ஞாயிறு, 30 டிசம்பர், 2007

எல்லோரும் இன்புற்றிருக்க...! (புத்தாண்டு வாழ்த்துக்கள்)

என் காதலியே!

இது மகிழ்ச்சி, இது இன்பம் என்று கற்பிதம் செய்யப்பட்டவைகளுடனான சங்கமத்தில் சஞ்சரித்துக்கிடக்கிறது உலகம்!
ஆல்கஹால் திரவம் நிரம்பிய குவளைகளில் மிதக்கும் நீர்கட்டிகளை பார்த்து நீந்தி மகிழ்கிறது!
இரவு விடுதிகளின் மின்னும் விளக்கொளியில் மங்கையின் இடையில் கைக்கோர்த்து களைக்க நடனமாடி மகிழ்கிறது!
ஆண்டு இறுதியின் ஊக்கத்தொகையில் காதலனுக்கோ/காதலிக்கோ அன்பளிப்புடன் களிக்கிறது!
வானில் வெடித்து சிதறும் கந்தக தூள்களை கண்டு கண்கொள்ளாக்காட்சியென களிக்கிறது மக்கள் கூட்டம்!
விந்துக்கள் கழிக்கப்பட்டு, யோனிகள் நிரம்பி வழிகிறது விடுதிகளில்!
சிற்றின்பமோ! பேரின்பமோ! எங்கும் மகிழ்ச்சி என்று கற்பிதம் செய்யப்படுகிறது!

மத்தாப்புகள் வெடித்து சிதறுவதைக்கண்டு புன்னகைக்கும் மழலைகளை கண்டு மகிழ்வதா!
தாயின் காய்ந்த முலைகளை சூப்பி, சூப்பி கருகி போன மொட்டுகளை கண்டு கண்ணீர் வடிப்பதா!
கொழு,கொழு வென்று வளர வேண்டும் என்று ஊட்டி வளர்க்கப்படும் மழலைகளுக்கு மத்தியில்!
உண்ண உணவின்றி ஆண்டுக்கு 1.1 கோடி என்று மடிந்துப்போகும் மழலைகளை எண்ணி வேதனைப்படுவதா!

புத்தாண்டு விடுமுறை இனிப்புகளை வழங்கி மகிழ்ந்துக்கிடக்கிறோமே!
காய்ச்சிய இரும்பை சம்மட்டிக்கொண்டடிக்கும் என் சகோதரனுக்கு விடுமுறையில்லையே!
இடுப்பில் தூளியில் குழந்தை தூங்க தலையில் செங்கலை சுமக்கும் என் சகோதரிக்கு வீட்டில் உலை கொதிக்க வேண்டுமே!

எந்த நொடியில் உனக்கு வாழ்த்துச்சொல்ல வேண்டும் என்று அன்புக்கட்டளையிட்டயோ!
அந்த நொடியில் மனிதன் போட்ட நாடு என்ற எல்லைக்கோட்டில் தூப்பாக்கிகளும்,பீரங்கிகளும் பேசலாம்!
சிலர் மரணித்தும் போகலாம்!

புலியின் வேட்டையில் மானுக்கு மகிழ்ச்சி இருக்க வாய்ப்பேயில்லை!
புலியின் வேட்டையில் புலியே இறந்ததாக செய்தியில்லை!
மனிதனின் பொருள் வேட்கையில் மனிதனே வேட்டையாடப்படுவதே வேதனை!

எனக்குள் பரிணாமித்தவை உனக்கு வாழ்த்தாகயிருக்க வேண்டிய தேவையில்லை!
எல்லோரும் இன்புற்றிருக்கிறார்கள் என்று கற்பிதம் செய்துக்கொள்ள இயலவில்லை!

புத்தாண்டு வாழ்த்துக்களுடன்,
அன்புடன்,
அரசு.

வெள்ளி, 28 டிசம்பர், 2007

பார்ப்பானீய, பனியா சொல்லாடல்களும்... சில முட்டாள்களும்...! -2

பார்ப்பானீய, பனியா சொல்லாடல்களும்... சில முட்டாள்களும்...!

திறமையானவர்கள், அறிவாளிகள் என்று ஓரு பிம்பத்தை கட்டமைக்க நடந்த, நடக்கிற போலித்தனத்தை பேசிய பிறகு... அவாள் அடிக்கிற தகுதி, திறமை என்கிற ஜல்லிய பத்தியும் பேசியாகணும்.

சமூக, அரசியல் பணி என்று எடுத்துக்கொள்வோம், ரொம்ப பழைய கதையெல்லாம் கிளற வேண்டியதில்லை. இருக்கிற எல்லா பார்ப்பான்க்கிட்ட பேசினாலும் அரசியல் பேசுவானுக... எவனுக்கும் திறமையில்லை என்று வாய் கிழிப்பார்கள். ஆனால் சமூக, அரசியல் போராட்டங்களில் கலந்துக்கொள்வது என்றால் பொழப்ப பார்க்கணும்! எதுக்கு வெட்டி வேலை என்று நடையை கட்டுவார்கள்!

'சோ' என்ற பார்ப்பானைப்பற்றி பார்ப்போம். நடிகராக தொழில் செய்தவர் என்பதை தவிர என்ன தகுதி, திறமை இருக்கிறது. இவர் செய்த மக்கள் பணி என்ன? இது வரை எத்தனை மக்கள் போராட்டங்களில் கலந்துக்கொண்டார்? சமூக, அரசியல் பணிகளில் இவர் செய்த தியாகம் என்ன?

நிறைய மனப்பாடம் செய்து வைத்துக்கொண்டு அதை தனக்கு ஏற்றவாறு வரலாற்றை திரித்து எழுதுவது என்பதை தவிர... சோ செய்த சாதனைகள் என்ன?

முன்னாள் நடிகர், அரைகுறையாக விற்கிற ஓரு பத்திரிக்கை நடத்துகிற 'சோ' எப்படி இவ்வளவு பொருளாதார பலத்துடன் வாழ்கிறார்?. இவருக்கு 'லா சாட்டிளின்' என்கிற பள்ளி எப்படி உடைமையானது.

அதே கேள்விகளை எஸ்.வி.சேகர், மைத்ரேயன் ஆகியோருக்கும் வைப்போம் இவர்கள் ஆற்றிய மக்கள் பணி என்ன? எப்படி இவர்களுக்கு எம்.எல்.ஏ பதவிகள் கிடைத்தன?

மதன், சுஜாதா போன்றவர்களும் செய்த சாதனைகள் என்ன? ஆங்கில புத்தகங்களை படிக்க வேண்டியது. நன்றாக மனப்பாடம் செய்துக்கொண்டு, அதை அப்படியே தமிழில் வாந்தி எடுக்க வேண்டியது.

தங்களுக்கு எல்லாம் தெரியும், அறிவாளிகள் என்பது மாதிரியான பிம்பங்களை கட்டமைத்து... பீடமேறி அமர்ந்துக்கொள்வது. அதிகாரத்தை கைப்பற்றிக்கொண்ட பிறகு, அதைப்பயன்படுத்தி மக்களை அறியாமையில் வைத்திருப்பது. இதையே இவர்களின் முக்கிய நோக்கம்.

தொழில்நுட்பம் பயிலும் மாணவர்களுக்கு இதை நன்றாக உணர முடியும். சில ஆசிரியர்கள் வெறும் 'DIR' கமெண்டை வைத்துக்கொண்டே மாணவர்களை ஆளுமை செய்துக்கொண்டிருப்பார்கள். வெகு சிலரே 'compiler' வகுப்பைக்கூட மிக அழகாக நடத்திவிட்டு எளிமையாக சென்றுக்கொண்டிருப்பார்கள்.

அந்த வகையில் இந்த திறமைசாலிகள் என்கிற பிம்பம் என்பது, வெற்று ஆரவார கூச்சலாக இருக்கிறது. முக்கிய வெகு மக்கள் ஊடகங்கள் பார்ப்பனர்களின் கையிலிருப்பதால், அந்த பிம்ப கட்டமைப்பும் மிக எளிதாகவேயிருக்கிறது!

சுஜாதா செய்த ஓரு கேலிக்கூத்தையும் இங்கே பகிர்ந்துக்கொள்ள வேண்டியிருக்கிறது... கணினி ஐ பற்றிய ஆங்கில புத்தகங்களை படித்துவிட்டு 1995 வாக்கில் அவர் எழுதிய நூல்களை முடிந்தால் படித்து பாருங்கள். எள் அளவுக்கூட அனுபவ அறிவும், பயிற்சியும் இன்றி ஓரு தொழில்நுட்பத்தை வெறும் ஆங்கில புத்தகங்களை படித்ததை வைத்துக்கொண்டு வியாபாரம் செய்திருப்பதை உணர முடியும்.

சுஜாதா தமிழ் கணினி உலகில் தன்னை முன்னிறுத்திக்கொள்ள செய்த அயோக்கியத்தனங்கள் எடுப்படாமல் போனதற்க்கு காரணம், இலங்கை தமிழர்களும், சிங்கை,மலேசிய தமிழர்களும் இணையத்தில் வெகு வேகமாக முன்னேறியதே! இது நடக்காமல் போயிருந்தால் இன்னேரம் சுஜாதா வெற்று பிம்பக்கட்டமைப்பின் மூலம் தமிழ் கணினியின் டெக்னாலஜி குரு வாக உயர்ந்திருப்பார். இன்றைக்கும் அவருடைய 'ழ' கணினி என்பது தமிழ் லினக்ஸ்-ல் இருந்து திருடியது என்பதை ஆதாரங்களுடன் நிருப்பிக்கிறார்கள்.

தகுதி,திறமை பற்றிய கூச்சல் எழுவதற்க்கு முக்கிய காரணம், அதிகாரத்தின் மீதான பற்று!. அது பார்ப்பானீய, பனியா கும்பலின் உடைமை என்கிற பிம்பம்.
அது உடைத்தெறியப்பட வேண்டும். தேவையெழுமெனில் பார்ப்பானீய, பனியா கும்பலே துடைத்தெறியப்பட வேண்டும்!

புதன், 26 டிசம்பர், 2007

பார்ப்பானீய, பனியா சொல்லாடல்களும்... சில முட்டாள்களும்...!

நேற்று முன்தினம் சிங்கையின் தமிழ்செய்தியில் உத்தரபிரதேசத்தில் கடுங்குளிர் உறைநிலைக்கு கீழே சென்ற வெப்பநிலை என்று செய்தி வாசித்துக்கொண்டிருந்தார்கள். வீடுகளற்ற மக்கள் வீதிகளில் கடுங்குளிரில் படுகிற அவதியையும், ஓரு முதியவர் அப்படியே உறைந்து அமர்ந்திருந்திருந்ததை காண்பித்த போது, இதயத்தின் சுவருக்குள் 'ஓ' வென்ற ஓலம். கண்களில் கண்ணீர் கசிகிறது. 60 ஆண்டுகால இந்திய தேசியத்தின் அயோக்கிய தனங்கள் மூளைக்குள் சுரீரென்ற கோவத்தை தோற்றுவிக்கிறது... அப்போது பார்த்து இணைய நண்பர் ஓருவர் உரையாடலுக்கு வந்தார்.

செய்தியை பகிர்ந்துக்கொண்டேன், இந்திய பார்ப்பானீய, பனியா அரசியல் அமைப்பும், அதனால் மக்களுக்கு நிகழுகிற கொடுமைகளை சொன்னேன்.

"ஆமாம்! உனக்கு வேற வேலையேயில்ல எதுக்கெடுத்தாலும் அவனுகள திட்டலைன்னா! உனக்கு பொழுது போகாது...! இதே பொழப்பா வைத்திரு..!"

"எனக்கென்ன எதுவும் அங்காளி, பங்காளி சண்டையா... அவனுகள திட்டணுமுன்னு...!, பிரச்சினையின் அடித்தளம் அவனுக... அதான் பேசுறேன்...!"

"அவனுக இயல்பா கொஞ்சம் புத்திசாலிகளாக இருக்காணுக... நல்லா பொழைக்க தெரிஞ்சியிருக்காணுக..., அவ்வளவுதான்!"

எனக்கு சுரீரென்ற கோவம் வந்தது... திட்டிவிட்டு... சில கேள்விகளை முன் வைத்தேன். பார்ப்பனர்கள்,பனியாக்கள் அறிவாளிகள் என்று நினைத்துக்கொண்டிருக்கிற, பிம்பத்தை சுமந்துக்கொண்டிருக்கிற எல்லா மூடர்களுக்கும் உள்ளடங்கியதே... இந்த செய்தி...

கடந்த 60 ஆண்டுகளில் தங்களை அறிவாளிகள் என்று அறிவித்துக்கொண்டு இந்தியாவின் அனைத்து உயர்நிலை தொழில்நுட்ப கல்விக்கூடங்களிலும் (ஐஐடி உள்பட ..) ஆக்கிரமித்திருக்கிற இந்த பார்ப்பன, பனியாக்கள் செய்த சாதனைகள் என்ன? ஏதாவது பட்டியலிருக்கா?

மேற்கத்திய நாடுகளில் நடைபெறும் ஆய்வுகளை வாசித்துவிட்டு அதை மனப்பாடம் செய்து கட்டுரைகள் எழுதியதை தவிர, ஏதாவது ஆய்வு செயல்திட்டங்கள் நிறைவேற்றியிருக்கிறார்களா?

அப்துல்கலாம் என்கிற சாதராண கல்வி பயின்ற கடைநிலை மனிதர் தான் ஏவுகணை செயல்திட்டத்தை முன்நின்று செயல்படுத்தினார். இந்த அறிவாளி கொழுந்துகள் என்ன செய்துக்கொண்டிருந்தன, செய்துக்கொண்டிருக்கின்ற...(கலாம் அரசியல் வேறு, அதை இங்கே விமர்சிக்க வேண்டாம்.)

பட்டுக்கோட்டை எனக்கும், அந்த நண்பருக்கும் சொந்த ஊர் அங்கேயிருக்கிற எல்லோருக்கும் தெரிந்த உண்மை மக்களுக்காக சேவை செய்தவர் அஞ்சா நெஞ்சன் அழகிரி, நகரதந்தை சாமுவேலு பிள்ளை, நகர தந்தை சீனிவாசன் ஆகியோர். பட்டுக்கோட்டையில் பிறந்த சிறந்த கல்வி, கேள்விகளில் சிறந்தவர் நாவலர் நெடுஞ்செழியன் ஆனால் எந்தவிதமான மக்கள் சேவை ஆற்றாத, இன்னும் சொல்லப்போனால் பட்டுக்கோட்டை நகர மக்களுக்கு முகம் கூட தெரியாத, தனிப்பட்ட திறமைகளோ அற்ற... பட்டுக்கோட்டை சேர்ந்த ஆர்.வெங்கட்ராமன் எப்படி மத்திய அமைச்சரில் இருந்து, இரண்டு முறை குடியரசு தலைவர் பதவி வரை அமர்ந்தார். (திறமையை பற்றி பேசுகிற பன்னாடைகள்... ஏன்! வெங்கட்ராமனுக்கு பதவி என்பதை கேள்விக்கேட்க வேண்டாமா?)

இந்திய அளவில் கல்விக்கு யார் சேவை செய்தது என்றுக்கேட்டால் உடனடியாக தெரிகிற தலைவர் காமராஜர், ஆனால் கல்விக்கு சேவை செய்ததாக சி.சுப்பரமணியன் என்பவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. அப்படி என்ன சேவை செய்தார் தெரியுமா! "கரும்பலகை திட்டம் (Black Board Scheme)" இந்த திட்டத்தில் ஓதுக்கப்பட்ட நிதியில் 60க்கும் மேற்ப்பட்ட வெளி நாடுகளுக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்று, அந்தநாட்டில் கல்வி எப்படியிருக்குன்னு ஆய்வு செய்தாராம். அப்புறமா இந்தியாவுக்கு வந்து அதைப்பற்றி ஓரு தலையணை அளவில் ஆங்கிலத்தில் புத்தகம் எழுதினார். அந்தபுத்தகத்தின் பிரதிகள் எல்லா தலைமையாசிரியருக்கும் அனுப்பட்டது. ஓரு தலைமையாசிரியர் வேடிக்கையாக சொன்னது இதுல என்ன எழுதியிருக்குன்னு எவனுக்கும் புரியாது! "ஓய்வு நேரத்தில் தலைக்கு முட்டுக்கொடுக்க உதவும்!"

இப்ப தெரியுதா கல்விக்கு சேவை செய்தது காமராஜரா! சி.சுப்பரமணியமா! யாருக்கு பாரத ரத்னா? இந்திய பார்ப்பானீய அரசியலின் உண்மை முகம் கோரமாக பல்லிளிக்கவில்லை!

பெரிய அறிவாளி கொழுந்து என்று சொல்கிற இவர்கள் மருத்துவதுறையில் என்ன செய்திருக்கிறார்கள். இன்றைக்கு சென்னையில் இருக்கிற மருத்துவர்களில் ஆர்த்தோவில் சிறந்த மருத்துவர் மயில்வாகனன், முன்பு இவரது தந்தை (இவர்கள் இலங்கை தமிழர்கள் என்று தகவல்!) இருதய மாற்று அறுவை சிகிச்சையில் சாதித்தது மருத்துவர் செரியன். இப்படி எண்ணற்ற உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்...!
இந்த அறிவாளிகள் எல்லாம் கூடி அப்போலோவில் கொள்ளையடிப்பதை தவிர, மருத்துவ சாதனைகள், கண்டுப்பிடிப்புகள் என்று பட்டியல் தர முடியுமா!

நண்பர்களே! பிறப்பால் யாரும் அறிவாளிகள் கிடையாது!.
உயர்ந்தவனும் கிடையாது!
போலித்தனமான சொல்லாடல்களையும், பிம்பங்களையும் உடைத்தெறியுங்கள்!

நன்றி!

இணைய தொழில்நுட்ப அரசியல்...!

இணையம் (Internet) என்பது கடந்த பத்தாண்டுகளில் அதீத வளர்ச்சிக் கண்டுக்கொண்டிருக்கிற சூழலில்... தொழில்நுட்பங்களை பற்றிய கற்பனை வாதங்கள் மக்களை அந்த தொழில்நுட்பத்தில் அந்நியப்படுத்தி வைக்கிறது.

"இதெல்லாம் உனக்கு புரியாது..." என்கிற மேட்டிமை தனமான வார்த்தைகள் அல்லது "இதில் ஏதோ உள்ளே வேறொன்றிருக்கிறது..." என்கிற கட்டமைப்பு மக்களை தொழில்நுட்பத்திலிருந்து அந்நியப்படுத்துகிறது.

அறியாமையை விளைவித்தலில் தான் அதிகாரம்(ஆளுமை) கட்டமைக்கப்படுகிறது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வேதத்தில்,உபநிடத்தில் சொல்லியிருக்கிறது என்று கட்டுக்கதைகளையும், புரட்டுகளையும் பேசிக்கொண்டிருந்த குள்ளநரி கூட்டத்தை சிந்தனையாளர்களும், தந்தை பெரியாரும் கேள்விகள் எழுப்பி வேதத்தில் எதுவும் இல்லை எல்லாம் புரட்டுகளும், புனைக்கதைகளும் தான் என்பதை மக்களிடம் கொண்டுச்சேர்த்தனர். குள்ளநரிக்கூட்டம் மீண்டும் கிளம்பியது அப்படியெல்லாம் நேரிடையாக மொழிப்பெயர்த்துச்சொன்னால் விளங்காது. மறைப்பொருள் இருப்பதாக புலம்பித்திரிந்தார்கள். புதிய புனைவுகளை புலம்பித்திரியும் கூட்டம் இன்றைக்கும் இருக்கதான் செய்கிறது.

அப்படியாக இன்றைக்கு இணையத்தொழில்நுட்பங்களில் ஏதோ உள்ளிருந்து இயங்குவது போல கற்பிதம் செய்வித்தலிலும், வலைப்பதிவுகள் மிக கடினமான தொழில்நுட்பம் "அதெல்லாம் உங்களுக்கு எளிதாக விளங்காது..." என்று கட்டமைப்பதிலும்... தொழில்நுட்ப அந்நியப்படுத்துதல் தொடங்கியிருக்கிறது....

மக்களிடமிருந்து தொழில்நுட்பங்களை அந்நியப்படுத்தி தொழில்நுட்ப அதிகார மையங்களாக மாறுவது. அது வணிக நோக்கமா? அல்லது சேவை நோக்கமா? என்பதல்ல கேள்வி!

கற்றல், ஆய்வுக்குட்ப்படுத்துதல், முடிவுகளை வரிசைப்படுத்துதல், நிகழ்தகவுகளை அட்டவணைப்படுத்துதல் இப்படி அறிவியல் முறைகள் கைக்கொண்டு எதையும் தெரிந்துக்கொள்ள முயற்சிப்போம்!

நன்றி!

வியாழன், 20 டிசம்பர், 2007

மலேசியா மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழர்களே...! -6

மலேசியா மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழர்களே...! -5
மலேசியா மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழர்களே...! -4
மலேசியா மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழர்களே...! -3
மலேசியா மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழர்களே...! -2
மலேசியா மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழர்களே...!

தமிழ் இசுலாமியர்களை பற்றிய ஓரு பார்வையை இங்கு பதிவுச்செய்ய விழைகிறேன். நிறைய மாற்றுக்கருத்துக்கள் இருக்கிறது. பன்முகத்தன்மைக்கொண்ட ஓரு பிரச்சினையை தட்டையாக அணுக முயற்சிப்போம்...

மலேசியாவில் உள்ள சிறுபான்மையினர் (இந்தியர்கள்(தமிழர்கள், பிற இனத்தவர்கள்), சீனர்கள், இலங்கை(தமிழர்கள், சிங்களர்கள்) மற்றும் பிற நாட்டவர்கள் அனைவரும் இரண்டாம் தரக்குடிமக்களாக நடத்தப்படுகின்றனர். இதை மறுப்பதற்க்கோ அல்லது அப்படியெல்லாம் இல்லை என்று படாவி மாதிரி கூச்சல் போடுவதோ வெறும் போலிதனம்.

இரண்டாம் தர சமூகமாக சீனர்கள் நடத்தப்படுவதை கண்டுக்கொண்ட சிங்கப்பூர் மற்றும் சீனா அதற்க்கான அழுத்ததை அதிகாரத்தின் வாயிலாக மலேசியாவிடம் பகிர்ந்துக்கொண்டப்போது... சில முட்டல்கள், மோதல்கள் நிகழ்ந்தன, நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது...

ஆனால் மாற்று நடவடிக்கையாக மலேசிய சீனர்கள் பலர் சிங்கையில் நிரந்தரவாசி (PR) எடுத்துக்கொண்டு சிங்கையை நோக்கி நகர ஆரம்பித்தனர். இதனால் சிங்கப்பூர் அரசுக்கு நிரந்தர வைப்பு நிதியில் (CPF) சில சிக்கல்கள் ஏற்ப்பட்டது. சிங்கப்பூர் அரசாங்கம் இந்த பிரச்சினையை சமாளிக்க நிரந்தர வைப்புநிதியை மலேசியர்கள் சிங்கையிலிருந்து எடுத்துச்செல்ல இயலாத வகையில் சட்டத்திட்டங்களை மாற்றினர், தொடர்ந்து மாற்றங்கள் வந்துக்கொண்டேயிருக்கிறது...

நான் இங்கே இதைக்குறிப்பிடுவதற்க்கு காரணம் மலேசியாவில் சிறுபான்மையினருக்கான பிரச்சினை திடீரென்று முளைக்கவில்லை கிட்டத்தட்ட கடந்த 50 ஆண்டுகளில் படிப்படியாக அதிகரித்துக்கொண்டே வருகிறது என்பதை உணர்த்துவதற்க்காகவே!

ஓராண்டிற்க்கு முன்பு நண்பர் பசிலன் வேலை காரணமாக கோலாலம்பூரில் தங்கிவிட்டு வந்து, தமிழர்கள் இரண்டாம் தரக்குடிமக்களாக நடத்தப்படுவதை மிகுந்த வருத்ததுடன் பகிர்ந்துக்கொண்டார். அவர் தற்போது மிகுந்த அலுவலில் இருப்பதால்.. அவருடைய அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ள தாமதமாகிறது.

பதிவுலகிற்க்கு வந்தவுடன் நண்பர் டிபிசிடி மலேசியாவில் இருக்கிறார்... என்றவுடன், அவருடன் உரையாடிய உடனடி நிகழ்வே மலேசிய தமிழர்களின் நிலையை பற்றியது தான். மீண்டும் ஓரு ரங்கூனோ அல்லது ஈழமோ இங்கே ஏற்ப்பட்டு விடக்கூடாது என்கிற கவலையிருந்தது. அப்போது அவர் வேடிக்கையாக சொன்ன செய்தி "யோவ்! சும்மாயிருங்கய்யா! எதையாவது சொறிந்து விட்டு புண்ணாக்கி விட்டுராதீங்க...!" அப்படின்னார்.

சரி! பிரச்சினை இருக்கிறதை புரிந்துக்கொள்கிற நீ! ஏன்டா! HINDRAF ஐ கண்டிக்கிறாய் என்று கேட்டால்! மிகத்தெளிவாக சொல்ல வேண்டுமானால் இந்த அமைப்பின் நோக்கம் சிறுப்பான்மையினர் நலனை பாதுகாப்பதல்ல! குறிப்பாக தமிழர்களுக்கு எந்தவிதமான நன்மையும் செய்ய போவதில்லை என்று அந்த அமைப்பின் நிர்வாகிகளை பற்றிய அனைத்து தகவல்களை சேகரித்த பிறகே, இந்த முடிவிற்க்கு வர வேண்டியதாயிற்று.

இசுலாமியர்களை பொருத்தவரை தமிழகத்திலிருக்கிற வரை அவர்களுக்கு தமிழர்கள் என்கிற இனமாக தங்களை அடையாளம் காண்பது கிடையாது. உலகம் முழுவதும் உள்ள இசுலாமியர்கள் எல்லாம் இவர்களின் உறவுக்காரர்கள் மாதிரி நினைத்துக்கொண்டு வறட்டுத்தனமாக இசுலாமிய நாடுகளுக்கு ஆதரவு தெரிவிப்பது என்பது தொடர்கிறது.

இது தமிழகத்தில் அவர்கள் இருக்கிற வரைதான். அதே இசுலாமியர்கள் சிங்கப்பூர், மலேசியா, அமீரகம் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு நகரும் போது தான் தங்களுடைய இசுலாமியம் என்பது தங்களை புறக்கணிப்பிலிருந்து காப்பாற்றவில்லை என்பதை உணருகின்றனர். எந்த அரேபிய ஷேக் கும் வா! என் இசுலாமிய சகோதரா! என்று வாரிக்கொடுப்பதில்லை:( எந்த மலாய் இசுலாமியனும் வா! என் சகோதரனே! என்று வாரியணைப்பதில்லை!

தமிழ் இசுலாமியர்கள் தங்களுடைய மொழி, இனம் என்பதை தமிழகத்தை விட்டு வெளியில் வரும்போது தான் தெளிவாக உணருகின்றனர். அதனால் தான் சிங்கையிலிருக்கிற முக்கிய தமிழ் அமைப்புகள் அனைத்தும் இசுலாமியர்களால் நடத்தப்படுவதை காணலாம். இதுவே மலேசியாவிலும் தமிழ் அமைப்புகள் தமிழ் இசுலாமியர்களால் நடத்தப்படுகிறது. அமீரகத்தில் சொல்ல தேவையில்லை!

சிங்கையில் முக்கிய வணிக தளமான லிட்டில் இன்டியாவில் 60சதவிகித வணிகம் தமிழ் இசுலாமியர்களிடம் தான் உள்ளது. அதே போல் மலேசியாவில் லிட்டில் இன்டியாவில் 40 சதவிகித வணிகதளம் தமிழ் இசுலாமியர்களிடம் தான் இருக்கிறது.

மலேசியாவில் இருக்கிற தமிழ் இசுலாமியர்கள், மலேசிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளை ஆதரிக்கவில்லை! ஆனால் தமிழக இசுலாமியர்கள் ஆதரிப்பது எனக்கு கேலிக்கூத்தாக தெரிகிறது.

மலேசிய அரசாங்கத்தின் சிறுபான்மையினர் விரோதப்போக்கால் மலேசியாவில் இருக்கிற தமிழ் இசுலாமியர்களும் தான் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் தாங்கள் புறக்கணிக்கபடுவதை தெளிவாகவே உணர்ந்திருக்கின்றனர். ஆனால் கொஞ்சம் வலுவான வணிக தளம் இருப்பதால் சமாளிக்கின்றனர் அவ்வளவுதான்:(

சிங்கப்பூர் மலேசிய போராட்டத்தை பற்றிய கருத்து தெரிவிக்கும் போது "மலேசிய அரசாங்கம் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும், அதே நேரத்தில் மதம் சார்ந்த போராட்டங்களை வன்மையாக கண்டிப்பதாக!" குறிப்பிட்டது.

மலேசிய தமிழர்கள் தங்களுடைய பிரச்சினைகளை சிறுபான்மையினர் நலன் (அல்லது) மனித உரிமைகள் என்கிற தளத்தில் நகர வேண்டும் என்று ஆசைப்படுகிற நேரத்தில்... இ(ஐ)ந்து என்று நகர்வதை வன்மையாக கண்டிக்கிறோம். ஆனால் அதே வேளையில் தமிழகத்தில் இருக்கிற இசுலாமியர்கள் மலேசிய தமிழர்களின் பிரச்சினைகளை புரிந்துக்கொள்ளாமல், மலேசியா ஓரு இசுலாமிய நாடு என்பதற்க்காக அந்த அரசின் செயல்பாட்டிற்க்கு ஆதரவாக செயல்படுவதையும் வன்மையாக கண்டிக்க வேண்டியுள்ளது.

செவ்வாய், 18 டிசம்பர், 2007

தாய் மொழி வெறியா...? உணர்வா...? அறிவா...? (இந்தி எதிர்ப்பும்... சில சில்லறைகளின் ஜல்லிகளும்...!)

ஓரு மொழி உருவாகிற வரலாறும், அதன் பரிணாம வளர்ச்சியும் பற்றி பேச நிறைய இருக்கிறது. ஓரு சமூகத்தின் தாய் மொழி என்பது அந்த சமூகத்தின் ஆணிவேர் அதுவே அந்த சமூகத்தை தாங்கி நிற்கிறது.

வெறும் ஓலிகளையும், ஓசைகளையும் எழுப்ப தெரிந்த விலங்காக இருந்த மனிதன் பேசுவதற்க்கான முயற்சியில் ஓலிகளை வேறுப்படுத்தவும் அதற்க்கான குறியீடுகளை அட்டவணைப்படுத்தவும், ஓலிக்குறியீடுகளுக்கான வரி வடிவங்களை கண்டறிந்ததும் தான் ஓரு மொழியின் அடிப்படை நிகழ்வு. இந்த பரிணாம வளர்ச்சி ஏதோ திடீரென்று நிகழவில்லை பலநூறு ஆண்டுகள் தொடர்ந்த வளர்ச்சியை நோக்கிய போராட்டம்.

இங்கே ஓலிகளானது, அந்த மனிதன் வாழும் சூழலின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதாக இருந்தது. (உதாரணத்திற்க்கு குளிர் பிரதேசங்களில் வாழ்ந்த மனிதன் எழுப்பிய ஓலிகள், வெப்ப பிரதேசங்களில் வாழ்ந்த மனிதன் எழுப்பிய ஓலிகளிலிருந்து மாறுப்பட்டிருந்தது).

அடுத்தக்கட்டமாக சொற்களின் உருவாக்கம் - ஓவ்வொரு சொல்லும் பல மாற்றங்களுக்கு உட்ப்பட்டு தொடர்ந்து பரிணாமம் அடைகிறது. அந்த சொற்க்கள் ஓரு குறிப்பிட்ட சமூகத்தின் வரலாற்றை, அறிவியலை, வாழ்வியலை, நிகழ்வுகளின் குறிப்புகளை, அனுபவ அறிவியலை உள்பொதிந்து வைத்துள்ளது.

அ - உயிரின் முதல் ஓலி
ம் - மெய்யின் கடைசி ஓலி
மா - விரி (அ) பரந்த

அம்மா - உயிர், மெய்யோடு விரிவாகும் உயிர். இப்படி ஓவ்வொரு சொல்லும் தனக்குள் பொருள் கொண்டிருக்கிறது.

குறுவை - குறுகிற காலத்தில் செய்யப்படும் விவசாயம். இங்கே காலத்தின் குறிப்பு.

குறிஞ்சி, முல்லை, மருதம்,நெய்தல்,பாலை - நிலத்தின் தன்மைகள் பற்றிய குறிப்பு.

இப்படி எண்ணற்ற உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

ஓரு சமூகம் பிற சமூகத்துடன் ஊடாடும் போது அந்த புதிய சமூகத்தில் தனக்கு தேவையானவற்றை வரித்துக்கொண்டு மேலும் பரிணாம வளர்ச்சி அடைகிறது.

இவ்வாறான வளர்ச்சியில் நிகழ்வுகளின் குறிப்புகள் மற்றும் அனுபவ சிதறல்கள் வழக்கு மொழிகளாகவும், பழ மொழிகளாகவும் அந்த மொழிக்கு வளம் சேர்க்கிறது.

உலகத்தின் மிகப்பெரிய நூலகமான லைப்ரரி ஆப் காங்கிரஸ், போயி உட்கார்ந்து அறிவை வளர்க்க முடியாது. அப்படி வாழ்நாளெல்லாம் படித்தாலும் தனி மனிதனால் பெறப்படுகிற அறிவு என்பது வெறும் ஏட்டுசுரைக்காய் தான்!

ஓவ்வொரு மனிதனும் பள்ளிகளில் கற்பதை விட தனது சமூகத்தில் இருந்து கற்பது அதிகம். அந்த சமூகம் தனது எதிர்கால வாரிசுகளுக்கு மொழியின் ஊடாகவே தனது நிலத்தை பற்றிய, வாழ்வியலை பற்றிய, தனது அனுபவங்களை சேகரித்து வைக்கிறது.

ஓரு சமூகத்தின் பரிணாம வளர்ச்சி என்பது அதன் தாய் மொழி வளர்ச்சியில் உள்ளடங்கி இருக்கிறது. அதைக்கொண்டே அந்த சமூகத்தின் அறிவு திறன், கற்றல் திறன், அறிவு சுற்றுப்பாதை ஓட்டத்தின் புள்ளிகள் என பலவற்றை குறிப்பிட முடியும்.

தொடரும்...

புதன், 12 டிசம்பர், 2007

மலேசியா மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழர்களே...! -5

மலேசியா மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழர்களே...! -4

மலேசியா மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழர்களே...! -3

மலேசியா மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழர்களே...! -2

மலேசியா மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழர்களே...!
கடந்த 50 ஆண்டுகளாக கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் மலேசிய தமிழர்கள். தற்போது போராட்டக்களத்திற்க்கு வரவேண்டிய அவசியமென்ன?

திடீரென்று இரண்டாண்டுகளுக்கு முன்பு முளைத்த HINDRAF என்கிற அமைப்பு ஏன் ஏற்ப்பட்டது? அதன் பின்னணி என்ன?

மஹாதீர் தமிழ் மொழியை நாணயத்திலிருந்து நீக்கிய போது போராட்டக்களத்திற்க்கு வராத தமிழர்கள்? தமிழ் பள்ளிகள் மூடப்பட்டபோது போராட்டக்களத்திற்க்கு வராத தமிழர்கள்!வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டபோது போராட்டக்களத்திற்க்கு வராத தமிழர்கள்! 'பூமி புத்தரா' என்கிற சட்டமியற்றப்பட்ட போது போராட்ட களத்திற்க்கு வராத தமிழர்கள்!

கோயில்கள் இடிக்கப்பட்ட போது ஏன் போராட ஓன்று திரள்கிறார்கள்?

ஓடுக்கப்பட்ட மலேசிய தமிழ் மக்களின் உரிமைகளுக்காக எந்த போராட்டமும் முன்னெடுக்கப்படவில்லை. ஆனால்! கடந்த சில ஆண்டுகளில் இடிக்கப்பட்ட கோயில்களில் வேலைபார்த்த (மணி ஆட்டி தமிழர்களை சுரண்டிக்கொண்டிருந்த) பார்ப்பனர்களின் வாழ்க்கை கேள்வி குறியானதே இந்த போராட்டத்தின் வடிவம்!

இந்த பார்ப்பனர்களுக்கு ஆதரவாக ஆதிக்க சாதியினரும் ஓன்று கூடுகின்றனர்.

இங்கே மிகுந்த வேதனையை தருகிற நிகழ்வு, எந்த பார்ப்பானீய சாதிக்கொடுமைகளால், வர்க்க ஓடுக்கு முறையால் தமிழ் மண்ணை விட்டு மலேசிய தமிழர்கள் விரட்டப்பட்டார்களோ, அதே பார்ப்பானீய சாதிக்கொடுமையை தாங்கி பிடிக்கிற, அதன் ஊற்றுக்கண்ணாகயிருக்கிற கோயில்களை காப்பதற்க்காக மலேசிய தமிழர்கள் இன்றைக்கு வீதிக்கு வந்திருக்கிறார்கள்.

அட! தமிழர்களே! இந்த கோயிலும்(சாமியும்), அதில் உண்டுக்கொழுத்த பார்ப்பானும் தான் உனது முன்னோரை தமிழ் மண்ணை விட்டு வெளியேற காரணமாக இருந்தனர் என்பதை ஏன் உணர மறுக்கின்றீர்!

மலேசிய தமிழர்கள் தமது மொழிக்காக, கல்விக்காக, வேலைவாய்ப்பிற்காக போராட முன் வந்தால், அவர்களின் உரிமைகளை பற்றி பேசலாம்...

ஆனால் கோயில் இடிக்கப்பட்டது என்கிற பல்லவியை பாடிக்கொண்டிருக்கிற இந்த கேடுக்கெட்ட மடையர்களுக்காக தமிழகமும், அதன் தலைவர்களும் கண்டணம் தெரிவிப்பதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை!

ஆம்! மலேசிய தமிழர்களே! உங்களை சூத்திரனாக, இழிந்தவனாக சித்தரிக்கிற இந்து மதத்தையும், அதன் கோயில்களை காக்க நீங்கள் போராடுவது ஏற்புடைதன்று!

உங்களை சாதியில் தாழ்ந்தவனாக, தன்னை பிறப்பால் உயர்ந்தவன் என்று அறிவித்துக்கொண்டு கோயிலின் உள்ளே அமர்ந்துக்கொண்டு உங்களை சுரண்டிக்கொழுக்கும் பார்ப்பன பன்றிகளுக்காக நீங்கள போராடுவதை ஏற்றுக்கொள்ள இயலாது!

நாளை பிரச்சினை தீவிரமாகும் போது இந்த பார்ப்பனர்கள் இந்தியாவிற்க்கோ (அ) உலகத்தில் எங்காவது முட்டாள் தமிழன் கட்டி வைத்த கோயிலுக்கோ மணியாட்ட சென்று விடுவான். அவனுக்கு ஆதரவாக இந்திய பார்ப்பானீய,பனியா அரசும் இருக்கும், ஆனால் உங்களுக்காக குரல் கொடுக்க எவரும் இருக்க மாட்டார்கள்!

இன்றைக்கு இந்திய பார்ப்பானீய,பனியா அரசாங்கம் இந்த பிரச்சினையில் அக்கறை காட்டுவதே இந்த பார்ப்பன குடும்பங்களுக்காக தான்! உங்களுக்காக இல்லை என்பதை உணருங்கள்!

உங்கள் தமிழ் மொழிக்காக, உங்களின் உரிமைக்காக போராடுங்கள்.... அதை விடுத்து உங்களை அடிமையாக்கும் பார்ப்பானீயத்திற்க்கு விலை போகாதீர்கள்!

இன்னும் வரும்...!

செவ்வாய், 11 டிசம்பர், 2007

மலேசியா மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழர்களே...! -4

மலேசியா மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழர்களே...! -3

மலேசியா மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழர்களே...! -2

மலேசியா மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழர்களே...!

இந்திய அரசியல் விடுதலை என்பதும், இந்திய தேசிய கூட்டமைப்பு என்பதும் தமிழர்களின் நலனில் அக்கறையுள்ள அமைப்பாக இதுவரை இருந்ததில்லை. அது எப்போதும் பார்ப்பானீய,பனியா அரசாகவே இருந்தது, இருக்கிறது, இனிமேலும் இப்படி இருக்கும்...இந்த இடத்தில் சில வரலாற்று நிகழ்வுகளை நினைவுக்கொள்ள வேண்டியிருக்கிறது...

உகாண்டாவில் குஜராத்தின் பனியாக்கள் மாட்டிக்கொண்ட போது உடனடியாக அன்றைய அரசு விமானங்களை அனுப்பி மீட்டெடுத்தது.

Polaris என்கிற IT நிறுவனத்தின் தலைவர் (குஜராத் சேர்ந்த பார்ப்பனர்) இந்தோனிசியாவின் அரசை ஏமாற்றிய குற்றத்திற்காக கைதுச்செய்யப்பட்ட போது இந்தியாவின் வெளியுறவு துறை அமைச்சரே அவரை விடுதலைச்செய்ய சொல்லி நேரிடையாக அங்கே சென்றார்.

ஆனால் எந்த குற்றமும் செய்யாத அப்பாவி தமிழ் மீனவர்கள் 400க்கு மேற்ப்பட்டவர்கள் இலங்கை அரசாங்கத்தால் சுட்டுக்கொல்லப்பட்டப்போதும். பல மீனவர்கள் கைதுச்செய்யப்பட்டபோதும். இந்திய அரசாங்கம் என்பது என்ன செய்துக்கொண்டிருக்கிறது என்பதை நான் விளக்க தேவையில்லை என்றே நினைக்கிறேன்!

யாழ்ப்பாணத்தில் ஓரு முருகன் கோயிலில் ஓர் பார்ப்பனர் கொல்லப்பட்டதற்க்காக குரல் கொடுத்த ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க இயக்கங்கள். அந்த நிகழ்வின் போது கண்டனம் தெரிவித்த இந்திய அரசாங்கம். ஆயிரகணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில் கள்ள மெளனமே சாதிப்பது ஏன்?

அட! இலங்கை யாழ்ப்பாணத்தமிழர்கள் வேண்டுமானால் உங்களுக்கு வேறு நாட்டினர். ஆனால் இலங்கையின் மலையகத்தமிழர்கள் தமிழகத்தில் இருந்து ஆங்கிலேயர்களால் கொண்டுச்செல்லப்பட்டவர்கள். அவர்களுக்கு சமீபத்தில் மிகக்கடுமையான சித்ரவதைக்குள்ளான போது ஏன் கண்டணம் தெரிவிக்கவில்லை?

இந்தியாவின் அடித்தட்டு மக்களின் வரி பணத்தில் ஐஐடி, ஐஐஎம், மருத்துவம் என்று படித்த பார்ப்பன,பனியா பன்றிகள் இந்தியாவில் வேலைப்பார்க்காமல் வெளியேறி அமெரிக்காவிலும், மேற்கத்திய நாடுகளிலும் வேலைப்பார்க்கின்றனர். அங்கே அவர்கள் வளமான வாழ்க்கையை வாழ்கின்றனர். அவர்களுக்கு எதிர்காலத்தில் ஏதாவது பிரச்சினை வந்தால் என்ன செய்து என்று யோசித்து பார்ப்பானீய பன்றிகள் அமைத்த பா.ஜ.க ஆட்சியில் இரட்டை குடியுரிமை என்ற சட்டத்தை நிறைவேற்றினார்கள்.

ஆனால் ஆங்கிலேயர்களால் பல நாடுகளுக்கு கொத்தடிமைகளாக கொண்டுச்செல்லப்பட்ட தமிழர்களை பற்றி யோசிப்பது யார்?

அவர்களுக்கு பிரச்சினை எனும்போது அவர்களுக்கு இந்த அரசியல் அமைப்பு என்ன செய்யும்.

பார்ப்பானீய சாதிக்கொடுமைகளாலும், வர்க்க ஓடுக்கு முறையாலும் சொந்த மண்ணை விட்டு ஓடிய இந்த தமிழ் மக்களுக்கு யார் ஆதரவு தருவது?இவர்களைப்பற்றி இந்த அரசாங்கம் சிந்தித்திருக்கிறதா?

இந்தியாவில் படித்து, வெளிநாட்டில் வசதியாக வாழும் இந்திய பார்ப்பானீய, பனியா வம்சாவளி குடும்பத்தின் வரிசுகள் செய்கிற சாதனைகளுக்கு விழா எடுக்கும் அரசாங்கம்.

விவாசயம் மற்றும் கிராமபுறத்தொழில்கள் நசிந்து அரேபியாவிற்க்கும், சிங்கை மற்றும் மலேசியாவிற்க்கும் கூலித்தொழிலாளர்களாக ஓடுகிற தமிழர்களை பற்றி கவலைப்படுகிறதா?

சிங்கை, மலேசியா சிறைகளில் வாடும் தொழிலாளர்களின் எண்ணிக்கையாவது தெரியுமா?

பர்மாவின் கலவரத்தில் ஓடி வந்த தமிழர்கள் பலர் திரிபுரா, நாகலாந்து பகுதிகளில் தங்கி விட்டனர். அவர்களை அங்கே போராடிக்கொண்டிருக்கும் நக்சல்பாரி இயக்கங்கள் தாக்கும் போது. அவர்களுக்காக குரல் கொடுத்தவர்கள் தமிழீழ விடுதலை புலிகள். இந்தியாவில் எந்த அரசியல் அமைப்பும் அந்த தமிழ்மக்களை பற்றி கவலையே கொள்ளவில்லை.

எங்கள் மண்ணில் குடகு மலையிருக்கிறது என்று தண்ணீர் தர மறுக்கிற கர்நாடகத்திற்க்கு, தமிழ் மண்ணில் இருந்து எடுக்கப்படும் நெய்வேலி நிலக்கரி மின்சாரம் தான் பெங்களுருக்கு சென்றுக்கொண்டிருக்கிறது. இந்திய அரசாங்கம் தனது அதிகாரத்தால் மின்சாரத்தை பகிர்ந்துக்கொடுக்கிறது. ஆனால் தண்ணீரை பகிர்ந்துக்கொடுக்க வக்கில்லை!அதிகாரம் தமிழகத்தில் தமிழனிடமிருந்திருந்தால் தண்ணீர் தந்தால், மின்சாரம் தருகிறோம் என்று விலை பேசலாம். அப்படியில்லையென்றால் மின்சாரத்தை விற்று அதில் வரும் பணத்தில் தண்ணீரை விலைக்கு வாங்கியிக்கலாம் (சிங்கப்பூர், சவுதி அரேபியா மாதிரி..)

வரலாற்று நிகழ்வுகளிலும், நிகழ்காலத்திலும் இந்திய தேசியம் என்பது தமிழர் நலன் என்பதை பாதுகாக்கவில்லை. அப்படி பாதுகாக்கவில்லை என்று சொல்லிவிட்டு ஓடி பதுங்கி வாழ முடியாது.

வரலாற்றில் ஓட, ஓட அடிக்கப்பட்ட இஸ்ரேலின் யூதர்கள் தான் நின்று எதிர்த்து இன்றைக்கு உலகத்தின் முக்கிய முடிவுகளை எடுக்கும் சக்தியாக மாறினார்கள். குட்ட, குட்ட குனிய முடியாது. எதிர்த்து நின்று தமிழ், தமிழரின் நலனை முன்னிறுத்தும் அரசியலை, அமைப்பை கட்டமைப்பது என்பது இன்றைய வரலாற்று தேவை. அதற்க்காக சிந்திப்போம்...

இன்னும் வரும்...

மலேசியா மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழர்களே...! -3

மலேசியா மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழர்களே...! -2

மலேசியா மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழர்களே...!


மலேசிய தமிழர்களை பொருத்தவரை மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறார்கள் என்பது மிகவும் வேதனையான உண்மை. மலேசியாவில் போராட்டமும் அதன் காரணங்களும் இந்த பதிவில் மலேசியாவை சேர்ந்த பதிவர் .:: மை ஃபிரண்ட் ::. மஹாதீர் ரொம்ப நல்லவர், தொலைநோக்கு பார்வை உள்ளவர் அப்படியெல்லாம் புகழ்நது தள்ளியிருக்கிறார். உண்மையில் மஹாதீரின் குள்ளநரிதனத்தை புரிந்துக்கொள்ளமளவுக்கு கூட சிந்தனையற்ற மக்களாகவே மலேசிய தமிழர்கள் உள்ளனர்.

மலேசிய தமிழர்களின் வாழ்வியல் மோசமானதற்க்கு இன்றைக்கு படாவி பதவியில் இருப்பதால் வந்த பிரச்சினையா?

மலேசிய தமிழர்களின் வாழ்வியலை சிதைக்க மஹாதீர் காலத்தில் தான் திட்டங்கள் தீட்டப்பட்டன.

ஓர் இனத்தின் வாழ்வியலை சிதைப்பதற்க்கு முதலில் அந்த இனத்தின் மொழியில் தான் கைவைப்பார்கள், அதை தெளிவாக செய்தவர் மஹாதீர். ஆம்! அவருடைய ஆட்சி காலத்தில் தான் மலேசிய நாணயத்தில் (Currency) இருந்து தமிழ் நீக்கப்பட்டது. அடுத்தக்கட்டமாக அரசின் அனைத்து தளங்களிலும் தமிழை நீக்கினார் (அ) இரண்டாம் நிலைக்கு தள்ளினார்.
இவருடைய ஆட்சி காலத்தில் தான் அதிகமான தமிழ் பள்ளிகள் மூடு விழா கண்டது.

ஓரு புறம் தமிழை அழித்துக்கொண்டே தமிழர்களை ஆட்டுமந்தைகளாக்க சாமிவேலு என்கிற கைக்கூலியை மிக நன்றாக வளர்த்தெடுத்தார். தமிழகத்தை விஞ்சம் அளவுக்கு சாமிவேலுக்கு பிறந்தநாள் விழாக்கள் கொண்டாப்பட்டது. கட்வுட்டுகள், பேனர்கள், முழு பத்திரிக்கை விளம்பரம் என்று சாமிவேலு வளர்த்தெடுக்கப்பட்டார். புதிதாக இன்னுமொரு கைக்கூலி கிடைத்தான் அவன் தான் பட்டுக்கோட்டை அருகேயுள்ள பொன்னவராயன்கோட்டை என்கிற கிராமத்தை சேர்ந்த 'பொன்னுசாமி' என்பவன். அவனுக்கு பதவிகள் வழங்கப்பட்டது (சபாநாயகர் பதவி என்று நினைவு! சரியாக நினைவில் இல்லை தெரிந்தவர்கள் மறுமொழியில் தெரியப்படுத்தவும்).

மலேசியாவில் பெரும்பான்மை தமிழர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் ஆனால் இவர்களுடைய அரசியல் நிர்வாகத்தை கையெடுத்திருப்பவர்கள் பிராமணர்கள், பிள்ளைமார்கள், அகமுடையார்கள். இந்த ஆதிக்க சாதியினர் அரசு இயந்திரத்துடன் சேர்ந்து தமிழர்களை அழிப்பதற்க்கு துணையாக நிற்கின்றனர்.

'பூமி புத்திரா' என்கிற திட்டத்தின் தொடக்கமே மஹாதீர் தான். இப்போதைய படாவி வேறொரு வகை சிக்கலில் மாட்டிக்கொண்டு முழிக்கிறார். மஹாதீர் தொடங்கி வைத்த மலாய் அல்லாத மாற்று இன ஓடுக்குமுறை செயல்திட்டத்தை இவரால் பின்னணியில் நகர்த்த இயலவில்லை. சிங்கப்பூரும், சீனாவும் சீனர்களின் மீதான ஓடுக்குமுறையை கடுமையாக விமர்சிக்க தொடங்கி விட்டன.

இரண்டாவது அதிகாரம் படாவியிடம் இருந்தாலும் படாவியின் மருமகனே மலேசியாவில் அரசியல் அதிகாரத்தில் செல்வாக்கு உள்ளவராக இருக்கிறார்.

மலேசியாவில் வெளிப்படையாக மக்களாட்சி ஜனநாயகம் என்று சொன்னாலும். மலேசியாவின் ஓவ்வொரு மாநிலத்திற்க்கும் இன்றைக்கும் மன்னராட்சி தான் நடைபெறுகிறது. உதாரணத்திற்ககு ஜொகூர் பாரு என்றால் அதற்க்கு ஜொகூர் மன்னர் தான் முக்கியமான முடிவுகள் எடுக்கிறார். அதே போல கோலாலம்பூர் இருக்கிற சிலாங்கூர் மாநிலத்திற்க்கு சிலாங்கூர் மன்னர் இருக்கிறார். இந்த சிலாங்கூர் மன்னர் தனது பிறந்த நாளுக்கு தனக்கு வாலாட்டுகிற கைக்கூலிகளுக்கு தருகிற பட்டம் தான் 'டத்தோ' என்கிற பட்டம்.

அப்போ 'டத்தோ சாமிவேலு' எவ்வளவு தூரம் கைக்கூலியாக இந்த மன்னர்களுக்கு இருக்கிறார் என்பதை நீங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

இன்னும் கொஞ்சம் வரும்...

திங்கள், 10 டிசம்பர், 2007

தமிழகம் முன்மாதிரி மாநிலமாக மாறுகிறதா? - குசும்பனுக்கு விளக்கங்கள்!

நேற்றைக்கு நண்பர் குசும்பன் இந்த இடுகையை எழுதியவுடனேயே இணைய உரையாடலில் அவரை அழைத்து கொஞ்சம் பேசினேன்!. இருப்பீனும் கொஞ்சம் எழுதுவோம் என்ற எண்ணவோட்டம் எழுந்த காரணத்தால் இங்கே பதிவு செய்கிறேன்.

சில மாதங்களுக்கு முன்பு இதே மாதிரியான தலைப்பில் 'அரசின் இலவச அறிவிப்பால் விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறை' என்று தினமலத்தில் ஓர் செய்தி வந்திருந்தது. அதை மீண்டும் நினைவுக்கூர்ந்துக்கொள்ள வேண்டுகிறேன்.

இந்த சொல்லாடலின் பின்னணியில் உள்ள அரசியலை புரிந்துக்கொள்ளாமலேயே, நாம் இலவச அறிவிப்புகளை எதிர்த்து நிற்கிறோம்.
விவசாய தொழிலாளர்களை பார்த்துக் கேள்வி எழுப்புவதற்க்கு முன்பு ஓரு சுய பரிசோதனை செய்துக்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.

விவசாய தொழிலாளர் உழைக்காமல் சோம்பேறிகளாக இருக்கிறார்கள் என்று எழுதுவதை படிக்கும் போது உடல் உழைப்பு என்பதன் பொருள் இந்த கேவலமான நாய்களுக்கு தெரியுமா என்கிற கோபம் தான் மனதில் எழுகிறது.
சேம்பேறியாய் இருப்பவன் முதலில் ஓரு தொழிலாளியாய் இருக்க முடியாது. இந்த அடிப்படை விளங்காமல் போனதற்க்கு இவர்களை என்ன செய்யலாம் என்று எனக்கு தெரியவில்லை!

விவசாயம் ஏன் நலிந்துக்கொண்டிருக்கிறது என்பதற்க்கு பல்வேறு விவாதங்கள் இணையத்திலும், ஊடகத்திலும் இன்னும் நடந்துக்கொண்டிருக்கிறது. அதை இங்கே விவாதிப்பது நோக்கமல்ல!

இவர்கள் சொல்கிற 2 ரூபாய் அரிசி வாங்கி சாப்பிடுகிற தொழிலாளி என்ன செய்துக்கொண்டிருக்கிறான். ஓவ்வொரு கிராமத்திலும் ஓவ்வொரு வீட்டிற்க்கும் குடி பார்க்கும் தொழிலாளியாக இருக்கிறான். இவனுடைய நிலை என்னவென்று தெரியுமா இவர்களுக்கு? ஓரு குடி பார்க்கும் தொழிலாளி வருடத்தின் 365 நாட்களும் அவன், அவனுடைய மனைவி, இன்னும் வேலை பார்க்க முடிகிற மகனோ, மகளோ இருந்தால் அனைவரும் எந்த குடும்பத்திற்க்கு குடி பார்க்கிறார்களோ அவர்களுக்கு வேலை பார்க்க வேண்டும்.

ஓரு கிராமத்தில் சேரியாக இருக்கிற தொழிலாளர்கள் யாரும் வேலைக்கு வரவில்லை என்று சொல்வது கிடையாது. ஆனால் அவர்களுக்கான ஊதியம் வாழ்க்கைக்கு பற்றாக்குறையாக இருப்பதால் வேறு வேலையை நாடிச்செல்ல தொடங்கியிருக்கிறார்கள். பெரும்பாலான விவசாய கூலி தொழிலாளர்கள் கட்டிட கூலி தொழிலாளர்களாக மாறியிருக்கிறார்கள். (இங்கேயும் அவர்கள் உழைக்கிறார்கள் மாறாக படுத்துறங்கவில்லை).

தமிழகத்தின் ஓவ்வொரு கிராமத்திலும் இருக்கிற பல்வேறு தொழிலாளர்கள் முடிவெட்டுவோர், துணி துவைப்போர், இரும்பு காய்ச்சி அடிக்கிறவர்கள், தச்சு வேலை பார்க்கிறவர்கள், துப்புரவு தொழிலாளர்கள் என அனைவரும் ஆண்டின் பெரும்பாலான நாட்கள் வேலை பார்த்துக் கொண்டேயிருக்கின்றனர்.

நான் இங்கே ஓரு கேள்வி வைக்க விரும்புகிறேன்!. ஏ! படித்த கூறுக்கெட்ட முண்டங்களா ஓரு வேலைக்கான உத்தரவு கிடைத்தவுடன் வாரத்தில் எத்தனை நாட்கள் வேலை, வருடத்தில் எத்தனை நாட்கள் மருத்துவ விடுப்பு, வருடாந்திர விடுப்பு எத்தனை நாட்கள் என்று கணக்கு பார்க்கிற நீங்கள். இந்த தொழிலாளர்கள் என்றைக்காவது ஓய்வு எடுத்தால் உங்களுக்கு சேம்பேறிகளாக தெரிகிறார்களா?

லட்சக்கணக்கில் ஊதியம் வழங்குகிற மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கிற மனிதர்களாகிய நீங்கள் எப்பொழுதாவது உங்கள் அலுவலகத்தின் துப்புரவு பணியாளருக்கு ஊதியம் என்னவென்று தெரிந்து வைத்திருக்கிறீர்களா?

நான் ஓரு சென்னையில் சந்தித்த ஐரோப்பியன் என்ன வேலை செய்கிறான் தெரியுமா தச்சு வேலை, ஆனால் அவனால் 6 மாதம் வேலை பார்த்து விட்டு 6 மாதம் உலகத்தை சுற்றிப்பார்க்க முடியும். உலகத்தின் மற்ற நாடுகளில் எல்லாம் எந்த வேலை செய்தாலும் எல்லோருக்கும் ஓரளவுக்கு வாழ்வியலுக்கு தேவையான பொருளீட்டலுக்கு உத்திரவாதம் இருக்கிறது.

நம்முடைய சமூகத்தில் ஓரு சிலரை தவிர மற்றவர்களுக்கெல்லாம் குறிப்பாக தொழிலாளர்களுக்கு என்ன வாழ்வியல் மிச்சமிருக்கிறது!

இந்தியாவின் கடந்த 60 ஆண்டுகளில் இந்திய ரயில்வே கோடை விடுமுறை கால முன்பதிவு அட்டவணையை எடுத்துப்பாருங்கள் தெரியும், யார் வாழ்க்கை அனுபவிக்கிறார்கள் என்று!. என்றைக்குயாவது வாழ்க்கையில் விடுமுறை கால சுற்றுலா என்று இந்த தொழிலாளர்கள் செல்ல முடியுமா?

வார விடுமுறை, வருடாந்திர விடுமுறை என்று கொழிக்கிற நீங்கள் உங்கள் வீட்டில் வேலை பார்க்கும் வேலைக்காரனுக்கோ, வேலைக்காரிக்கோ வார விடுமுறை (அ) வருடாந்திர விடுமுறை இத்தனை நாட்கள் என்று இதுவரை கொடுத்திருக்கிறீர்களா?

உலகத்தில் வளர்ந்த நாடுகள் என்று பட்டியலிடுகிற இடங்களில் கூட சமூகத்தில் பாதிக்கப்படுகிற குடும்பங்களுக்கு இலவசமாக உதவித்தொகை வழங்கப்படுகிறதே!என்ன இந்தியாவில் 60 சதவிகித குடும்பங்கள் இந்த பார்ப்பானீய, வர்க்க கட்டமைப்பில் பாதிக்கப்படுகிறது, அதனால் நிறைய குடும்பங்களுக்கு இலவசமாக நிறைய கொடுக்க வேண்டியிருக்கிறது.

பெங்களுரில் Internationl Technical Park, Whitefield என்று ஓரிடம் உள்ளது அந்த கட்டிடம் 80 சதவிகித வேலையை 1997ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முடித்த போது அதில் அது வரை இறந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 47 பேர், மீதம் 20 சதவிகித பணியில் எவ்வளவு பேர் இறந்திருப்பார்கள் என்று நினைத்துப்பாருங்கள்! (கடைசி வேலைகள் தான் மிகவும் ஆபத்து நிறைந்தது).

அந்த அலுவலகத்தின் உள்ளே இன்றைக்கு குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்திருக்கும் மென்ப்பொருள் வல்லுநர்கள் யாரும் கட்டிட தொழிலாளர்களை விட கடின உழைப்பாளிகள் கிடையாது!
ஆனால் வாழ்வியல் யாருக்கு இன்றைக்கு வளமாக இருக்கிறது?

இன்றைக்கு சிங்கப்பூரில் சராசரியாக தொழிலாளர்களின் மாத வருவாய் 1000 வெள்ளி. இங்கே ஓரு தொலைகாட்சி பெட்டி 200 வெள்ளி, ஓரு கணினி 400 வெள்ளி, ஓரு சலவை இயந்திரம் 250 வெள்ளி. ஆகையால் தங்கள் வாழ்க்கைக்கு தேவையானதை இந்த தொழிலாளர்கள் தாங்களே சம்பாதித்து வாங்கிக்கொள்ள முடியும்.

இந்தியாவில் எந்த தொழிலாளியும் 1000ரூ லிருந்து 5000ரூ வரை சம்பாதித்து எப்போது அவன் தொலைகாட்சி பெட்டி வாங்குவது. தொழிலாளர்களுடைய உழைப்பை சுரண்டிய மற்றவர்களிடமிருந்து தான் நிதியை பெற்று அரசு திரும்ப அவர்களுக்கு தொலைகாட்சி பெட்டியை இலவசமாக வழங்குகிறதே தவிர! அரசோ (அ) நீங்களோ எந்த தொழிலாளிக்கும் யாசகமாக தரவில்லை.

1999 -ம் ஆண்டு சென்னையில் ஓரு சதுர அடி கட்டிடம் கட்ட 400ரூபாய் கேட்டார்கள், ஆனால் இன்றைக்கு 800ரூபாயிலிருந்து 1000 ரூபாய் கேட்கிறார்கள். ஆனால் கட்டிட தொழிலாளர்களின் ஊதியம் அன்றைக்கும், இன்றைக்கும் பெரிய மாற்றம் ஏற்ப்படவில்லை!

எந்த உழைப்பாளியும் இரந்து வாழ்வதை விரும்புவதில்லை!ஆனால் அவனுடைய உழைப்பை சுரண்டுகிற, அவனுக்கு சமூக பாதுகாப்பை தராத சமூகத்திலிருந்து பிடுங்கி தான் அவனுக்கு திரும்ப தர வேண்டியிருக்கிறது!

நன்றி!

ஞாயிறு, 9 டிசம்பர், 2007

மலேசியா மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழர்களே...! -2

மலேசியா மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழர்களே...!

கூலிகளாய் ஓடி வந்த தொழிலாள தமிழர்கள் அன்றைய சிங்கப்பூர் மற்றும் மலாக்கா தீவுகளில் கடினமாக உழைத்தனர். சிங்கப்பூர் மற்றும் மலாக்கா பகுதிக்கு இலங்கையிலிருந்தும் தமிழர்கள் கூலிகளாய் கொண்டுவரப்பட்டுள்ளனர்.




இவர்களுடைய போராட்டத்தையும், தங்களை நிலைநிறுத்திக்கொள்வதற்க்காக செய்த தியாகங்களையும் நாம் நிச்சயம் தலைவணங்கியே ஆக வேண்டும். சிங்கப்பூரில் தமிழர்கள் அமைத்திருக்கும் அடித்தளத்தில் தான் நான், என்னை மாதிரியானவர்கள் இன்றைக்கு இங்கே வந்து வேலை பார்க்கிறோம் என்றால் அதற்க்கு நாம் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.




(இங்கே முன்னாள் சிங்கப்பூர் பிரதமர், தற்போதைய மதியுரை அமைச்சர் திரு லீ குறிப்பிடுவது போல இலங்கை தமிழர்கள் எண்ணிக்கையில் குறைவாகயிருந்தாலும், அவர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. சிங்கப்பூர் நாட்டின் தந்தைகளில் ஓருவராக இலங்கை தமிழர் அமரர் திரு இராஜரத்தினம்(சிங்கையின் முதல் வெளியுறவுதுறை அமைச்சர்) இருக்கிறார். மலேசியா திடீரென சிங்கையை வெட்டிவிட்ட போது திரு லீ ஓரு வார காலம் மனமுடைந்து தலைமறைவாகி விட்டார். திரு இராஜரெத்தினம் அவர்களே முன்னின்று கட்சியையும், அரசியலையும் வழிநடத்தினார் என்கின்றனர். அந்தளவுக்கு இலங்கை தமிழர்கள் சிங்கையில் உழைத்திருக்கிறார்கள்).




அதே மாதிரி மலேசிய தமிழர்களும் தங்களுடைய கடுமையான உழைப்பால்,போராட்டத்தால் அரசியல் அமைப்பில் பங்குப்பெற்றுள்ளனர்.




ஆனால் தமிழகத்தில் சமூகக்கொடுமைகளிலும், வர்க்க கொடுமைகளிலனாலும் ஓடுக்கப்பட்ட தமிழர்கள் சிங்கப்பூர், மலேசியாவில் தங்களை எவ்வாறு முன்னிறுத்திக்கொள்கின்றனர்.? தங்களுடைய முன்னோர்கள் ஏன் தமிழகத்தை விட்டு வெளியேறினார்கள் என்பதை உணர்ந்து அதிலிருந்து தங்களை காத்துக்கொள்கின்றனரா? மலேசியவோ (அ) சிங்கப்பூரோ அது பிழைக்க வந்த இடம் நாளைக்கு பிரச்சினை என்றால் தாய் மண்ணின் உறவுகள் தான் கைக்கொடுப்பார்கள் என்பதை உணர்கின்றனரா? இப்படி கேள்விகள் இருக்கிறது.




இந்த இரண்டு நாட்டிலும் யாரும் தங்களை 'தமிழர்கள்' என்று சொல்லிக்கொள்வது கிடையாது 'இந்தியர்கள்' என்று பல்லிளிக்கின்றனர்.

தமிழர்கள் உழைத்து உருவாக்கிய அரசியல் பங்களிப்பை, அவர்களின் தோளின் மீது நடந்து வட இந்தியர்களும் மற்றவர்களும் எளிதாக உள்ளே புகுந்து விட்டார்கள். 18 பாராளுமன்ற உறுப்பினர்களில் 6 பேர் வட இந்தியர்கள்.தேர்தலுக்கு, தேர்தல் இது அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதற்க்கு காரணம் தமிழர்களின் ஓற்றுமையின்மையை பயன்படுத்தி வடஇந்தியர்கள் எளிதாக வணிகம் மற்றும் அரசியலில் உள்ளே புகுந்ததே!




சிங்கப்பூராக இருந்தாலும் மலேசியாவாக இருந்தாலும்... எந்த சாதீய சமூகக்கொடுமையினால் இங்கே உழைப்பாளிகளாக வந்தார்களோ... அவர்களே மீண்டும் கோயில் கட்டி இந்த சாதீய சமூகத்தின் அடிதளமான பார்ப்பனர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்ப்படுத்தி தருகின்றனர்.




ஓரு தமிழ் கூலித்தொழிலாளியின் தினசரி கூலி 14-18 வெள்ளி ஆனால் ஓரு கோயில் பார்ப்பனரின் ஊதியம் 1000 வெள்ளி அது மட்டுமல்லாமல் தங்குமிடம், கோயிலுக்கு வருவோர் தருகிற தட்சணை என்று உழைக்காமல் உண்டுக்கொழுக்கும் பன்றிக்கூட்டமான பார்ப்பனர்களை தமிழர்கள் இங்கேயும் வளர்த்துக்கொண்டுயிருக்கிறார்கள்.


யார் தங்களை அடிமைகளாய், உரிமையற்றவர்களாய் ஆக்கி சொந்த மண்ணை விட்டு வெளியேற காரணமாகயிருந்தார்களோ அவர்களுக்கு இவர்கள் இங்கே கோயில்க்கட்டி கொடுத்துக்கொண்டிருக்கின்றனர்.




தங்களுடைய சொந்த மண்ணில் வளமிருக்கிறது, தங்களுடைய வாழ்வியல் ஏன் பறிப்போனது என்பதை பற்றி சிந்திக்கவும் இல்லை! அதற்க்காவும் போராடவும் இல்லை!




இவர்களில் பலர் சிங்கப்பூர், மலேசியாவின் சுக,போக வாழ்வில் மூழ்கி விட்டார்கள். சொந்த ஊர் எதுவென்றே தெரியாது. தெரிந்துக்கொள்ளவும் விருப்பமில்லை!


என்னுடைய கேள்வியெல்லாம் தமிழகத்தின் பிரச்சினைகளில் இருந்து தங்களை தற்க்காத்துக்கொள்ள ஓடி வேறொருயிடத்தில் போராடி தங்களின் வாழ்வியல் மேம்பட்டப்பிறகு சொந்த மண்ணை திரும்பிக்கூட பார்க்காத இவர்களுக்காக, காலம், காலமாக தமிழகத்தின் சாதீய, வர்க்க சமூகத்தில் போராடிக்கொண்டிருப்பவர்கள் ஏன் குரல் கொடுக்க வேண்டும்?




வெறும் தமிழர் என்கிற அடையாளம் போதுமா? தாய் தமிழ் மண்ணின் முன்னேற்றத்தில் இவர்களின் பங்களிப்பு என்ன? ( கோடம்பாக்கத்து நடிகைகளுக்கு இவர்கள் கொட்டிக்கொடுப்பதை தவிர! வேறென்ன கிழித்தார்கள்?)


இவர்களுக்கு பிரச்சினை என்றால் உணர்வால் ஓன்றுப்படுகிற தாய் தமிழ் மண்ணின் மக்களை. இவர்கள் எவ்வாறு நடத்துகிறார்கள். (ஊர்க்காரன் என்று நக்கலும், நகைத்தலும் செய்கிறார்களே!)




சிங்கப்பூர் தமிழர்களை விட மலேசிய தமிழர்கள் இன்னும் ஓரு படி மேலே போய் சினிமாவையும், பக்தியையும் தவிர வேறெதுவும் பற்றி சிந்திக்க கூடயில்லையே!.


சிங்கப்பூர், மலேசிய தமிழர்களுக்கு என்னுடைய வேண்டுக்கோள் எல்லாம் ஓன்றே ஓன்று தான்... நீங்கள் எவ்வளவு வளமான வாழ்வியலை கொண்டிருந்தாலும் நாளை பிரச்சினை என்று வரும் போது உங்களுக்கான அரண் உங்களுடைய தாய் தமிழ் மண்ணே. அதுவே வரலாறு அன்றைக்கு பர்மாவில் தமிழர்கள் அடித்து விரட்டப்பட்ட போது குறைந்தபட்சம் பர்மா காலணி என்று அமைத்துக்கொடுத்தது தமிழ் மண் தான்.


இப்படியிருக்கும் பட்சத்தில் உங்களுடைய சிந்தனையில் தாய் தமிழ் மண்ணின் முன்னேற்றம் உள்ளடங்கியிருக்க வேண்டும்.




இங்கே இலங்கையின் யாழ்ப்பாண தமிழர்களுக்கு ஓர் அறிவுறுத்தலும் இருக்கிறது. தமிழினத்தின் இன்னொரு வாழ்விடமான தமிழீழம் தான் உங்களுடைய தாய் மண். நீங்கள் உலகம் முழுவதும் புலம் பெயர்ந்திருக்கலாம். ஆனால் உங்களின் தாய் மண்ணை மீட்டெடுப்பதிலும், அதன் முன்னேற்றத்திலும் மட்டுமே உங்களின் வாழ்வியல் உள்ளடங்கியிருக்கிறது. புலத்தில் சுகம் கண்டு உறங்கிப்போனால் நாளை வரலாற்றில் நாடற்ற அனாதைகளாக ஆக நேரிடலாம்!

வெள்ளி, 30 நவம்பர், 2007

மலேசியா மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழர்களே...!

சமீபத்தில் மலேசிய தமிழர்கள் தாக்கப்பட்டதற்க்கு தமிழக தலைவர்கள் கண்டணம் தெரிவித்திருந்தார்கள். அதைத்தொடர்ந்து நண்பர் பசிலன் உடன் ஓர் உரையாடல் நிகழ்ந்தது அதன் தொகுப்பாக இங்கே எழுதுகிறேன்.

முதலில் சிங்கப்பூர், மலேசியா, பர்மா, மியன்மார், மலாய் தீவுகள், தென்னாப்ரிக்கா, பிஜி தீவுகள், இலங்கை மலையகத்தமிழர்கள் மற்றும் ஆங்கிலேய, பிரெஞ்சு காலணிகளில் குடியேற்றப்பட்ட தமிழர்கள் யார்? அவர்கள் ஏன் தமிழகத்தை விட்டு ஓட வேண்டும்? அவர்கள் ஏன் கூலித்தொழிலாளர்களாக இடம்(புலம்) பெயர்ந்தார்கள்? போன்ற கேள்விகளுக்கு தேடல் தொடங்கினால் மட்டுமே... சில அடிப்படை உண்மைகளை உணர முடியும்...

பார்ப்பானீயம் த்ராவிட சமூகத்தை சிதைத்து தனது பரவலை அதிகரித்து கொண்டே வந்துக்கொண்டேயிருக்கிறது, வடக்கிலிருந்து தெற்க்கு நோக்கிய பரவலில் தமிழர்களும், அதன் அரசியல் அமைப்பான மன்னாராட்சிகளும் அடிமைப்பட்டனர். ஆரிய வலையில் தமிழர்கள் வீழ்ந்து சின்னாபின்னமான ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் தமிழர்களில் மிகக்கடுமையான சமூக ஏற்றத்தாழ்வுகள் ஏற்ப்பட்டிருந்தது. பிறப்பால் ஓருவனை உயர்ந்தவன் என்றும் மற்றொருவனை தாழ்ந்தவன் (சூத்திரன்) என்றும் உரிமையற்ற, சுதந்திரமற்ற மனிதர்களாக(அடிமைகளாக) நடத்துக்கிற வாழ்வியல் தமிழர்களிடம் ஆரியர்களால் புகுத்தப்பட்டிருந்தது.

காலம், காலமாக அடிமைப்பட்டு கிடந்த, உரிமையற்று கிடந்த, தங்கள் உணர்வுகளை வெளியிட முடியாமல் வாடிய தாழ்த்தப்பட்ட, பிற்ப்படுத்தப்பட்ட மக்களே ஆங்கிலேயர்கள் தங்களுடைய காலணிகளுக்கு தொழிலாளர்கள் தேவை எனும் போது ஓடியவர்கள்!

சமூகக்கொடுமைகளிலிருந்தும், முதலாளிகளின் வர்க்க ஓடுக்கு முறையிலிருந்தும் தங்களை காத்துக்கொள்ளவே ஆங்கிலேய காலணிகளுக்கு ஓடினார்கள்.

ஓடுக்கப்பட்ட இம்மக்கள் உழைப்பால் எதையும் உருவாக்கும் வல்லமை படைத்த தமிழர்கள், தங்களின் ஓற்றுமையின்மையால் அழிகிற வரலாறு தமிழர்களுக்கு புதிதல்ல :( , கருங்காலிக்களுக்கும், துரோகிகளுக்கும் பஞ்சமே இருப்பதில்லை தமிழினத்தில்!.

தமிழர்களின் உழைப்பாற்றலை கண்டுக்கொண்ட ஆங்கிலேயர்கள் தங்களுடைய காலணி நாடுகளுக்கெல்லாம் தமிழர்களை கூலிகளாக அழைத்துச்சென்றான். காடு திருத்தி கழனி அமைத்து, கோட்டை அமைத்து கொடுத்தவன் கொத்தடிமைகளாகவே வாழ்ந்தான். பொன் விளையும் மண் உருவாக்கி கொடுத்தவன், மண்ணாகி அழிவதை என்றென்று சொல்வது :( அவன் விழிக்கவேயில்லை. அவனுக்கு விடுதலை என்பது வரலாற்றில் மறுக்கப்பட்டது. (சரி! பழங்கதை பேசி பாழாய் போவதை நிறுத்தடா! என்று நீங்கள் திட்டுவது கேட்கிறது).


கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்ளுங்கள்... இவர்களிடம் சில கேள்விகளை வலையேற்றுகிறேன்...

வியாழன், 22 நவம்பர், 2007

உடலுறவுக்கான வேட்கை, திருமணம்,குடும்பம்,உறவுமுறைகள் மற்றும் சமூக அமைப்பு...

உங்களுக்கு அழ வேண்டும் என்கிற உணர்வு எழுகிறது என்று எடுத்துக்கொண்டால், அந்த உணர்வு எழுவதற்க்கான உடல் இயங்கியலில் ஏற்ப்பட்ட மாற்றங்கள், அதை வெளிப்படுத்துவதற்க்கு உடல் இயங்கியலின் செயற்ப்பாடுகள் இரண்டும் இயல்பானது. ஆனால் அந்த உணர்வை பாதிக்கும் புறக்காரணிகள் பல இருக்கின்றன. (உதாரணத்திற்க்கு 1. அழ வேண்டும் என்று தோன்றினாலும் "ஆண்ப்பிள்ளை அழக்கூடாது" என்கிற கட்டுமானம். 2. அழ வேண்டும் என்று தோன்றினாலும் பொது இடத்தில் அழக்கூடாது என்கிற கட்டுமானம்)

இவ்வாறு உணர்வுகள் உருவாக்கதிலிருந்து, அதை வெளிப்படுத்துவது வரை இயல்பான இயங்கியலை புறக்காரணிகள் பாதிக்கிறது. உணர்வுகளை வெளிப்படுத்துவதில் ஏற்ப்படும் இடர்ப்பாடுகளினால் உடலும், மனதும் அவதியுறுகின்றன. இதை உடல் ஓரளவுக்கு சமன் செய்யவே முயற்சிக்கிறது ( tolerance level ) தனது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் வரை.

இப்படி உணர்வுகள் உருவாக்கதிலும், வெளிப்படுத்துவதிலும் ஏற்ப்படுகிற சிக்கல்கள் உளவியல் பாதிப்படைந்த மனிதர்களை உருவாக்குகிறது. (இங்கே நான் சுட்டுகிற அளவுகோல் சமூகத்தின் இயல்பு நிலையை உள்வாங்க இயலா நிலையில் உள்ள உளவியல் பாதிப்பு.)

உடலுறவுக்கான வேட்கை என்பது உடலின் இயங்கியலில் ஏற்ப்படுகிற உணர்வு உருவாக்கம். அதை வெளிப்படுத்த சமூகத்தில் இருக்கிற தடைகளை கணக்கில் எடுத்துக்கொண்டால் மிக அதிக அளவில் சமூகத்தில் உளவியல் பாதிப்படைந்த மனிதர்களை நாம் உருவாக்குகிறோம் என்றே பொருள். மாறாக அவ்வாறு நடக்கவில்லை என்பது நிகழ்வு! ஆகையால் எங்கோ உணர்வானது வெளிப்படுத்தபட்டுவிட்டது என்பது உட்ப்பொருள்.

இந்த உடலுறவுக்கான வேட்கையை வெளிப்படுத்துவதற்க்கு மனித சமூக அமைப்பின் வளர்ச்சியில் கண்டுக்கொண்ட ஓர் தீர்வு திருமணம் என்பது. ஜமாலன் அவர்களின் பார்வையில் திருமணம் எனும் உடல் ஒடுக்க எந்திரம் என்கிறார். ஏன் திருமணம் என்கிற அமைப்பு தேவைப்பட்டது?. மாறுப்பட்ட பார்வையாக (நன்றி : சுதாகர்) மனிதன் குழுவாக சமூகமாக வாழ தலைப்பட்டப்போது வலுவுள்ளவன் தனக்கு தேவையான இணையை கவர்ந்தான் (உதாரணத்திற்க்கு பழைய அரச அமைப்பில் தனக்கு பிடித்திருக்கிறது என்கிறபட்சத்தில் எந்த பெண்ணையும் அரண்மனைக்கு தூக்கி சென்றுவிடுகிற நிகழ்வுகள்). இதனால் சமூகத்தில் ஏற்ப்படுகிற நிலையற்ற தன்மையை போக்க வேண்டுமானால், இந்த பெண்ணும், ஆணும் கணவன், மனைவி என்கிற மாதிரியான அமைப்பு உருவாக்கப்பட்டது.
இப்படியிருப்பதால் வலுவுள்ளவன் பிறருடைய இணையை கவருதல் தடுக்கப்பட்டது. அது குற்றச்செயலாகவும் சமூகத்தில் அறிவிக்கப்பட்டது. அதுவே "கல்யாணமான பொண்ணுடா..." என்று சொல்லாடலாக சமூகத்தில் உலவுவதை காணலாம்.

அதையே வள்ளுவர்

"பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு."

என்கிறார்.

வல்லவனுக்கு போக எஞ்சியதே மற்றவர்களுக்கு என்பதை தவிர்க்கவே திருமணம் என்கிற கட்டமைப்பியல் உருவாக்கப்பட்டது. அது மனிதனை உடலறவு வேட்கையை வெளிப்படுத்துவதற்க்கான தளமாகவும் வைத்துள்ளது. ஆக மனித சமூகம் தனக்கான ஓழுங்கை தொடர்ந்த பரிணாமத்தின் மூலமே அடைகிறது.

உடலுறவுக்கான வேட்கையை மறுத்தல் (அ) அதை புறக்கணித்து விட்டு வாழ்தல் என்பதை பேசும்பொழுது, (உதாரணமாக விவேகானந்தரை காட்டுவார்கள்...)
இங்கே இயல்பாக சில கேள்விகள் எழுகின்றன...
1. இயல்பான உடல் இயங்கியல் விவேகானந்தருக்கு இருந்ததா (any Physiology disorder)?
2. அவருக்கு ஏதேனும் உயிர்-வேதி சீரற்ற தன்மையிருந்ததா (any bio-chemical disorder)?
3. தன்னுடைய உடல் இயங்கியலை கட்டுப்படுத்த மருந்துகள் உட்க்கொண்டாரா?
இந்த கேள்விகளுக்கு விடைதெரியாமல், அவர் உடலுறவுக்கான வேட்கையை மறுத்துள்ளார் என்பதை மட்டும் முன்னிறுத்துவது தவறான வழிக்காட்டுதல்...

சமூக ஓழுங்கை கட்டமைக்கிற திருமணம் என்பதை மறுத்தால், வலுத்தவனுக்கோ (அ) வலுத்தவளுக்கோ மட்டுமே வாய்ப்பு என்கிற சமூக சமநிலையற்ற தன்மையை அடைவோம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

செவ்வாய், 20 நவம்பர், 2007

விடுமுறை...4 (ஐடி பணியும், பணி சூழலும்...)

விடுமுறை...1

விடுமுறை...2 (கற்றது தமிழ் எம்.ஏ)

விடுமுறை ... 3 (ஐடி வேலைவாய்ப்பு)

முந்தைய இடுகையில் வேலைவாய்ப்பு எப்படிப்பட்டதாகயிருக்கிறது என்பதை பேசினேன்... அதைத்தொடர்ந்து நண்பர்கள் சிலர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள். அவற்றின் உட்ப்பொருள் முக்கியமானது...

ஓரு மனிதனின் சமூக மதிப்பீடு பொருளியல் சார்ந்த சமூக அமைப்பில் அவனுடைய பொருளாதார நிலையை வைத்தேயிருக்கிறது. கடந்த காலக்கட்டங்களில் இவ்வாறான பொருளாதார பாதுகாப்புள்ள வேலைகளுக்கு சமூகத்தில் உயரிய மதிப்பு அளிக்கப்பட்டது. (உதாரணத்திற்க்கு மருத்துவர்கள், மாவட்ட ஆட்சியர்கள், அரசாங்க உயரதிகாரிகள், இன்ன பிற...), அதே தானய்யா, இப்ப ஐடி வேலை பார்க்கிறவனுக்கு பொருளாதார மதிப்பு உயரும் போது, சமூக மதிப்பும் உயருகிறது. அதனால் கீழ்நிலையில் உள்ளவர்கள் ஐடி வேலைவாய்ப்பை பார்த்து பொறாமை படுகிறார்கள்!.

நிற்க, நான் வேலைப்பார்க்கும் சிங்கை நாட்டில் இந்தப்பிரச்சினை எவ்வாறு இருக்கிறது? மற்ற நாடுகளில் வேலை பார்க்கும் நண்பர்கள் அந்த சமூக சூழலில் எவ்வாறு இருக்கிறார்கள்? பொருளாதாரம், சமூக மதிப்பு, ஓட்டு மொத்த சமூகத்தின் உறுதித்தன்மையை நிலைநிறுத்துதல் போன்றவற்றை மையமாக வைத்து பிறகு பேசுவோம்.

இந்த இடுகையில் பணி சூழலைப்பற்றிய உரையாடலை தொடங்குகிறேன். நான் முதலில் Fundamentals of Computer & C ஆகியவற்றை பயிற்றுவிக்கும் பயிற்றுநர் ஆக CSC ல் வேலைபார்க்க ஆரம்பித்தேன். பிறகு Visual Basic Programmer ஆக மாறினேன். பிறகு JAVA Programmer, தொடர்ந்து J2ee, DB2. தற்பொழுது ORACLE & PLSQL server pages என்று கடந்த 8 ஆண்டுகளில் பலமுறை கற்றலும், தொடர்ந்து என்னை இந்த போட்டி நிறைந்த வேலையில் தக்கவைத்துக்கொள்ள தொடர்ந்து படித்துக்கொண்டும் இருக்கிறேன்.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது ஓன்று இருக்கிறது C என்று எடுத்துக்கொண்டால் அது ஓரு குழுவால் BELL lab -ல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பிரிவில் உருவாக்கப்பட்டது. அது பல ஆண்டுகள் நீடித்த ஆராய்ச்சியின் வெளியீடு அதில் 10 சதவிகிதம் கற்று தேறுவதற்க்குள்ளே, மூச்சு திணற ஆரம்பித்துவிடும். இப்படி ஓவ்வொரு மென்பொருள் தொகுப்பும் VB,JAVA போன்றவை நிறுவனங்களில் பல நூறு ஆய்வாளர்களால் உருவாக்கப்படும் வெளியீட்டை தனிமனிதன் ஓருவன் கற்றுக்கொள்வது என்பது எவ்வளவு முயற்சியும், உழைப்பும் தேவை என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். அப்படியும் அதில் முட்டி, மோதி 10சதவிகிதம் தான் கற்க இயலும். இதுல கொஞ்சம் தெரிந்த பயபுள்ளைகள "அவரு அதுல புலி, இவரு இதுல கரடி!" அப்படின்னு டைய இழுத்துவிட்டுக்கொண்டே திரியுறது தான் இங்கன வாழ்க்கை.

இதுல வாடிக்கையாளரின் (client) க்கு தேவையான மென்பொருள் தொகுப்புகளை உருவாக்கும் பணியில் ஈடுபடும் போதும், அந்த வாடிக்கையாளருடைய துறையின் அறிவை பெற வேண்டியது மிக மிக்கியமான வேலை (உதாரணத்திற்க்கு ஓரு வாடிக்கையாளர் வங்கி சேவையை சேர்ந்தவர் என்றால், வங்கி பற்றியும், வங்கி நடவடிக்கைகளை பற்றியும் வேறு படிக்க வேண்டும்). இதை Domain Knowledge என்பார்கள். அந்த க்ளையண்ட் -ன் துறையில் இளங்கலை பட்டம் வாங்கும் அளவுக்கு படிக்க வேண்டியதிருக்கிறது.

"புதுசு! கண்ணா! புதுசு!" அப்படின்னு தினந்தோறும் அச்சடித்த காகிதங்களை மேசை மீது நிரப்பி படி என்பார்கள். படித்து, படித்து நொள்ளை ஆன கண்ணோட வாழ்க்கையை தடவிப்பார்த்துக்கொண்டிருக்கும் தகவல் தொழில் நுட்ப வல்லுநர்களின் மன அழுத்ததின் பீறிடல் தான் சனி/ஞாயிறு (Saturday/sunday fever) கொண்டாட்டங்கள்.

சரி! இப்படியெல்லாம் கடினமாக உழைக்கிற சூழலில் வேலையிடம் எப்படியிருக்கிறது. Ergonomics முறையில் அமைந்த இருக்கைகளோ, மேசைகளோ வழங்கப்படுகிறதா? இல்லையே! இதனால் முதுகெலும்பில் வலி என்று வாழ்க்கையை பறிக்கொடுக்கிற இளைஞர்கள் எத்தனை பேர்! (தற்பொழுது தான் பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்ட நிலையில் HP மட்டும் எர்கானமிக்ஸ் முறையில் பிஸியோதெரபிஸ்ட்களை நியமித்து இருக்கைகள் வழங்க ஆரம்பித்து இருப்பதாக செய்திகள் வருகின்றன).

"Are you fucking there?"
"Do you have balls with you?"

இதெல்லாம் என்னவென்று கேட்கிறீர்களா? இவையெல்லாம் சர்வசாதரணமாக மேனேஜர் என்பவர்களால் கேட்கப்படுகிற கேள்விகள். அப்ப உள்ளறை சந்திப்புகள் (closed door meetings) எப்படி திட்டுவார்கள் என்பதை நீங்களே கற்பனை செய்துக்கொள்ளுங்கள். நாக்கை புடுங்கிக்கொண்டு சாகலாம் அவ்வளவு கேவலமாக பேசுவார்கள். இதில் சிலசமயம் பெண்கள் தப்பித்து விடுவார்கள். ஆண்கள் கதி அந்தோ பரிதாபம் :((

மேற்கத்திய நாடுகளின் வாடிக்கையாளர்கள் மிக மோசம், ஜப்பானியர்களும், கெரியா போன்ற நாடுகளின் வாடிக்கையாளர்கள் கொஞ்சம் பரவாயில்லை என்பது என்னுடைய அனுபவம். மற்றவர்கள் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

மன அழுத்ததால் கடந்த ஆண்டு 100-க்கு மேற்ப்பட்ட தகவல் தொழில் நுட்ப வல்லுநர்கள் தற்கொலை செய்துள்ளார்கள். பலருக்கு மன உளைச்சல் இருப்பதாக ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்படுகிறது. வேலை பளுக்காரணமாக விவாகரத்து வழக்குகள் அதிகரித்துள்ளன.

நீங்கள் அதிகம் சம்பளம் வாங்குவதால் சமூகத்ததை சீரழிப்பதாக சொல்கிற ஐடி காரர்களின் பெரும்பாலோருக்கு பேருக்கு கிட்டப்பார்வை (அ) எட்டப்பார்வை கண்ணாடி மாட்டிய நொள்ளை கண்ணும். 20 சதவிகித பேருக்கு முதுகு வலியும். இரவு நேர (ஆன்டி கிளாக்) வேலை பார்ப்பதால் உயிர்மை கடிகார சிதைவு(Bio-clock disorder) , நரம்பியல் நோயும் வருகிறது. இதற்க்கான மருத்துவ செலவுகளின் தொகை அவர்களுக்கு யார்க்கொடுப்பது.

15 ஆண்டுகள் ஆட்டோகேட் - ல் வேலைபார்த்த எனது சகோதரரின் சேமிப்பு வெறும் 20 லட்சம். அவருக்கு நடந்த தண்டவட அறுவை சகிச்சைக்கு ஆன செலவு 3 லட்சம். அதை தொடர்ந்து இனிமேல் அவர் அந்த வேலையை தொடர இயலாது. அவரின் இனிமேல் ஆகக்கூடிய மருத்துவ பராமரிப்பை எவ்வாறு கவனிப்பது.

நிறைய சம்பாதிக்கிறார்கள் என்பதை மட்டுமே பார்க்கிற மக்களே, உள்ளே இருப்பவனின் இழப்புகளை (உடலளவிலும், மன அளவிலும்) கணக்கு பார்த்தால். எதிர்க்காலத்தில் அவர்களுடைய வாழ்க்கை எவ்வளவு இருள் நிறைந்திருக்கிறது என்பது புரியும்.

தொடரும்...

திங்கள், 19 நவம்பர், 2007

வறட்டு தன்மானமும்.... சமூக அமைப்பும்...

அரச மரத்தடியில் கோயிந்தன் எள்ளும்,கொள்ளும் வெடிக்க உட்கார்ந்திருந்தான். காலையில கடைத்தெரு பக்கம் போனவன் மேலவூட்டு சின்னசாமி க்கிட்ட வாக்குவாதம் ஆகி கைகலப்பு வரைக்கும் போயி, சின்னசாமி நல்லா மொங்கி எடுத்துட்டான். அதனால கோயிந்தன் தன் காயம்ப்பட்ட முதுகை தடவிக்கொண்டே எரிச்சலில் வூட்டு பக்கம் போகமா இங்கனயே கிடந்தான். நல்லா வெயில் ஏறிக்கிட்டேயிருந்தது. ஊருல கொஞ்சம் விவரமான ஆளு நம்ம இராமசாமி அந்த பக்கமா வர...

"ஏம்பி! கோயிந்தா! என்னப்பா காலையில கடைத்தெருவுல தகராறாமே! என்ன விவகாரம்" என்றார்.

தன் காயம்பட்ட முதுகை காண்பித்து...
"ஓன்னுமில்லைண்ணே! இந்த சாமி பயல! ஏதாவது பண்ணணுமுண்ணே! " அப்படின்னு புலம்பினான்.

"இது என்னல கண்ணை கசக்கிட்டு! இப்ப டவுனுக்கு வண்டி வரும் நேரா போலீஸ் ஸ்டேசனுக்கு போ! அவன் மேல கேசு குடு, இடுப்புக்கு மேல காயமுல்ல பட்டிருக்கு நிச்சயம் 307 போட்டு நான்பெயிலப்புல்ல உள்ளற போட்டுருவனுக! உள்ளற கிடந்ததா தான் அவனுக்கு புத்தி வரும்" என்றார்.

"அப்படியாண்ணே நிச்சயமா உள்ளற போட்டுருவாய்ங்களா...?"

"ஆமாப்பா! கொலை முயற்சின்னு அடிச்சுச்சொல்லு என்ன!"

டவுனுக்கு பஸ் பிடித்து பயவுள்ள போலீஸ் ஸ்டேசனுக்கு நடந்தான். கூட வந்தவர் சொன்னான்.

வேண்டாமுண்ணே ஊருல நாலு பேரக்கூட்டி என்ன ஏதுன்னு கேட்டுக்கலாம், இவிங்க கிட்ட போன ஊருவிக்கிட்டு விட்டுவுறுவானுவ... சொல்லுறதக்கேளு!

சும்மா வாப்பா! இராமசாமி சொன்னப்படி அவன உள்ளறப்போட்டாத்தான் மனசு ஆறும்.

உள்ளே நுழைகிறார் கோயிந்தன். வாசலில் ஏட்டய்யா மறிக்கிறார். சட்டை கிழிந்து கொஞ்சம் ரத்தக்கறையோட வந்தா என்ன விவகாரம் என்பதை மோம்பம் பிடித்துவிட்டார்.

"வாய்யா என்ன விவாகரம்! இதே பொழப்பா போச்சு உங்க ஊருக்காரனுவகளுக்கு, என்னய்யா நினைச்சிட்டிருக்கீங்க... இங்கேயிருந்து 30 கி.மீட்டருல்ல ஊரு, நாங்கென்ன இன்ஸ்பெக்டரா வண்டி வச்சிருக்க, இருக்கிற சைக்கிள்ல இங்கேயெல்லாம் எத்தனவாட்டி வரது...!"
அவரு பிரச்சினையை அவர் கொட்டித்தீர்த்தார்.

"யோவ்! ஏட்டு இன்னய்யா சத்தம்!" என்று வந்தார் ரைட்டர்

"முதுகுல அடிப்பட்டதுக்கெல்லாம் 307 போட முடியாதுய்யா! கூப்புட்டு ரெண்டு சாத்து சாத்தி அனுப்பி வுடு!"

நம்ம கோயிந்தன் விடாப்புடியா கொலைமுயற்சியில் நிற்க...
ஏட்டும், ரைட்டரும் கலந்து பேசி...

"சரி! சரி! ஓரு 2000 த்த கொடு நான் ரைட்டருக்கிட்ட பேசி! எப்.ஐ.ஆர் போடச்சொல்றேன்!"
"ஏட்டய்யா! எதுக்கு 2000"

"யோவ்! இங்கேயிருந்து உங்க ஊருக்கு எப்படி போறது காரு எடுக்கணும்!

அப்புறம் ரைட்டர கவனித்தால் தான் 307 போடுவார் அப்புறம் பார்த்துக்கப்பா!"

இரண்டாயிரத்த கொடுத்து ரைட்டர் 307 கேசு எழுதின பிறகு, கார் எடுத்து ஏட்டய்யா கூட்டிக்கினு ஊருக்கு வந்தால்...

சின்னசாமி வூட்ல இல்லை... ஏட்டய்யா அவன் பெண்டாட்டிய மிரட்டி வந்தவுடன் ஸ்டேசனுக்கு வரணும் அப்படின்னு சொல்லிட்டு கிளம்பிட்டார்...

கோயிந்தனுக்கு இருப்புக்கொள்ளவில்லை, அப்பாடி சின்னசாமி உள்ளற போனாத்தான் தன்னோட மானமே காப்பாற்றப்பட்டதாக கனவு காண ஆரம்பித்தான்.

தொடரும்...

நன்றி கரு : சுதாகரன்

ஞாயிறு, 18 நவம்பர், 2007

வெள்ளை/மஞ்சள்/சிவப்பு/கருப்பு/அரக்கு (நன்றி : இராம.கி) தோலின் நிறத்தின் மீது கட்டமைக்கப்பட்ட பிம்பங்கள்...!

நண்பர் ஜமாலன் உடல் அரசியல் பகுதியை எழுதிக்கொண்டிருந்தபொழுது வாசிக்க ஆரம்பித்தவுடன் அப்பப்ப தலையில் ஓன்றொன்றாக விழுந்துக்கொண்டிருந்த முடி, மண்டை சூட்டில் கொத்துக்கொத்தாக விழ ஆரம்பித்தது :)) ( ஏன் இப்படி மொட்டை தலை மாதிரி முடிவெட்டி இருக்கிறீர்கள் என்று கேட்டீர்களே கோவி, ரகசியம் புரிகிறதா நீளமா இருந்தா முடி கனத்தில் மிஞ்சமிருக்கும் முடியும் கொட்டிவிடும்), சரி நமக்கு பிடித்த, ரசித்த வரிகளை தொகுத்து மின்னஞ்சலில் நண்பர்களுக்கு அனுப்பினால், அவர்கள் எனக்கு ஏதோ ஆகி விட்டதாக துக்கம் விசாரிக்கிறார்கள். அப்படி போயிட்டிருக்கு கதை... சரி! ஜமாலன் அவர்களாவது இந்த தோலை பற்றிய அரசியலை எழுதுவார் என்று பார்த்தால், ஓன்றும் நடக்கிற மாதிரி தெரியலை...

சரி! நமக்கு தெரிந்த அறிவியலை வைத்துக்கொண்டு, இது நிறமி செல் அப்படின்னு ஆரம்பிக்கலாம் என்றால்... வவ்வாலை நினைத்தால் பயமாகயிருக்கிறது, எங்கேயாவது தேடிப்பிடித்து படித்துவிட்டு, இங்கன வந்து தலைகீழாக தொங்குவார்.

அட நம்ம பைத்தியக்காரனாவது சிலருக்கு வைத்தியம் பார்ப்பார் என்றால், அவர் முகவரியை தொலைத்துவிட்டார் போலிருக்கு தமிழ்மணம் பக்கமே காணோம்.

அப்படியே யோசித்துக்கொண்டிருந்த வேளையில் தான், நமக்கு தெரிந்த தோல் அரசியலை நிகழ்வுகளாக சொல்லலாம் என்று நினைத்தேன்.

ராஜீவ்காந்தி ஓரு முறை அறந்தாங்கி வழியாக காரில் பயணம் செய்தபொழுது, சாலையோரத்தில் நின்ற ஓரு பெண்மணி சொல்லியது "என் ஓட்டு இந்தபுள்ளைக்கு தான், கையப்பாரேன் ரோசாப்பூ கலருல தகதகன்னு இருக்கு!" , இப்படியாக அன்றையிலிருந்து இன்றைய நாளது வரை முகத்தோற்றமும், உடல் தோலின் நிறமும் அரசியலில் மிகமுக்கிய பங்கு வகிக்கின்றன.

மஞ்சக்கலரு எம்.ஜி.ஆரும், சிவப்பு கலரு ஜெயலலிதாவும் இந்த தோலை வைத்துக்கொண்டு தமிழக அடிமட்ட மக்களை ஏமாற்றிய வரலாற்றை மீண்டும், மீண்டும் நாம் வாசித்துக்கொண்டு தான் காலில் விழுந்துக்கிடக்கிறோம்.

சிவப்பு தோலின் அரசியலை முருகன்-வள்ளி, தெய்வானை வரலாற்றின் ஊடாக மிகத்தெளிவாக புரிந்துக்கொள்ளலாம். சிவப்புகலரு தெய்வானை பொண்டாட்டி ஆகி, உண்மையான பொண்டாட்டி வள்ளி சின்ன வூடு ஆக்கப்பட்ட வரலாறு மட்டுமல்ல த்ராவிட மக்களின் சமூக, அரசியல் சிதைக்கப்பட்ட வரலாறு முழுக்க இந்த சிவப்பு கலரு கலந்தேக்கிடக்கிறது.

மிக ஆழமாக அரசியல் பேசுகிற நண்பர் ஓருவர், தான் சந்தித்த வெள்ளைக்காரனை பற்றிச்சொல்லும் போது, வெள்ளைக்காரன் ஏன் பொய் சொல்ல போறான் அப்படிங்கிறார்?வெள்ளை நிறம் கொண்ட யாரும் பொய் பேச மாட்டார்கள் என்கிற பிம்பம் அவருக்கு எங்கிருந்து கிடைத்தது?

நம்ம பய புள்ளைக பொண்ணு பார்க்க போனாக்கூட அவனுக்கு இப்படிதான் சொல்கிறார்கள் "பொண்ணு சுண்டினா இரத்தம் வரும் அப்படி ஓரு கலரு", நம்ம பையன் சுண்டி,சுண்டி ப்ளட்பேங்க் வைக்க போறான என்ன? தெரியலையேப்பா...!

இந்த அரசியலின் நீட்சி இன்றைக்கு பெண்களுக்கு அழகு என்பது வெள்ளை/மஞ்சள்/சிவப்பு நிறத்தோலே என்கிற பிம்பம் கட்டுமானமாக சமூகத்தில் நிலவுகிறது.

ட்ாரிக் முல்லா ஓரு மலேசியன், சில கோடிகள் அளவுக்கு மனித வள (manpower) வணிகத்தில் தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, பங்களா தேஷ் போன்ற இடங்களில் ஏமாற்றியவன். இவனை மலேசியாவிலிருந்து சென்னைக்கு அழைத்து வந்து, தான் ஏமாந்துப்போன பணத்தை திரும்ப வாங்க நண்பர் ஓருவர் முயற்சித்துக்கொண்டிருந்தார்.

அப்போது இவனுக்கு பாதுகாப்பிற்க்காக பட்டுக்கோட்டைக்கு அழைத்து வந்தார் நண்பர். அங்கே ஓர் அறையில் தங்க வைத்திருந்தோம். அதுவொரு விடுதி. அதன் கீழே ஓரு பெட்டிக்டை இருந்தது.

ஓரளவுக்கு பிரச்சினை தீர்ந்தவுடன் சென்னைக்கு கிளம்பிய போது அந்த கடைக்காரர் வந்து நின்றார். கிட்டதட்ட 900 ரூபாய்க்கு மேலாக கடனாக இவனுக்கு சிகரெட் கொடுத்துள்ளார். நான் கேட்டேன் ஏன்னய்யா 25 வருடங்களாக இதே ஊரில் இருக்கிற நான் 1 ரூபாய் அப்புறம் தருகிறேன் என்றால் முகத்தை காட்டுகிற நீ! எப்படிய்யா! இவனுக்கு இவ்வளவு ரூபாய்க்கு சிகரெட் கொடுத்த என்றால், வெளியூரு வெள்ளைக்காரர் ஏமாற்றமாட்டார் என்கிற நம்பிக்கை என்றார்!

நான் இப்படித்தான் சொல்லிவிட்டு வந்தேன்! அப்படியாங்க! அவன் ஏற்கனவே பல கோடி பல பேருக்கு கொடுக்கணும், எல்லா பயபுள்ளைகளும் வெறியோடயிருக்காங்கய்க! நீயும் அந்த லிஸ்ட்ல சேர்ந்துக்க!

தோலின் நிறத்தால் நடக்கிற சமூக, அரசியலை பெரிய தலைகள் யாராவது எழுதுவார்கள், நமக்கு தெரிந்ததை நான் மொக்கை போட்டிருக்கேன். நான் ரெடி அடுத்த படத்துல இன்னும் கொஞ்சம் சிவப்பான கதாநாயகியின் மீதான தேடலை தொடர...!

செவ்வாய், 13 நவம்பர், 2007

பேசுவதும், எழுதுவதும் தொழிலா?

பரபரப்பு தலைப்புகள் வைத்து... மயிர்புடி சண்டை நடத்திக்கொண்டிருந்த பதிவர்களை கண்டு கடுப்பாகிய தமிழ்மணம் 'சூடான இடுகைகள்' பகுதியை தூக்கி கடைசில் போட்டார்கள். முகப்பிலேயே பரணை காட்டினார்கள்... அப்படி பரணில் கடந்த வாரம் நான் வாசித்த ஓர் இடுகை உஷா எழுதிய 'எழுத்துவியாபாரிகள்'...

அதில் அவர் எழுதிய கருத்தாக்கம் என்பது அவருடைய நிலைப்பாடாகவே கொள்ள வேண்டும். ஏனென்றால் பதிவுலகில் எழுதி கூட்டம் சேர்த்து அதன்மூலம் புகழடைந்து வெகுமக்கள் அச்சு ஊடகத்திற்க்கு எழுதச்செல்ல வேண்டும் என்பது அவரின் இலக்காக பல இடங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார் எழுத்தின் ஊடாக! , அப்பதானே நாலுகாசு பார்க்கலாம் :( , பதிவில் எழுதிக்கொண்டிருக்கிற பலருக்கு இதே எண்ணவோட்டம் இருக்கலாம். பரபரப்பாக எழுதுவது, தனக்கென்று ஏதாவது ஓரு இயத்தில் அடையாளம் சேர்த்துக்கொள்வதன் மூலம் கூட்டம் சேர்ப்பது, உணர்ச்சியில் கொப்பளித்து பொங்கி வெடிப்பது!, குழுவாக சேர்ந்து தனக்கு விளம்பரம் தேடுவது, இதன் எல்லாவற்றின் இலக்கு ஊடகத்துறை, அங்கே நகர வேண்டும்... அதன்மூலம் காசு பார்க்க வேண்டும், தன்னை எழுத்தாளர் என்று அறிவித்துக்கொள்ள வேண்டும் என்கிற அடிப்படை இலக்கு உள்ளுக்குள் இருக்கிறது. இதனால் நமக்கு எந்த வருத்தமோ (அ) அவர்களின் மீது தனிப்பட்ட வெறுப்போ கிடையாது.

ஆனால் பேசுவதும், எழுதுவதும் தொழிலா? என்கிற கேள்விக்கு என்னுடைய பார்வையிலிருந்து சில விளக்கங்கள் தர வேண்டும் என்று இங்கே முயற்சிக்கிறேன். அதில் உங்களுக்கு வேறு பார்வைகள் இருக்கலாம்! தயவு செய்து பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

வனங்களில் விலங்குகளாய் திரிந்துக்கொண்டிருந்த மனிதன், முதலில் விலங்குகள் மாதிரியே ஓலிகள் மற்றும் ஓசைகள் மட்டுமே எழுப்பத்தெரிந்திருந்தான். அவனுடைய தொடர்ந்த பரிணாம வளர்ச்சியில் அடைந்த இடமே ஓலிகளுக்கும், ஓசைகளுக்கும் வரி வடிவம் கண்டான் அவற்றை எழுத்துக்கள் என்கிறோம்.

என் தந்தை ஓர் செய்தி சொன்னார் மனித உயிரின் முதல் ஓலி 'அ' என்பதும், உயிர் வெளியேற துடிக்கும் மெய்யின் கடைசி ஓலி 'ம்' என்பதும் ஆகும் என்பார். அதனாலேயே 'அம்' என்கிற சொல் மனித உயிருக்கு வடிவம் தருகிற தாயை குறிக்கிறது என்பார். (சோதித்து பாருங்கள் மிகுந்த நோயுற்று உயிர் துடிக்கும் உடலை தொடுங்கள், அவர் மிகுந்த முனகலாக 'ம்' என்று என்று ஓலி எழுப்புவார்). அவ்வளவு நுட்பமானது ஓலிகள்.

எழுத்துக்கள், வார்த்தைகள் எல்லாம் உருவாகிக்கொண்டிருக்கிற காலப்பயணத்தில், மனிதன் பேச முயற்சித்துக்கொண்டிருந்தான். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறான். பேசினான், பேசுகிற சொற்களுக்கு பொருள் கண்டான். பரிணாமம் அடைந்துக்கொண்டேயிருந்தான்.

சமகாலத்தில் எல்லா மனிதர்களுமே பேசினார்கள், எல்லோருக்குமே பேச தெரிந்திருந்தது. ஆனால் எங்கேயோ ஓரிடத்தில் தான், நான் பேசுவதை நீங்கள் கேட்க வேண்டும் என்கிற நிலைக்கு மனிதர்களை கொண்டு போனார்கள். அது எப்படி நடந்தது?

அது தான் மனிதன் சமூகமாகவும், குழுவாகவும் வாழமுயற்ச்சித்தப் போது ஏற்ப்பட்ட நிலை. வலுவுள்ள மனிதன் மற்றவர்களை ஆளுமை செய்ய முயற்சித்தான். அப்போது அவனுக்கு தெரிந்தது எல்லாம் உடல் வலுவால் சண்டையிட்டு மற்றவர்களை வெற்றிக்கொள்வது. சமூக வளர்ச்சி அதிகரித்து மனிதர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் போது எல்லோரையும் சண்டைப்போட்டு வெற்றிக்கொண்டு தன்னை தலைவனாக நிலைநிறுத்திக்கொள்வது அவனுக்கு கடினமாக தெரிந்தது.

அதனாலேயே அவன் மனித இனத்தின் பரிணாமம் பேசுவது அதையே பயன்படுத்தினான். அறிவிப்பாளர்களை நியமித்தான் "இவர் தான் உங்கள் தலைவர், கடவுளின் வடிவம்!" இதையே தொடர்ந்து பேசு என்று பணித்தான். தொடர்ந்து இதையே மனிதச்சமூகத்தில் பேசினார்கள். இயல்பாக சிந்திப்பதை தடை செய்து, எதிர்ப்பை மழுங்கடிப்பது!. இதில் பெரிய அளவில் வெற்றிக்கிட்டியது. இப்பொழுது தலைவனானவன் மிகக்குறைந்த எதிர்ப்பை எளிதாக வெற்றிக்கொள்ள முடிந்தது. (இதையே உளவியலில் தொடர்ந்து பேசுவதன் மூலம் ஓர் கருத்தை சிந்தனையில் ஏற்றுவது என்பார்கள்). கிராம வழக்கில் "ஏலேய்! அவன் விவரம்! பேசி, பேசியே ஆள கவுத்துடுவான் பார்த்துக்க! " என்பார்கள்.

நாளடைவில் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்க்கு பேச்சு என்பது மிக முக்கியமான ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது. அப்படி அதிகாரத்திற்க்கு ஆதரவாக பேசுகின்றவர்களுக்கு மிகப்பெரிய அளவில் பொன்னும்,பொருளும் வழங்கப்பட்டது. அதுவே பேசுவது என்பதை தொழிலாக மாற்றியது.

பேசுவது என்கிற ஆயுதம் அதிகாரத்தை மறுப்பவர்களுக்கு பயன்பட்டது. அதனாலயே பல்வேறு சமூக அமைப்பில் பேச்சுரிமை மறுக்கப்பட்டதை வரலாறாக படித்திருக்கிறோம். நடைமுறையில் தற்போது சிங்கையில் பொதுக்கூட்டம் போட்டு பேசுவது என்பது அரசு அதிகாரத்திடம் ஓப்புதல் வாங்கிய பிறகே நடைபெற முடியும். அதுவும் என்ன பேச போகிறீர்கள் என்பதை முன்பே எழுதிக்கொடுத்து அனுமதி வாங்கியே பேச முடியும்.

ஆக மனிதனின் இயல்பான பரிணாமம் ஆன பேசுவது என்பது அதிகாரத்திற்க்கு பயன்படுத்தப்பட்ட போது தொழிலாக மாறிப்போனது. அதை இன்றைக்கும் பார்க்கலாம் ஓவ்வொரு அரசியல் கட்சியும் பேச்சாளர்களை வைத்திருப்பார்கள், அவர்களின் வேலை மனிதர்களின் சிந்தனையில் அவர்களுடைய கருத்தை பேசுவதன் மூலம் ஏற்றி, அதிகாரத்தை கைப்பற்றுவது தான் நோக்கம்.

தொடரும்...

திங்கள், 12 நவம்பர், 2007

விடுமுறை ... 3 (ஐடி வேலைவாய்ப்பு)

விடுமுறை...1

விடுமுறை...2 (கற்றது தமிழ் எம்.ஏ)

நான் சிங்கைக்கு வருவதற்க்கு முன்பு வேளச்சேரியில் நண்பர்களுடன் ஓர் வீட்டில் சில நாட்கள் தங்கி இருந்தேன். அந்த வீட்டின் வாடகை 2500 எல்லாம் சேர்த்து மாதம் 3000 வரும். அங்கே இருந்த நண்பர்கள் வெவ்வேறு பணியில் இருப்பவர்கள், சிலர் வேலை தேடிக்கொண்டிருந்தார்கள். அவர்களின் மாத வருவாயின் சராசரி 3000 தாண்டாது. ஐந்தாறு போராக இருந்தார்கள். இது 2005 மார்ச் வரையிலான காலக்கட்டம். நான் சிங்கைக்கு வந்து சில மாதங்கள் கழித்து நான் தொலை பேசிய போது அருகாமையில் இருக்கிற வீடு விலைக்கு வருகிறது நீ வாங்கு வசதியாகயிருக்கும் என்றார்கள். எவ்வளவு விலை? என்றேன் 27 லட்சம் சொல்கிறார்கள் என்றார்கள். வேண்டாம்ப்பா இப்போ முடியாது. பிறகு பார்க்கலாம் என்று சொல்லி விட்டுவிட்டேன். ஓர் ஆண்டு கழித்து சென்னைக்கு செல்வதற்க்கு ஆயத்தமான போது, நண்பர்களை தொடர்புக்கொண்ட போது அவர்கள் அங்கேயில்லை என்றார்கள் ஏன்? என்னவாயிற்று? என்றேன். அந்த வீட்டிற்க்கு அடுத்த வீட்டை 10,000 ரூபாய் வாடகைக்கு யாரோ ஐடி பசங்களுக்கு விட்டிருக்கிறார்கள். உடனே இந்த வீட்டு ஓனரும் 10,000 கொடுங்க இல்லையின்னா காலி செய்யுங்க என்று சொல்லியிருக்கிறார். வேறு வழியில்லாமல் காலிச்செய்து விட்டு கிளம்பிருக்கிறார்கள். சரி முன்னாடி விற்பனைக்கு வந்த வீடு என்னவாயிற்று என்று விசாரித்தால் அதை ஓன்னேகால் கோடி என்று விலை சொன்னார்கள்!

இந்த அதிர்ச்சி ஓர் ஆண்டுக்குள் சமூகத்தில் ஏற்ப்பட்ட பொருளியல் வேறுபாட்டுக்கு தகவல் தொழில்நுட்ப துறைதான் காரணம் என்கிற பிம்பத்தை உருவாக்கி விட்டு, மிகப்பெரிய சிந்தனை தேக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

துறையின் உள்ளேயிருப்பவர்களும், வெளியே சமூகமும் மிக மேசமான சிந்தனைப்போக்கில் இருக்கிறார்கள். இவன்களால் தான் விலையேற்றம் என்கிற குற்றச்சாட்டும். என்னய்யா மிஞ்சுது உங்களை விட சில ஆயிரம் மட்டுமே அதிகம் என்கிற பதில் ஆதாங்கமும் மேலும், மேலும் வலுக்கிறதே தவிர... பிரச்சினை என்ன என்பதை பற்றி ஆய்வுச்செய்ய யாருக்கும் மனம் இல்லை.

முதலில் தகவல் தொழில்நுட்பத்தின் வேலைவாய்ப்பு பற்றிய சரியான அறிவின்மையை ஓத்துக்கொள்ள வேண்டும். பலருக்கு இதில் வேலைப்பார்ப்பவர்களின் உண்மையான நிலை தெரியாது. நான் என்னையும், என்னை சுற்றியுள்ள அமைப்பையும் உங்களுக்கு சரியான அறிவை ஏற்படுத்துவதன் மூலமே உங்களுக்கு என்னுடைய பிரச்சினையை பற்றிய உண்மை நிலை தெரியும். இங்கே தகவல் தொழில்நுட்ப துறையில் வேலைப்பார்ப்பவர்களுக்கு வக்காலத்து வாங்குவதல்ல என் நோக்கம்.
பிரச்சினைகளை புரியவைப்பதற்க்கான முயற்சி அவ்வளவே!

இங்கே நேரிடையாக ஓரு நிறுவனத்தில், அதனுடைய தகவல் தொழில்நுட்ப துறைக்கு வேலைக்குச்செல்பவர்கள் (உதாரணத்திற்க்கு BSNL - அதனுடைய ஐடி துறைக்கு வேலைக்கு ஆள் எடுப்பது போல்..) வெறும் 2 சதவிகிதம் மட்டுமே. இது இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் இதுதான் நிலை. (அப்ப நீங்களெல்லாம் எப்படிய்யா வேலை பார்க்கிறீர்கள் என்று கேள்வி கேட்பீர்களே!)

கீழே உள்ள பட்டியல் சில விளக்கங்கள் தரும்.
IT Professional = தகவல் தொழில்நுட்ப வல்லுநர் = ஓப்பந்த கூலி தொழிலாளி
Consultancy = தகவல் தொழில்நுட்ப நிறுவனம் = மாமாக்கள்
Client / Customer = பயனாளர் = முதலாளி (அ) ஏமாற்றுக்காரன்

ரொம்ப சிம்பிள் ஓரு பாலியல் தொழில் போல மணிக்கணக்கில் விலை நிர்ணயம் செய்யப்பட்ட தொழிலாளி (Man Hour (or) Man Day) , முதலாளிகளுக்கு ஏவல் செய்ய நிர்ணயிக்கப்படுகிறான். அதை கன்சல்டன்ஸி என்கிற அமைப்பில் இருக்கிற மாமாக்கள் வாங்கி, தங்களுக்கு வேண்டியதை சுருட்டிக்கொண்டு மிஞ்சும் சில்லறையை தொழிலாளிக்கு கொடுக்கிறான். (அப்படியே ஓரு விலை நிர்ணயம் செய்யப்பட்ட பெண் எப்படி பொருளீட்டுகிறாளோ அதை போலவே!)

இந்த மாமாக்களில் பெரிய மாமாக்கள் (TCS,CTS, Polaris, etc...) உண்டு. சிறிய மாமாக்களும் உண்டு.

அயோக்கியதனத்தின் கூடாரமான முதலாளித்துவமும், அதன் அடிவருடிகளும் என்ன செய்வார்கள். எப்படி ஏமாற்றுவது? என்பது தான் அடிப்படைக்கொள்கையாகயிருக்க முடியும். அப்படிப்பட்ட முதாலளித்துவ நாடுகள் தான் தகவல் தொழில்நுட்ப துறை வேலைவாய்ப்புகளை வழங்கிக்கொண்டிருக்கின்றன.

தங்களுடைய நாட்டில் ஏற்ப்படும் பொருள் செலவை குறைத்து, உலகின் வேறெங்கேயோ கிடைக்கிற மனிதவளத்தை சுரண்டி, தங்களை வளர்த்துக்கொள்வது.

இந்த துறையில் சில தேவைகள் ஏற்ப்படும் போது தேவைப்படும் மனிதவளத்தை இந்தியா, சீனா மாதிரியான நாடுகளிலிருந்து சுரண்டுகிறார்கள். தேவை தீர்ந்தவுடன் அவர்களை அதோகதியாக விட்டுவிடுவார்கள். (உதாரணத்திற்க்கு கணினி மயமாக்கல் அதன் உயரெல்லையை 2000-ம் ஆண்டு தொட்டப்போது ஏற்ப்பட்ட வேலைவாய்ப்பு இழப்பு (Systemized was touched its saturation point)).

இப்போதிருக்கும் வலைப்பின்னலில் தகவல் தொழில்நுட்பமும் அதன் உயரெல்லையை தொடும்போது (Networked Systems will touch its saturation point) மீண்டும் வேலைவாய்ப்பு இழப்பு இருக்கும் (இது எதிர்பார்க்கபடுகிற ஆண்டு 2011).

இப்படி நிரந்தரமற்ற வேலைவாய்ப்பு என்கிற உண்மையை முதலில் உணர்ந்தால் மட்டுமே. தொடர்ந்து பேசுவது சாத்தியமாகும்.
தொடரும்...

குறிப்பு : விவாதத்தின் தொடக்கமாக வேலைவாய்ப்பு எப்படிப்பட்டதாக இருக்கிறது என்று பேசியிருக்கிறேன்.. மற்றவை தொடருவேன். இதை ஓட்டிய விவாதத்தை வரவேற்கிறேன்.

விடுமுறை...2 (கற்றது தமிழ் எம்.ஏ)

விடுமுறை...1

கற்றது தமிழ் எம்.ஏ. பற்றிய விவாதம் தொடங்கியது என்பதை விட அதில் சுட்டப்பட்ட தொழில்நுட்ப துறையில் பணியாற்றிக்கொண்டிருக்கும் மனிதர்கள் என்கிற நிலையில் எங்களுடைய விவாதம் மையம் கொண்டது.

படத்தை பொறுத்த வரை கரு என்பது பன்முகத்தன்மையுடன் இருந்தது. படத்தின் மைய கதாபாத்திரம் உளவியல் பாதிப்படைந்த நபராக கட்டமைக்கப்பட்டதுபோல் ஓரு வகை தன்மையும். சமூகத்தின் வர்க்க ஏற்றதாழ்வுகளால் பாதிப்படையும் மனிதனாக இன்னொரு தன்மையும் கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கிறது.

கதையின் கரு பல மையங்களில் சுழன்றதாலே, கடுமையான விமர்சனத்திற்க்கு உள்ளதான எடுத்துக்கொள்ளலாம். கடந்த காலங்களில் இயக்குநர் விஜயன், தற்போது இயக்குநர் பாலா போன்றோர்... உளவியல் சார்ந்த திரைப்படங்களை வெற்றிகரமான படைப்பாக செய்திருக்கிறார்கள். அப்படி இந்த படமும் உளவியல் சார்ந்த படமாக அன்புக்கு ஏங்கும் ஓரு இளைஞன் என்கிற மாதிரியாக பயணப்படுகிறது... ஆனால் ஆங்காங்கே இந்த மையத்தில் இருந்து விலகி நன்கு படிக்கும் மாணவன் தமிழ் படிக்கிறான், அவன் மீதான சமூக தாக்கங்கள் என்று வேறு மையத்திற்க்கு தாவி பயணப்படுகிறது... அங்கேயும் தொடராமல்... திடீரென தகவல் தொழில்நுட்ப துறையால் ஏற்ப்பட்ட வர்க்க வேறுப்பாட்டை மையமாக கொண்டு சிறிது நேரம் சுழல்கிறது... இப்படி ஓரே களத்தில் பல்வேறு மையங்களில் கதையை சுழலவிட்டதால் என்னதான்ய்யா சொல்ல வருகிறார் இயக்குநர் என்று பார்ப்பவர்களுக்கு எரிச்சலை தருகிறார்.

ஊடகத்தின் வழியாக நாயகன் கொலைகளுக்கு விளக்கம் கொடுப்பதும், அதைப்பற்றிய பொதுமக்களின் கருத்துகளும் ஓற்றை வரி குற்றச்சாட்டாக தகவல் தொழில்நுட்ப துறையை நோக்கி நீண்டது இயக்குநரின் தெளிவற்ற தன்மையை காட்டுகிறது.

இயக்குநரின் சிந்தனையில் சமூக அக்கறையும், மனிதர்களை பற்றிய உளவியல் பார்வையும் இருக்கிறது, ஆனால் படைப்பு வெளியில் வரும்போது திடீர், திடீரென வேறு, வேறு மையங்களில் நகரும் போது பார்வையாளனை தேவையற்ற வெறுப்புக்குள்ளாக்குகிறார்.

நல்ல படைப்பிற்க்கான முயற்சி...

இந்த திரைப்படத்தை தொடர்ந்து எங்கள் துறைச்சார்ந்த குற்றச்சாட்டுகளை நாங்கள் விவாதித்தோம்... அதன் தொகுப்பு அடுத்து....

ஞாயிறு, 11 நவம்பர், 2007

வருக... வருக... அறிமுகம் - பசிலன்!

http://pasilan.blogspot.com/

தமிழ்மணத்தில் இணைத்திருக்கிறார். இன்னும் தமிழ்மண நிர்வாகம் இணைப்புக்கொடுக்கவில்லை. இருப்பீனும் நண்பரை வரவேற்ப்போம்!.
பசிலன்... சொல்லே சொல்லும் இவரின் வாசிப்பின் வீச்சை, மிக நீண்டக்கால நண்பர்... பதிவுலக்கிற்க்கு வருகிறார்.

மிக ஆழ்ந்த அவதானிப்பின் ஊடாக அரசியலை அணுகுபவர். இவருடன் உரையாடும் போது சரியான தகவல்கள், புள்ளிவிவரங்கள் இல்லையென்றால் அமைதியாக இருப்பது நலம்! இல்லையென்றால் வாங்கிக்கட்டிக்கொள்ள முடியாது!.

இந்திய பார்ப்பானீய அரசியலின் இருண்டப்பக்கங்களை தனக்கே உரித்தான நக்கலுடன் கிழிப்பார் என்கிற எதிர்ப்பார்ப்புடன்....
வருக... வருக....

விடுமுறை...1

விடுமுறை என்பது மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கிறது. அதுவும் மிகவும் அளவெடுத்த ஆண்டுக்கு 8 அல்லது 9 நாட்களே அரசு விடுமுறை என்கிற நாட்டில், விடுமுறைக்கான காரணத்தில் நமக்கு முரண் இருந்தாலும் (தமிழர்களே இந்தியாவின் அடையாளமாகயிருக்கிற, தமிழ் ஆட்சி மொழியாக இருக்கிற நாட்டில், தமிழர்களின் விழா பொங்கலுக்கு விடுமுறை கிடையாது ஆனால் ஆரிய விழாவான தீபாவளிக்கு விடுமுறை இதுவே முரண்).

விடுமுறை கிடைத்ததே என்கிற மகிழ்ச்சியில் காரணத்தை மறந்து விட்டோம். அதிரும் அதிகாலை நேர எச்சரிக்கை ஓலிகள் கிடையாது (அறையில் விடியற்காலை 6 மணியிலிருந்து அடிக்கும், ஆனாலும் விழிப்பிற்க்கு மட்டும் 7.30 க்கு மேல் தான் மனம் இடம் கொடுக்கும், அப்படியும் நாள்தோறும் நேரக்காட்டிகளை அமைப்பதற்க்கு தவறுவது கிடையாது.). விரைவான காலை நேர ஆயத்தங்கள், தவற விடுகிற மின்சார ரயில்கள் எதுவும் கிடையாது. இதயம் மென்மையாக துடிக்கிறது, இன்றைக்கு விடுமுறை. அதிகாலை 11 மணிக்கு மேலாக எழுந்தால் நலம் என்கிறது மனது.

சென்னையில் இருந்த காலத்திலிருந்தே விழாக்கள், விடுமுறைகள் என்றால் நண்பர்கள் எல்லோரும் அறையில் ஓன்றுக்கூடி கொண்டாடுவது தான் வழக்கம். அதிலும் குறிப்பாக தொலைக்காட்சி, சிடி (தற்பொழுது டிவிடி) இருக்கும். பார்க்காத படங்கள், பார்க்க வேண்டும் என்று குறித்து வைத்த படங்கள் என்று எல்லாம் வந்துவிடும். சில ஆண்டுகளுக்கு முன்பு அது நான்கு, ஐந்து நாட்கள் வரை நீளும்.

எந்த கேள்வியுமற்று வேண்டியதை உண்டுக்கொண்டும், விரும்பியதை பார்த்துக்கொண்டும், அரட்டை அடித்துக்கொண்டும் சில நாட்கள் பூட்டிய அறைக்குள்ளே வாழ்வது ஓரு மயக்கமான வாழ்க்கை, அது மிகவும் மனதுக்கு நெருக்கமானது.

இந்த ஆண்டும் அப்படித்தான், ஆனால் பழைய நண்பர்களில் சிலருக்கு புதிதாய் திருமணமாகி இருந்தது. அவர்கள் தங்களுடைய துணைவியிடம் அனுமதி வாங்கிக்கொண்டு வருவதற்க்கே மதியம் 3 மணி ஆக்கிவிட்டார்கள். ஓருவர் நான் வரலையப்பா என்றார் (பாவம் அவருக்கு என்ன துன்பமோ!:))). அந்த சகோதரிகள் எனக்கு நிறைய புகழ்மாலைகள் தந்திருப்பார்கள், ஆனாலும் நானென்ன புகழுக்காக அலைபவனா! இல்லை அதற்க்காக கடமை மறப்பவனா!

சென்னை வரை நமக்கு அறிமுகமின்றி இருந்த மது, சிங்கைக்கு வந்த பிறகு ஓன்று கூடல் நிகழ்ச்சிகளில் சிறிது சிறிதாக அறிமுகமாகி, இன்றைக்கு தவிர்க்க இயலாத வாழ்வியலாக மாறியிருக்கிறது. அப்படியாக பார்லியில் வடித்த நீர் சில டஜன்களுடன் இந்த விடுமுறையும் தொடங்கியது.
புதிதாய் சந்தைக்கு வந்த சில மொக்கை படங்கள் இரவெல்லாம் ஓடிய பிறகு, தீபாவளி மதியம் "கற்றது தமிழ் எம்.ஏ..." பார்க்க தொடங்கினோம். அதன் தொடர்ச்சியாக சன் தொலைகாட்சி பட்டிமன்றம். தொடர்ச்சியாக வேறு சில நிழற்படங்கள் என்று முழு நீளமாக ஓடிக்கொண்டேயிருந்தது... விடுமுறை நாட்கள்.

இதில் மிகப்பெரிய விவாதமாக பட்டிமன்றமும், கற்றது தமிழ் எம்.ஏ வும் பல மணி நேரங்கள் நீடித்தது...
தொடரும்...

புதன், 7 நவம்பர், 2007

அடுக்களை முனகல் அரசியலை விட்டொழி!

எழுத்தின் ஊடாக உள்ளடி அரசியல் செய்வது... குறிப்பாக ஓரு தளத்தில் நின்று அரசியல் பேசுகிறவரை எதிர்க்கொள்ளாமல், அப்புறமாக எங்கெல்லாம் சந்துக்கிடைக்கிறதோ அங்கெல்லாம் சிந்து பாடுவது. அயோக்கியதனத்தின் உச்சக்கட்டம் அங்கேதான் ஆரம்பமாகிறது. ஆண்டாண்டு காலமாக மனித சமூகத்தின் உரிமைகுரல்வளையை நசுக்குவதில், அதிகாரவர்க்கத்தின் அதிகாரத்தை விட உனக்காக பேசுகிறேன் என்று உறவாடி கெடுத்த கோடாரி கொம்புகள் பற்றி வரலாறு நெடுக நடந்தவற்றை வாசித்தது மட்டுமல்ல... வாழ்க்கையின் ஊடாக அனுபவத்தையும் சேகரித்தே வைத்திருக்கிறேன்.

எதையும் மறுப்பது என்பது நோக்கமல்ல! இந்த இயங்கியலின் மையம் என்ன? என்கிற வினாவின் விடை தேடும் முயற்சி. மையமின்றி பரபரப்பாய் இயங்கும் போதெல்லாம் இது எதற்க்கானது என்பதை அடையாளப்படுத்துதல்.

நன்றி

செவ்வாய், 6 நவம்பர், 2007

இறந்துக்கொண்டிருக்கிறாய்...!

மனிதன் வரையறை செய்த கால அட்டவணையில் நாழிகள் நாட்களாகி, வருடங்களாய் முடிவுற்று இறந்து போகின்றன... நான் இறந்துக்கொண்டிருப்பதை எனக்கு அறிவித்துக்கொண்டேயிருக்கின்றன நாட்காட்டிகள். கடிகாரத்தின் முள் துடித்து நகருகிறது... ஆம்! என் இதயத்தின் துடிப்பும் கடக்கிறது கொஞ்சம் உயிராற்றலை செலவழித்து!. ஓவ்வொரு உறக்கத்தின் போதும் கொஞ்சமாய் ஓய்வெடுக்கிறது இந்த உயிராற்றல் மையம், ஓவ்வொரு விழிப்பின் போதும் விரைகிறது ஆற்றலை செலவழிக்க உடல். ஆனால் என்னையறியாமலேயே தானாக இயங்கும் உடல் உறுப்புகள் ஆற்றலை செலவழித்துக்கொண்டேயிருக்கின்றன... கடைசியில் இந்த உயிராற்றல் மையம் முடிந்து போகும் வெற்றுடலாய்... எரித்தோ (அ) புதைத்தோ இந்த அண்டத்தின் நிலையாற்றல் உள்ள பொருளாய் மாறி போவோம்.

செவ்வாய், 23 அக்டோபர், 2007

பெண்ணுரிமை எனும் புடலங்காய் கடைத்தெருவில் கிடைக்கவில்லை! வாங்கி வந்து கறிச்சமைக்க...

(இலக்கிய குட்டிச்சுவர்கள்)


பதிவுலகம் ஏகப்பட்ட அனுபவங்களை வழங்கிக்கொண்டிருக்கிறது, நாம் வாசிக்கிற பதிவுகள் நமக்குள் சில எண்ணவோட்டங்களை ஏற்படுத்தி விட்டு போயிருக்கும். அப்போதைக்கப்போது விவாதிப்பது என்பது ஓரு நிலை, அவற்றை தொகுத்து பார்க்கும் பொழுது நமக்கு எழுகிற நிலை வேறு... அப்படியான அதிர்வுகள் சிலவற்றை இங்கே பகிர்ந்துக்கொள்கிறேன்.

அடிக்கடி இங்கே கடைத்தேறுவது பெண்ணுரிமை பற்றிய விவாதங்கள், யாராவது இங்க வந்து "கற்பழிப்பு" என்ற சொல்லை பயன்படுத்தினால், உடனே பெண்ணுரிமை போராளிகள் வந்து உங்களை உண்டு,இல்லை என்று குதறியெடுக்கிறார்கள். "கற்பு" என்பது ஆணாதிக்க சிந்தனை என்று விளக்கம் கொடுப்பார்கள். நடைமுறையில் இந்தச்சொல் பயன்பாட்டில் இருக்கிறது அதனால் நான் அப்படியே பயன்படுத்தியிருக்கிறேன் என்றால், அடுத்தக்கட்ட தாக்குதல் ஆண்வர்க்க திமிர் (அ) ஆண்மய்ய சிந்தனை என்பார்கள்.

சிந்தனை என்பது செயல், செயல் என்பது இயக்கம், இயங்குகிற பொருள் மையத்தை விட்டுவிலகிச்செல்லும் என்பது இயக்கவியல். அப்புறம் சிந்தனை எப்படி ஆண் என்கிற மையத்தை நோக்கி நகருகிறது(இய்க்கவியல் முரண்) என்று குண்டக்கமண்டக்க நீங்கள் கேள்விக்கேட்டால் "ஆண்மய்ய சிந்தனை வெளியின்யூடாக எழுகிற பாஸிசிசத்தின் நீட்சி" (பெயரிலிடம் கடன் வாங்கியாவது) என்று உங்களுக்கு ஏதேனும் கும்மிகள் கிடைக்கலாம்.

எழுதுவதற்க்கு ஏகப்பட்ட விளக்கங்கள், அருஞ்சொற்பொருட்கள் கொடுக்கப்படும் குறிப்பாக பெண்ணுரிமை பற்றி எழுதும் போது மிக கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால், சிந்தனையூடாக கூட நினைத்திராத சில முட்டுச்சந்தில் கொண்டுச்சேர்ப்பார்கள் இந்த இலக்கிய வியபாரிகள்.

ஷ்ரேயா வை முட்டாள் பெண்ணாக திரையில் காண்பித்தற்க்கு பொங்கி எழுகிற பெண்ணுரிமை போராளிகள்..., பிரேமானந்தா மாதிரியான சாமியார்களிடம் அடைக்கலம் தேடுகிற முட்டாள்களை பற்றி பேசமாட்டார்கள். காஞ்சி கேடி "விதவை பெண்கள் களர் நிலம்" என்றால் வாய் மூடி கிடப்பார்கள். காஞ்சி கேடிகளின் கால்களை தாம்பூலத்தில் வைக்க சொல்லி பாலால் கழுவி அதை தீர்த்தம் என்று குடிக்கிற பெண்களை பற்றி எழுதமாட்டார்கள். பங்காரு - மாதிரியானவர்கள் பாதபூஜை என்று ஓவ்வொரு பெண்ணின் தலைமீதும் தன் காலை வைத்து ஆசிர்வாதம் வழுங்கும் போது தலையை காண்பிக்கிற பெண்களை கண்டுக்கொள்ளமாட்டார்கள்.

நான் எதை பேச வேண்டும் (அ) எழுத வேண்டும் என்று சொல்ல நீ யார்? என்று பொங்குவார்கள். ஏனென்றால் பெண்ணுரிமை என்கிற தளம் இவர்களுக்கு எழுத்து வியாபாரத்திற்க்கு வலுவான தளம்.

வேலைகாரிகளை கைநீட்டி அடிக்கும் முதலாளி பெண்களை பற்றி பேச மாட்டார்கள், முடிந்தால் தங்கள் வீட்டு வேலைகாரியையும் இரண்டு அடி அடிப்பார்கள். ஆனால் நடிகையை அடித்த கதையை நீட்டி முழக்குவார்கள்.

ஓரு சித்தாளோ அல்லது குடி பார்க்கும் சேரி பெண்ணோ எழுதுவதில்லை அதனால் தான் இங்கே பெண்ணுரிமை எழுத்துக்கள் எல்லாம் மேட்டுக்குடியின் மோனைகளை பிரதிபலிக்கும்.

இன்னும் சிலருக்கு பெண்ணுரிமை மாநாட்டு அரசியல் பிடித்திருக்கிறது, பெரியார் படம் போட்ட விஜயகாந்த கட்சிக்கு அழைப்பிதழ் கிடைத்தால் கூட பெரியாரிஸ்ட் என ஆதரவு தெரிவிக்கும் அளவுக்கு அவர்களின் அரசியல் அறிவு பொங்கி வழிகிறதது.

பெண்ணுரிமையை ஓப்பீட்டு அளவில் பேசுவது மாதிரியான கேலிதனம் எங்காவது உண்டா?
ஆண் பல பெண்களுடன் உறவு வைத்துக்கொள்கிறான் அதனால் பெண்கள் பல ஆண்களுடன் உறவு கொள்ளலாம் எவ்வளவு முரணானது என்பது எழுத்துக்குள் அடங்க மறுக்கிறது.
தனிமனித ஓழுக்கம் ஆண்,பெண் இருவருக்கும் வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டுமா? அல்லது ஓழுக்கமற்ற ஆண்களை ஓப்பிட்டு உரிமை பேசுவது வேண்டுமா? என்பதை வாசிப்பாளர்களின் சிந்தனைக்கு விட்டுச்செல்லலாம்.

பெண் சமைக்கிறாள், துணி துவைக்கிறாள். ஆண்கள் பேப்பர் படித்துக்கொண்டும், காப்பி குடித்துக்கொண்டு, தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்கிற ஓப்பீடு, உழைப்பு என்பது எல்லோருக்கும் பொது, ஆணின் உழைப்பு வடிவம் வேறாகவும், பெண்ணின் உழைப்பு வடிவம் வேறாகவும் இருப்பதால், பெண்கள் மட்டுமே உழைக்கிறார்கள் என்கிற மாதிரியான பிம்பம் முட்டாள்தனமானது. (இங்கே கேள்விக்கு உட்படுத்த வேண்டியது வடிவங்களையன்றி உழைப்பையல்ல! அதாவது இதுவெல்லாம் பெண்களுக்கான வேலை என்கிற கட்டமைப்பு).

(குறிப்பு : தொடாபற்ற இக்குறிப்புகள் - உங்களுக்குள் சிலவற்றுடன் தொடர்பு ஏற்படுத்தினால் நான் அதற்க்கு பொறுப்பல்ல)

புதன், 17 அக்டோபர், 2007

ஏன்?

இந்திய இராணுவத்தில் மிக முக்கிய பங்களிப்பு செய்பவர்கள் பஞ்சாபிகளும், ரானா என்கிற இனத்தை சேர்ந்தவர்கள் (இவர்களின் சராசரி உயரம் 6.5 அடிக்கு மேல்), ஆனால் நாங்கள் உடல் வலுவற்றவர்கள் அதனால் வயல் வேலை செய்வதில்லை என்று கூறும் பார்ப்பனர்கள் 80% உயர் இராணுவ பதவிகளை வகிப்பது ஏன்? எப்படி?
(தங்களுடைய உரிமைக்காக பஞ்சாபிகள் ஆயுதமேந்தி போராடினார்கள் என்பது வரலாறு, ஆனால் அது ஒடுக்கப்பட்டது)

இந்தியாவின் குடியரசுதலைவர் மாளிகையில் 1000+ பதவிகள்(சமையல்காரர் முதல் குடியரசுதலைவர் வரை), ஆனால் 10 முதல் 20 நபர்களே பார்ப்பனரல்லாதோர்! மற்ற அனைவரும் பார்ப்பனராக இருப்பது ஏன்?

இந்தியாவின் முக்கிய வங்கி சேவையான RBI மற்றும் SBI உயரதிகாரிகள் 90% பார்ப்பனர்களாக இருப்பதேன்?

இந்தியாவின் வெளியுறவுதுறை மற்றும் அனைத்து நாடுகளுக்கான தூதர்கள், மற்றும் அதனைச்சார்ந்த துணைப்பதவிகள் அனைத்திலும் பார்ப்பனர்கள் மட்டுமே நியமிக்கப்படுவதின் மர்மமென்ன?

இந்தியாவின் பெரும்பான்மை பிரதமர்கள் பார்ப்பனராக இருந்தது ஏன்?

இந்தியாவின் தேர்தல் ஆணைய தலைவர்கள் தொடர்ந்து பார்ப்பனராக நியமிக்கப்படுதின் மர்மமென்ன?

இந்தியாவின் முக்கிய தேசிய கட்சியின் தலைவர்கள் (காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பா.ஜ.க) பார்ப்பனர்களாக இருப்பதேன்?

இந்தியாவின் மற்ற நாடுகளுக்கான கலாச்சார, பண்பாடு துறையின் தலைவர்களாக பார்ப்பனர்கள் இருப்பதேன்?
(இப்படி ருஷ்யாவின் கலாச்சார, பண்பாடு மையத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட பத்மா சுப்ரமணியத்தின் அப்பா தன் மகளை நாடு, நாடாக அழைத்து சென்று நடனம் ஆட வைத்து புகழும், பணமும் சம்பாதித்தாரல்வா!)

இந்தியாவின் முக்கிய நிறுவனங்கள் மற்றும் பணக்காரர்கள் பார்ஸி மற்றும் பார்ப்பனர்களாக இருப்பதேன்?

பா.ஜ.க ஆட்சியின் போது இசுலாமிய சகோதரர்களை கொலை செய்து விட்டு, ஈரான் அதிபரை இந்தியாவிற்க்கு இரு முறை அழைத்த நோக்கமென்ன?
(வாஜ்பாய் மற்றும் அத்வானி ஆகியோரின் பெர்ஸிய இனவெறி அங்கே முக்கிய காரணமில்லையா!)

கோடிக்கணக்கான சொத்துக்களை டி.என்.சேஷன் மற்றும் ஆர்.வெங்கடராமன் ஆகியோர் காஞ்சி மடத்துக்கு எழுதி வைத்தது ஏன்?
இந்த சொத்துக்கள் அவர்களுக்கு எங்கிருந்து வந்தது?

மக்களுக்காக போராடுகிறேன் என்று சொல்லும் பொதுடைமைவாதியான சங்கரய்யா என்கிற பார்ப்பனர், தானும், பார்ப்பனர்கள் அதிகம் வசிக்கும் சென்னை, குரோம்பேட்டை, நியூகாலணியில் மட்டும் சிமெண்ட் சாலைகள் அமைக்கப்பட்டு இருக்கிறது என்று மகிழ்ச்சியாக வசிக்கிறார், ஆனால் அதற்க்கு அடுத்த தெருவில் கழிவுநீர் கால்வாய் கூட இல்லை என்பது பற்றி கவலை படாதது ஏன்?
(இது 2004ல் உள்ள நிலை)

இந்தியாவின் 2% மட்டுமே இருக்கிற பார்ப்பனர்கள், இப்படி அனைத்து துறைகளிலும் உயர்பதவிகளிலும், முடிவெடுக்க கூடிய முக்கிய இடங்களிலும் ஆக்கிரமித்துக்கொண்டு இந்த நாட்டை சுரண்டிக்கொழுப்பதை, எப்படி கேள்விக்கேட்காமல் இருக்க முடியும்.

இந்திய அரசியலமைப்பு சட்டவரைவு குழு தலைவராக அம்பேத்கர் இருந்தார், ஆனால் அந்த குழுவின் ஐந்து உறுப்பினர்களும் பார்ப்பனராக இருந்தனர். அவர்கள் எழுதி தருகிற சட்டங்களை வடிவமைக்கும் பொம்மையாகவே அம்பேத்கர் இருந்தரர். அதனாலயே தான் அரசியலமைப்பு சட்டத்தை அம்பேத்கர் தீயிட்டு கொளுத்தினர்.

தாழ்த்தப்பட்டவர் குடியரசு தலைவராக இருக்கிறார், இசுலாமியர் குடியரசு தலைவர் என்றெல்லாம் கொண்டடியிருக்க முடியாது... இன்னும் அதிகார மையங்கள் 98% மக்களுக்கு போய் சேரவில்லை.

புதன், 19 செப்டம்பர், 2007

பெண்களும், சமூக மற்றும் அரசியல் அறிவும்...!

நண்பர்களிடம் அல்லது சமூக, அரசியல் பேசுகிறவர்களிடம் நான் பேச்சின் ஊடாக கேள்வியாக வைக்கிற அல்லது கவனிக்கிற கருத்து அவர்களின் வாழ்க்கைதுணை மற்றும் குடும்பத்தாருடன் தங்களின் சமூக, அரசியல் நிலைப்பாடுகளை பற்றி உரையாடுகிறார்களா? என்பது.

இதுவரை நான் அறிந்தவற்றை பெரும்பிரிவாக...
1. சமூக, அரசியல் பற்றி அறிவு அவர்களுக்கு தேவையற்றது. குடும்பம், உறவு என்று இருப்பதுதான் தனக்கு பிடிக்கும்.

2. அவர்களாக தெரிந்துக்கொள்வதை (அ) அவர்களுடைய நிலைப்பாடு பற்றி எனக்கு தேவையற்றது. நான் எனக்கு தெரிந்ததை செய்கிறேன் அவர்களை நான் இதில் கலந்துக்கொள்வதில்லை.

3. எப்போதாவது பேசுவதுண்டு ஆனால் பெரும்பாலும் நண்பர்களிடம் பேசுவதுபோல ஈடுபாடு வருவதில்லை.

4. நான் ஆர்வமாக பேசினால் கேட்க யாரும் தயராகயில்லை.

இப்படி பல்வேறு காரணங்கள்... எல்லாவற்றிலும் பெண்கள் சமூக,அரசியல் அறிவு பெறுவது மறுக்கப்படுகிறது (அ) தவிர்க்கப்படுகிறது (அ) ஆர்வமில்லாதவர்களாக இருக்கிறார்கள் என்று தெரிய வருகிறது.

இப்போ உனக்கு என்ன வேணும்? என்று நீங்கள் குரல் கொடுப்பது எனக்கு கேட்கிறது.

இப்படி குடும்பத்தில் உங்கள் வாழ்க்கைதுணையோ, சகோதரியோ, மகளோ சமூக, அரசியல் அறிவு பெறாவிட்டால் என்ன நடந்தது, நடக்கிறது என்பதை பார்த்தால்...

நான் சிறுவனாக இருந்தபொழுது என் தந்தையின் திராவிடர்கழக, தி.மு.க, பொதுவுடைமைவாதி நண்பர்கள் வீட்டுக்கெல்லாம் போயிருக்கிறேன்.

அவர்களில் பெரும்பாலானோர் மிக தீவிரமாக பொதுவாழ்க்கையில் ஈடுபடுவார்கள். இதனால் அவர்கள் குடும்பத்தில் அவர்களுடைய சமூக, அரசியல் நிலைப்பாடுகள் புரியாத காரணத்தால் கடுமையான எதிர்ப்புகள் நிலவும். அவர்களின் குடும்பத்தார் அவர்களை தேறாதவர்கள், பூட்டக்கேசு, கோயில்மாடு, இன்னும் பல வசைமொழிகளை சொல்வார்கள்.

இரண்டாவது இவர்கள் குடும்பத்தாரை ஓட்டுபோடும்போது "உதயசூரியன்" (அ) "கதிர்அரிவாள்" சின்னத்தில வாக்களிக்க சொன்னால்... மிக கருமமே கண்ணாக " இரட்டைஇலைக்கு வாக்களித்துவிட்டு, இவன்தான் வறட்டு,வறட்டுன்னு பேசி வீணா போனதில்லாம... நாட்டையும் கெடுக்கிறான் என்று வைவார்கள்.
அவர்களின் அரசியல் அறிவு சினிமாவில் பார்த்த எம்.ஜி.ஆர் நல்லவர் என்பது.

இப்படியிருக்கிற குடும்ப பெண்கள் அப்படியே நீங்கள் சமூகத்தையும்,அரசியலும் பேசாததால் முட்டாள்களாக இருப்பதில்லை...

அவர்களுக்கு பக்கத்து வீட்டிலோ (அ) பால் அங்காடியிலோ பார்ப்பானீய அரசியலை போதிக்க ஓரு பாப்பாத்தியிருப்பாள்...

சேது சமுத்திர திட்டத்தை பற்றிய செய்தி எப்படி அவர்களுக்கு போய் சேரும் பாருங்கள்...

"சீனி அம்மா! இங்கபாருங்க , இந்த வழுக்கைமண்டை யிருக்கில்லையா!"
"யாருங்க"
"அதாங்க இந்த கருணாநிதி"
"அவரா, என்னாச்சு?"
"என்னத்த சொல்லுறது எல்லாம் கலிகாலம் இராம பிரானும், ஆஞ்சநேயரும் கட்டிய பாலத்த இடிக்க சொல்லுறானாம்"
" இவனெல்லாம் நல்லகதியில போவானா?"

என்று பார்பானீய அரசியல் அறிவு அங்கே போதிக்கபடும்.

அடுத்ததாக பெண்கள் கோயிலுக்கோ (அ) பொது இடத்திலோ இருக்குமிடத்தில் அங்கே பூணூல் போட்ட பார்ப்பான் ஓருவன் நிச்சயமாய் இப்படி சொல்லுவான்...

" இவா எல்லாம் லோகத்தில் நன்னாயிருப்பாளா"
"சாட்சாத் அந்த ஆண்டவன் அமைத்த பாலமோ இல்லையோ! இடிக்கலாமா !?"

இப்படி நம்ம குடும்ப பெண்கள் சமூக,அரசியல் அறிவு பெற்றிருப்பார்கள்.

நாமெல்லாம் எழுதியும், பேசியும், களமிறங்கி போராடிக்கொண்டிருப்போம் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற கோரி.

ஆனால் நம்முடைய குடும்பத்தாரையே நமக்கு எதிராக திருப்புகிற நுண்ணரசியலை மிக தெளிவாக செய்திருப்பார்கள்.



அடுத்து தீண்டாமையும் பெண்களின் சமூக,அரசியல் அறிவும்...

(குறிப்பு: எழுத மிகவும் போரடிப்பதால் அடுத்த பாகத்தில் விரிவாக...)

வெள்ளி, 14 செப்டம்பர், 2007

எதை எதிர்ப்பது....?

கடந்த சிலவாரங்களில் தமிழ் வலைப்பதிவுகளில் நடந்த எண்ணற்ற சச்சரவுகளில் எனக்குள் சில கேள்விகளை எழுப்பி விட்டுச்சென்றிருக்கின்றன.

அவற்றுள் மிக முக்கியமான சாதி மறுப்பு மற்றும் அதன் புனித தன்மையை பற்றியது!

முதலில் ஏன் சாதியை மறுக்க வேண்டும்?
சாதியை மறுப்பதால் ஏதேனும் புனித தன்மை கிடைக்கிறதா?
பிறப்பால் தன்னை உயர்ந்தவன் என்று சொல்லிக்கொள்ளும் பார்பானீய கட்டமைப்பிற்க்கும் சாதியை மறுப்பதால் தன்னை புனிதன் என்று கட்டமைப்பதற்க்கும் என்ன வேறுபாடு?

இரண்டாவது தோழர் என்ற விளிப்பிற்க்கு எதிரான நிலைபாடுபற்றியது

மார்க்கஸியத்தை அறிந்த புனிதர்கள் தோழர்கள் என்றால் வேதம் படித்த புனிதர்கள் பார்ப்பனர்கள் என்பதற்க்கான வேறுபாடு என்ன?

எந்த நிலையிலும் மனித சமூகத்தின் சமநிலையில் நிற்க மறுக்கிற புனித பிம்பங்களை கட்டமைப்பது என்பது...

மனிதர்களை சமநிலையில் பார்க்க மறுக்கிற பார்ப்பானீய கட்டமைப்பாகதா?

கேள்விகளுடனே...

நன்றி
பாரி.அரசு

செவ்வாய், 11 செப்டம்பர், 2007

மூடநம்பிக்கை எதிராக ஓரு முழக்கம் - வாழ்த்துக்கள் டாக்டர் சார்லஸ்

எப்பொழுதும் ஏதாவது வேலையினூடாக கவனிக்கிற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் விஜய் இன் "நீயா நானா" நிகழ்ச்சியும் ஓன்று... அவ்வாறு கடந்த ஞாயிறு பார்த்துக்கொண்டிருந்தபொழுது, இறுதியாக சில வாரங்களுக்கு முன்பு நடந்த "பில்லி சூனியம்" பற்றிய நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட டாக்டர் சார்லஸ் எப்படி இருக்கிறார் என்று இறுதியில் காண்பித்தார்கள்.

பில்லி சூனியம் வைத்தால் ஓரு லட்ச ரூபாய் தருவதாக அந்த நிகழ்வில் சொல்லிருந்தார், 45 நாட்கள் கெடு முடிவடைந்தது... சவால் விட்ட சாமியார் என்ன ஆனார் என்று தெரியவில்லை.

டாக்டர் சார்லஸ் ஆரோக்கியமாகவே இருக்கிறார்... அதோடு மட்டுமல்லாமல், தனது சவாலை வெளிப்படையாக எந்தவித தேதி, நேர எல்லையில்லாமல் வெளியிட்டிருக்கிறார்.

யார் வேண்டுமானாலும் அந்த காசோலையை பெறலாம், முடிந்தால் அவருக்கு பில்லி சூனியம் வைத்து.

மூடநம்பிக்கைகளுக்கெதிரான தனது நிலையை மிகுந்த மனதுணிவுடன் வெளிபடுத்தி... அதை ஓரு சவாலாகவும் வைக்கும் டாக்டர் சார்லஸை நாமெல்லாம் வாழ்த்துவோம்.

நன்றி

புதன், 5 செப்டம்பர், 2007

விவாதம் - என்ன செய்வீர்கள்.... ?

பேசுவதும்,விவாதிப்பதும் என்னோடு உடன் இருப்பவை. நான் இருக்கிற இடத்தில் எப்போதும் இரைச்சலாகவே இருக்கிறது. முடிவில்லாமல் நீளூகிற விவாதங்கள் அயர்ச்சியை தருவதாக அங்கலாய்க்கும் நண்பர்கள் அடுத்த நாள் நான் வரவில்லை என்றால், மூன்றாம் நாள் ஏன் வரவில்லை? என்றே வினா எழுப்புகிறார்கள். விவாதங்கள் நாம் கடந்த வந்த அனுபவமாக அல்லது நாம் கற்றவையின் நீட்சியாக கொட்டித் தீர்க்கப்பட்டு முடிவில் இன்னும் கொஞ்சம் புதிய சிந்தனைகளோடு புறப்படுகிறேன் இன்னும் விவாதிக்க வேண்டுமென்கிற ஆவலோடு...

இப்படியாக ஓரு மதிய உணவு இடைவேளையில் எழுந்த கேள்வி இன்னும் நீண்டுக்கொண்டேயிருக்கிறது விவாதமாய்....

ஓர் மனிதஉயிரைக்காப்பாற்ற முடியாது, மரணம் முடிவு என்று சொல்லிவிட்டார்கள். ( அது புற்றுநோயோ அல்லது எய்ட்ஸ் ஆகவோ அல்லது வேறெதாகவோ இருக்கட்டும்)

அவ்வாறு முடிவுச்செய்யப்பட்ட மனிதஉயிர் உங்கள் உறவாகவோ (அ) நண்பராகவோ இருக்கும்பட்சத்தில்....

நீங்கள் உயிரை காப்பாற்ற உங்களால் முடிந்தவரை போராடுவீர்களா? (அ) அவ்வளவுதான் என்று விட்டுவிடுவீர்களா?

திங்கள், 27 ஆகஸ்ட், 2007

தல... தல... தட்டுக்கெட்டு போன தமிழர்கள்...!

வலைப்பதிய ஆரம்பித்து... நிறைய நட்புக்கள், தோழமைகள் இணைய உரையாடலில் இணைத்துக்கொண்டு மனதிற்க்கு பிடித்த தாய்மொழியில் உரையாடுவது என்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கிறது...

ஆனால் சில நண்பர்கள் பேச ஆரம்பித்தவுடன் ...

"வணக்கம் தல!"

....
"சொல்லுங்க தல"
....
"அப்புறம் தல"

....

சொல்லுங்க தலைவரே...

இப்படிதான் ஆரம்பிக்கின்றனர், சிலரிடம் ஓருமுறை சுட்டிக்காட்டினால், புரிந்துக்கொண்டு தவிர்த்துவிடுகிறார்கள்.

ஆனால் சிலர் விடாப்பிடியாக தொடர்ந்து இதை சொல்லுவதால், இங்கே எழுத வேண்டிய அவசியமாயிற்று....

இந்த உரையாடலை எவ்வாறு நாம் அடிமை மனத்திலிருந்து பெறுகிறோம் என்பதை பாருங்கள்... முன்பு நாம் உயர்சாதியினரிடம், எவ்வாறு உரையாடினோமோ... அதையே இப்போதும் தொடர்கிறோம்....

"சாமி! எப்படியிருக்கீக சாமி"
"ஆமாமஞ் சாமி"
"வணக்கம் சாமி"
"நீங்க சொன்னா சரியாயிருக்கும் சாமி"

இப்படி நாம் உயர்சாதியினரை விளித்து நம்முடைய அடிமை தனத்தை நாமே உறுதிச்செய்துக்கொண்டிருந்தோம்!

ஆர்.எஸ்.எஸ் கூடராங்களில் இந்த அடிமைத்தனத்தை மறைமுகமாக போதிப்பார்கள்...

"வாங்க ஜீ"
"சொல்லுங்க ஜீ"
"எப்படியிருங்கீங்க ஜீ"

"சாமி" போயி "ஜீ" வந்தது.... அதையும் சில மானங்கெட்ட தமிழர்கள், மறக்காமல் எல்லோரையும் "ஜீ" போட்டு அழைத்து தங்களின் அடிமைத்தனத்திற்க்கு தாங்களே வழி அமைத்துக்கொண்டார்கள்...

"தல..." பெரும்பாலும் ஓன்று அடுத்தவரை உயர்த்தவோ அல்லது ஓரு வஞ்சகத்துடனும், எச்சரிக்கையுடனும் அணுகும் போதும் உச்சரிக்கபடுகிறது...

சமூகத்தில் சமதளத்தில் நின்று உரையாடுகிற போது, எப்படி உங்களை நீங்கள் தாழ்த்திக்கொண்டு அடிமைத்தனத்திற்க்கான எண்ணத்துடன் உரையாடுகின்றீர்!

அல்லது

வஞ்சகத்துடன் ஓருவரை அணுகியிருக்கிறீர்கள் என்றால்... எப்படி இந்த வஞ்சகமனப்பான்மை வளர விடுகிறீர்கள்!

தமிழிலில் மரியாதை சொற்கள் ஏராளம்...

"ஐயா","நண்பரே","தோழரே", "சகோதரரே","அப்பா","அம்மா" .... என்று விளிக்க ஏராளமான சொற்க்கள்யிருக்க...

ஏன் அடிமைத்தனத்துடன் "தல..." என்று விளிக்கிறீர்கள்.

"தலைவரே, சொல்லுங்க"
"நீங்க சொன்னா சரி! தலைவரே"

இப்படி கூழைக்கும்பிடு போடுவதை எப்போது தான் நிறுத்தப்போகிறோம்...?

நம்மை அடிமையாக்க நினைப்பவர்கள் எப்போதுமே, இந்த மாதிரியான உரையாடல்களை ஆரம்பித்து வைப்பார்கள்.
(ஓரு வகையில் உளவியலாக உங்களை அடிமை மனப்பான்மைக்கு வளர்த்தெடுத்தல்!)

நாளடைவில்... இதில் நீங்கள் வீழ்ந்து அடிமைப்பட்டு நிற்ப்பீர்கள்...


தமிழனிடம் அடிமைத்தனமும், வஞ்சகமும் தேவையில்லை...
மானமும், அறிவும் உள்ள சமூகத்தில் தலைவன் என்று எவனும் கிடையாது!

குறிப்பு : நான் சுட்டுவது அடிமைத்தனத்தை, வஞ்சகத்தை... நட்புகள் புரிந்துக்கொள்வார்கள் என்கிற நம்பிக்கையில்

பாரி.அரசு

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2007

கணிணி என்றால் என்ன?

தனியா ஒரு வலைப்பூ ஆரம்பித்து கணிணியை பற்றி எழுதலாம் என்று தொடங்கினேன், அதென்னவோ தமிழ்மணத்தோட இணைக்கையில் வம்புபண்ணிக்கிட்டேயிருக்கு, நிர்வாகிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பியாகிவிட்டது. அதுவரைக்கும் இங்கிருந்து அதற்க்கு தொடுப்பு கொடுக்கிறேன்.

வருக! வருக!!


கணிணி என்றால் என்ன?

திங்கள், 20 ஆகஸ்ட், 2007

சிங்கையில் மட்டும் எப்படி முடிகிறது, தமிழ்நாட்டில் ஏன் முடியல...?

சிலமாதங்களுக்கு முன்னாடி என்னுடைய நண்பர் ஓருவர் (அவர் பாடகர், அதோட பாடல் பயிற்சி வகுப்புகள் வேறு போயிட்டிருக்கிறார்) சிலோன் ரோடு விநாயகர் கோயிலில் ஓரு இசை நிகழ்ச்சி இருக்கு போகணும் வருகிறாயா? என்று கேட்டார்.

நான் வரவில்லை என்றேன்

ஏன்? என்று கேட்டார்

இவனுக தமிழ்நாட்டுல இருந்து வந்து புரியாம கர்நாடக சங்கீதம் என்கிற பேரில் எதையாவது பாடுவாய்ங்க நீங்க உட்கார்ந்து தலையாட்டுவீர்கள், நான் அங்கன எதுக்கு என்றேன்.

இல்ல, கட்டாயம் நீ வர வேண்டும் உனக்கு ஓரு அதிர்ச்சி காத்திருக்கிறது என்றார்

ஓரு வழியா கட்டாயபடுத்தி என்னை கூட்டி சென்றார், நிகழ்ச்சி ஆரம்பித்த உடனே எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சி...

எல்லா நிகழ்வுகளும் முழுக்க, முழுக்க தமிழ் இசை பாடல்கள் பாடப்பட்டது. திருக்குறள்,தேவாரம், திருவாசகம், திருப்புகழ் என்று அசத்தினார்கள்.

மிக முக்கியமான செய்தி யாரெல்லாம் தங்களுக்கு கர்நாடக சங்கீதம் தவிர வேறு எதுவும் பாட வராது என்கிற மாதிரி தமிழகத்தில் மேடை தோறும் கர்நாடக சங்கீதம் பாடுகிற பாடகர்கள்... இங்கே தமிழ் இசை பாடல்கள் பாடிக்கொண்டிருந்தனர். அனைவருமே தமிழகத்திலிருந்து வந்த பாடகர்கள்.

நிகழ்ச்சியின் முடிவில் சில விசாரணைகளை மேற்க்கொண்ட போது தான் தெரிந்தது, இந்த கோயிலின் நிர்வாகம் முழுக்க, முழுக்க ஈழத்தமிழர்களால் நடத்தப்படுகிறது.

பிறகு அவர்களிடம் உரையாடிய போது, அவர்கள் சொன்ன தகவல்...

நாம் பணம் கொடுக்கிறோம், நமக்கு தேவையானதை அவர்கள் பாட வேண்டும் என்பதை தெளிவாக சொல்லிவிடுகிறோம். இங்கே வேறெந்த சிக்கலுமில்லை என்றனர்.

அப்போ தமிழ் நாட்டு தமிழனும் பணம் தானய்யா கொடுக்கிறான், கோயில் திருவிழாவில் இருந்து, கச்சேரி மேடை வரை இவர்கள் பாடுகிற புரியாத பாடல்களுக்கு தலையாட்டிக்கிட்டே திரியுறானுகளே...!

சிங்கையில் டாலருக்கு தமிழில் பாடும் பாடகர்கள், தமிழ்நாட்டில் ரூபாய் நோட்டுக்கு தமிழிலில் பாட மறுப்பதேன்?

இல்லை

தமிழ்நாட்டு தமிழன் மானம் கெட்டு அலைகிறானா?

விரைவில் பாடகர்களின் பட்டியல் மற்றும் நிகழ்ச்சி நிரலை வெளியிடுகிறேன்.

படம் பார்த்து, கதை சொல்லுங்கோ...!


நன்றி : starhub, singapore

வியாழன், 16 ஆகஸ்ட், 2007

காமத்திற்க்கப்பால் விரியும் கற்பனை...!




















கலவியில் களைத்து கிறங்கிய பொழுது...
காதலி கட்டியணைத்து கன்னத்தில் கனியிதழ் பதித்து...
காதருகே " நீங்க ரொம்ப மோசம் !" என்று கனிந்தபொழுது...
வியர்வைத்துளிகளில் வியர்த்து போன காலதுளிகள்...!



பட உதவி நன்றி : TBCD

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2007

பூங்காவுக்கு நன்றி...!

எனது இடுகையை பூங்கா இதழில் தொகுத்த தமிழ்மணம் மற்றும் பூங்கா நிர்வாகத்துக்கு நன்றி!

சீனப்பெண்களும்... மகப்பேறும்...!

http://poongaa.com/content/view/2097/1/

விடுதலை கிடைத்துவிட்டதா...?

விடுதலை கிடைத்துவிட்டதா...?

இன்றைக்கு விடுதலை கிடைத்தநாள் என்று எல்லோரும் கொண்டாடி, அப்பாடி இன்றைக்கு விடுமுறை என்று வீட்டில் தொலைகாட்சிபெட்டியில் மூழ்கி கிடக்கும் அரசு அலுவலர்களுக்கும் (மற்றநாளில் மட்டும் என்ன வேலை பார்க்கிறார்கள் என்று கேள்வியெல்லாம் கேட்க கூடாது!) , நாட்டை அடகு வைக்கும் அரசியல்வாதிகள் ஓருநாளாவது நாட்டுப்பற்றோடு இருப்பது போல நடிப்பதற்க்கும் வாய்ப்பான நாளாகதான் எனக்கு தெரிகிறது.

விடுதலை கிடைத்து 60 ஆண்டுகளில் நாம் என்ன சாதித்திருக்கிறோம்?

தனிமனித பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதா?
நீங்களும் கொலை செய்யப்படுவீர்கள்...!

நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதா?
ஓரு நாட்டின் பாதுகாப்பு என்பது அந்நாட்டின் மக்களின் பாதுகாப்பாக முதலில் இருக்க வேண்டாமா? இதுவரை சிங்கள, பாகிஸ்தான் இராணுவத்தால் கொல்லப்பட்ட மீனவர்களுக்கும், இன்னும் கொல்லப்படயிருக்கும் மீனவர்களுக்கும் இந்தியா என்கிற நாடு என்ன பாதுகாப்பை வழங்கியிருக்கிறது.

தீண்டாமை முற்றிலும் ஓழி்க்கப்பட்டுள்ளதா?
டீக்கடையில் கிழியுதுன் தேசியப் பொய்மை

கல்வி,மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகள் நிறைவுசெய்யப்பட்டுள்ளதா?
இன்னும் குழந்தை தொழிலாளர்களை நம்மால் முற்றிலும் ஓழிக்க முடியவில்லை.

நமது அரசாங்கம் சுதந்திரமாக செயல்படுகிறதா?
சமீபத்தில் BBC வானொலியில் இந்தியா ஓளிர்கிறது என்கிற நிகழ்ச்சியை நடத்தினார்கள், அப்போது மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் , இந்தியா பயன்படுத்தம் எரிப்பொருட்களின் அளவைப்பற்றி BBC வானொலிக்கு விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தார். இதுதான் நமது அரசாங்கத்தின் சுதந்திர நிலைமை.

ஏகாதிபத்தியங்கள் சொல்கிற இடத்தில் கையெழுத்து போடுவதும், அவர்கள் இடுகிற பிச்சைக்கு வாலாட்டும் நாயாக தான் நமது அரசாங்கங்கள் இருக்கின்றன.

இங்கே பாருங்கள் அமெரிக்காவுக்கு இந்தியா வச்ச ஆப்பு! தஞ்சாவூரான் எப்படி சொல்கிறார் நமது நிலையை என்று.

இலங்கையில் போர் நடக்கிறது, அதனால் அங்குள்ள மக்கள் அகதியாக வெளியேறுகின்றனர். ஆனால் தஞ்சை மாவட்டத்தில் என்ன நடக்கிறது, ஏன் தஞ்சை விவசாயிகள் நிலங்களை அடகு வைத்து எங்களை அகதியாக ஐரோப்பாவில் இறக்கி விடுங்கள் என்று மஞ்சள்பையில் பணத்துடன் சென்னை வீதிகளில் ஏஜெண்ட்டுகளிடம் கெஞ்சிக்கொண்டிருக்கின்றனர்.

ஒரு நாட்டில் விவசாயிகள் தங்களை அகதிகளாக அனுப்புங்கள் என்று அலைவதை எப்படி சகித்துக்கொள்ள முடிகிறது?
இதுதான் விடுதலையடைந்த நாடா?

ஆண்டுதோறும் ஆயிரகணக்கான ஓரிசா மக்கள் அகதிகளாக அண்டை மாநிலங்களின் வீதிகளில் தஞ்சம் புகின்றனர். இதுதான் இந்த நாட்டின் விடுதலையா?

ஏகாதிபத்தியங்கள் எரிகிற எச்சில் பருக்கைக்கு வாலாட்டும் நாய்க்குட்டியாக மாறி போன தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், ஏதோ தங்களுக்கு நாட்டுப்பற்று ஏகபோகமாக இருப்பதுபோல மின்னஞ்சலும், இரவு விருந்துமாக சுதந்திர தினத்தை கொண்டாடி மகிழலாம்.

மக்களுக்கான அரசாங்கமும், அவர்களுக்கான தலைமையையும் அமையாத வரை விடுதலை என்பது கானல்நீரே!

இடுகைகள் தொடுப்பு நன்றி : சுகுணா திவாகர், தஞ்சாவூரான்

திநகர்... ரெங்நாதன் தெரு - 12-08-2007














Related Posts with Thumbnails