வியாழன், 10 ஜூலை, 2008

ஜ்யோவ்ராம் சுந்தர் நீக்கம் - வலைப்பதிவு வாசிப்பாளர்கள்=மிடில் கிளாஸ் மாதவன்கள்...!

ஜ்யோவ்ராம் சுந்தர் நீக்கம் எனக்கும் வருத்ததை தருகிறது... அதே நேரத்தில்...

ஜ்யோவ்ராம் சுந்தர் நீக்கத்திற்கு இன்னும் தமிழ்மணம் விளக்கம் தராத நிலையில்... அறிவுஜீவி வளர்மதி அவர்கள்... பொதுஜன வாசிப்பாளர்களை மிடில்கிளாஸ் மாதவன் என்று விமர்சித்திருக்கிறார்... :(

முதலில் வாசிப்பாளன் முட்டாளாக கூட இருக்கட்டும்... குறைந்தபட்சம் அவனை நோக்கி இயங்க கற்றுக்கொள்ளுங்கள்...!

உனக்கு தெரியாது நீ! முட்டாள் என்பதும் ஒரு வகையில் பார்ப்பானியம்...


தமிழ்மணம் வெறும் அறிவுஜீவிகளுக்கு எழுதும் அறிவுஜீவிகளுக்கு மட்டுமான தளமல்ல... அது மிடில்கிளாஸ் மாதவன்களை வாசிப்பாளர்களாக உள்ளடக்கியதே... :)

நன்றி

11 comments:

பெயரில்லா சொன்னது…

மீ த பர்ஸ்ட்டு...

(மிடில் 'கிளாஸ்' மாதவன்)

வால்பையன் சொன்னது…

//(மிடில் 'கிளாஸ்' மாதவன்)//

அண்ணா
என் க்ளாஸ் காணோமே
யாரவது தேடி தர்ரிங்கலா

வால்பையன்

நாமக்கல் சிபி சொன்னது…

/மீ த பர்ஸ்ட்டு...

(மிடில் 'கிளாஸ்' மாதவன்)//

மீ த செகண்டு!

(நானும் மிடில் 'கிளாஸ்' மாதவன்தான்)

உடன்பிறப்பு சொன்னது…

//முதலில் வாசிப்பாளன் முட்டாளாக கூட இருக்கட்டும்... குறைந்தபட்சம் அவனை நோக்கி இயங்க கற்றுக்கொள்ளுங்கள்...!
//

உங்கள் கருத்தை வழிமொழிகிறேன்

பெயரில்லா சொன்னது…

ஜ்யோவ்ராம் சுந்தரின் பதிவு நீக்கப்பட்டதா? அய்யா கொஞ்சம் நிதானமாக தமிழ்மணத்திலே தேடிப் பார்த்து விட்டுப் பேசியிருக்கலாமே?

Udhayakumar சொன்னது…

எழுத்தாளர்கள் எல்லாம் என்ன வேணா சொல்லாம். இந்த மிடில் கிளாஸ் மாதவன்கள் அவர்கள் எழுதும் எந்த குப்பையயும் படிப்பார்கள் என்ற தைரியமோ?

எழுத்தாளர்கள்தான் பொது ஜன விருப்பத்தை இந்த கொதறு கொதறுகிறார்களே? ஏன் "அமைதியாக" வெளி நடப்பு செய்ய வேண்டியது தானே?

கம்பத்தை பார்த்தா நாய் காலைத் தூக்குமாம் - ஏதோ சொல்லத் தோணியது.

Joe சொன்னது…

I don't care if tamilmanam censored sundar's blog!

I read the latest story by Sundar and I don't think it's too vulgar to be censored.

I have added him to my favorites on my IE, will read him regularly.

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

//(மிடில் 'கிளாஸ்' மாதவன்)//


நானும்

லக்கிலுக் சொன்னது…

//அதனால், பரந்து பட்ட அளவிலே பதிவர்களிடையே தமிழ்மணத்துக்குத் தவறான அடையாளத்தைத் தரும் சொற்களைத் தலைப்பிற் கொள்ளும் இடுகைகளை மட்டுறுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றோம். தமிழ்மணம் திரட்டும் பதிவுகளின் தலைப்புகளில் உள்ள அப்படியான வார்த்தைகளை மட்டுறுத்தும் நுட்பத்தை தமிழ்மணம் தற்பொழுது கொண்டு வந்துள்ளது. அப்படியான சொற்களை மட்டுமே தமிழ்மணம் மட்டுறுத்தி உள்ளது. அவற்றினைக் கொண்ட இடுகைகளை தமிழ்மணம் நீக்கவில்லை என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்.

தமிழ்மணத்துக்குத் தவறான அடையாளத்தைத் தரும் வார்த்தைகளை கொண்ட இடுகைகள் மட்டுறுத்தப்பட்டு அண்மையில் எழுதப்பட்ட இடுகைகள் பகுதியில் வெளியாகும். ஆனால் சூடான இடுகைகள், வாசகர் பரிந்துரை, மறுமொழிகள் பகுதி போன்ற சிறப்பு பகுதியில் இந்த இடுகைகள் இடம்பெறாது. பெரும்பாலான இடுகைகளின் தலைப்புகள் இத்தகைய சிறப்பு பகுதியில் இடம் பிடிக்கவும், வாசகர்களை தொடர்ந்து இழுக்கவுமே வைக்கப்படுவதாக தமிழ்மணம் நம்புவதால் இந்த ஏற்பாட்டினை செய்துள்ளோம்.//

தவறான பொய்யான தகவலை பயனாளிகளுக்கு தமிழ்மண நிர்வாகம் தரவேண்டாமே?

தமிழ்மணம் நிர்வாகத்துக்கு இன்னொரு அவசரக் கடிதம்!

இந்த தலைப்பில் நீங்கள் குறிப்பிடும் தமிழ்மணம் குறித்த தவறான பார்வையை குறிப்பிடும் சொல் ஏதாவது இருக்கிறதா என்ன?

இந்த பதிவும் மறுமொழியிடப்பட்ட இடுகைகள், சூடான இடுகைகள் எதிலும் வரவில்லை.

//அண்மையிலே தமிழ்மணம் நிர்வாகிகளின் தமிழகப் பயணத்தின் பொழுது புதுவை உள்ளிட்ட பகுதியில் உள்ள பதிவர்கள் சூடான சில இடுகை வார்த்தைகள் தமிழ்மணம் குறித்த தவறான எண்ணத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்து இருந்தார்கள்//

மற்றபடி, புதுவை பதிவர்களுக்கு தமிழ் இணையம் குறித்தும், தமிழ்மணம் குறித்தும் இருக்கும் அக்கறை குறித்து மெய்சிலிர்க்கிறேன் :)


ச்சீ....க்கதைகள் அறுபத்தொன்பது

இந்த தலைப்பிலான பதிவு தமிழ்மணத்தின் சூடான இடுகைகளில் தற்சமயம் இடம்பெற்றிருக்கிறது. இத்தலைப்பில் தமிழ்மணத்துக்கு தவறான பார்வையை தரும் சொற்கள் எதுவும் இல்லை என்று மனதார நம்புகிறேன். :)

பெயரில்லா சொன்னது…

//உனக்கு தெரியாது நீ! முட்டாள் என்பதும் ஒரு வகையில் பார்ப்பானியம்...//

நீரு பெரிய கொம்பன்னு நெனைப்போ? நீரு எப்படிய்யா கலாச்சார ரவுடியாவும் கல்சுரல் கமிசாராவும் ஒரே டைமுல இருக்கலாம். அதுக்குத்தான் நாம இருக்கோமே.

எது அதிகாரத்த வளக்கும் கருத்து, எது அதிகாரத்த அடிக்கும் கருத்துன்னு சொல்ற அதிகாரம் எங்கக்கிட்ட மட்டுந்தேன் இருக்கும்.

லெப்டுல பாத்தாக்க, நாம கல்லாச்சார ரவுடிபுரட்டு அ மீன் புரட்சி பண்றவுங்க. ரைட்டுல பாத்தாக்க, நாம கல்சுரல் அப்பர்க்ளாஸ் ஸ்காட்ஸ் மார்த்தாண்டங்க. ஒங்களுக்கு எது கரெக்டு எது நாட் கரெக்டுன்னு தெரியாது. நாங்க சொல்லித்தாரோம். கேட்டு ஆமா பின்னூட்டம் போடுங்க. அப்போ நீங்க பின்னவீனத்துவ போராளி காம்ரேட்டுங்க. இல்லைன்னாக்க, அதிகாரவர்க்க கல்சுரல் பொலிசுங்க. நாங்கதான் ஒரிஜினல் காலாச்சார போலிஸ்ன்னும் வருவோமுன்னு இப்போதைக்க்கு சொல்லிக்கிறோம்.

பெயரில்லா சொன்னது…

உனக்கு தெரியாது நீ! முட்டாள் என்பதும் ஒரு வகையில் பார்ப்பானியம்...


Unnecessary and meaningless racism!

Related Posts with Thumbnails