வியாழன், 28 பிப்ரவரி, 2008

மரணத்தின் அரசியல் (நண்பர் வவ்வால் அவர்களுக்கு)...!

//
பாரி,

சுஜாதா புனித பிம்பம் என்றெல்லாம் சொல்லவரவில்லை, ஆனாலும் சக மனிதன், எழுத்தாளர் (சித்தாந்தம் பிடிக்கலைனாலும்) இறந்த அன்றே அவர் மீதான விமர்சனங்களை வைக்க வேண்டும் என்று ஒன்றும் இல்லையே, பின்னர் கூட விமர்சனத்தை வைக்கலாம், எப்படி இருப்பினும் அவர் படிக்கப்போவதில்லை, பின்னர் ஏன் இப்படி?
//

இந்த பதிலை அங்கயே எழுதியிருக்கலாம்..., ஆனால் நிறையபேர் வாசிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் தனி இடுகையாக எழுதுகிறேன். சுஜாதாவின் மீதான விமர்சனத்தை பல்வேறு இடங்களில் எழுதியிருக்கிறேன்.

நேற்று அவர் மரணத்தின் மூலம் நடந்த அரசியல் என்பது முக்கியமானது. பார்ப்பானீயத்தின் மீது பிடிப்புள்ளவர்கள் (அது பூணூல் போட்டவர்கள், போடாதவர்கள் யாராக இருந்தாலும் சரி!) அவருக்கு இரங்கல் எழுதியது என்பது முக்கியமல்ல... இந்த நிகழ்வை பயன்படுத்தி அவருக்கு அரியணையும், புனிதப்பட்டமும் தர தயாரானவர்களுக்காகவே, விமர்சனம் எழுத வேண்டியதானது.

கடந்த காலக்கட்டங்களில் நாம் தவறிழைத்த புள்ளியும் இதுவே, மரணித்தால் பண்பாடு காக்கிறோம் என்று, நாம் அடக்கி வாசிக்க அந்த சந்தில் புகுந்து மேடைப்போட்டு புனிதப்பட்டம் கட்டி விடுகிறார்கள்.

இரண்டாவது இப்ப நடுநிலை வேடம் போடுகிறவர்களை பற்றியது... அப்பா! ஆசாமிகளே! சில மாதங்களுக்கு முன்பு சுப.தமிழ்செல்வன் அவர்கள் குண்டுவீச்சில் மரணமடைந்த பொழுது, ஆசிப் பதிவிலும், ரங்கன் பதிவிலும் சிலர் கேள்வி எழுப்பினார்கள்... அப்போ இவர்கள் ஏன்? நாகரிகமற்ற செயல் என்று குரல் கொடுக்கவில்லை?

பார்ப்பானீய அரசியல் என்பது வளர்வதற்க்காக காட்டி(கூட்டி) கொடுப்பது, வளர்ந்த பிறகு பார்ப்பானீயத்தை தாங்கி பிடிப்பது, செத்த பிறகு மேடைப்போட்டு புனிதப்பட்டம் அளிப்பது. அதை அந்தந்த கணத்திலேயே எதிர்ப்பதை தவிர... நாகரிகம், பண்பாடு என்று பம்ம முடியாது!

வலிந்து பீடமேற்றல் நடக்கிற வேளையில், உறங்கிக்கொண்டிருக்க இயலாது நண்பரே!

நன்றி!

இலவசங்களை பற்றிய சில பினாத்தல்கள்...!

சிங்கை ஒரு முதலாளித்துவ நாடு என்பதன் ஊடாக ஏகப்பட்ட விமர்சனங்களை கொண்ட நாடு. ஊடக சுதந்திரம் கிடையாது. உலகளாவிய மனித நேய ஆர்வலர்கள் உள் நுழைய தடை, மிக அதிகமாக மரணதண்டனை நிறைவேற்றுகிற நாடு, இன்னும் மனிதனை இயந்திர மயமாக்கி அவனுடைய சுயத்தை இழக்க செய்வதாக குற்றச்சாட்டுகள் உண்டு. இதையெல்லாம் தாண்டி மக்கள் அமைதியாக இருக்கிறார்கள். பயம் அப்படின்னு ஒற்றை சொல்லை பதிலாக பலர் சொல்வார்கள். ஆனால் அதையும் தாண்டி பல்வேறு காரணங்கள் உள்ளுறைந்து கிடக்கிறது...

அதிலொன்று சமூகத்தில் பாதிக்கப்படுகிறவர்களை கண்டுணர்ந்து அவர்களுக்கு சரியான வழிகாட்டுதலையும், உதவிகளையும் வழங்குவது, அதன்மூலம் சமூகத்தின் நிலைதன்மையை கட்டிகாப்பாற்றுவது.

1. நான் சிங்கை வந்த புதிதில் ஒரு குடும்பத்தில் அதன் குடும்பதலைவர் இதய நோயால் பாதிக்கப்பட்டு, குடும்பம் அள்ளாடியது... குழந்தைகள் படிக்க முடியாமல் வறுமையில் சிக்கி சின்னாபின்னமாகி விட்டார்கள். அந்த குடும்பத்தை பற்றிய தகவல் கிடைத்தவுடனேயே SINDA என்கிற அமைப்பின் மூலம் அரசு உடனடி கடன், மாற்று ஏற்பாடு, இன்னும் என்ன, என்ன வசதிகள் செய்து தர முடியுமோ அத்தனையும் செய்துக்கொடுத்து அவர்களை மீள் கட்டமைத்தார்கள்.

2. இன்னொரு குடும்பம் வசிக்க வீடு இல்லாமல் MRT நிலைய பாதையில் தஞ்சம் புகுந்தார்கள், உடனடி நடவடிக்கையாக குறைந்த வாடகை வீடு அரசு வழங்கி அவர்களை பாதுகாத்தார்கள்.

3. நிகழ்ந்து முடிந்த சீன புத்தாண்டு நிகழ்ச்சிக்கு குறைந்த வருவாய் உள்ள 3000 குடும்பங்களை கண்டறிந்து அவர்களுக்கு சிங்கை டாலர் 5000 (ஏறக்குறைய 1,40,000 இந்திய ரூபாய்கள்) மதிப்புள்ள பை ஒவ்வொரு குடும்பத்திற்க்கும் அமைச்சர் பெருமக்களும், எம்.பி களும் நேரிடையாக ஒவ்வொரு வீடாக சென்று வழங்கினார்கள்.

இப்படி எண்ணற்ற உதாரணங்களை காட்ட முடியும். எந்தவொரு பிரிவினருக்கும் எந்த பிரச்சினை என்றாலும் அருகிலுள்ள சமுதாய மையத்தை அணுகினால் குறைந்தபட்ச உதவி கிடைக்க வழிவகை செய்திருக்கிறார்கள்.

அரசு என்பது முதலாளித்துவமாக இருக்கிறதா, பொதுவுடமை அரசாக இருக்கிறதா என்பதை விட அது மக்கள் நலனில் அக்கறையுள்ளதாக இருக்கிறதா என்பதே முக்கியமானதாக இருக்கிறது.

இங்கே இதை குறிப்பிடுவதற்க்கு காரணம், இலவசங்களையும், உதவிகளையும் பற்றிய தவறான கருத்துக்களை பரப்புவதில் காட்டுகிற அக்கறையை, அது சரியான ஆட்களுக்கு போய் சேருவதற்க்கான நடவடிக்கையை நாம் விரிவுப்படுத்த வேண்டும்.

ஒன்னுமே புரியல... உலகத்திலே...!

இந்த இடுகையை நான் எழுதிய நோக்கமே... இதுவே!

எந்தவொரு காலக்கட்டத்திலும் சமூகத்தில் பாதிப்படைந்தவர்கள் இருந்துக்கொண்டேயிருப்பார்கள். அவர்களுக்கு உதவது என்பதும், அவர்களை மறுகட்டமைப்பது என்பதும் மிக முக்கியமானது. அதன் மூலமே மனிதன் சமூகமாக வாழ தலைப்பட்டதன் உண்மையான பலனை அடைய முடியும்.

வலுத்ததே வாழும் என்கிற பிழைப்புவாதத்தை முன்னிறுத்துவது என்பது விலங்கியலுக்கு வேண்டுமானால் சரியானதாக இருக்கலாம். மனிதன் சமூகமாக வாழுவதின் பொருளே வலுவிழந்தோரை அரவணைத்து செல்வதில் தான் இருக்கிறது.

புதன், 27 பிப்ரவரி, 2008

மரணத்தின் மூலம் புனிதப்பட்டம் கட்ட நினைக்கும் கோமளிகளுக்கு...!

எம்மக்களின் மீது எச்சிலை உமிழ்ந்து, அதையே புனிதம் என்று வழித்து பருக சொல்லும்... அவலம்...!
சுஜாதா மட்டுமல்ல... நாளை 'சோ' வகையறாக்கள் மரணித்தாலும் அதையும் மகிழ்ந்துக்கொண்டாடவே எண்ணம் கொண்டுள்ளோம்....!

செவ்வாய், 26 பிப்ரவரி, 2008

தமிழ்மண நிர்வாகத்திற்க்கு வேண்டுகோள்...! தமிழச்சி பதிவை திரட்டியில் இருந்து நீக்க கோரிக்கை...!

தமிழச்சி பதிவுகளை திரட்டுவதை நிறுத்த கோரிக்கை பொது தளத்தில் வைக்க வேண்டியிருக்கிறது...:( தமிழச்சி என்ன எழுத வேண்டும் என்பதை கட்டுப்படுத்த எனக்கோ, இங்கே வலைபதியும் யாருக்கும் உரிமை இல்லை.... ஆனால் ஒரு வலைப்பதிவு வாசிப்பாளனாக உங்களுடைய திரட்டியை பயன்படுத்துகிற ஒரு பயனாளராக இந்த கோரிக்கை வைக்கிறேன்...

அன்புள்ள வலைபதிவர்களே, வாசிப்பாளர்களே!
உங்களுடைய எதிர்ப்பை ஒரு இடுகை எழுதியோ அல்லது ஒரு பின்னூட்டமிட்டோ பதிவு செய்யுங்கள்... தமிழ்மணம் நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவோமாக...!

நன்றி
Related Posts with Thumbnails