செவ்வாய், 15 ஏப்ரல், 2008

வாழ்க்கை துணைநலன் ஏற்பு விழா... (நண்பர் குசும்பன் இனிற இல்லறத்திற்க்கான வாழ்த்துக்கள்)


ஒவ்வொரு விடியலும்... "இவர் என்னை காதலிக்கிறார்! இவள் என்னை காதலிக்கிறாள்" - விழிமொழிகளாக இருக்கட்டும்.




குறிப்பு:
குசும்பரின் இல்லறத்தின் துணைவியாரே! அன்பு சகோதரி மஞ்சு அவர்களே! எங்கள் வலையுலக குசும்பை உங்களின் கரம் சேர்க்கிறோம். அவர் இன்று போல கண் கலங்காமல் என்றும் குசும்புடன் வாழ! உம்மின் அன்பெனும் குளத்தில் மூழ்கி முத்தெடுக்க வாழ்த்துக்கள்!.

குசும்பரின் சிற்சில பிழைகள் பொறுத்து, கத்தி, ஜல்லி கரண்டி, மேசை கரண்டி, தோசை கரண்டி போன்ற வன்மையான ஆயுதங்கள் தவிர்த்து... மத்து, பூரிகட்டை போன்ற மென்மையான ஆயுதங்கள் உபயோகித்து... வாழ வாழ்த்துகிறேன்!

வாழ்த்துக்களுடன்...
பாரி.அரசு

11 comments:

TBCD சொன்னது…

குசும்பனை தொலை பேசி வாழ்த்து தெரிவிச்சாச்சு..

சுவரொட்டியில் வாழ்த்தியாச்சு..

இப்ப இங்கேயும்...


வாழ்த்துக்கள் குசும்பா...

*********

ரொம்ப கவனமா பதிவு போட்டு இருக்காப்ல தெரியுது...

வெகு விரைவில் உங்களை வாழ்த்துகிற வாய்ப்பை தருமாறு, கண்டிப்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

*********

ஜெகதீசன் சொன்னது…

வாழ்த்துக்கள் குசும்பா...

ஜெகதீசன் சொன்னது…

//
வெகு விரைவில் உங்களை வாழ்த்துகிற வாய்ப்பை தருமாறு, கண்டிப்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
//
மறுமொழிகிறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்!!!!!

கோவி.கண்ணன் சொன்னது…

//குசும்பரின் சிற்சில பிழைகள் பொறுத்து, கத்தி, ஜல்லி கரண்டி, மேசை கரண்டி, தோசை கரண்டி போன்ற வன்மையான ஆயுதங்கள் தவிர்த்து... மத்து, பூரிகட்டை போன்ற மென்மையான ஆயுதங்கள் உபயோகித்து... வாழ வாழ்த்துகிறேன்!//

எல்லாம் அப்படித்தான் சொல்லுவாங்க, அதன் பிறகே என் பொண்டாட்டி என்னை அடிப்பதிலும் தனி சுகம் இருக்குன்னு சொல்லுவாங்க.

தம்பி அரசு ,
நாங்களும் இது போல் எழுதனும் ?
எப்போ டும் டும் டும் ?

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
//
வெகு விரைவில் உங்களை வாழ்த்துகிற வாய்ப்பை தருமாறு, கண்டிப்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
//
மறுமொழிகிறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்
//

ஜெகா
பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்பது போல் இருக்கு !
:)

புரிகிறவர்களுக்கு புரியும் !
:)

ஜெகதீசன் சொன்னது…

//
எல்லாம் அப்படித்தான் சொல்லுவாங்க, அதன் பிறகே என் பொண்டாட்டி என்னை அடிப்பதிலும் தனி சுகம் இருக்குன்னு சொல்லுவாங்க.
//
அனுபவம் பேசுகிறது......
:P

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
அனுபவம் பேசுகிறது......
:P
//

அதுக்கெல்லாம் கொடுப்பினை இருக்கனுமய்யா..
:)

ஜெகதீசன் சொன்னது…

//

அதுக்கெல்லாம் கொடுப்பினை இருக்கனுமய்யா..
:)
//
எதுக்கு? அடி வாங்குறதுக்கா?

(அது சரி போன தடவை நம்ம சந்திச்சப்ப கன்னம் வீங்கியிருந்ததே(கேட்டதுக்கு பல்வலின்னு பொய் சொன்னீங்களே...) அதுக்கும் இது தான் காரணமா?)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
எதுக்கு? அடி வாங்குறதுக்கா?

(அது சரி போன தடவை நம்ம சந்திச்சப்ப கன்னம் வீங்கியிருந்ததே(கேட்டதுக்கு பல்வலின்னு பொய் சொன்னீங்களே...) அதுக்கும் இது தான் காரணமா?)//

இப்படியே ஒண்ணு ஒண்ணாக கேட்டு தெரிஞ்சிக்க பாக்குறிங்களா ?

சின்னப்பசங்களுக்கு அதுக்கு மேல செல்லக் கூடாது என்று டிபிசிடி ஐயா அறிவுறுத்திருக்கார்.

TBCD சொன்னது…

நானும் என் விழுப்புண்களும் என்று அமைதியாக இருக்கும் போது ஏன் என்னை இதில் இழுத்து விடுறீங்க..

வீரனுக்கு அழகு விழுப்புண் தானே..

///
கோவி.கண்ணன் said...
//ஜெகதீசன் said...
எதுக்கு? அடி வாங்குறதுக்கா?

(அது சரி போன தடவை நம்ம சந்திச்சப்ப கன்னம் வீங்கியிருந்ததே(கேட்டதுக்கு பல்வலின்னு பொய் சொன்னீங்களே...) அதுக்கும் இது தான் காரணமா?)//

இப்படியே ஒண்ணு ஒண்ணாக கேட்டு தெரிஞ்சிக்க பாக்குறிங்களா ?

சின்னப்பசங்களுக்கு அதுக்கு மேல செல்லக் கூடாது என்று டிபிசிடி ஐயா அறிவுறுத்திருக்கார்.
///

புரட்சி தமிழன் சொன்னது…

'வாழ்த்துக்கள்'

Related Posts with Thumbnails