திங்கள், 20 ஆகஸ்ட், 2007

சிங்கையில் மட்டும் எப்படி முடிகிறது, தமிழ்நாட்டில் ஏன் முடியல...?

சிலமாதங்களுக்கு முன்னாடி என்னுடைய நண்பர் ஓருவர் (அவர் பாடகர், அதோட பாடல் பயிற்சி வகுப்புகள் வேறு போயிட்டிருக்கிறார்) சிலோன் ரோடு விநாயகர் கோயிலில் ஓரு இசை நிகழ்ச்சி இருக்கு போகணும் வருகிறாயா? என்று கேட்டார்.

நான் வரவில்லை என்றேன்

ஏன்? என்று கேட்டார்

இவனுக தமிழ்நாட்டுல இருந்து வந்து புரியாம கர்நாடக சங்கீதம் என்கிற பேரில் எதையாவது பாடுவாய்ங்க நீங்க உட்கார்ந்து தலையாட்டுவீர்கள், நான் அங்கன எதுக்கு என்றேன்.

இல்ல, கட்டாயம் நீ வர வேண்டும் உனக்கு ஓரு அதிர்ச்சி காத்திருக்கிறது என்றார்

ஓரு வழியா கட்டாயபடுத்தி என்னை கூட்டி சென்றார், நிகழ்ச்சி ஆரம்பித்த உடனே எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சி...

எல்லா நிகழ்வுகளும் முழுக்க, முழுக்க தமிழ் இசை பாடல்கள் பாடப்பட்டது. திருக்குறள்,தேவாரம், திருவாசகம், திருப்புகழ் என்று அசத்தினார்கள்.

மிக முக்கியமான செய்தி யாரெல்லாம் தங்களுக்கு கர்நாடக சங்கீதம் தவிர வேறு எதுவும் பாட வராது என்கிற மாதிரி தமிழகத்தில் மேடை தோறும் கர்நாடக சங்கீதம் பாடுகிற பாடகர்கள்... இங்கே தமிழ் இசை பாடல்கள் பாடிக்கொண்டிருந்தனர். அனைவருமே தமிழகத்திலிருந்து வந்த பாடகர்கள்.

நிகழ்ச்சியின் முடிவில் சில விசாரணைகளை மேற்க்கொண்ட போது தான் தெரிந்தது, இந்த கோயிலின் நிர்வாகம் முழுக்க, முழுக்க ஈழத்தமிழர்களால் நடத்தப்படுகிறது.

பிறகு அவர்களிடம் உரையாடிய போது, அவர்கள் சொன்ன தகவல்...

நாம் பணம் கொடுக்கிறோம், நமக்கு தேவையானதை அவர்கள் பாட வேண்டும் என்பதை தெளிவாக சொல்லிவிடுகிறோம். இங்கே வேறெந்த சிக்கலுமில்லை என்றனர்.

அப்போ தமிழ் நாட்டு தமிழனும் பணம் தானய்யா கொடுக்கிறான், கோயில் திருவிழாவில் இருந்து, கச்சேரி மேடை வரை இவர்கள் பாடுகிற புரியாத பாடல்களுக்கு தலையாட்டிக்கிட்டே திரியுறானுகளே...!

சிங்கையில் டாலருக்கு தமிழில் பாடும் பாடகர்கள், தமிழ்நாட்டில் ரூபாய் நோட்டுக்கு தமிழிலில் பாட மறுப்பதேன்?

இல்லை

தமிழ்நாட்டு தமிழன் மானம் கெட்டு அலைகிறானா?

விரைவில் பாடகர்களின் பட்டியல் மற்றும் நிகழ்ச்சி நிரலை வெளியிடுகிறேன்.

17 comments:

பெயரில்லா சொன்னது…

தலைவரே சீக்கிரம் அந்த லிஸ்டைப் போடுங்க.

பெயரில்லா சொன்னது…

கொளுத்திப் போட்டிருக்கிறீர்கள். எங்கெங்கே வெடிக்கப் போகிறதோ ?
'டோண்டு' worry

சிவபாலன் சொன்னது…

Excellent Post!

//அப்போ தமிழ் நாட்டு தமிழனும் பணம் தானய்யா கொடுக்கிறான், கோயில் திருவிழாவில் இருந்து, கச்சேரி மேடை வரை இவர்கள் பாடுகிற புரியாத பாடல்களுக்கு தலையாட்டிக்கிட்டே திரியுறானுகளே... //

Good Question!

கோவி.கண்ணன் சொன்னது…

//சிங்கையில் டாலருக்கு தமிழில் பாடும் பாடகர்கள், தமிழ்நாட்டில் ரூபாய் நோட்டுக்கு தமிழிலில் பாட மறுப்பதேன்?

இல்லை

தமிழ்நாட்டு தமிழன் மானம் கெட்டு அலைகிறானா?

விரைவில் பாடகர்களின் பட்டியல் மற்றும் நிகழ்ச்சி நிரலை வெளியிடுகிறேன்.//

என்னங்க சொல்றிங்க ?

தியாகராஜரும் மற்றும் மும்மூர்த்திகள் அவதரித்த தமிழ்மண்ணில் தமிழ்பாட்டு எப்படி பாட முடியும் ? அவர்கள் தெலுங்கு கீர்த்தனைகளையும், சமஸ்கிருத கீர்த்தனைகளையும் அல்லவா போற்றினார்கள்.

சிங்கையில் அவர்கள் பிறக்கவில்லையே ? தமிழை எங்கு வேண்டுமானாலும் பாடலாம் ? மகான்கள் அவதரித்த 'தமிழகத்தில் பாடலோமோ ?

:)

வெற்றி சொன்னது…

நல்ல பதிவு. நியாயமான ஆதங்கம்.

பெயரில்லா சொன்னது…

தமிழ்நாடென்றாலும் 'அவா' வோட சபாவுல பாடுறவனெல்லம் எதுக்காக தமிழ்ல பாடணும் அங்க தமிழ் பாட்டு கேட்கதான் வாராங்களா?.

உங்க கருத்துப்படி அவங்க தமிழ் பாட்டு கேட்பதற்காக காசு கொடுப்பதில்லை.

வவ்வால் சொன்னது…

பாரி அரசு,
அதற்கு காரணம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் , இங்கேயுள்ளவர்கள் அப்படி பாடினா தானே காசு தராங்க. உங்களை போன்றவர்கள் இங்கேயும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களாக இருக்க வேண்டும்.

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

நந்தா வருக!
பாடகர் பட்டியலை போட்டால், நம்ம மக்கள் ஓவ்வொரு பாடகரையும் தனிமனித தாக்குதலில் இறங்கி விடுவார்கள், அதான் நிறுத்தி வைத்துள்ளேன்.

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

வருக மதுக்கூரான்!
எங்கேயும் வெடிக்காது... சில இடங்களில் மட்டும் புகையும் :-))

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

வருக சிவபாலன்!
வருகைக்கும், கருத்திற்க்கும் நன்றி!

அ. இரவிசங்கர் | A. Ravishankar சொன்னது…

customer-supplier பரிமாணத்தில் இது வரை இதை யோசித்தது இல்லை. !! முக்கியமான விசயத்தைச் சுட்டிக் காட்டி இருக்கிறீர்கள். நன்றி.

ஜெர்மனியில் இருந்து போது ஒரு ஈழத் தமிழர் வீட்டுக்குப் பொங்கலுக்குப் போனபோது தேவாரம் பாடித் தான் இறைவணக்கம் செய்தார். இத்தனைக்கும் அவர் பள்ளி வகுப்பு கூடு முடிக்காதவர். இது போன்ற விசயங்களில் ஈழத்தவர்களுக்கு இருக்கும் தெளிவு, பிடிப்பு நமக்கு இருப்பதில்லை. இனியாவது கற்றுக் கொள்ள வேண்டும்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

பாரிசில் ,ஈழம் தெல்லிப்பழைப் பழைய மாணவர் சங்கத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட பம்பாய் ஜெயசிறி
அவர்களின் கச்சேரியில் ஒழுங்கு செய்தவர்கள்; அம்மன் பாடல்கள் (அவர்கள் தெல்லிப்பழை துர்க்கையை குலதெய்வமாகக் கருதுபவர்கள்) அதுவும் தமிழில் பாடவேண்டும் எனக் கேட்டுக்கொண்டபோது சுமார் 2.30 மணி தமிழே பாடினார். அந்த இசை நிகழ்ச்சிக்கு நான் எதிர்பாராவிதமாக வரவேற்புரை ஆற்றினேன்.
2002 அமைதிக்குப் பின் யாழ்ப்பாணம் சென்ற முதல் தென்னிந்தியக் கலைஞர் நித்தியசிறி ;இவர் நல்லூர் கந்தசாமி கோவிலில் தமிழிலே பாடியதாக அவரே பெருமையாகக் கூறினார்.அங்கே கேட்டுக் கொள்ளப்பட்டது.
அடுத்து பாரிஸ் முத்துமாரியம்மன் ஆலயத்தில் சஞ்சய் சுப்பிரமணியம் அவர்கள் கச்சேரியில் இன்று உங்களுக்காக பெரும்பகுதி தமிழில் பாடுவார் என அறிவித்த போது; ஒரு பாடல் தவிர ஏனையவை
தமிழில்; தேவாரம்;திருவாசகம்;பிரபந்தம் பாடி அசத்தினார். அவர் பாடிய "ஊரிலே காணியில்லை,உறவு மற்றொருவர் இல்லை எனும் பிரபந்தம் கேட்டு ஒரு பெண் கண்ணீர் விட்டார். உணர்வில் கலந்து ஒன்ற அந்த மொழி புரிந்ததால்... அதனால் நாம் காசு கொடுக்கிறோமா? தேவையானதைக் கேட்கக் கூச்சப்படக் கூடாது. அது நமது உரிமை அவர்கள் கடமை.
நான் தியாகராசரின் கீர்தனைகளுக்கு எதிரி அல்ல. அதையும் மொழி புரியாவிடிலும் உருக்கத்தால்; தெய்வ நாமம் என்பதால் மிகரசிக்கிறேன். ஆனாலும் எம் மொழியிலும் பாடுங்கள்..என அன்பாகக் கேட்கிறோம். இந்த மாற்றம் வர நீங்கள் தான் மனம் வைக்க வேண்டும்.
ஆகவே பக்குவமாக எடுத்துச் சொல்லுங்கள்.

மாசிலா சொன்னது…

நல்ல சிரிப்பு. இதுபோன்ற கலைஞர்களை நினைக்கையில் சிரிப்புதான் மிஞ்சுகிறது.

இவர்களைத்தான் கூலிக்கு மாரடிக்கும் பட்டாளம் என்பதோ?

அவுத்து போட்டு ஆட சொன்னாலும் ஆடுவாங்க. அடுத்த முறை இதை கேட்டு பாருங்க. டாலருக்கு ஆடாத பாம்பே இல்லை இந்த உலகத்தில. ஒரு வேளை இந்தியா நாணயத்தையும் டாலரா மாத்திட்டா எல்லாம் சரியா ஆயிடுமா?

நல்ல பதிவு. நன்றி பாரி.அரசு

ILA (a) இளா சொன்னது…

//நமக்கு தேவையானதை அவர்கள் பாட வேண்டும் என்பதை தெளிவாக சொல்லிவிடுகிறோம்.//

பாரி, ஒரு பெரிய விஷயத்தை எவ்வளவு சுலபமா சொல்லிட்டீங்க. நம்ம ஊர்க்காரங்களும் இதுதான் வேணும்னு சொல்லி இருந்தா திருக்குறள்,தேவாரம், திருவாசகம், திருப்புகழ் என்று எல்லாத்தையும் இசையாவே கேட்டு ரசிச்சு இருக்கலாம். நல்ல படிவு/ஆதங்கம். அருமையான சாடல்.
அந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருக்கு ஒரு வந்தனம்

கருப்பு சொன்னது…

பஜனைப் பாட்டுப் பாடவா தமிழ் இசையை வலியுறுத்தினோம்?


தமிழ் இசையை நாம் ஏன் வேண்டுகிறோம்? எதற்காக நமக்குத் தமிழில் இசை வேண்டுமென்கிறோம்? தமிழ் மொழியை ஏன் வேண்டுகிறோம்? ஸ்காந்தத்தை ‘கந்த புராணம்' என்றும், கிருஷ்ணனை ‘கிருட்டிணன்' என்றும், ‘ஹோம் நமஹா என்பதை ‘ஓம் நமோ' என்றும், நரசிம்ஹமூர்த்தி என்பதை ‘சிங்கமுகக் கடவுள்' என்றும், தசகண்ட ராவணன் என்பதை ‘பத்துத்தலை இருட்டுத் தன்மையன்' என்றும் மொழி பெயர்த்துக் கொண்டு வணங்கி, நம்பி, திருப்தி அடையவா என்று கேட்கிறேன்.

தமிழிசைக்கு நாம் கிளர்ச்சி செய்ததானது வீணாகவில்லை. தமிழிசைத் தொழிலாளர்கள் தமிழில் இசை கற்று வருகிறார்கள்; பெரும்பாலும் தமிழில் பாடுகிறார்கள். இசையை நுகர்வோரும் தமிழில் இசை வேண்டுமென்று விரும்புகிறார்கள். இனி இந்த உணர்ச்சி குன்றிவிடாது. இசை விருந்தளிக்கும் செல்வவான்களும், நுகர்வோர்களும் தமிழுணர்ச்சி உள்ளவர்களாக இருக்கும் வரை, இந்த உணர்ச்சி வலுத்துக் கொண்டே போகும். இசை, நடிப்பு ஆகியவை எதற்குப் பயன்படுகின்றன? ஏதாவது ஒரு கருத்தை ஒரு சேதியைக் காட்டுவதற்கும், அதை மனதில் பதிய வைப்பதற்கும் அது வெறும் வாக்கியத்தில் இருப்பதை இசை இன்பத்தோடும், நடிப்பு இன்பத்தோடும் மனதிற்குள் புகுத்துவதற்கும் ஆகவே முக்கியமாய் இருந்து வருகின்றன.

இரண்டாவதாகத்தான் அவற்றில் இன்ப நுகர்ச்சி வருகின்றது. ஆகவே, இசைக்கும் நடிப்புக்கும் கருத்தும் செய்திகளும் பிரதானமாகும்; அடுத்ததாகவே சுவை பிரதானமாகும். அதன் உண்மையான அனுபவமும் அப்படியேதான் இருந்து வருகிறது. ஆனால், நுகர்வோரும், இசைத்து நடிப்போரும் செய்தியையும், சுவையையும் பற்றிக் கவலையில்லாமல் நுகர்வோர்கள் நேரப் போக்குக்கும், வேறு பல காட்சி இன்பத்திற்கும் அதைச் சாக்காக வைத்து நுகர்வதாலும், இசைத்து நடிப்போர்கள் பொருளுக்கும், வேறு சுயநலத்துக்கும் பயன்படுத்துவதாலும் அதற்கு உண்டான பயன் ஏற்படாமல் போய்விடுகிறது.

சாதாரணமாக பொருள் நஷ்டமோ, கால நஷ்டமோ, ஊக்க நஷ்டமோ இல்லாமல் நடைபெறும் காரியங்கள்கூட, நம் நலத்துக்கு ஏற்றதாகவும், தீமை ஒழியத் தக்கதாகவும் இருக்க வேண்டுமென்று விரும்புவது, அறிவுடைய மக்களின் தலையாயப் பண்பாகும். அவற்றில் நமக்குப் போதிய கவலை இல்லாததாலேயே நம் நலத்துக்கு மாறான சேதிகளும், உணர்ச்சிகளும் கொண்ட காரியங்கள் வளர்ந்துவர ஏற்பட்டு விட்டதுடன், அவைகளையே பொருள் கொடுத்தும், காலத்தையும் ஊக்கத்தையும் செலவழித்தும் நுகர்ந்து, அறிவும் மானமும் கெட்டு, முற்போக்கும் தடையுற்றுக் கீழ் நிலைக்கு வர வேண்டியவர்களானோம்.

சென்ற மாதம் சென்னையில் நடந்த தமிழ் இசை மாநாட்டை எடுத்துக் கொள்ளுங்கள். 10 நாட்கள் ஒரு பெரிய திருநாள்போல் நடந்தது; பல பதினாயிரம் ரூபாய் செலவிடப்பட்டுப் பல ஆயிரக்கணக்கான மக்கள் தினம் 4, 5 மணி நேரம் செலவழித்து வந்து அமர்ந்து இருந்துவிட்டுப் போனார்கள். வள்ளல் அண்ணாமலையார் உணர்ச்சியும் ஊக்கமும் ஆழ்ந்த சிந்தனையும், அவர்களது பந்துமித்திரக் குழாங்களும், அறிஞர் சண்முகம் அவர்களது அறிவுரைகளும் ஆற்றல்களும் எல்லையின்றிப் பயன்படுத்தப்பட்டன. எதிரிகளுக்கு ஆணித்தரமான விடை அளித்து அவர்களது வாய்க்கு ஆவிகூட வெளிப்படமுடியாதவாறு ஆப்புகள் சம்மட்டியால் அறையப்பட்டன. வெற்றிக் கொடி ஆகாயத்தை அளாவிப் பறந்தது.

ஆனால், விளைந்த பயன் என்ன? ஏற்பட்ட படிப்பினை என்ன? இம்மாநாடு, பண்டிதர்களைத் தமிழில் பஜனைப் பாட்டுகளைத் தொடுக்க வைத்தது; இசைவாணர்களை (பாட்டுத் தொழில்காரர்களை) வீட்டில் தனிமையில் உட்கார்ந்து பாட்டுகளைப் பாடிப்பாடிப் பழக்கம் செய்து கொள்ளச் செய்தது; இந்தப்படியான தமிழ் பஜனைப் பாட்டுப் பாடத் தெரிந்தவனையே இசை விருந்துக்கு அழைக்க வேண்டும் என்கின்ற உணர்ச்சியை நமது செல்வவான்கள் பலருக்கு ஊட்டியது; இசை நுகரச் செல்லும் மக்கள் பலருக்கும் (இந்த இசைவாணர்) தமிழில் இசை இசைக்கிறாரா அல்லது வேறு மொழியில் இசைக்கிறாரா - வேறு மொழியில் இசைத்தால் கலவரம் செய்யலாமா என்கின்ற சிந்தனையைச் சிலருக்கு ஊட்டிற்று என்பனவாகிய இவை ஏற்பட்டன என்றே வைத்துக் கொள்ளலாம்.

இவற்றால் சகல உயர்வும், தகுதியும் இருந்து ஒரு சிறு கீழ் மக்கள் குழுவால் இழி மக்களாய்க் கருதப்பட்டு, சுரண்டப்பட்டு, மானமற்று நடைப்பிணங்களாய்க் கிடக்கும் தமிழ் மக்களுக்கு, இந்த நிலை மாற, ஏதாவது ஒரு ஊசி முனை அளவு பயன் ஏற்பட்டதா என்று வணக்கத்தோடு கேட்கிறேன். நலம் பெறுவதற்கு வழி சிறிதும் இல்லாவிட்டாலும், கேட்டிற்காவது சரிவு வழி ஏற்படாமல் போயிற்றா என்று கேட்கிறேன்.

இவ்வளவு பொருளும், ஆற்றலும், மதியும், மற்றதும் செலவழித்ததற்கு நாம் கண்ட பயன் என்ன? நாட்டில் உள்ள நல்ல, உயர்தர இசைவாணர்களுக்குப் பொருள் தந்து வரவழைத்து ஒரு காலைத் தூக்கி ஆடிக்கொண்டிருக்கும் நடராஜ உருவத்தின் முன் தீப தூப நைவேத்தியத்துடன் உட்கார வைத்து, பல ஆயிரக்கணக்கான மக்களை வரவழைத்துப் பஜனைப் பாட்டுகள் பாடச் செய்வதும், அதன் மூலம் மக்களுக்குப் பக்தி புகட்டுவதுந்தானா? இது யார் செய்யவேண்டிய காரியம்? எதற்கு ஆகச் செய்ய வேண்டிய காரியம்? இதனால் ஏற்படும் பலன் யாருக்கு நலனைத் தரும்?

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 7.2.1944 அன்று பெரியார் ஆற்றிய சொற்பொழிவு.

ஜெகதீசன் சொன்னது…

நல்ல கேள்வி பாரி.. பதிவுக்கு நன்றி..

தமிழ் சொன்னது…

நல்ல கேள்வி
அருமையான பதிவு

Related Posts with Thumbnails