செவ்வாய், 11 டிசம்பர், 2007

மலேசியா மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழர்களே...! -4

மலேசியா மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழர்களே...! -3

மலேசியா மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழர்களே...! -2

மலேசியா மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழர்களே...!

இந்திய அரசியல் விடுதலை என்பதும், இந்திய தேசிய கூட்டமைப்பு என்பதும் தமிழர்களின் நலனில் அக்கறையுள்ள அமைப்பாக இதுவரை இருந்ததில்லை. அது எப்போதும் பார்ப்பானீய,பனியா அரசாகவே இருந்தது, இருக்கிறது, இனிமேலும் இப்படி இருக்கும்...இந்த இடத்தில் சில வரலாற்று நிகழ்வுகளை நினைவுக்கொள்ள வேண்டியிருக்கிறது...

உகாண்டாவில் குஜராத்தின் பனியாக்கள் மாட்டிக்கொண்ட போது உடனடியாக அன்றைய அரசு விமானங்களை அனுப்பி மீட்டெடுத்தது.

Polaris என்கிற IT நிறுவனத்தின் தலைவர் (குஜராத் சேர்ந்த பார்ப்பனர்) இந்தோனிசியாவின் அரசை ஏமாற்றிய குற்றத்திற்காக கைதுச்செய்யப்பட்ட போது இந்தியாவின் வெளியுறவு துறை அமைச்சரே அவரை விடுதலைச்செய்ய சொல்லி நேரிடையாக அங்கே சென்றார்.

ஆனால் எந்த குற்றமும் செய்யாத அப்பாவி தமிழ் மீனவர்கள் 400க்கு மேற்ப்பட்டவர்கள் இலங்கை அரசாங்கத்தால் சுட்டுக்கொல்லப்பட்டப்போதும். பல மீனவர்கள் கைதுச்செய்யப்பட்டபோதும். இந்திய அரசாங்கம் என்பது என்ன செய்துக்கொண்டிருக்கிறது என்பதை நான் விளக்க தேவையில்லை என்றே நினைக்கிறேன்!

யாழ்ப்பாணத்தில் ஓரு முருகன் கோயிலில் ஓர் பார்ப்பனர் கொல்லப்பட்டதற்க்காக குரல் கொடுத்த ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க இயக்கங்கள். அந்த நிகழ்வின் போது கண்டனம் தெரிவித்த இந்திய அரசாங்கம். ஆயிரகணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில் கள்ள மெளனமே சாதிப்பது ஏன்?

அட! இலங்கை யாழ்ப்பாணத்தமிழர்கள் வேண்டுமானால் உங்களுக்கு வேறு நாட்டினர். ஆனால் இலங்கையின் மலையகத்தமிழர்கள் தமிழகத்தில் இருந்து ஆங்கிலேயர்களால் கொண்டுச்செல்லப்பட்டவர்கள். அவர்களுக்கு சமீபத்தில் மிகக்கடுமையான சித்ரவதைக்குள்ளான போது ஏன் கண்டணம் தெரிவிக்கவில்லை?

இந்தியாவின் அடித்தட்டு மக்களின் வரி பணத்தில் ஐஐடி, ஐஐஎம், மருத்துவம் என்று படித்த பார்ப்பன,பனியா பன்றிகள் இந்தியாவில் வேலைப்பார்க்காமல் வெளியேறி அமெரிக்காவிலும், மேற்கத்திய நாடுகளிலும் வேலைப்பார்க்கின்றனர். அங்கே அவர்கள் வளமான வாழ்க்கையை வாழ்கின்றனர். அவர்களுக்கு எதிர்காலத்தில் ஏதாவது பிரச்சினை வந்தால் என்ன செய்து என்று யோசித்து பார்ப்பானீய பன்றிகள் அமைத்த பா.ஜ.க ஆட்சியில் இரட்டை குடியுரிமை என்ற சட்டத்தை நிறைவேற்றினார்கள்.

ஆனால் ஆங்கிலேயர்களால் பல நாடுகளுக்கு கொத்தடிமைகளாக கொண்டுச்செல்லப்பட்ட தமிழர்களை பற்றி யோசிப்பது யார்?

அவர்களுக்கு பிரச்சினை எனும்போது அவர்களுக்கு இந்த அரசியல் அமைப்பு என்ன செய்யும்.

பார்ப்பானீய சாதிக்கொடுமைகளாலும், வர்க்க ஓடுக்கு முறையாலும் சொந்த மண்ணை விட்டு ஓடிய இந்த தமிழ் மக்களுக்கு யார் ஆதரவு தருவது?இவர்களைப்பற்றி இந்த அரசாங்கம் சிந்தித்திருக்கிறதா?

இந்தியாவில் படித்து, வெளிநாட்டில் வசதியாக வாழும் இந்திய பார்ப்பானீய, பனியா வம்சாவளி குடும்பத்தின் வரிசுகள் செய்கிற சாதனைகளுக்கு விழா எடுக்கும் அரசாங்கம்.

விவாசயம் மற்றும் கிராமபுறத்தொழில்கள் நசிந்து அரேபியாவிற்க்கும், சிங்கை மற்றும் மலேசியாவிற்க்கும் கூலித்தொழிலாளர்களாக ஓடுகிற தமிழர்களை பற்றி கவலைப்படுகிறதா?

சிங்கை, மலேசியா சிறைகளில் வாடும் தொழிலாளர்களின் எண்ணிக்கையாவது தெரியுமா?

பர்மாவின் கலவரத்தில் ஓடி வந்த தமிழர்கள் பலர் திரிபுரா, நாகலாந்து பகுதிகளில் தங்கி விட்டனர். அவர்களை அங்கே போராடிக்கொண்டிருக்கும் நக்சல்பாரி இயக்கங்கள் தாக்கும் போது. அவர்களுக்காக குரல் கொடுத்தவர்கள் தமிழீழ விடுதலை புலிகள். இந்தியாவில் எந்த அரசியல் அமைப்பும் அந்த தமிழ்மக்களை பற்றி கவலையே கொள்ளவில்லை.

எங்கள் மண்ணில் குடகு மலையிருக்கிறது என்று தண்ணீர் தர மறுக்கிற கர்நாடகத்திற்க்கு, தமிழ் மண்ணில் இருந்து எடுக்கப்படும் நெய்வேலி நிலக்கரி மின்சாரம் தான் பெங்களுருக்கு சென்றுக்கொண்டிருக்கிறது. இந்திய அரசாங்கம் தனது அதிகாரத்தால் மின்சாரத்தை பகிர்ந்துக்கொடுக்கிறது. ஆனால் தண்ணீரை பகிர்ந்துக்கொடுக்க வக்கில்லை!அதிகாரம் தமிழகத்தில் தமிழனிடமிருந்திருந்தால் தண்ணீர் தந்தால், மின்சாரம் தருகிறோம் என்று விலை பேசலாம். அப்படியில்லையென்றால் மின்சாரத்தை விற்று அதில் வரும் பணத்தில் தண்ணீரை விலைக்கு வாங்கியிக்கலாம் (சிங்கப்பூர், சவுதி அரேபியா மாதிரி..)

வரலாற்று நிகழ்வுகளிலும், நிகழ்காலத்திலும் இந்திய தேசியம் என்பது தமிழர் நலன் என்பதை பாதுகாக்கவில்லை. அப்படி பாதுகாக்கவில்லை என்று சொல்லிவிட்டு ஓடி பதுங்கி வாழ முடியாது.

வரலாற்றில் ஓட, ஓட அடிக்கப்பட்ட இஸ்ரேலின் யூதர்கள் தான் நின்று எதிர்த்து இன்றைக்கு உலகத்தின் முக்கிய முடிவுகளை எடுக்கும் சக்தியாக மாறினார்கள். குட்ட, குட்ட குனிய முடியாது. எதிர்த்து நின்று தமிழ், தமிழரின் நலனை முன்னிறுத்தும் அரசியலை, அமைப்பை கட்டமைப்பது என்பது இன்றைய வரலாற்று தேவை. அதற்க்காக சிந்திப்போம்...

இன்னும் வரும்...

1 comments:

பெயரில்லா சொன்னது…

மலேசிய அரசுக்கு எதிரான அங்கு வசிக்கும் வம்சாவளி இந்தியர்களின் ஆர்ப்பாட்டம் சரியா, தவறா என்பது ஒருபுறம் இருக்க, அவர்கள் உலகினë கவனத்தை ஈர்த்துவிட்டார்கள் என்பது உறுதி.

இந்தியாவை விட மலேசிய அரசை கடுமையான வார்த்தையால் கண்டித்திருக்கிறது இங்கிலாந்து. இந்தியர்கள் விஷயத்தில் இங்கிலாந்து அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும், இந்தியர்களின் நியாயமான போராட்டத்துக்கு மலேசியா அனுமதி அளிக்க வேண்டும் என்றும் சற்றுக் கடுமையாகவே தெரிவித்திருக்கிறார்கள் இங்கிலாந்து எம்.பி.க்கள்.

சந்தேகம் இல்லாமல், மலேசிய இந்தியர்கள் விஷயத்தில் இந்தியாவின் கருத்துகள் மலேசியாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. மலேசிய வெளியுறவு அமைசëசர் அப்துல் ஹமீது அல்பர் சற்று `ஓவராகவே' அந்த எரிச்சலை வெளிப்படுத்தினார்.

ஆனால் மலேசிய இந்தியர்களின் எதிர்ப்பு நடவடிக்கைகள் அதிகப்பிரசங்கித்தனமானவை அல்ல; அவர்களின் உணர்வுகளினë வெளிப்பாடே என்கிறது விஷயம் அறிந்த வட்டாரம்.

`பூமி புத்ரா' (மண்ணின் மைந்தர்கள்) என்ற பெயரில் மலாய் மக்களுக்கே கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்பதை சுட்டிக்காட்டுகிறார்கள் அவர்கள். மலேசியாவின் மற்றொரு இனத்தினரான சீனர்களும் பொருளாதாரத்தில் முக்கிய இடம் பிடித்திருக்கினëறனர். ஆனால் காடு திருத்தி கழனியாக்கி, தோட்டமாக்கிச் செழிக்க வைத்த, சுரங்கம் தோண்டியே சுருண்ட இந்தியர்களில் பெரும்பாலானோர் இன்றும் சாதாரண நிலையிலேயே இருகëகிறார்கள் என்பதையும் மறுக்க முடியாது.

`இன ஒழிப்பு' என்று ஓர் இனத்தையே அழித்தொழிக்கும் நிலை மலேசியாவில் இல்லை என்றாலும் பாகுபாடு இருப்பது வெளிப்பாடு.

இவ்விஷயத்தில், தான் அரிதாகக் கோபப்படுவதாகக் கூறியுள்ள பிரதமர் அப்துல்லா அகமது படாவி, பாகுபாடு, `இன ஒழிப்பு' இருப்பதாக நிரூபித்தால் பதவியைத் துறக்கத் தயார் எனëறு முழங்கியுள்ளார்.

நெருப்பில்லாமல் புகையாது. அனைத்து இனங்களுக்கும் சரிசமமான வாய்ப்பு வழங்குவதில் மலேசியாவின் பக்கத்து நாடான சிங்கப்பூர் முன்மாதிரியாக உள்ளது. அதை மலேசியா பின்பற்றலாமே?

Related Posts with Thumbnails