புதன், 20 மே, 2009

ஈழம்- இந்தியா நானும் ரவுடி... நானும் ரவுடி...

என்னுடைய அரசியல் கணக்குகள் சரியாக இருக்குமெனில் இன்னும் சில நாட்களில் கருணாநிதி ஈழத்தமிழர்களுக்காக புதிய போராட்டத்தையோ அல்லது ஈழத்தமிழர்களுக்கு நிவாரணம் என்கிற பெயரில் நிதி திரட்டவோ அறிவிப்பு வெளியிடலாம்!

நான்காம் கட்ட ஈழப்போர் என்று விவரிக்கப்படுகிற சூழலில் இந்தியாவின் பங்களிப்பு என்பதை பேச முயற்சிக்கிறேன்.

சாதரரணமாக எங்கள் ஊரில் கட்ட பஞ்சாயத்து செய்கிறவன் கூட தான் செய்கிற சமரச முயற்சிகளை மீறுகிறவர்களை ஆட்டோ (அ) டாடா சுமோவில் அள்ளி வந்து நொங்கு எடுக்கிற சூழலில்...

இணைத்தலைமை நாடுகள் (நார்வே, ஜப்பான், அமெரிக்கா...) என்கிற வல்லாதிக்க நாடுகள் முன்னிலையில் ஒப்புக்கொண்ட போர் நிறுத்த ஒப்பந்ததை தன்னிச்சையாக இலங்கை அரசு வெளியேறிய பொழுது... நடவடிக்கை எடுக்க முடியாமல போனதேன்?

தாங்கள் ஏற்படுத்திய போர் நிறுத்த ஒப்பந்ததை இலங்கை அரசு மீறிய பொழுதும்... நார்வேயின் எரிக் சோல்கைம் இலங்கைக்கு வருகை தந்துக்கொண்டு இருப்பதன் பின்னணி என்ன?

மனித சமூகத்தை தங்களுடைய ஏகாதிபத்திய நலன்களுக்காக ஆப்பிரிக்காவிலும், வியட்நாமிலும், பாலஸ்தீனத்திலும், ஆப்கானிஸ்தானிலும்,ஈராக்லும், இன்னும் உலகின் பல பகுதிகளில் கொன்றழிக்கும் ராஜபக்சேவின் அண்ணன்களான ஆன அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளிடம் இன்றைய புலம் பெயர் தமிழர்கள் ஐயோகோ! எங்களை கொல்கிறார்கள் என்று கதறியழுவதால்...! என்ன நிகழும்?

வரலாறு சார்ந்து... சில அடிப்படை கூறுகளை அலசி பார்ப்போம்...

கணக்கியல் நிகழ்தகவின் படி எந்தவொரு அதிகாரமும் எழுச்சி, வீழ்ச்சி இரண்டையும் மாறி, மாறி சந்தித்தாக வேண்டும்.
எழுச்சி என்கிற நிகழ்வின் சாத்திய கூறை அதிகரிக்க என்ன செய்யலாம்... தொடர்ந்து வளங்களை அதிகரிப்பது மூலம் எழுச்சியை தக்க வைத்துக்கொள்ள முடியும்.

அதிகாரத்தை நிலை நிறுத்தி எழுச்சி என்கிற நிகழ்வை சாத்தியமாக்க என்ன மாதிரியான வளங்கள் தேவை?
1. மனித வளம்.
2. இயற்கை வளம்.

அலெக்சாண்டர், நெப்போலியன், சீசர், ராஜராஜ சோழன் உள்ளடங்கி... ஐரோப்பிய காலணிகள், ஜப்பான்,ரஸ்யா, சீனா முதலாக இன்றைய அமெரிக்க வல்லாதிக்கம் வரைக்கும்... இந்த மனித வளத்தையும், இயற்கை வளத்தையும் தக்க வைத்துக்கொள்ளவே மற்ற நிலப்பரப்புகளின் மீது ஆதிக்கம் செலுத்த முற்படுகின்றனர்.

முன்பு மன்னர்/அரசர் என்கிற அதிகாரம் பின்பு சிதைந்து... அதிகாரம் என்பது அரசியல் அதிகாரம், முதலாளித்துவ கும்பல் என்று வடிவம் பெற்றுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை பார்ப்பன, பனியா அதிகார கும்பலாக இருக்கிறது.

இந்த நவீன அரசியல் அதிகார முதலாளித்துவ கும்பலில் உள்ளிருப்பவர் வெளியேறலாம்... புதிதாக வேறு தனி நபரோ, குழுவோ இணைந்துக்கொள்ளலாம்... ஆனால் இந்த கும்பலிடம் அதிகாரம் என்பது இருந்துக்கொண்டேயிருக்கிறது

இரண்டாம் உலகப்போருக்கு முந்தைய காலக்கட்டத்தில் மனித வளத்தையும், இயற்கை வளத்தையும் கொள்ளையடிப்பதற்கு நில/மண் ஆக்கிரமிப்பு என்பது போர்களின் மூலமே நடத்தப்பட்டன். அது மன்னர்களின் படையெடுப்பாக இருந்தாலும், ஐரோப்பிய காலணி படையெடுப்பாக இருந்தாலும்... இலக்கு இரண்டு தான் மனித வளத்தை சுரண்டுதல் (மனிதர்கள் அடிமைகளாக கொண்டுச்செல்லப்பட்டது)... இயற்கை வளத்தை கொள்ளையடித்தல் (தங்கம், பிற உலோகங்கள் கொள்ளையடிக்கப்பட்டது)
காலணி நாடுகளில் மனித உழைப்பே சுரண்டப்பட்டது.

இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய காலக்கட்டத்தில்... நேரிடையாக நிலங்களை ஆக்கிரமிப்பு செய்வது குறைய தொடங்கி மனித வளம், இயற்கை வளம் சுரண்டப்படுவது என்பது புதிய வடிவத்தில் உருமாற்றம் பெறுகிறது.

1. ஒப்பந்தங்கள்
2. அறிவுசார் உரிமைகள்
3. உலக மயமாக்கல்

இந்த புதிய வடிவத்தில் நிலப்பரப்புகளை ஆக்கிரமிப்பு செய்வதற்கு பதிலாக ஆங்காங்கே தனக்கு சாதகமான குட்டி/ஏவல் அதிகார அமைப்பை உருவாக்குவது... அந்த குட்டி/ஏவல் அதிகாரத்தை விடுதலையடைந்த நிலையில் செயல்படுவதாக கூறிக்கொண்டே மேலிருந்து ஒப்பந்தங்கள், அறிவுசார் உரிமைகள், உலக மயமாக்கல் என்கிற தொலைநிலை கட்டுபாட்டு வழியாக மனித வளத்தையும், இயற்கை வளத்தையும் கொள்ளையடிக்கின்றன இந்த ஏகாதிபத்திய அதிகாரங்கள்.

தாங்கள் உருவாக்கிய குட்டி/ஏவல் அதிகாரங்கள் தங்கள் கட்டுபாட்டை மீறும்பொழுது... அதை அழிக்கவும் இந்த ஏகாதிபத்திய அதிகாரங்கள் தயங்குவது கிடையாது..(ஈராக் மீதான தாக்குதல்)

தொடரும்...

3 comments:

பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
Related Posts with Thumbnails