புதன், 23 ஜனவரி, 2008

உங்களுடைய ஒவ்வொரு டாலரும் உங்களுக்கெதிரான ஆயுதமாக...!

எங்கே போனாலும் இந்த சாமியை கட்டிக்கொண்டு அழுகிற தமிழர்களால்... அவர்களுடைய உழைப்பே, அவர்களின் இனத்திற்க்கெதிரான நடவடிக்கைகளுக்கு துணை போவதை உணராமல் இருக்கிறார்கள்.

புலம் பெயர் தமிழர்களின் உழைப்பை உறிஞ்சி வளர்கிற இந்த புல்லுருவிகளால்... இன்றைக்கு மிகப்பெரிய ஆபத்து தமிழனத்திறக்கெதிராய் கட்டமைக்கப்படுகிறது.

கோயில்கள், இசைப்பள்ளிகள், கலை மற்றும் விழாக்கள் வழியாக பார்ப்பானீயத்தின் ஊடுருவல் மெல்ல, மெல்ல புலத்தில் அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. அதே நேரம் தமிழகத்தில் இவர்களின் ஆதிக்கத்திற்க்கெதிரான போராட்டத்திற்க்கும் மிகப்பெரிய சவாலை உருவாக்குகிறது.

இங்கிலாந்தில் இருக்கிற புலம் பெயர் தமிழர்களுக்கு குங்குமம், திருநீறு போன்றவற்றை ஏற்றுமதி செய்தே, சென்னை கே.கே.நகரில் ஓருவர் கோடிகளுக்கு சொந்தகாரராக ஆகியுள்ளார்.

மிக எளிமையாக கேள்வி கேட்கலாம் இது தொழில் தானே என்று... நீங்கள் யாருடன் தொழில் செய்கிறீர்கள் என்பது மிக முக்கியம். உங்களுடைய இனத்திற்க்கெதிரான நடவடிக்கைகளை மேற்க்கொள்ளும் நபர்களுடன் நீங்கள் தொழில் செய்கிறீர்கள். அதற்க்கான பொருளாதார வளத்தை நீங்களே தருகிறீர்கள்.

தினமலர், விகடன் குழுமம் போன்றவற்றிக்கு இணையத்தில் சந்ததாரர்களாக புலம் பெயர் தமிழர்கள் ஆகியிருப்பதன் மூலம், உங்களுக்கெதிரான அரசியல் ஊடகத்திற்க்கு நீங்களே நீர் விட்டு வளர்க்கிறீர்கள்!

ஒரு இனத்திற்க்கான அரசியல் என்பது ஊடகம், தொழில் துறை, சமயம், கலை, பண்பாடு இப்படி எல்லா நிலைகளிலும் முன்னெடுக்கப்பட வேண்டும்!
Related Posts with Thumbnails