைத்தேறுவது பெண்ணுரிமை பற்றிய விவாதங்கள், யாராவது இங்க வந்து "கற்பழிப்பு" என்ற சொல்லை பயன்படுத்தினால், உடனே பெண்ணுரிமை போராளிகள் வந்து உங்களை உண்டு,இல்லை என்று குதறியெடுக்கிறார்கள். "கற்பு" என்பது ஆணாதிக்க சிந்தனை என்று விளக்கம் கொடுப்பார்கள். நடைமுறையில் இந்தச்சொல் பயன்பாட்டில் இருக்கிறது அதனால் நான் அப்படியே பயன்படுத்தியிருக்கிறேன் என்றால், அடுத்தக்கட்ட தாக்குதல் ஆண்வர்க்க திமிர் (அ) ஆண்மய்ய சிந்தனை என்பார்கள்.

சிந்தனை என்பது செயல், செயல் என்பது இயக்கம், இயங்குகிற பொருள் மையத்தை விட்டுவிலகிச்செல்லும் என்பது இயக்கவியல். அப்புறம் சிந்தனை எப்படி ஆண் என்கிற மையத்தை நோக்கி நகருகிறது(இய்க்கவியல் முரண்) என்று குண்டக்கமண்டக்க நீங்கள் கேள்விக்கேட்டால் "ஆண்மய்ய சிந்தனை வெளியின்யூடாக எழுகிற பாஸிசிசத்தின் நீட்சி" (பெயரிலிடம் கடன் வாங்கியாவது) என்று உங்களுக்கு ஏதேனும் கும்மிகள் கிடைக்கலாம்.

எழுதுவதற்க்கு ஏகப்பட்ட விளக்கங்கள், அருஞ்சொற்பொருட்கள் கொடுக்கப்படும் குறிப்பாக பெண்ணுரிமை பற்றி எழுதும் போது மிக கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால், சிந்தனையூடாக கூட நினைத்திராத சில முட்டுச்சந்தில் கொண்டுச்சேர்ப்பார்கள் இந்த இலக்கிய வியபாரிகள்.

ஷ்ரேயா வை முட்டாள் பெண்ணாக திரையில் காண்பித்தற்க்கு பொங்கி எழுகிற பெண்ணுரிமை போராளிகள்..., பிரேமானந்தா மாதிரியான சாமியார்களிடம் அடைக்கலம் தேடுகிற முட்டாள்களை பற்றி பேசமாட்டார்கள். காஞ்சி கேடி "விதவை பெண்கள் களர் நிலம்" என்றால் வாய் மூடி கிடப்பார்கள். காஞ்சி கேடிகளின் கால்களை தாம்பூலத்தில் வைக்க சொல்லி பாலால் கழுவி அதை தீர்த்தம் என்று குடிக்கிற பெண்களை பற்றி எழுதமாட்டார்கள். பங்காரு - மாதிரியானவர்கள் பாதபூஜை என்று ஓவ்வொரு பெண்ணின் தலைமீதும் தன் காலை வைத்து ஆசிர்வாதம் வழுங்கும் போது தலையை காண்பிக்கிற பெண்களை கண்டுக்கொள்ளமாட்டார்கள்.

நான் எதை பேச வேண்டும் (அ) எழுத வேண்டும் என்று சொல்ல நீ யார்? என்று பொங்குவார்கள். ஏனென்றால் பெண்ணுரிமை என்கிற தளம் இவர்களுக்கு எழுத்து வியாபாரத்திற்க்கு வலுவான தளம்.

வேலைகாரிகளை கைநீட்டி அடிக்கும் முதலாளி பெண்களை பற்றி பேச மாட்டார்கள், முடிந்தால் தங்கள் வீட்டு வேலைகாரியையும் இரண்டு அடி அடிப்பார்கள். ஆனால் நடிகையை அடித்த கதையை நீட்டி முழக்குவார்கள்.

ஓரு சித்தாளோ அல்லது குடி பார்க்கும் சேரி பெண்ணோ எழுதுவதில்லை அதனால் தான் இங்கே பெண்ணுரிமை எழுத்துக்கள் எல்லாம் மேட்டுக்குடியின் மோனைகளை பிரதிபலிக்கும்.

இன்னும் சிலருக்கு பெண்ணுரிமை மாநாட்டு அரசியல் பிடித்திருக்கிறது, பெரியார் படம் போட்ட விஜயகாந்த கட்சிக்கு அழைப்பிதழ் கிடைத்தால் கூட பெரியாரிஸ்ட் என ஆதரவு தெரிவிக்கும் அளவுக்கு அவர்களின் அரசியல் அறிவு பொங்கி வழிகிறதது.

பெண்ணுரிமையை ஓப்பீட்டு அளவில் பேசுவது மாதிரியான கேலிதனம் எங்காவது உண்டா?
ஆண் பல பெண்களுடன் உறவு வைத்துக்கொள்கிறான் அதனால் பெண்கள் பல ஆண்களுடன் உறவு கொள்ளலாம் எவ்வளவு முரணானது என்பது எழுத்துக்குள் அடங்க மறுக்கிறது.
தனிமனித ஓழுக்கம் ஆண்,பெண் இருவருக்கும் வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டுமா? அல்லது ஓழுக்கமற்ற ஆண்களை ஓப்பிட்டு உரிமை பேசுவது வேண்டுமா? என்பதை வாசிப்பாளர்களின் சிந்தனைக்கு விட்டுச்செல்லலாம்.

பெண் சமைக்கிறாள், துணி துவைக்கிறாள். ஆண்கள் பேப்பர் படித்துக்கொண்டும், காப்பி குடித்துக்கொண்டு, தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்கிற ஓப்பீடு, உழைப்பு என்பது எல்லோருக்கும் பொது, ஆணின் உழைப்பு வடிவம் வேறாகவும், பெண்ணின் உழைப்பு வடிவம் வேறாகவும் இருப்பதால், பெண்கள் மட்டுமே உழைக்கிறார்கள் என்கிற மாதிரியான பிம்பம் முட்டாள்தனமானது. (இங்கே கேள்விக்கு உட்படுத்த வேண்டியது வடிவங்களையன்றி உழைப்பையல்ல! அதாவது இதுவெல்லாம் பெண்களுக்கான வேலை என்கிற கட்டமைப்பு).

(குறிப்பு : தொடாபற்ற இக்குறிப்புகள் - உங்களுக்குள் சிலவற்றுடன் தொடர்பு ஏற்படுத்தினால் நான் அதற்க்கு பொறுப்பல்ல)

புதன், 17 அக்டோபர், 2007

ஏன்?

இந்திய இராணுவத்தில் மிக முக்கிய பங்களிப்பு செய்பவர்கள் பஞ்சாபிகளும், ரானா என்கிற இனத்தை சேர்ந்தவர்கள் (இவர்களின் சராசரி உயரம் 6.5 அடிக்கு மேல்), ஆனால் நாங்கள் உடல் வலுவற்றவர்கள் அதனால் வயல் வேலை செய்வதில்லை என்று கூறும் பார்ப்பனர்கள் 80% உயர் இராணுவ பதவிகளை வகிப்பது ஏன்? எப்படி?
(தங்களுடைய உரிமைக்காக பஞ்சாபிகள் ஆயுதமேந்தி போராடினார்கள் என்பது வரலாறு, ஆனால் அது ஒடுக்கப்பட்டது)

இந்தியாவின் குடியரசுதலைவர் மாளிகையில் 1000+ பதவிகள்(சமையல்காரர் முதல் குடியரசுதலைவர் வரை), ஆனால் 10 முதல் 20 நபர்களே பார்ப்பனரல்லாதோர்! மற்ற அனைவரும் பார்ப்பனராக இருப்பது ஏன்?

இந்தியாவின் முக்கிய வங்கி சேவையான RBI மற்றும் SBI உயரதிகாரிகள் 90% பார்ப்பனர்களாக இருப்பதேன்?

இந்தியாவின் வெளியுறவுதுறை மற்றும் அனைத்து நாடுகளுக்கான தூதர்கள், மற்றும் அதனைச்சார்ந்த துணைப்பதவிகள் அனைத்திலும் பார்ப்பனர்கள் மட்டுமே நியமிக்கப்படுவதின் மர்மமென்ன?

இந்தியாவின் பெரும்பான்மை பிரதமர்கள் பார்ப்பனராக இருந்தது ஏன்?

இந்தியாவின் தேர்தல் ஆணைய தலைவர்கள் தொடர்ந்து பார்ப்பனராக நியமிக்கப்படுதின் மர்மமென்ன?

இந்தியாவின் முக்கிய தேசிய கட்சியின் தலைவர்கள் (காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பா.ஜ.க) பார்ப்பனர்களாக இருப்பதேன்?

இந்தியாவின் மற்ற நாடுகளுக்கான கலாச்சார, பண்பாடு துறையின் தலைவர்களாக பார்ப்பனர்கள் இருப்பதேன்?
(இப்படி ருஷ்யாவின் கலாச்சார, பண்பாடு மையத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட பத்மா சுப்ரமணியத்தின் அப்பா தன் மகளை நாடு, நாடாக அழைத்து சென்று நடனம் ஆட வைத்து புகழும், பணமும் சம்பாதித்தாரல்வா!)

இந்தியாவின் முக்கிய நிறுவனங்கள் மற்றும் பணக்காரர்கள் பார்ஸி மற்றும் பார்ப்பனர்களாக இருப்பதேன்?

பா.ஜ.க ஆட்சியின் போது இசுலாமிய சகோதரர்களை கொலை செய்து விட்டு, ஈரான் அதிபரை இந்தியாவிற்க்கு இரு முறை அழைத்த நோக்கமென்ன?
(வாஜ்பாய் மற்றும் அத்வானி ஆகியோரின் பெர்ஸிய இனவெறி அங்கே முக்கிய காரணமில்லையா!)

கோடிக்கணக்கான சொத்துக்களை டி.என்.சேஷன் மற்றும் ஆர்.வெங்கடராமன் ஆகியோர் காஞ்சி மடத்துக்கு எழுதி வைத்தது ஏன்?
இந்த சொத்துக்கள் அவர்களுக்கு எங்கிருந்து வந்தது?

மக்களுக்காக போராடுகிறேன் என்று சொல்லும் பொதுடைமைவாதியான சங்கரய்யா என்கிற பார்ப்பனர், தானும், பார்ப்பனர்கள் அதிகம் வசிக்கும் சென்னை, குரோம்பேட்டை, நியூகாலணியில் மட்டும் சிமெண்ட் சாலைகள் அமைக்கப்பட்டு இருக்கிறது என்று மகிழ்ச்சியாக வசிக்கிறார், ஆனால் அதற்க்கு அடுத்த தெருவில் கழிவுநீர் கால்வாய் கூட இல்லை என்பது பற்றி கவலை படாதது ஏன்?
(இது 2004ல் உள்ள நிலை)

இந்தியாவின் 2% மட்டுமே இருக்கிற பார்ப்பனர்கள், இப்படி அனைத்து துறைகளிலும் உயர்பதவிகளிலும், முடிவெடுக்க கூடிய முக்கிய இடங்களிலும் ஆக்கிரமித்துக்கொண்டு இந்த நாட்டை சுரண்டிக்கொழுப்பதை, எப்படி கேள்விக்கேட்காமல் இருக்க முடியும்.

இந்திய அரசியலமைப்பு சட்டவரைவு குழு தலைவராக அம்பேத்கர் இருந்தார், ஆனால் அந்த குழுவின் ஐந்து உறுப்பினர்களும் பார்ப்பனராக இருந்தனர். அவர்கள் எழுதி தருகிற சட்டங்களை வடிவமைக்கும் பொம்மையாகவே அம்பேத்கர் இருந்தரர். அதனாலயே தான் அரசியலமைப்பு சட்டத்தை அம்பேத்கர் தீயிட்டு கொளுத்தினர்.

தாழ்த்தப்பட்டவர் குடியரசு தலைவராக இருக்கிறார், இசுலாமியர் குடியரசு தலைவர் என்றெல்லாம் கொண்டடியிருக்க முடியாது... இன்னும் அதிகார மையங்கள் 98% மக்களுக்கு போய் சேரவில்லை.
Related Posts with Thumbnails