செவ்வாய், 1 ஏப்ரல், 2008

பார்ப்பானீய, பனியா தேசியமும், அல்லல்படும் மக்களும்...!

பஞ்சாப், காஷ்மீர், அசாம், வடகிழக்கு மாநிலங்கள், மகாராஷ்டிரா, கர்நாடகா தொடங்கி நாளை தமிழகத்தையும் ஆட்க்கொள்ள போகிற பிரச்சினை என்னவென்றால் மண்ணின் மைந்தர்களுக்கு வாழ்வுரிமை என்பதாகும்...

சில நிகழ்வுகளை இங்கே பதிவுச்செய்துவிட்டு அதன் தொடர்ச்சியாக உரையாடுவோம்... 10 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தில் ஒரு பிரச்சினை எழுந்தது... பெரும்பாலும் விவசாய கூலித்தொழிலாளர்களில் தலித் தொழிலாளர்கள், பிற்ப்படுத்தப்பட்ட தொழிலாளர்கள் என பிரிவு இருக்கும். தலித் தொழிலாளர்களுக்கு கஞ்சியும், தலித் அல்லாதவர்களுக்கு குழம்பு சோறும் வழங்கப்படும். அதே கூலியிலும் சிறிது வேறுபாடு இருக்கும். யாரோ ஒருவர் இதென்ன? தனி, தனியாக சமையல்... எல்லோருக்கும் குழம்பு சோறு என்று வழங்க... உடனே நாட்டு பஞ்சாயத்து கூட்டப்பட்டது. இதை கூட்டியவர் ஒரு அயோக்கிய மார்க்கிஸ்ட் என்பது தனிக்கதை... அதே நேரத்தில் சில கிராமத்தில் தலித், கள்ளர் பிரச்சினை தலைதூக்க, உடனே நாட்டு பஞ்சாயத்து கட்டுப்பாடு என்று தலித்களுக்கு வேலை மறுத்தல்! மாற்றாக பீகார், ஒரிசாவில் இருந்து லாரிகளில் தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு விவசாய வேலைகள் நடந்தன. தலித்கள் மீதான கட்டுப்பாடு நீக்கிய பிறகும், பிற மாநில தொழிலாளர்களை வரவழைத்தல் நிகழ்கிறது. ஏனென்றால் குறைந்த கூலி, ஒப்பந்த அடிப்படையில் வேலை வாங்குவது. உள்ளூர் விவசாய தொழிலாளர்களை விட நீண்ட நேரம் வேலை பார்க்கிறார்கள் போன்ற காரணங்கள் சொல்லப்படுகின்றன. இது தொடரும் போது உள்ளூர் தொழிலாளர்கள் நிச்சயமாக நாளை அவர்களை தாக்குவார்கள் என்பதே உண்மை!

இரண்டாவது இந்த ஒட்டர்கள் என்ப்படும் சாலை பராமரித்தல் மற்றும் தார்சாலை அமைத்தல் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களின் நிலைமையை பற்றியது... 800 மீட்டர் தார் சாலை 8 மணி நேரத்தில் அமைத்தால் மட்டுமே ஒப்பந்தகாரர்கள் சம்பாதிக்க முடியும். லாபத்தை கூட்ட வேண்டும் என்கிற நோக்கத்தில் அதிக தூரம் சாலை அமைக்க ஒப்பந்தகாரர்கள் முயற்சிப்பதற்க்கு தார்சாலை அமைக்கும் தொழிலாளர்கள் ஒத்துவராதால், வெளி மாநிலங்களிலிருந்து தொழிலாளர்கள் ஒப்பந்த கொத்தடிமைகளாக இறக்கப்படுகின்றனர். (இதில் கொதிக்கும் தாரில் வேலை பார்க்கும் முறையை மாற்ற வேண்டும், இயந்திரங்களின் உதவியுடனே சாலைகள் அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை அடுத்த நிலை...)

இதன் நீட்சியை கல்லுடைக்கும் தொழிலாளர்கள், சூளை தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு நிலைகளில் காணலாம்...

தொடரும்...

3 comments:

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

நமக்கு நாமே திட்டம்!

ஜெகதீசன் சொன்னது…

நட்புக்காக திட்டம்....
:))

TBCD சொன்னது…

எந்த திட்டமா இருந்தாலும், நமக்கு 10% அனுப்பி வையுங்கடே.. :P

Related Posts with Thumbnails