திங்கள், 25 ஜூன், 2007

எழுத்துநடை பயில தொடங்குகிறேன்...

வணக்கம்,
கடந்த ஓராண்டாக வலைப்பதிவு எழுத வேண்டும் என்று இழுத்துக்கொண்டே வந்து கடைசியில் எழுதுவது என்று முடிவெடுத்தாகி விட்டது. பள்ளியில் பாடம் பயிலும் காலத்தில் கணிதத்திலும்,அறிவியலிலும் இருந்த ஆர்வம் தமிழிலும், ஆங்கிலத்திலும் வரவில்லை... அது இன்றைக்கு எழுத்துப்பிழையில்லாமல் எந்த மொழியிலும் எழுத முடியாத அளவுக்கு சிக்கலாக இருக்கிறது. முயற்சிக்கிறேன் முடிந்தவரை எழுத்துப்பிழையில்லாமல் எழுத... இங்கு எதுவெல்லாம் என் சிந்தனையை உரசி செல்கிறதோ! அவற்றை பதிவு செய்ய முயற்சிக்கிறேன்... உங்களின் ஒவ்வொருத்தரின் கருத்துகளோடும் என் சிந்தனைகளை வென்றெடுக்க நினைக்கிறேன்.


பட்டுக்கோட்டை பாரி.அரசு

1 comments:

தென்றல் சொன்னது…

வாருங்கள்..! வாழ்த்துக்கள்!!

Related Posts with Thumbnails