திங்கள், 27 ஆகஸ்ட், 2007

தல... தல... தட்டுக்கெட்டு போன தமிழர்கள்...!

வலைப்பதிய ஆரம்பித்து... நிறைய நட்புக்கள், தோழமைகள் இணைய உரையாடலில் இணைத்துக்கொண்டு மனதிற்க்கு பிடித்த தாய்மொழியில் உரையாடுவது என்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கிறது...

ஆனால் சில நண்பர்கள் பேச ஆரம்பித்தவுடன் ...

"வணக்கம் தல!"

....
"சொல்லுங்க தல"
....
"அப்புறம் தல"

....

சொல்லுங்க தலைவரே...

இப்படிதான் ஆரம்பிக்கின்றனர், சிலரிடம் ஓருமுறை சுட்டிக்காட்டினால், புரிந்துக்கொண்டு தவிர்த்துவிடுகிறார்கள்.

ஆனால் சிலர் விடாப்பிடியாக தொடர்ந்து இதை சொல்லுவதால், இங்கே எழுத வேண்டிய அவசியமாயிற்று....

இந்த உரையாடலை எவ்வாறு நாம் அடிமை மனத்திலிருந்து பெறுகிறோம் என்பதை பாருங்கள்... முன்பு நாம் உயர்சாதியினரிடம், எவ்வாறு உரையாடினோமோ... அதையே இப்போதும் தொடர்கிறோம்....

"சாமி! எப்படியிருக்கீக சாமி"
"ஆமாமஞ் சாமி"
"வணக்கம் சாமி"
"நீங்க சொன்னா சரியாயிருக்கும் சாமி"

இப்படி நாம் உயர்சாதியினரை விளித்து நம்முடைய அடிமை தனத்தை நாமே உறுதிச்செய்துக்கொண்டிருந்தோம்!

ஆர்.எஸ்.எஸ் கூடராங்களில் இந்த அடிமைத்தனத்தை மறைமுகமாக போதிப்பார்கள்...

"வாங்க ஜீ"
"சொல்லுங்க ஜீ"
"எப்படியிருங்கீங்க ஜீ"

"சாமி" போயி "ஜீ" வந்தது.... அதையும் சில மானங்கெட்ட தமிழர்கள், மறக்காமல் எல்லோரையும் "ஜீ" போட்டு அழைத்து தங்களின் அடிமைத்தனத்திற்க்கு தாங்களே வழி அமைத்துக்கொண்டார்கள்...

"தல..." பெரும்பாலும் ஓன்று அடுத்தவரை உயர்த்தவோ அல்லது ஓரு வஞ்சகத்துடனும், எச்சரிக்கையுடனும் அணுகும் போதும் உச்சரிக்கபடுகிறது...

சமூகத்தில் சமதளத்தில் நின்று உரையாடுகிற போது, எப்படி உங்களை நீங்கள் தாழ்த்திக்கொண்டு அடிமைத்தனத்திற்க்கான எண்ணத்துடன் உரையாடுகின்றீர்!

அல்லது

வஞ்சகத்துடன் ஓருவரை அணுகியிருக்கிறீர்கள் என்றால்... எப்படி இந்த வஞ்சகமனப்பான்மை வளர விடுகிறீர்கள்!

தமிழிலில் மரியாதை சொற்கள் ஏராளம்...

"ஐயா","நண்பரே","தோழரே", "சகோதரரே","அப்பா","அம்மா" .... என்று விளிக்க ஏராளமான சொற்க்கள்யிருக்க...

ஏன் அடிமைத்தனத்துடன் "தல..." என்று விளிக்கிறீர்கள்.

"தலைவரே, சொல்லுங்க"
"நீங்க சொன்னா சரி! தலைவரே"

இப்படி கூழைக்கும்பிடு போடுவதை எப்போது தான் நிறுத்தப்போகிறோம்...?

நம்மை அடிமையாக்க நினைப்பவர்கள் எப்போதுமே, இந்த மாதிரியான உரையாடல்களை ஆரம்பித்து வைப்பார்கள்.
(ஓரு வகையில் உளவியலாக உங்களை அடிமை மனப்பான்மைக்கு வளர்த்தெடுத்தல்!)

நாளடைவில்... இதில் நீங்கள் வீழ்ந்து அடிமைப்பட்டு நிற்ப்பீர்கள்...


தமிழனிடம் அடிமைத்தனமும், வஞ்சகமும் தேவையில்லை...
மானமும், அறிவும் உள்ள சமூகத்தில் தலைவன் என்று எவனும் கிடையாது!

குறிப்பு : நான் சுட்டுவது அடிமைத்தனத்தை, வஞ்சகத்தை... நட்புகள் புரிந்துக்கொள்வார்கள் என்கிற நம்பிக்கையில்

பாரி.அரசு

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2007

கணிணி என்றால் என்ன?

தனியா ஒரு வலைப்பூ ஆரம்பித்து கணிணியை பற்றி எழுதலாம் என்று தொடங்கினேன், அதென்னவோ தமிழ்மணத்தோட இணைக்கையில் வம்புபண்ணிக்கிட்டேயிருக்கு, நிர்வாகிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பியாகிவிட்டது. அதுவரைக்கும் இங்கிருந்து அதற்க்கு தொடுப்பு கொடுக்கிறேன்.

வருக! வருக!!


கணிணி என்றால் என்ன?

திங்கள், 20 ஆகஸ்ட், 2007

சிங்கையில் மட்டும் எப்படி முடிகிறது, தமிழ்நாட்டில் ஏன் முடியல...?

சிலமாதங்களுக்கு முன்னாடி என்னுடைய நண்பர் ஓருவர் (அவர் பாடகர், அதோட பாடல் பயிற்சி வகுப்புகள் வேறு போயிட்டிருக்கிறார்) சிலோன் ரோடு விநாயகர் கோயிலில் ஓரு இசை நிகழ்ச்சி இருக்கு போகணும் வருகிறாயா? என்று கேட்டார்.

நான் வரவில்லை என்றேன்

ஏன்? என்று கேட்டார்

இவனுக தமிழ்நாட்டுல இருந்து வந்து புரியாம கர்நாடக சங்கீதம் என்கிற பேரில் எதையாவது பாடுவாய்ங்க நீங்க உட்கார்ந்து தலையாட்டுவீர்கள், நான் அங்கன எதுக்கு என்றேன்.

இல்ல, கட்டாயம் நீ வர வேண்டும் உனக்கு ஓரு அதிர்ச்சி காத்திருக்கிறது என்றார்

ஓரு வழியா கட்டாயபடுத்தி என்னை கூட்டி சென்றார், நிகழ்ச்சி ஆரம்பித்த உடனே எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சி...

எல்லா நிகழ்வுகளும் முழுக்க, முழுக்க தமிழ் இசை பாடல்கள் பாடப்பட்டது. திருக்குறள்,தேவாரம், திருவாசகம், திருப்புகழ் என்று அசத்தினார்கள்.

மிக முக்கியமான செய்தி யாரெல்லாம் தங்களுக்கு கர்நாடக சங்கீதம் தவிர வேறு எதுவும் பாட வராது என்கிற மாதிரி தமிழகத்தில் மேடை தோறும் கர்நாடக சங்கீதம் பாடுகிற பாடகர்கள்... இங்கே தமிழ் இசை பாடல்கள் பாடிக்கொண்டிருந்தனர். அனைவருமே தமிழகத்திலிருந்து வந்த பாடகர்கள்.

நிகழ்ச்சியின் முடிவில் சில விசாரணைகளை மேற்க்கொண்ட போது தான் தெரிந்தது, இந்த கோயிலின் நிர்வாகம் முழுக்க, முழுக்க ஈழத்தமிழர்களால் நடத்தப்படுகிறது.

பிறகு அவர்களிடம் உரையாடிய போது, அவர்கள் சொன்ன தகவல்...

நாம் பணம் கொடுக்கிறோம், நமக்கு தேவையானதை அவர்கள் பாட வேண்டும் என்பதை தெளிவாக சொல்லிவிடுகிறோம். இங்கே வேறெந்த சிக்கலுமில்லை என்றனர்.

அப்போ தமிழ் நாட்டு தமிழனும் பணம் தானய்யா கொடுக்கிறான், கோயில் திருவிழாவில் இருந்து, கச்சேரி மேடை வரை இவர்கள் பாடுகிற புரியாத பாடல்களுக்கு தலையாட்டிக்கிட்டே திரியுறானுகளே...!

சிங்கையில் டாலருக்கு தமிழில் பாடும் பாடகர்கள், தமிழ்நாட்டில் ரூபாய் நோட்டுக்கு தமிழிலில் பாட மறுப்பதேன்?

இல்லை

தமிழ்நாட்டு தமிழன் மானம் கெட்டு அலைகிறானா?

விரைவில் பாடகர்களின் பட்டியல் மற்றும் நிகழ்ச்சி நிரலை வெளியிடுகிறேன்.

படம் பார்த்து, கதை சொல்லுங்கோ...!


நன்றி : starhub, singapore

வியாழன், 16 ஆகஸ்ட், 2007

காமத்திற்க்கப்பால் விரியும் கற்பனை...!




















கலவியில் களைத்து கிறங்கிய பொழுது...
காதலி கட்டியணைத்து கன்னத்தில் கனியிதழ் பதித்து...
காதருகே " நீங்க ரொம்ப மோசம் !" என்று கனிந்தபொழுது...
வியர்வைத்துளிகளில் வியர்த்து போன காலதுளிகள்...!



பட உதவி நன்றி : TBCD

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2007

பூங்காவுக்கு நன்றி...!

எனது இடுகையை பூங்கா இதழில் தொகுத்த தமிழ்மணம் மற்றும் பூங்கா நிர்வாகத்துக்கு நன்றி!

சீனப்பெண்களும்... மகப்பேறும்...!

http://poongaa.com/content/view/2097/1/

விடுதலை கிடைத்துவிட்டதா...?

விடுதலை கிடைத்துவிட்டதா...?

இன்றைக்கு விடுதலை கிடைத்தநாள் என்று எல்லோரும் கொண்டாடி, அப்பாடி இன்றைக்கு விடுமுறை என்று வீட்டில் தொலைகாட்சிபெட்டியில் மூழ்கி கிடக்கும் அரசு அலுவலர்களுக்கும் (மற்றநாளில் மட்டும் என்ன வேலை பார்க்கிறார்கள் என்று கேள்வியெல்லாம் கேட்க கூடாது!) , நாட்டை அடகு வைக்கும் அரசியல்வாதிகள் ஓருநாளாவது நாட்டுப்பற்றோடு இருப்பது போல நடிப்பதற்க்கும் வாய்ப்பான நாளாகதான் எனக்கு தெரிகிறது.

விடுதலை கிடைத்து 60 ஆண்டுகளில் நாம் என்ன சாதித்திருக்கிறோம்?

தனிமனித பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதா?
நீங்களும் கொலை செய்யப்படுவீர்கள்...!

நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதா?
ஓரு நாட்டின் பாதுகாப்பு என்பது அந்நாட்டின் மக்களின் பாதுகாப்பாக முதலில் இருக்க வேண்டாமா? இதுவரை சிங்கள, பாகிஸ்தான் இராணுவத்தால் கொல்லப்பட்ட மீனவர்களுக்கும், இன்னும் கொல்லப்படயிருக்கும் மீனவர்களுக்கும் இந்தியா என்கிற நாடு என்ன பாதுகாப்பை வழங்கியிருக்கிறது.

தீண்டாமை முற்றிலும் ஓழி்க்கப்பட்டுள்ளதா?
டீக்கடையில் கிழியுதுன் தேசியப் பொய்மை

கல்வி,மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகள் நிறைவுசெய்யப்பட்டுள்ளதா?
இன்னும் குழந்தை தொழிலாளர்களை நம்மால் முற்றிலும் ஓழிக்க முடியவில்லை.

நமது அரசாங்கம் சுதந்திரமாக செயல்படுகிறதா?
சமீபத்தில் BBC வானொலியில் இந்தியா ஓளிர்கிறது என்கிற நிகழ்ச்சியை நடத்தினார்கள், அப்போது மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் , இந்தியா பயன்படுத்தம் எரிப்பொருட்களின் அளவைப்பற்றி BBC வானொலிக்கு விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தார். இதுதான் நமது அரசாங்கத்தின் சுதந்திர நிலைமை.

ஏகாதிபத்தியங்கள் சொல்கிற இடத்தில் கையெழுத்து போடுவதும், அவர்கள் இடுகிற பிச்சைக்கு வாலாட்டும் நாயாக தான் நமது அரசாங்கங்கள் இருக்கின்றன.

இங்கே பாருங்கள் அமெரிக்காவுக்கு இந்தியா வச்ச ஆப்பு! தஞ்சாவூரான் எப்படி சொல்கிறார் நமது நிலையை என்று.

இலங்கையில் போர் நடக்கிறது, அதனால் அங்குள்ள மக்கள் அகதியாக வெளியேறுகின்றனர். ஆனால் தஞ்சை மாவட்டத்தில் என்ன நடக்கிறது, ஏன் தஞ்சை விவசாயிகள் நிலங்களை அடகு வைத்து எங்களை அகதியாக ஐரோப்பாவில் இறக்கி விடுங்கள் என்று மஞ்சள்பையில் பணத்துடன் சென்னை வீதிகளில் ஏஜெண்ட்டுகளிடம் கெஞ்சிக்கொண்டிருக்கின்றனர்.

ஒரு நாட்டில் விவசாயிகள் தங்களை அகதிகளாக அனுப்புங்கள் என்று அலைவதை எப்படி சகித்துக்கொள்ள முடிகிறது?
இதுதான் விடுதலையடைந்த நாடா?

ஆண்டுதோறும் ஆயிரகணக்கான ஓரிசா மக்கள் அகதிகளாக அண்டை மாநிலங்களின் வீதிகளில் தஞ்சம் புகின்றனர். இதுதான் இந்த நாட்டின் விடுதலையா?

ஏகாதிபத்தியங்கள் எரிகிற எச்சில் பருக்கைக்கு வாலாட்டும் நாய்க்குட்டியாக மாறி போன தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், ஏதோ தங்களுக்கு நாட்டுப்பற்று ஏகபோகமாக இருப்பதுபோல மின்னஞ்சலும், இரவு விருந்துமாக சுதந்திர தினத்தை கொண்டாடி மகிழலாம்.

மக்களுக்கான அரசாங்கமும், அவர்களுக்கான தலைமையையும் அமையாத வரை விடுதலை என்பது கானல்நீரே!

இடுகைகள் தொடுப்பு நன்றி : சுகுணா திவாகர், தஞ்சாவூரான்

திநகர்... ரெங்நாதன் தெரு - 12-08-2007














வியாழன், 9 ஆகஸ்ட், 2007

தமிழ்மணம் வாசிப்பில்...

தமிழ்மணம் வாசிப்பில்... எழுத அழைப்பு வந்ததும் கொஞ்சம் எனக்கு தயக்கமாக இருந்தது, நாம் என்னத்த பெருசா வாசிக்கிறோம் என்று எண்ணினேன். பிறகு ஏதோ நான் வாசித்ததை சொல்லி வைக்கலாம் என்று முடிவெடுத்து... நான் வாசித்ததில் சிலவற்றை சொல்கிறேன்.

நான் முதன்முதலாக வாசிப்பிலே பகுதி எழுதுகிறேன். அதனால் தமிழ்மணம் ஓருவாரத்தில் வந்த இடுகைகள் என்று கொடுத்த வரையறையை கொஞ்சம் மீறி இருக்கிறேன், நிர்வாகிகள் அனுமதிப்பார்கள் என்கிற நம்பிக்கையில்....

அரசியல்/சமூகம் - பெரியாரை சிறுமை படுத்தவும், அவருடைய கருத்துகளை திரிக்கவும், புரட்டுகளை அள்ளி வீசித்திரி்கிற கூட்டத்திற்க்கு பதிலடியாக திரு அவர்கள் பெரியார் ஏன் காங்கிரஸிலிருந்து வெளியேறினார்? இந்த பதிவை எழுதியிருந்தார். பெரியார் யாருக்காக போராடினாரோ அவர்களே சில நேரம் இந்த புரட்டுகளுக்கு அடிதளமாக அமைவது மிகவும் வேதனையான நிகழ்வு.

செல்வநாயகி உயிரினும் இந்தப் பெண்மை இனிதடா மனதை கனக்க செய்த பதிவு சமூகத்தில் பெண் தாழ்வானவள் என்கிற பார்வை மாறுகிறவரை இந்த கொடுமை நிற்காது என்றே தோன்றுகிறது.

சிவபாலனின் வர்ணாசிரமம் - HOT PHOTO!! பதிவு பார்பானீயத்தின் ஆளுமையையும், நம்முடைய இழிநிலையையும் பதிவாக்கியது.


தழிழ் சசி யின் வாசிங்டனில் தமிழர் சுயநிர்ணய அமைதி பேரணி இந்தபதிவும்,
சிவபாலனின் இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு GRAND SALUTE! இந்தபதிவும் ஏற்படுத்திய தாக்கத்தை விட பதிவுகளின் பின்னூட்டங்களில் தமிழக தழிழர்களின் ஈழ விடுதலை போராட்டத்தின் ஆதரவு நிலையை பற்றிய கேள்விகள், சாடல்கள் என்று போனது.

காதல் - காதலாகி நிற்கிற அருட்பெருட்கோ நம்மை காதலில் நேரமிருந்தால்... உருக வைத்தார்.
நந்தா முத்தக்கவிதை சமாதானமாய் ஒரு முத்தம் தந்து அடுத்து காதல் எனப்படுவது யாதெனின்… என்று காதலின் இலக்கணத்தை அனுபவித்து எழுதிக்கொண்டிருக்கிறார்.(இவர் எங்கேயோ இந்திய வரலாறு எழுதப்போறேன் அப்படின்னு சொன்னதா ஞாபகம்!! )

பரபரப்பான நிகழ்வுகள் - அமீரக பதிவர் சந்திப்பும் அதை தொடர்ந்து வந்த
"பூங்கா"வில் அபிஅப்பா!!
வலைப்பதிவர்கள் சந்திப்பு: பரிகசிக்கும் பார்வையில் பதிவுகளில் அபி அப்பாவின் அன்பு அடிபொடிகள் ஜெஸிலா வை உண்டு இல்லை என்று பண்ணிக்கொண்டிருந்தார்கள் இதில் அபி அப்பாவின் பொறுமை, மனித உறவுகளுக்கு கொடுக்கிற முக்கியத்துவம் பிடித்திருந்தது.(எங்க தஞ்சை மண்ணை சேர்ந்தவர் அதுதான் அந்த பக்குவம் :-))).
எப்போதும் கேலியும், கிண்டலுமாக எழுதுபவர்களை நாம் பெரும்பாலும் கண்டுக்கொள்வதில்லை அதை விளையாட்டாக எடுத்துக்கொண்டு போய் விடுகிறோம். எப்பொழுதும் அப்படியில்லாமல் திடீரென ஓருவர் கிண்டலாக எழுதும்போது... அது விளையாட்டாக இருந்தாலும் மற்றவர்களுக்கு அது மிக விபரீதமாக தெரிகிறது. இங்கேயும் ஜெஸிலா நான் விளையாட்டாக தான் எழுதினேன், மற்றவர்கள் மிகைபடுத்தி விட்டதாக சொன்னார், கடைசியாக சென்ஷி எல்லோருக்கும் அல்வா கிண்டி முடித்தார்...:-)))

நான் கதை படிப்பதை நிறுத்தி நீண்ட நாட்களாகிறது... வரலாற்று கதைகள் சில மோசமான மாற்றங்களை எனக்குள் கொண்டு வந்ததால் நிறுத்திவிட்டேன். அப்படியே விட்டுவிட்டாலும் சமீபத்தில் படித்த இரண்டு வலைபதிவு கதைகள் இம்சை அரசியின் அத்தை மகனே! அத்தானே!! - III அதை தொடர்ந்து நாங்களும் முன்னாடி இது மாதிரி எழுதியிருக்கோம்ல என்ற மோகன்தாஸின் அக்கா பெண்ணே அழகே!!! இந்த கதையும் ரசித்தேன்.

சினிமா விமர்சனம் - தெகா வின் National Geography Vs Mel's Apocalypto!!!
இதுவும் இதற்க்கு முந்தைய பதிவில் அபோகலிப்டோ என் பார்வையில்: Apocalypto...! அப்படத்தின் விமர்சனமும் மிக ஆழமாக இருந்தது. ஜீராசிக் பார்க், டைடானிக் இப்படிதான் என்னுடைய ஹாலிவுட் படங்களின் எல்லை இதுவரையிருக்கிறது... அப்படியும் கொஞ்சம் எல்லைதாண்டினால் ஜாக்கிசான், ஜெட்லீ யோடு முடிந்து விடும். பதிவில் மக்கள் பிரிந்து மேய்ந்துக்கொண்டிருந்தார்கள். அதுவும் இளவஞ்சி பின்னி பெடலெடுத்திருந்தார். நான் ஒரு ஓரமாக குத்தவைச்சு ரசித்து படித்துவிட்டு ஓடி வந்துவிட்டேன்.

நகைச்சுவை - தமிழனின் நிலையை உள்வாங்கி அதை நகைச்சுவையாக குழலி எழுதியிருந்த புரட்சி நாளை காலை எட்டரை மணிக்கு வருது பதிவு எதிர்காலத்தில் பொய்த்துபோக நாம் போராட வேண்டும்.

உஷா வின் பிலாக்கோ போபியா இப்பதிவு வலைபதிவர்களுக்கு மனநிலையை சமநிலையில் வைக்க வேண்டிய எச்சரிக்கையாகவும் மிகவும் நேர்த்தியான படைப்பாகவும் வந்திருந்தது.

வ.வா.ச பழைய மொந்தையில் புதிய கள் என தங்கள் சட்டைகளை தாங்களே கிழித்துக்கொள்ளும் வழக்கமான நகைச்சுவை பதிவுகளை தந்திருந்தனர். நகைச்சுவையை பலகோணங்களில் வைக்க வேண்டும் நிறைவேற்றுவார்களா???

ப.பா.ச இவர்கள் எதிரணியின் வேகத்திற்க்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறுகிறார்கள் வ.வா.ச மாதிரியே தங்களை சுற்றியே கருவை வைத்து நகைச்சுவை பதிவு எழுதுகிறார்கள் விரைவில் கடையை மூடிவிடலாம் என்று ஊரெல்லாம் பேசிக்கொள்கிறார்கள்.

குழுவலைபதிவுகள்
சற்றுமுன் - பிற செய்தி நிறுவனங்களின் செய்திகளை நகல் எடுத்து ஓட்டுவது என்று வேகமற்று காணப்பட்டது. செய்தி சேகரிப்பில் புதிய உத்திகள் தேவை!!!

வலைச்சரம் - பாலபாரதி வலைச்சரம் தொடுத்திருக்கிறார். பட்டறை வேலைபளுக்கு மத்தியில் நன்றாகவே செய்திருக்கிறார்.

அறிவியல் - பொன்வண்டு வின் இந்த
ஏடிஎம் எப்படி வேலை செய்யுதுன்னு தெரியுமா?
தொடர் பதிவு மிக முக்கியமான ஓன்று வலை அமைப்பில் வங்கி சேவைகள் ( Banking Services in Network Systems) பற்றி புரிந்துக்கொள்ள உதவியது. வங்கி சேவைகள் மட்டுமல்ல போக்குவரத்து, காவல் மற்றும் நீதிதுறை, குடிமை சேவைகள் (civil services) , மருத்துவம் என்று பல மக்களுக்கு தேவையான சேவைகள் இதுமாதிரியான வலை அமைப்பில் வர வேண்டிய அவசியம் இருக்கிறது (வளர்ந்த நாடுகளில் நடைமுறையில் இருக்கிறது) . இந்த அறிவியலை தமிழிலில் நிறையபேர் எழுத வேண்டும். வாசிப்பாளர்கள் கண்டிப்பாக ஊக்கபடுத்த வேண்டும்.

ஈழத்து எழுத்துகளில் வெற்றி யின் 1.கிறிஸ்தவர் - 2. முஸ்லிம்கள் - 3.மலையாளிகள் - 4. இந்தியத்தமிழர் - 5. இலங்கைத் தமிழர் => கறுப்பு யூலை '83 இந்தபதிவு கொஞ்சம் பழைய நிகழ்வுகளை ஆராய்ந்தது.

தூயாவின் தமிழீழத்தை ஒரு நாடாக அங்கீகரித்த உலக வலைப்பதிவர் ஒன்றியம்
இந்தபதிவும் அதில் வெளிபட்ட மகிழ்ச்சியும் என்னை நெகிழ செய்தது. இந்த மகிழ்ச்சி தமிழீழ விடுதலையாக விரைவில் நிகழ வேண்டும் வாழ்த்துகளுடன்.

இந்த மாதம் முழுவதும் கருப்பு ஜீலை பற்றிய நிறைய பதிவுகள் வருமென்று நினைத்தேன். ஈழத்துபதிவர்கள் பல ஆண்டுகளாக இதைபற்றி எழுதுவதால் கொஞ்சம் களைப்பாக இருக்கிறார்கள் போல் தெரிகிறது. ஏமாற்றமாக இருந்தது.
(நான் இடுகைகளை கவனிக்காமல் இருந்திருந்தால் மன்னிக்கவும்)

நான் வாசிக்கும் சிலர்...
பெரியாரின் பேச்சுகளையும், எழுத்துகளையும் நாள்தோறும் வாசிக்க தமிழச்சி
அரசியல் மற்றும் சமூக அவலங்களை அக்குவேறு ஆணிவேராக பிரித்து மேய்கிற அசுரன்
புரியுதோ இல்லையோ கண்டிப்பா வாசித்து விடுகிற சுகுணாதிவாகர்
(இவரிடம் எனக்கு ஒரு வேண்டுகோள் வாசிப்பவரின் வாசப்பின் தரம் நல்ல எழுத்துகளால் உயரும்.. ஆனால் வாசிப்பவருக்கு போய் சேராத எழுத்துகளால் எப்படி மாற்றம் வரும் என்று தெரியவில்லை!!)
விடுதலை போராளிகளை பற்றிய வரலாறு மற்றும் ஈழ விடுதலையின் நிகழ்வுகளை அறிய வன்னியன்

நான் வலைபதிவுகளில் வாசித்தபோது என்னை நிறுத்தி பழைய பதிவுகளையும் வாசிக்க வைத்த ஆசிப் அண்ணாச்சியின் பெங்களூரு போன கதை 1 பயணக்கட்டுரை கலகலப்பாக இருந்தது.
எழுத்துகளால் மட்டும் எனக்கு அறிமுகமான அண்ணாச்சியின் வாழ்க்கை துணை இழப்பு என்னை வாரத்தின் இறுதியில் அதிர்ச்சியை தந்து ஆடிப்போக செய்தது.


வாசிக்கிறேன்... ஆனால் இந்த எழுத்துக்களும், வாசிப்பும் எனக்கு என்ன மாற்றத்தை தந்தது என்பதை சிந்திக்கும்போது புதிய நட்புகள்... கருத்துபறிமாற்றங்கள் என்று போனாலும்... தமிழினத்தின் பெரும்பான்மை மக்களின் சிந்தனையும், செயலையும் தீர்மானிக்கிற சக்திகளாக சினிமா நட்சத்திரங்களும், சினிமாவும் இருக்கிற சூழலில் நானும் உங்களோடு சேர்ந்து என்னை மீண்டும் சொறிந்துக்கொள்கிறேன்... குருதி வடியும்வரை...

நன்றி!
உங்களன்பு
பட்டுக்கோட்டை பாரி.அரசு

புதன், 8 ஆகஸ்ட், 2007

சீனப்பெண்களும்... மகப்பேறும்...!

முன்பு வேலைபார்த்த சிங்கப்பூர் அரசு நிறுவனத்தில் எனக்கு மேலதிகாரியாக இருந்தவர் சீன பெண்மணி. மிகவும் நல்லவர். ஒருசமயம் நான் ஓரு அவசர குடும்ப வேலையாக போகணும் என்று சொன்ன போது, மிகத்தெளிவாக சொன்னார். "குடும்பம் ரொம்ப முக்கியம், நீ எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதித்துக்கொள், குடும்பத்திற்க்கு முக்கியத்துவம் கொடு" என்று. அவ்வளவு தெளிவான பார்வை உடையவர்.

தாய்மையடைந்து, கருவை சுமந்துக்கொண்டு வேலைக்கு வந்துக்கொண்டிருப்பார். தான் கருவுற்றிருக்கிறோம் என்று ஓரு சோர்வாகவோ அல்லது அதை ஓரு பாரமாகவோ கருதாமல், இயல்பாகவே வேலை பார்ப்பார். இப்படியாக நாட்கள் சென்ற போது...

ஓரு நாள் காலை பணிக்கு வந்தார். மதியம் காணவில்லை. மாலை அவருடைய சக தோழி குழந்தை பிறந்திருக்கிறது என்று சொன்னார். எனக்கு ஓரே ஆச்சிரியம் என்னாடா! இது காலை வரை அலுவலகத்துக்கு வந்து வேலைபார்த்துவிட்டு மதியம் சென்று குழந்தை பெற்றுக்கொள்வது என்பது என்னை திகைக்க வைத்த நிகழ்வு. சரி! இவர்கள் மனத்துணிவு அதிகம் அதனால் இருக்கலாம் என்று எனது வீட்டின் உரிமையாளரிடம் விசாரித்தேன். சிங்கப்பூரில் இருக்கிற சீனப்பெண்கள் இவ்வாறு முதல் நாள் வரை வேலைக்கு வருவார்கள்.
அடுத்தநாள் குழந்தை பெற்றுக்கொள்வார்கள், ஓரே மாதத்தில் வேலைக்கு வந்து விடுவார்கள்.
அவர்கள் அவ்வாறு மன தைரியம் உள்ளவர்கள். அதோடு மிகச்சிறப்பான அவசரகால ஊர்தி சிங்கப்பூரில் இருப்பதால் அவர்கள் இதை பொருட்டாகவே மதிப்பதில்லை என்றார்.

நான் அப்படியே மலைத்து போனேன்! நம்ம மக்கள் கரு உண்டான நாளிலிருந்து ஆரம்பித்து, 7வது மாதம் வளைக்காப்பு,சீமந்தம், அப்புறம் கூடவே அம்மா துணை. நம்ம மக்கள் ஜொள்ளு விட மச்சினி துணை என்று அலம்பல் விட்டு, ஊரையே ரெண்டு பண்ணிக்கிட்டுயிருக்காங்க!

சிங்கப்பூரில் இருக்கிற தமிழர்களும் ஊரில் பண்ணுற அதே பழக்க,வழக்கம்தான் இங்கேயும்!.

இதைப்பற்றி அனுபவம் உள்ள மனிதர்கள், மருத்துவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கொஞ்சம் பின்னூட்டம் போடுங்களேன்.

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2007

திராவிட இயக்கங்களால் ஏற்ப்பட்ட எதிர்விளைவுகள்...!

பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரியை பற்றிய அறிமுகம் தேவையில்லை என்று நினைகிறேன், ஓரு கோடிட்டு காண்ப்பிக்க அழகிரி ஓரு தீவிர திராவிட இயக்க தொண்டர். இப்படி எண்ணற்ற திராவிடர் கழகத்தின் தொண்டர்களை உருவாக்கிய நகரம்.

இந்த வேகமான அல்லது தீவிரமான திராவிட இயக்கங்கள் என்ன, என்ன விளைவுகளை ஏற்படுத்தியது சமூகத்தில் என்பதை விட அதனால் ஏற்ப்பட்ட ஓரு எதிர்விளைவை இங்கே சுட்டுவதன் மூலம், மோதி மிதித்து விட்டு சமூக மாற்றத்தை உருவாக்கி விடுவோம் என்று நினைப்பவர்களுக்கு, அதனால் எதிர்காலத்தில் சமூகத்தில் ஏற்படும் மோசமான விளைவுகளை கவனத்தில் கொள்ள வழிவகை செய்யும் என்று நினைக்கிறேன்.

மிக வேகமாக அடித்த திராவிட இயக்க அலையில் பல இளைஞர்கள் கவரப்பட்டு, தீவிரமாக பணியாற்றினார்கள். ஆனால் அவர்களை எதிர்க்க நினைத்த பலமுள்ள நபர்கள் என்ன செய்தார்கள்? எங்கே போனார்கள்? அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது எந்த இயக்கம்? இப்படி பல கேள்விகள் இருக்கிறதில்லையா?

என்ன நடந்தது பட்டுக்கோட்டை வட்டத்தில்? கடந்த 40 ஆண்டுகளில் இந்த எதிர்ப்பாளர்களை எந்த இயக்கம் உள் வாங்கி வைத்து என்ன செய்துக்கொண்டிருக்கிறது?

இப்போ வளர்ந்து நிற்கிற திராவிட இயக்க எதிர்ப்பால் யார், யார் பாதிக்கபடுகிறார்கள்?


இதையெல்லாம் தொடர்ந்து எழுதுகிறேன்...


என்றென்றும் தாடி….
சேலம் நிகழ்வு : தலித்துக்கள் தமிழர்கள் இல்லையா ?
இந்த இரண்டு இடுகைகள் இந்த திசையில் சிந்திக்க வைத்தவை...

திங்கள், 6 ஆகஸ்ட், 2007

விடிய,விடிய... தூக்கம் தொலைத்த அபிஅப்பா!

நான் ஏதோ நல்ல பிள்ளையா எனக்கு தெரிந்ததை அங்கங்கே மொக்கை போட்டு பதிவா எழுதிக்கிட்டிருந்தேன். திடீரென்று நம்ம TBCD தொடர்புக்கொண்டு இப்படியே எழுதிக்கிட்டிருந்தால் ஒருத்தரும் உன்னை சீண்டமாட்டார்கள். மொக்கை அல்லது கும்மி எழுதி மக்களோட ஐக்கியமாகிவிடு என்று அறிவுரை கூறியதன் பேரில்... நான் என்னுடைய இருக்கிற நான்கு முடியையும் பிய்த்தெறிந்து சிந்தித்ததில் கும்மியடிக்க யாரை இழுக்கலாம் என்று தேடினேன்.

வழக்கம்போல மோகன்தாஸ் யை இழுக்கலாம் என்று எண்ணினேன், அவர் உடனே 'இங்க பாருங்க' ஏற்கனவே நான் வரலை இந்த விளையாட்டுக்கு சொல்லிட்டேன், என்னை ஏன் வம்பிழுக்கிறீர்கள் என்று அனுப்பிய மின்னஞ்சலுக்கு பதிலே அனுப்பல :-)

சரி! எப்படியாவது மொக்கை போட்டாவது மேட்டர் தேற்றியே ஆகணும் அப்படின்னு நந்தா வை பிடித்தேன், கிட்டதட்ட இரண்டு மணி நேரம் பேசி உங்க நந்தினி யாருங்க அப்படின்னு கேட்டா! 'நான் அவன் இல்லை' அப்படின்னுட்டார்!

பிறகு பல பேரிடம் கலந்து ஆலோசித்து கும்மி குடும்பத்தின் தலைவி கண்மணி யக்காவை கூப்பிடலாம் கூகுள் டாக்கில் என்று நினைத்தால், திடீரென்று ஒரு சந்தேகம் அக்கா பதிவு ஏழுதுற மாதிரி அமைதியா இருந்துட்டா நல்லது! அப்படியில்லாமல் வேப்பிலை எடுத்து ஆடிட்டா :-) என்ன பண்ணுறதுன்னு... உடனே அந்த எண்ணத்தை அழித்து விட்டேன்!

பதிவெல்லாம் கடைசியா தேடி ஓரு நல்ல மனிதர், எங்க மாவட்டத்துக்கு சொந்தக்காரர் அபிஅப்பா வை பிடித்தேன், மின்னஞ்சல் வழியாக கூகுள் டாக் அழைத்தவுடன் வந்தார்.

நான் "நீங்க ரொம்ப நல்லா எழுதுறீங்க, நிறைய வாசித்திருக்கிறேன்!" உங்க அளவுக்கு நம்மால வர முடியாது அப்படியின்னு ஐஸ் வைக்க...
மனிதர் உருக ஆரம்பித்தார்...
அரை மணி நேரம் அப்படியே பேசியிட்டே போயி....

எல்லா உண்மைகளையும் எடுத்துவிட ஆரம்பித்துவிட்டார்... யார், யார்? என்ன பண்றாங்க. அமீரக பதிவர்களின் வண்டவாளங்கள் என்று தண்டவாளம் ஏற்றினார்.

அப்பாடா மேட்டர் தேத்தியாச்சு என்று நினைக்கும் போது சுதாரித்துக்கொண்டார்... அரசு! நான் சொன்னதெல்லாம் சும்மா விளையாட்டுக்கு என்று பல்டி அடித்தார்!

எனக்கு அப்பவே பிடிப்பட்டது மனிதர் உளறிட்டார் என்று!

படுத்துவிட்டு நடு இரவில் எழுந்து ஏதாவது பின்னூட்டம் வந்திருக்கா பப்ளிஷ் பண்ணலாம் என்று பார்த்தால்...

மனிதர் ஆன் லைன்ல ஏங்க தூங்கலையா? என்றால்...

அரசு ! ரெண்டு பெக் எகஸ்ட்ரா போட்டும் தூக்கம் வரலை அப்படியின்னார்...

சரி! காலையில ஆறு மணிக்கு பார்த்தால் அப்பவும் ஆன் லைன்ல என்னங்க அப்படியின்னா...

கூகுள் டாக் ஐ விட்டு ஓடிட்டார்!



( குறிப்பு : கொஞ்சம் கற்பனை கலந்த நிகழ்வு அதனால யாராவது மனம் புண்பட்டிருந்தால், அதற்க்கு என்ன மருந்து என்று சொன்னால் ??? அதை வாங்கி சரி செய்து விடுகிறேன்)

இவர்களையெல்லாம் உங்களுக்கு ஞாபகமிருக்கா....??

ஆசிரியர் நம்மை கைபிடித்து எழுத வைத்து... இந்த காலசுழற்சியில் அறிவும்,சிந்தனையும் பெற அடிதளம் அமைத்தவர்கள். எனக்கு பாடம் சொல்லிதந்த ஆசிரியர்களை பட்டியலிட்டிருக்கிறேன், சிலருடைய பேர் மறந்து விட்டது ஆனால் அவர்களின் முகம் மனதில் இருக்கிறது. உங்களுடைய ஆசிரியர்களையும் பட்டியல் இடுங்களேன் பின்னூட்டமாக அல்லது தனிபதிவாக...

அப்பா - என்னுடைய முதல் ஆசிரியர் என்னை செதுக்கிய உளி!

வகுப்பு

ஓன்று - ?
இரண்டு - ??
மூன்று - ???
நான்கு
வகுப்பாசிரியர் ஆங்கிலம் - ஆசிரியர் ஏகாம்பரம்

ஐந்து

வகுப்பாசிரியை ஆங்கிலம் - ஆசிரியை மல்லிகா
கணிதம் - ஆசிரியை அன்புவல்லி
தமிழ் - ஆசிரியை சந்திரா
அறிவியல் - ?
வரலாறு - ?

ஆறு

வகுப்பாசிரியை ஆங்கிலம் - ஆசிரியை அன்பு வல்லி
தமிழ் - ?
கணிதம் - ஆசிரியர் மீனாட்சிசுந்தரம்
அறிவியல் - ?
வரலாறு - ?

ஏழு

வகுப்பாசிரியை ஆங்கிலம் - ஆசிரியை சந்திரா
தமிழ் - ஆசிரியர் வேணுகோபால்
கணிதம் - ?
அறிவியல் - ?
வரலாறு - ?

எட்டு

வகுப்பாசிரியர் தமிழ் - ஆசிரியர் வேணுகோபால்
கணிதம் - ஆசிரியை நாகவல்லி
ஆங்கிலம் - ?
அறிவியல் - ?
வரலாறு - ?

ஓன்றிலிருந்து எட்டு வரை கண்டியன்தெரு நடுநிலைபள்ளி,பட்டுக்கோட்டை அதன் தலைமையாசிரியை - ஆசிரியை நாகவல்லி கண்டிப்பும், கடமை உணர்ச்சியும் மிகுந்தவர். இவருடைய உழைப்பால் இந்த பள்ளி மாணவர்கள் பல சாதனைகளை செய்தார்கள்.

ஓன்பது

வகுப்பாசிரியர் ஆங்கிலம் - ஆசிரியர் கதிரேசன்
தமிழ் - ஆசிரியர் ?
கணிதம் - ஆசிரியர் பன்னீர்செல்வம்
அறிவியல் - ஆசிரியர் சுந்தரேசன் மற்றும் ஆசிரியர் காதர் ஷெரீப்
வரலாறு - ஆசிரியர் ?

பத்து

வகுப்பாசிரியர் ஆங்கிலம் - ஆசிரியர் காலிங்கராயன்
தமிழ் - ஆசிரியர் கலியமூர்த்தி மற்றும் ஆசிரியர் நாகராஜ்
கணிதம் - ஆசிரியர் சண்முகசுந்தரம்
அறிவியல் - ஆசிரியை சந்திரா மற்றும் ஆசிரியர் ?
வரலாறு - ஆசிரியர் பக்கிரிசாமி

பதினொன்று

வகுப்பாசிரியர் கணிதம் - ஆசிரியர் விஜயகுமார்
ஆங்கிலம் - ஆசிரியர் பினையாகபாணி
தமிழ் - ஆசிரியை ? மற்றும் ஆசிரியர் தெகா
இயற்பியல் - ஆசிரியர் சந்திரமோகன்
வேதியல் - ஆசிரியர் சஞ்சீவி
உயிரியல் - தாவரவியல் ஆசிரியர் சந்திரசேகரன்
விலங்கியல் ஆசிரியர் தங்கராஜ்

பனிரெண்டு


வகுப்பாசிரியர் கணிதம் - ஆசிரியர் விஜயகுமார்
ஆங்கிலம் - ஆசிரியர் பினையாகபாணி
தமிழ் - ஆசிரியை ? மற்றும் ஆசிரியர் தெகா
இயற்பியல் - ஆசிரியர் சந்திரமோகன்
வேதியல் - ஆசிரியர் சஞ்சீவி
உயிரியல் - தாவரவியல் ஆசிரியர் சந்திரசேகரன்
விலங்கியல் ஆசிரியர் தங்கராஜ்


ஓன்பதிலிருந்து பனிரெண்டு வரை அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளி - தலைமையாசிரியர் ஏ.பி.டி.தேவாசீர்வாதம், இவருடைய கண்டிப்பும் (கொஞ்சம் கோபக்காரர்), உழைப்பும் இப்பள்ளி மாணவர்களை பல வரலாற்று சாதனை படைக்க வைத்தது.

எங்களுடைய பள்ளி குழுவை பற்றி சொல்லியே ஆக வேண்டும். கிட்டதட்ட 400+ மாணவர்கள் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதினோம். சாதனையாக ஓரே வருடத்தில் எங்கள் பள்ளியை சேர்ந்த 4 மாணவர்கள் மருத்துவம், 40க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் பொறியியல் படிப்பும் தகுதி முறையில் சேர்க்கை கிடைத்தது. எங்கள் வகுப்பு மாணவர்கள் 4 பேர் மறுபடி இம்ப்ருவ்மெண்ட் எழுதி மருத்துவ கல்லூரியில் சேர்ந்தார்கள். மாவட்டமே வியந்தது இந்த சாதனை அளவை பார்த்தது. கிட்டதட்ட 7 ஆண்டுகள் கழித்து பல மாணவர்கள் கணிதத்தில் 200/200 வாங்கினார்கள்.

நானும், எனது நண்பனும் பல்வேறு சிக்கல்களில் மாட்டி 80% மதிப்பெண் வைத்திருந்தும், எதையும் செய்யாமல் விட்டுவிட்டோம். எப்படியோ தத்தளித்து இங்கன வந்துட்டேன், என்னுடைய நண்பன் இப்பொழுது தான் ரஷ்யாவில் மருத்துவம் படிக்கிறான்.

உங்களுடைய பள்ளியையும், ஆசிரியர்களையும் பகிர்ந்துக்கொள்ளுங்களேன்.

வியாழன், 2 ஆகஸ்ட், 2007

இந்தி எதிர்ப்பும்... இளாவும்... சில கேள்விகளும்???

அன்புள்ள இளா!

ஜப்பானிய மொழி கற்றுதராத... திராவிட ஆட்சியாளர்கள் ஓழிக!

நீங்கள் ஓரு வேடிக்கையான பதிவை எழுதியிருக்கிறீர்கள் என்று நான் சொன்ன பிறகும்... நான் அதை சொல்லவில்லை இதை தானே சொன்னேன் என்று பல்டி அடித்தது எனக்கு சிரிப்பாக இருக்கிறது.

உங்கள் மீது வைக்கப்படும் விமர்சனம் என்பது ஏதோ இந்தவொரு பின்னூட்டத்தால் வருவதல்ல... வலைப்பதிவுகளில் நான் வாசித்த இந்த ஒரு வருடத்தில் நீங்கள் ஏகப்பட்ட இட்த்தில் இந்தியை கற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திருக்கிறீர்கள். ஆனால் அதற்க்கு சரியான காரணத்தை எந்த இடத்திலும் சொல்லவில்லை.


உங்களின் ஆங்கில பதிவில் கூட நீங்கள் இந்தி தெரியாததால் ஏமாந்ததாக சொல்லியிருக்கிறீர்கள். ஓருவன் ஏமாறுவது கவனக்குறைவால் அன்றி மொழி தெரியாதால் அல்ல... அப்போ தமிழ் தெரிந்த எல்லோரிடமும் நீங்கள் ஏமாறாமல் இருக்கிறீர்களா? ஏமாறுவது என்பது ஏதோ ஒரு கணத்தில் நம்முடைய எச்சரிக்கை உணர்வில் ஏற்ப்பட்ட கவனக்குறைவு... அதை புரிந்துக்கொள்ளாமல், அதற்க்காக இந்தி படித்தேன் என்பது வேடிக்கையான நிகழ்வு!


///
I can’t only blame on Dravidian parties now for Anti-Hindi strikes during 1970's. The anti-Hindi parties, Dravidian political parties playing to the tunes in 60's. Now, not a single party wants to touch the subject. Was it a big hindrance to mainstream integration, yes of course? When talking about globalization, it is ashamed of not learning a national language. Still I can say, there is no need of Hindi in tamilnadu, until you stay. Else learn Hindi. Our states have been separated based on languages, I agree. Tamilnadu is literally separated by language. I indulge everybody to learn Hindi till the extent of communication. Bloody language is a just communication media, once you know the media is required, don’t hesitate to learn it. Local Business men stays in tamilnadu, however they need to talk to other language people once they come out of their state. I have seen lot many business people learned Hindi, so as the IT employees because of survival.

//

தேவையின் அடிப்படையில் கற்றுக்கொள்ளுங்கள் சொல்வதற்க்கும்...

//I indulge everybody to learn Hindi till the extent of communication.///

எல்லோரும் இந்தி கற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்வதற்க்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது இளா!


இந்தி கற்றுக்கொள்வதை ஆதரிக்க வேண்டுமென்ற எண்ணத்தில், இந்தி-எதிர்ப்பு போராட்டத்தை விமர்சித்திருக்கிறீர்கள்.

இந்தி எதிர்ப்பு என்பதன் உங்களுடைய புரிதலை தெரிந்துக்கொண்டு மேலும் பேசலாம்... அதற்க்காக சில கேள்விகள்.

இந்தி எதிர்ப்பு என்பது என்பது வெறும் மொழியை கற்று கொள்வதற்க்கான மறுப்பா இல்லை வேறெதுவும் பின்னணியில் இருந்ததா?

இந்தியை ஏற்றுக்கொண்ட கேரளா மாதிரியான சமூகத்தில் ஏற்ப்பட்ட மாற்றமென்ன?

கேரளா மக்களின் வாழ்வியலில் இந்தியால் ஏற்ப்பட்ட விளைவுகள் என்ன?


நன்றி!

புதன், 1 ஆகஸ்ட், 2007

ஜப்பானிய மொழி கற்றுதராத... திராவிட ஆட்சியாளர்கள் ஓழிக!

எனக்கு ஓரே கோபம், கோபமாக வருகிறது இந்த செய்தியை கேட்ட பிறகு... செய்தி வேறென்றுமில்லை நான் வேலை பார்க்கும் நிறுவனத்தின் தலைமையகம் ஜப்பானில் இருக்கிறது. இன்னும் சில மாதங்களில் நான் ஜப்பான் செல்ல வேண்டியிருப்பதால் ஜப்பானிய மொழி படிக்க செல்லிவிட்டார்கள். அதோடு ஏன் நான் அங்கே செல்ல வேண்டுமென்றால் ஜப்பானில் வர, வர தொழிலாளர் பற்றாக்குறை அதிகரித்துக்கொண்டே போகிறது. ஜப்பானிய சமூகத்தில் உள்ள பெரும்பான்மையோனர் வயதாகிவிட்டதால் மனித வள பற்றாக்குறை. ஜப்பானிய அரசு தீவிரமாக இயந்தர மனிதர்களை உணவகம், மருத்துவமனைகளில் பயன்படுத்த அனுமதியளித்தாலும் பற்றாக்குறை மிக அதிகம் வருகிற ஆண்டில் மட்டும் இரண்டு லட்சத்திற்க்கு அதிகமான தொழில்நுட்ப தொழிலாளர்கள் தேவை.

எனக்கு இதை நினைத்தால்தான் நம்ம திராவிட அரசுகளின் மீது கோபம்,கோபமாக வருகிறது. இவர்கள்தான் நம்ம இளைஞர்களை ஜப்பானிய மொழி கற்றுகொள்ள விடாமல் தடுத்துவிட்டார்கள்.

என்னய்யா காமெடி பண்ணுற என்று கேட்கிறீர்களா!

வருடத்துக்கு ஒரு ஆயிரம் பேருக்கு குறைவாக வட இந்தியாவுக்கு போகிறதுக்கே, நம்ம திராவிட அரசாங்கங்கள் இந்தி கற்றுக்கொடுக்கவில்லை என்று கூச்சல் போடும்போது, லட்சக்கணக்கில் வேலைவாய்ப்பு இருக்கிற ஜப்பானிய மொழி கற்றுதர வேண்டும் என்று நான் மட்டும் திட்ட கூடாதா? திராவிட அரசுகளை.

இந்தி கற்றுதரவில்லை என்று கதறுகிற வெண்ணைகளா! ஆறுகோடி தமிழர்களின் வாழ்வியலுக்கு எதற்க்கடா இந்தி!

தமிழ் மண்ணில் வாழ்வதற்க்கு, தமிழ் மொழியல்லாமல் வெறென்ன வெங்காயமடா தேவை?

ஆங்கிலம் படித்து ஐரோப்பவிற்க்கும்,அமெரிக்காவிற்க்கும் ஓடலாம். இந்தி படித்து வட இந்தியாவில் பிழைக்கலாம் என்று பிழைக்கவும், பிச்சை எடுக்கவும் கற்று தருகிறீரோ!

தாய் மொழி படித்து, தாய் மண்ணில் தன்மானத்துடன் வாழ சிந்தியுங்கள் தமிழர்களே.
கல்வி,வேலைவாய்ப்பு,அரசு, நீதிதுறை,வழிபாடு இன்னும் அனைத்து வாழ்வியலும் தாய் மொழியில் வேண்டும், அது நம்முடைய உரிமை.


இதற்க்கு மேலாக பல புதிய செய்திகளை கற்றுக்கொள்வதும்,உங்களுக்கு சுய தேவைகள்யிருந்தால் அதை நீங்கள் தான் கற்றுக்கொள்ள வேண்டுமே தவிர!
ஓட்டுமொத்த தமிழ் மக்களின் தேவையல்ல அது!

உங்கள் அறிவின் வீச்சை அதிகரிக்க பிற மொழி கற்றுக்கொள்ள வேண்டுமென்று எண்ணுகிறீர்களா! இதோ பட்டியல்

இதயம் மற்றும் குருதி ஓட்டத்தை பற்றிய மருத்துவத்திற்க்கு - பிரெஞ்சு

எலும்பு முறிவு மற்றும் ஆர்தோ - ருஷ்யா

கணிதம் மற்றும் வானவியல் - ருஷ்யா

மரபு சண்டை பயிற்சி (Martial art) - சீனா (mantrin)

மின்நுண்ணுவியல் - ஜப்பான்

காகிதம் மற்றும் மை - ஜெர்மன்
...
...
....

மொழி வளமை மற்றும் செழுமை - தமிழ்


இப்படி உலகத்தின் பல நாடுகளில் பல மொழிகளில் அறிவியல் கொட்டிக்கிடக்கிறது... உங்களுக்கு எது தேவையோ அதை தேடி கற்றுக்கொள்ளுங்கள்.

இவுக எல்லாம் எப்பதான் மாறுவார்களோ...?

நான் முன்பு வேலைபார்த்த நிறுவனத்தில் சீனர்கள்,மலேயர்கள்,பிலிப்னோஸ்,தமிழர்கள் இப்படி ஏகப்பட்ட இனத்தை சேர்ந்த மக்கள் வேலைபார்த்தோம். பெரும்பாலும் சிங்கப்பூர் குடியுரிமை வாசிகள் வீட்டில் சமைப்பது கிடையாது, அவர்கள் உணவு அங்காடிகளுக்கு சென்று மதிய உணவு சாப்பிடுவார்கள்.
தமிழர்களும், பிலிப்னோஸ் மட்டுமே மதிய உணவு கொண்டு வருவோம். நம்ம மக்கள் கட்டி வருகிற சோற்று மூட்டை அளவை பார்த்து அவர்கள் மிரள்வார்கள்! ஆமாம் அரை கப் சாதம், சிக்கன் அல்லது வேறு ஏதாவது கறி என்று சாப்பிடும் அவர்களிடம், நம்ம மக்கள் பெரிய டப்பா நிறைய சோற்றையும் அதற்க்கு வக்கணையாக சம்பார்,கூட்டு,பொரியல்,ரசம்,தயிர் என்று ரவுண்டு கட்டி உண்பதை பார்த்து நம்ம மக்களை தனியா விட்டுடாங்க!

நாங்க எல்லாரும் ஓரு மேசையை இழுத்துப்போட்டு சாப்பிட்டுக்கிட்டிருந்தோம். கொஞ்சம் தூரமா நம்ம தமிழ் திருமதிகள் (இருந்ததே அஞ்சாறு கல்யாணமான கிழவிகள்) உக்கார்ந்து மதிய உணவு சாப்பிடுவார்கள். இப்படி நல்லாதான் போய்க்கிட்டிருந்தது. நாங்கபாட்டுக்கு உள்ளுர்,தமிழ்நாடு,உலகளவில் அரசியல் மற்றும் என்னென்ன தோணுதோ எல்லாம் பேசுவோம்.

இதில் ஒரு சிக்கல் வந்துவிட்டது, இந்த பிலிப்பைன்ஸ் மக்கள் ஆண்கள், பெண்கள் எல்லாம் ஒரே இடத்தில் அமர்ந்து கூடிதான் உணவு உண்ணபார்கள், நம்ம மக்கள் மட்டும் தனி,தனியாக அமர்ந்திருப்பதை பார்த்த எங்களுடைய நிறுவன அதிகாரி (அவர் சீனர்) நம்ம மக்களுக்கு ஏதோ நல்லது செய்வதாக நினைத்து... நம்ம திருமதிகளிடம் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிடலாமே? ஏன் இப்படி தனியாக அமர்ந்திருக்கிறீர்கள் என்று கேட்டு வைக்க! அடுத்தநாள் எல்லா மேசைகளை ஓன்றாக்கி நம்ம மக்களும் திருமதிகளை ஐக்கியமாக்கினார்கள்.

எனக்கு ஓரே கொண்டாட்டம் (ஏதாதவது நல்ல குழம்பு,கூட்டு,பொரியல் கிடைக்குமில்லையா!) ரெண்டு நாள் நல்லாதான் எல்லாரும் ஓன்னா சாப்பிட்டுக்கிட்டு இருந்தாங்க! மூனாவது நாள் வழக்கம் போல மேசைகள் தனி,தனியா இருந்தது!

நம்ம வாய்தான் சும்மாவே இருக்காது!... நம்ம திருமதிகளிடம் ஏன் எல்லாரும் பிச்சிக்கிட்டு போயிட்டிங்க? என்று கேட்டு வைக்க!
ஆளாளுக்கு நம்மல உண்டு,இல்லனுன்னு பண்ணிட்டாங்க! வேற ஓன்னுமே இல்ல நம்ம பசங்க எல்லாம் ஒரே அரசியல்,இலக்கியம் அல்லது ஊர் பிரச்சினைதான் பேசுறாங்களாம்! அவுங்கள பேசவிடுறதில்லை! அவுங்க பேசுறத கேட்டு நக்கல் பண்றாங்க! இதுதான் பிரச்சினை.

அப்படி என்னதான் இந்த பெண்கள் பேசுகிறார்கள் அதை நம்ம மக்கள் கண்டுக்கொள்ளவில்லை என்று பார்த்தால் பெரும்பாலும் உடைகள்,நகைகள் அல்லது குடும்ப கதைகள் இதையே பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

சமூகத்தில் சரி சமமான பங்களிப்புக்கொண்ட பெண்கள், தங்களுடைய சுய தேவைகளையும், குடும்பத்தையும் தாண்டி பேசக்கூட தயாராக இல்லை. அதில் குறைந்தபட்ச அக்கறையுமில்லை.

சிங்கப்பூர் மாதிரியான சூழலில் வாழ்க்கையை தொடங்குகிற இளம்பெண்கள், குறிப்பாக தமிழ் பெண்கள் தங்களுடைய சிந்தனையின்,செயலின் எல்லையை விரிவு படுத்தாமல் இருப்பதென்பது மிக கேவலமான போக்காவே தெரிகிறது!
பெரும்பாலும் கணவன்,மனைவி இருவரை தவிர வேறு யாருமற்ற குடும்ப அமைப்பில்... முஸ்தபாவில் என்ன புதிய நகை வந்திருக்கிறது என்பதை தெரிந்துக்கொள்ள எடுத்துக்கொள்ளும் ஆர்வம். நவீன ஆடைகளை வாங்கி அணிந்து தங்களை அலங்கரிந்துக்கொள்ள காட்டும் ஆர்வம், நம்முடைய தமிழ் சமூகத்தின் நிலையை பற்றிய அறிவையோ,சிந்தனையோ பெற நினைப்பதில்லை என்பது வேதனையான நிகழ்வாக இருக்கிறது.

திரையில் மின்னுகிற நட்சத்திரங்களிடம் பெண்ணுரிமை பார்க்கிற பெண்ணுரிமை போராளிகள் தயவு செய்து உங்களின் சமகாலத்தில் இருக்கிற பெண்களின் சமூக,அரசியல் அறிவை,சிந்தனையை மேம்படுத்த முயலுங்கள்.

ஆணுக்கும், பெண்ணுக்குமான அக வாழ்வியலில் உரிமை, ஆணாதிக்கம் என்று கொடிபிடித்து குடும்பம் என்கிற அமைப்பை சிதைக்கிற போக்கை விடுத்து. உங்களுக்கான சமூக,அரசியல் விடுதலையை பற்றி சிந்தியுங்கள்.

நீங்களாக உங்களுடைய சிந்தனையின் எல்லையை விரிவுப்படுத்தாமல்! உரிமை!உரிமை! என்று வெற்றுக்கோஷமிடுவது ஏன் என்று புரியவில்லை!
Related Posts with Thumbnails