வியாழன், 29 மே, 2008

பார்ப்பான் என்ன செய்தான்? பார்ப்பான் என்று பேச வேண்டியதன் அவசியமென்ன? (முகமிலிக்கு மட்டுமல்ல...)

பார்ப்பானீய, பனியா சொல்லாடல்களும்... சில முட்டாள்களும்...!

என்கிற பதிவிலும் அப்புறம் சுந்தர் பதிவிலும் பெங்களூரிலிருந்து ஒருவர் முகமிலியாக வந்து எல்லாயிடங்களிலும் ஒரே கருத்தை பின்னூட்டமாக இட்டு சென்றிருக்கிறார்!


முதலில் நம்மைச்சுற்றி என்ன நடக்கிறது... என்ன நடந்தது? ஆளுமை, அதிகாரம இதெல்லாம் யாரிடமிருந்தது? யாரிடமிருக்கிறது? யாரிடம் போய் சேரணும்? இப்படி ஏகப்பட்ட கேள்விகள் இருக்கிறது!

இந்த பார்ப்பானீயம்... அதற்கும் பார்ப்பான் என்கிற ஒரு சாதியினருக்கும் உள்ள தொடர்பை புரிந்துக்கொள்ளுதல்... மிகவும் அவசியம்! சிலவற்றை நிகழ்வுகளுடன் சொல்லும்போது தான் அதனால் ஏற்ப்பட்ட பாதிப்புகள்... எதிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ள நாம் போராடிக்கொண்டிருக்கிறோம் என்பதே நமக்கு விளங்கும்!

பட்டுக்கோட்டை என்கிற நகரை எடுத்துக்கொண்டு... அதிலிருந்து நிகழ்வுகளை விளக்க முயற்சிக்கிறேன். ஆங்கிலேய ஆட்சியின் இறுதிகாலமும் திராவிட இயக்கங்களின் எழுச்சியும் கிட்டதட்ட சம காலத்தில் நடந்த நிகழ்வுகள்... அந்த காலக்கட்டத்தில் பட்டுக்கோட்டை நகரமும், அதனை சுற்றிய பகுதிகளும் எப்படியிருந்தன... யார் ஆளுமை மற்றும் அதிகாரத்திலிருந்தது என்பதை தெரிந்துக்கொள்வோம்.

வி. நாடிமுத்து பிள்ளை என்பவர் தான் ஆங்கிலேய அதிகாரத்தின் பிரதிநிதியாக பட்டுக்கோட்டையிலிருந்தார்! அப்புறம் நகரை சுற்றி சில ஜமீன்கள்! அதிகாரத்திலும், ஆங்கிலேயரிடமும் செல்வாக்கோடு இருந்தவர்கள் பழனியப்பன், மன்னாங்காடு ஐயர், ராஜாமடம் ஐயர், வெங்கடரமைய ஐயர், இன்னும் ஏகப்பட்ட ஐயர்கள்! மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் அத்தனை பேரும் ஐயர்கள்!

கிராமபுறங்களில்ஆங்காங்கே சில பண்ணையார்கள் இருந்தார்கள் அவர்கள் இந்த ஆங்கிலேய அதிகாரத்தை எதிர்த்து காங்கிரஸில் இணைந்தார்கள்!

நகரத்தில் செட்டியார்கள், தெலுங்கு செட்டியார்கள், முதலியார்கள் அப்புறம் எஞ்சிய மராட்டிய வம்சாவழியினர் பொருளாதார செல்வாக்கோடு வாழ்ந்து வந்தனர்! இதில் சிலர் ஆங்கிலேய அதிகாரத்தை ஆதரித்தனர்! சிலர் சுதந்திர போராட்டத்தில் கலந்துக்கொண்டனர்!

இவ்வளவுதான் அன்றைய நகரமும், நகரைச்சுற்றிய கிராமங்களின் நிலை! மிக பெரும்பான்மை மக்கள் விவசாயத்தை நம்பிய கூலியாக, அடிமைகளாக வாழ்ந்து வந்தனர்! அவர்களுக்கும் கீழாக நசுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு தலித் மக்கள் வாழ்ந்து வந்தார்கள்!

இதே நிலை தான் அன்றைய சென்னை மகாணத்தில் எல்லாயிடங்களிலும் நிலவியிருந்தது! இங்கே தான் மக்களின் உண்மையான நிலையை பெரியார் தெளிவாக உணர்ந்து! மக்களை சமூக இழிவிலிருந்து விடுவிக்கும் போராட்டத்தை தொடங்கினார் என்பதை முதலில் உணருங்கள்!

வாடியக்காடு (மதுக்கூர்) ஜமீனை எதிர்த்த போராட்டம் தான் வாட்டாக்குடி இரணியன் வாழ்க்கை! இப்படி பட்டுக்கோட்டை நகரில் சுயமரியாதை இயக்கத்தில் தன்னை பிணைத்துக்கொண்டு பார்ப்பனர் என்கிற ஒரு சாதியினர் மட்டும் அதிகாரத்தில் உட்கார்ந்துக்கொண்டு மக்களை சுரண்டுவதை, இழிவு செய்வதை எதிர்த்த எத்தனையோ போராளிகளில் ஒருவர் தான் பட்டுக்கோட்டை அழகிரி!

திராவிட இயக்க போராட்டங்களால் என்ன நடந்தது? என்ன சாதித்தோம்?

ஒடுக்கப்பட்ட மக்கள் படிக்க, வேலைவாய்ப்புக்கு இடஒதுக்கீடு கிடைத்தது! அடுத்த தலைமுறையில் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் நிறையபேர் படித்து மருத்துவர்களாக, பொறியாளர்களாக உருவாகியிருக்கின்றனர்!

அதை ஒரு நண்பரின் கூற்றாக தருகிறேன் " என்னுடை சிற்றப்பா மட்டும் இடஒதுக்கீட்டில் காவல்துறையில் இன்ஸ்பெக்டராக வரவில்லை என்றால் எங்கள் குடும்பத்தில் இத்தனை பேர் படித்து முன்னேறி இன்றைக்கு என் சகோதிரி ஒரு மருத்துவராகவும், நான் ஒரு மென்பொருள் வல்லுநராகவும் உயர்ந்திருக்க முடியாது!" என்கிறார்.

இதுதான் சாதனை...

நீங்கள் நினைக்கலாம் யாராவது ஒருவர் ஒரு வேலையை செய்வதால் நமக்கென்ன வந்தது! அது பார்ப்பானாக இருந்தால் என்ன? பறையனாக இருந்தால் என்ன? அந்த வேலைக்கான தகுதியும், திறமையும் தானே முக்கியம் என்று?

பார்ப்பனர்கள் என்ன செய்தார்கள்? என்ன செய்வார்கள்? என்பதற்கு ஒரேயொரு எடுத்துக்காட்டை சொல்லி... சமூகநீதி போராட்டத்தின் அவசியத்தை புரிந்துக்கொள்ளுங்கள்... என்று கோரிக்கை வைக்கிறேன்!

சென்னையில் பத்ம சேஷாத்திரி என்று ஒரு பள்ளி ஓய்.ஜி.மகேந்திரன் என்கிற பார்ப்பானால் ரஜினி என்கிற சொறி நாயால் தமிழர்களின் தலையை தடவி சுரண்டப்பட்ட பணத்தில் நடத்தப்படுகிற பள்ளியில்...

60 லிருந்து 80 சதவிகித மாணவர்கள் பார்ப்பனர் வீட்டுக்குழந்தைகள்... அதையும் மீறி போராடிச்சேர்க்கப்படுகிற குழந்தைகள் யார் தெரியுமா பணக்கார, பார்ப்பன அடிவருடிகளின் குழந்தைகள்! தலித் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் குழந்தைகளின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணலாம்!

90 சதவிகித ஆசிரியர்கள் பார்ப்பனர்கள்!

இதை தான் செய்தார்கள் கடந்தகாலத்தில் பார்ப்பனர்கள் மட்டுமே படிக்க முடியும் என்று தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி நிறுவி வைத்திருந்தார்கள்! அவர்களுக்கு மட்டுமே பதவி, அதிகாரம் என்கிற நிலையை வைத்திருந்தார்கள்! அதை எதிர்த்து பெரியாரின் இயக்கம் வெற்றி கண்டது! அதுவே சமூக நீதியாக (இடஒதுக்கீடாக) நானும், நீங்களும் இன்றைக்கு கணினி பயன்படுத்துகிற நிலைக்கு வந்திருக்கிறோம்!

அன்றைக்கும், இன்றைக்கும் பட்டுக்கோட்டையில் எந்த ஐயரும் கடினமாக உழைக்கவில்லையா?
அதிகாரத்தில் இருந்த நாடிமுத்துபிள்ளை மாதிரியானவர்கள் என்ன ஆனார்கள்?
பொருளாதார செல்வாக்கோடு இருந்த மற்ற சாதிகாரர்கள் என்ன ஆனார்கள்?
பண்ணையார்கள் என்ன ஆனார்கள்? பொரியார் இயக்கத்தால் அதிகாரம் இழக்கிற பார்ப்பனர்கள் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள சமூகத்தில் செய்கிற குள்ளநரிதனம் என்ன?

அடுத்து...

17 comments:

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

பின்னூட்ட கயமை!

பெயரில்லா சொன்னது…

"இதை தான் செய்தார்கள் கடந்தகாலத்தில் பார்ப்பனர்கள் மட்டுமே படிக்க முடியும் என்று தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி நிறுவி வைத்திருந்தார்கள்! அவர்களுக்கு மட்டுமே பதவி, அதிகாரம் என்கிற நிலையை வைத்திருந்தார்கள்! "

முழு மூடனே அன்று நாட்டை ஆண்டது ஆங்கிலேயர்.அவர்கள்
பார்பனர்களுக்கு கல்வியில் இட
ஒதுக்கீடு தரவில்லை.நீதிக்கட்சி
ஆட்சியிலேயே, 1920களில்
இட ஒதுக்கீடு அரசு வேலைகளில்
வந்துவிட்டது.நீ என்னதான்
திட்டினாலும்,எழுதினாலும்
உன்னுடைய ஆசான் பெரியார்
நினைத்த பார்ப்பன இன ஒழிப்பு
நடக்காது. நூறு பெரியாரால்
அதை செய்ய முடியாது.

பெயரில்லா சொன்னது…

So many reasons you are digging to fin fault brahmins...very bad...now everybody will get seat even if you dont have reservation..50000 engg seats..still you are blaming others ..

பெயரில்லா சொன்னது…

பார்ப்பான் கிட்ட வீரம் கிடையாது, இது பெரியாரே சொன்னது. அது தவிர அவனுக எண்ணிக்கையும் கம்மி. இந்தக் கூட்டத்துகிட்ட 2000 வருசத்துக்கு மேல அடிமையா இருந்த நம்ம ஆளு எம்புட்டு பெரிய கூமுட்டை?

ஆகா பலமில்லம எல்லாத்தையும் அடக்கிவச்சிருந்தான்னா அவம் புத்திசாலிதானே?

அவனை அடிக்கறதுக்கு முன்னாடி நல்ல பிஞ்ச செருப்பா எடுத்து நம்மாளை அடிக்கணும்...இத்தனை வருசம் வாத்து மடையனா இருந்ததுக்கு!

பெயரில்லா சொன்னது…

Parpanars were cowards in using physical strength. Correct. That was why, they used Hindu religion to enslave Tamilians. Their sting is in religion.

Even now, it is there. Periyaar therefore attacked the place where the sting was.

I dont think he had succeeded; because, in religion, it is paarpanan, paarppanan all the way. The Tamils are at the feet of paarppanans.

Remove their power centre from the religion, the paarppanar will permanently fall down. Or, the Tamils should quit the religion en bloc and leave the religion only to the Paarpnanans. Then, we can see the fun.

But they are so cunning that they wont allow the Tamils to quit the religion. They pretend to have only one enemy periyaar; and, thus, cleverly making Tamils feel that paarpanars are not hated by others. In this way, they can set Tamils against Tamils.

Unknown சொன்னது…

எப்பா

பார்ப்பான் பார்ப்பான்னு பேசிக்கிட்டு இருக்காதிங்க!

உங்கள வழற்த்துக்குங்க அவன் அழிஞ்சுருவான்!

அதிகாரத்தின் மையத்துக்கு போங்க

கலைஞர் வச்சார்ல ஆப்பு அது போல வையுங்க தானா அடங்குவானுக!

நம்ம வீடுகள்ள நடக்குற சின்ன சின்ன பார்ப்பன நிகழ்வுகள மாற்ற முயற்சி செய்யுங்க!

மாற்றம்தான் மனித தத்துவம்!

அவன் நிறைய மாறி ஏமாத்துறதுகுள்ள நீங்க நிறைய பேற மாத்தி அதாவது அறிவு வயப்படுத்தி
அடிங்க!
அழிங்க!

நன்றி
மனிதன்!

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

//
முழு மூடனே அன்று நாட்டை ஆண்டது ஆங்கிலேயர்.அவர்கள்
பார்பனர்களுக்கு கல்வியில் இட
ஒதுக்கீடு தரவில்லை.நீதிக்கட்சி
ஆட்சியிலேயே, 1920களில்
இட ஒதுக்கீடு அரசு வேலைகளில்
வந்துவிட்டது.நீ என்னதான்
திட்டினாலும்,எழுதினாலும்
உன்னுடைய ஆசான் பெரியார்
நினைத்த பார்ப்பன இன ஒழிப்பு
நடக்காது. நூறு பெரியாரால்
அதை செய்ய முடியாது.
//

அன்றைக்கு பார்ப்பனர்கள் எப்படி ஆங்கிலேயர்களுக்கு கா(கூ)ட்டிக்கொடுத்து அதிகாரத்தை தக்கவைத்துக்கொண்டார்கள் என்பதையும்... இன்றைக்கு பார்ப்பானீய, பனியாக்கள் எவ்வாறு ஏகாதிபத்தியங்களுக்கு குண்டி கழுவுகிறார்கள் என்பதையும் விலாவாரியாக வரலாறு பேசும் :(

இன அழிப்பு என்பதல்ல பெரியாரியக்க நோக்கம்...! அதுவே புரியாத மூடனாக இருக்கிறாய்! பெரியாரின் காலக்கட்டத்தில் பார்ப்பனர்களை அழிக்க வேண்டும் என்று அவர் நினைத்திருந்தால்... சிறு பொறி போதும்!

பெரியார் போராடியது இந்த மக்களை சுயமரியாதை உள்ள மனிதர்களாக மாற்றுவதற்க்கும் அதற்க்கு தடையாக இருக்கிற கடவுள் (பொ(இ)ந்து மதம்) அழிப்பதற்க்காகவும் தான்!

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

//
So many reasons you are digging to fin fault brahmins...very bad...now everybody will get seat even if you dont have reservation..50000 engg seats..still you are blaming others ..
//

சாதிக்கொடுமைகளுக்கு நாங்களா காரணம் என்று கேட்டீர்கள்? வரலாற்றில் நிகழ்ந்தவற்றை என்னுடைய சொந்த மண்ணின் நிகழ்வை சொன்னவுடன்...

பார்ப்பனர்கள் மீது தோண்டி, துருவி குற்றம் சுமத்துக்கிறீர்கள் என்று பல்டி அடிக்கிறீர்கள்!

இன்றைக்கு 50000 இருக்கைகள் என்கிற பொறியியல் வாய்ப்புகளை பற்றி பேசுகிறீர்கள்! இதை எட்டிப்பிடிக்க நடைப்பெற்ற போராட்டத்தை ஏன் மறைக்க முயல்கிறீர்கள்?

இன்றைக்கும் பார்ப்பனர்களின் சாதி வக்கிரத்தை... மற்றவர்களின் வாய்ப்புகளை மறுப்பதை தகுந்த ஆதாரங்களுடன் தொடர்ந்து எழுத போகிறேன்! அப்பொழுது தவறாமல் வந்து உங்களுடைய மறுப்பை தகுந்த தரவுகளுடைன் வையுங்கள்! பேசுவோம்!

பெயரில்லா சொன்னது…

You guys are COWARD.. you can beat, strike, hurt and scold only to Brahmins... Periyar was an anti-hindu and Tamil. You guys are accepted muslims and christians as Tamilains but why are u not accepting Tamil Brahmins as Tamilians. You guys won't give a voice against to Reservations and Terrorisms ; even for India too.. Funk fellows... No dare to hit them.. You can hit brahmins because they wont hit u .. do it what ever u want.. Time will show u the truth.... You guys are FAKE TAMILIANS.. you are using Tamil as an object to abuse others. ungal periyaarku munnadiye Ramanujam, Bharathiyar ellam pannitaanga... Even ur periyar celebrated black day as Independence day ... Non-patriotic fellow .. Shut up u big FAKE...

பெயரில்லா சொன்னது…

//Periyar was an anti-hindu and Tamil. You guys are accepted muslims and christians as Tamilains //

Not just that.The bearded swine was a mean and third rate and vicious son of a bitch as well,just like his devotees like panni.arasu.

பெயரில்லா சொன்னது…

பார்ப்பனர்களை திட்டுவதால் ஏதும் நடக்காது.நாம் மாறி மக்கள் சக்தியை உறுவாக்க வேண்டும்.

பெயரில்லா சொன்னது…

My Dear Tamilans, this topic is useless and Anti-Hinduhism topic. now we are in new millienium. no one can dream. no limits. every one have there own freedom to achive. no barigade.

now the total world become shirks day by day. i.e Global Village concept.

tamilan can work what ever place in the world. is it true or false. Dear guyes they (periyar is good but his followers are highly dangers to our society, they are makeing profit out of real periyar thoughts & policies) cheeting us.

Think my dear country man,
are you feeling the real freedom.
are you dreaming to live in a good mannner.
are you working hard to get suceess.

Then come on weakup.

your victory in your hand. have it.

கோவி.கண்ணன் சொன்னது…

பாரி.அரசு,

கொஞ்சம் காரமாக இருப்பது ஏற்புடையது இல்லை என்றாலும்...பதிவின் சாரம் நன்று !

Unknown சொன்னது…

//"பார்ப்பான் என்ன செய்தான்//
அருமை பாரி ,
இன்னும் விளக்கமாக எழுதவேண்டும்

மோகன் கந்தசாமி சொன்னது…

////My Dear Tamilans, this topic is useless and Anti-Hinduhism topic. now we are in new millienium. no one can dream. no limits. every one have there own freedom to achive. no barigade////

Common my dear ‘feel-good’ Indian. Are you kidding saying everyone has his own rights to achieve? Who has rights? Those who benefitted of 2000 year old oppression have rights. And, those who started to taste outcomes of ‘reservation’ have rights to some extent. Do you think the sons of OBC’s and SC’s can have a seat in IIT, given that they work hard even 20 hrs a day? Passing an entrance exam is not a matter of one year but it involves 12 years of study in a good school and environment. Did you, a protector of these power brokers from the curse of oppressed, get them opportunities grabbing from where they are dishonestly accumulated? No, certainly not. They have to fight themselves for that against inhuman body-bags sitting every corridors of power from Supreme Court to Taluk office all over the country. If you think you have the access to the rights you deserve, please go, utilize, and live happily. But don’t play any moderator role here between predators and pray. Because, sections of our brethren have to travel still a long way.

பெயரில்லா சொன்னது…

2-tumbler system is NOT promoted by so-called Paarppaans. It is by upper caste OBCs.

Everyone has two do hardwork. Brahmins are not super beings to do less hardwork. There are dumb Brahmins and there are intelligent ones. Same with any caste.

Biggest supporter of caste system are rich OBCs and not Brahmins. Most crimes against Dalits caused by the "high caste" OBCs.

The main people who need the reservation are receiving ends of 2-tumbler system and not the people supporting it.

One question to ask is last 5 years there are so many intercaste marriages? Why still caste system going more stronger.

Because there is "father's caste" concept. Once that father's caste concept goes away only then caste system will die.

Childeren of mixed / intercaste should be included in reservation if at all this reservation is meant to end caste system.

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

பெங்களூரிலிருந்து பின்னூட்டமிடும் அனானி!

ஒரே கருத்தை எத்தனை பின்னூட்டம் போடுவீர்! உம்மோட ஆசைக்கு ஒன்னு வெளியிட்டாச்சு!

வேற வேலையை பார்க்கவும்! இல்லையென்றால் நல்ல மனநல மருத்துவரை பார்க்கவும் :(

Related Posts with Thumbnails