திங்கள், 22 ஜூன், 2009

கவிஞர் தாமரை...அறச்சீற்றம், ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் ஒரு நிகழ்வு...

அதிகாரங்கள் ஆர்ப்பரிக்கின்ற பொழுதுகளில்... ஒடுக்கப்பட்டவர்களின் குரல்வளையை கடித்துக்குதற வெறிப்பிடித்தலைகின்றன... அல்லக்கைகள்.

என்னுடைய சிறுவயதில் நான் கண்ட காட்சி அப்படியே என் கண்ணில் நிழலாடுகிறது...
கிராமத்தில் ஆதிக்க சாதியை சேர்ந்தவர்கள் இன்னொரு பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த இளைஞனை மரத்தில் கட்டிவைத்து ஆல விழுதுகளாலும், சைக்கிள் டியூப்களாலும் அடித்து துவைத்துக்கொண்டிருந்தனர்... "அவன் திருடி விட்டான் என்கிற பொய்யான குற்றசாட்டை வைத்து!"

அதன் பின்னணி ஒன்றுமேயில்லை... ஆண்டைகளை எதிர்த்து விட்டான் அவ்வளவுதான்!

குற்றுயிராய் கிடந்த இளைஞனின் தாய் கதறியபடி கிடந்தாள்... துடித்தாள்... கால்களில் விழுந்து அரற்றினாள் தன் மகனை விட்டு விடும்படி... அவளோடு அவர்களின் உறவு பெண் ஒருவளும் கெஞ்சிக்கொண்டிருந்தாள்... மன்றாடினார்கள்... அழுதார்கள்... புலம்பினார்கள்... தலைவிரிக்கோலமாய்... துடித்தார்கள்... துவண்டார்கள்...

ஒடுக்கப்பட்ட மக்களின் ஓலமாய்... குமறியப்படி சபித்தாள் அந்த தாய்... "இந்த ஊரும், உங்க குடும்பமும் நாசமாய் போக!"

ஆதிக்க வெறியர்கள் இளைஞனின் உடலில் தங்கள் பலத்தை காண்பித்திருக்க... கைத்தடிகள்... கிளர்ந்தார்கள்...

"ஏய்! கிளவி என்ன சத்தம் போடுற!"
"யாரடி பேசுற!"
என்று எட்டி மதித்து இடுப்பெலும்பு உடைத்தார்கள்.


அப்படியே... இன்றைக்கு கவிஞர் தாமரைக்கு நிகழ்வதை ஒப்பிடுகிறேன்...

பார்ப்பன, பனியா தேசத்தின் அதிகாரங்கள் எம் உறவுகளை வன்னி மண்ணில் கொன்றழித்த பொழுதுகளில்...

பாஸ்பரஸ் கொத்து குண்டுகளாலும், பேரழிவு ஆயுதங்களாலும் எம் உறவுகள் சிதைக்கப்பட்ட பொழுதுகளில்...

3 லட்சம் மக்களை முட்கம்பி வேலிக்குள் முடக்கி வைத்து... எக்காளமிடும் பார்ப்பன, பனியா அதிகாரத்தின் முன்பு அழுது, புலம்பி, அரற்றி, கதறி, துடித்து, வீதியில் இறங்கி கத்தி கதறி, எம் சகோதரர்கள் தம்மையே தீயிட்டு எரித்துக்கொண்டும்... எல்லாம் பயனற்று போன பொழுதுகளில்....

ஒடுக்கப்பட்டவர்களின் இயலாமை ஓலமாய்... கவிஞர் தாமரை அவர்களில் "கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்" என்கிற கவிதை வந்திருக்கிறது.

பார்ப்பன, பனியா தேசத்தின் அல்லகைகளும், கைத்தடிகளும்... கொக்கரிகின்றன, இப்படி எப்படி கவிதை எழுதலாம் என்று!?

பார்ப்பன, பனியா தேசத்தின் அதிகாரத்தால் துயரமடைந்த மக்களுக்கு ஓலமிடக்கூட உரிமையில்லையா?

பார்ப்பன, பனியா தேசத்தை சபித்ததால் பொங்கி எழுகின்ற இந்திய பொறையாண்மை அடிவருடிகள், ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்வளையை நசுக்கிவிட துடிக்கின்றன.

பார்ப்பன, பனியா தேசத்தின் அதிகாரத்தால் ஒடுக்கப்பட்ட மக்கள் ஈனக்குரலாய் அசாமிலும், நாகலாந்திலும், பஞ்சாபிலும், காஷ்மீரிலும், பீகாரிலும், மகாராஷ்டிராவிலும், தமிழ்நாட்டிலும்... எல்லா ஊர்களிலும், எல்லா மாநிலத்திலும் ஒலித்து/சபித்துக்கொண்டிருக்கிறார்கள்.

அந்த குரல் கவிஞர் தாமரை போன்றவர்களால் உரத்து ஒலிக்கும்பொழுது அதிகாரங்களும், அல்லகைகளும் கிலி பிடித்து ஆடுகின்றன.

அந்த குரலை உடனே நசுக்கி விட வேண்டுமென்று துடிக்கின்றன.

ஒடுக்கப்பட்டவர்களின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும்... அந்த ஒலியின் அதிர்வில் அதிகாரங்களின் கோட்டைகள் தூள்தூளாக வெடித்து சிதற வேண்டும்!

வியாழன், 18 ஜூன், 2009

தஞ்சாவூர் மற்றும் சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த பதிவுலக தோழமைகளுக்கு...

நான் 28-06-2009 முதல் 03-07-2009 வரை ஊரில் இருப்பேன்.

எல்லோருக்கும் வாய்ப்பிருக்குமெனில் இந்த நாட்களில் ஏதாவது ஒரு நாள் தஞ்சையில் ஒன்று கூடலுக்கு திட்டமிடலாம்...

வாய்ப்பிருப்பவர்கள்... பின்னூட்டத்தில் தகவல் தாருங்கள்.

நன்றி

திங்கள், 1 ஜூன், 2009

எச்சரிக்கை ! openid - பயன்படுத்துவோர் கவனத்தில் கொள்ள வேண்டியவை...

Gmail, yahoo,blogspot,wordpress,aol அல்லது வேறெந்த openid provider பயன்படுத்தி நீங்கள் தமிழ்மணம் மற்றும் openid(எ.கா zoho.com) ஐ பயன்படுத்தி உள்நுழையும் தளங்களில் உங்களுடைய openid மட்டுமே அந்த தளத்திற்கு வழங்கப்படும்.

இத்தளங்கள் openid consumer என்று அழைக்கப்படும்.

ஆனால் மிக,மிக கவனத்தில் கொள்ள வேண்டியது, openid பயன்படுத்தி login செய்தபிறகு... வெளியேறும்பொழுது அவசியம் openid provider (gmail,yahoo,blogspot,wordpress) தளத்திற்கு சென்று signout செய்ய வேண்டும். இவ்வாறு செய்ய தவறினால் அந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து உள்நுழைந்துள்ளதாகவே கருத்தப்படும்.

எ.கா :

blogspotஐ openid ஆக பயன்படுத்தி உள்நுழைந்துள்ளதாக வைத்துக்கொள்வோம்... தமிழ்மணமோ அல்லது வேறெந்த தளமோ பயன்படுத்திய பிறகு blogger.com சென்று நீங்கள் signout செய்ய வேண்டும்.

அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால்... உங்களுடைய gmail மற்றும் blogspot account இரண்டுமே login ஆகவே இருக்கும்.

ஆகவே எந்த openid பயன்படுத்தினாலும்... அந்த openid provider தளத்திற்கு சென்று signout செய்ய மறக்காதீர்கள்!
Related Posts with Thumbnails